"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Wednesday, November 20, 2013

அண்ணா ஹசாரே

அண்ணா ஹசாரே ஒரு சமூக ஆர்வலர் ஆவார். ஊழலுக்கு எதிரான ஒர் அமைப்பான “ஜன லோக்பால்” என்ற மசோதா முன்வரைவை முன்வைத்து, ஹசாரே பெரும் போராட்டத்தை நடத்திக்காட்டி அனைவராலும் “இரண்டாம் காந்தி” என்று அழைக்கப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் அஹமது நகர் மாவட்டம் பர்தேர் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமத்தின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பிற்கு அவருடைய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, நாட்டின் உயரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கப்பட்டது. ராணுவ அதிகாரியாக பணியாற்றிய பிறகு மக்களுக்கு சேவைசெய்வதையே தன்னுடைய வாழ்நாள் நோக்கமாக கொண்டு செயல்பட்ட அண்ணா ஹசாரேவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.


Anna Hazare


பிறப்பு
கிசான் பாபுராவ் ஹசாரே எனப்பட்ட அண்ணா ஹசாரே அவர்கள், 1937 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் நாள் இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்திலுள்ள பிங்கார் என்ற இடத்தில் பாபுராவ் ஹசாரேக்கும், லட்சுமிபாய் ஹசாரேக்கும் மூத்தமகனாக பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரர்களும் மற்றும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
அண்ணா ஹசாரேவின் தந்தை ஒரு மருந்தகத்தில் வேலைபார்த்து வந்தார், ஆனால், அவருடைய வருமானம் போதாத காரணத்தால் அவர்களுடைய மூதாதையர் வாழ்ந்த கிராமமான “ரலேகன் சித்தி” என்ற இடத்திர்கு அவருடைய குடும்பம் இடம் பெயர்ந்தது. உறவினரின் உதவியால் ஏழாம் வகுப்புவரை படித்த அண்ணா ஹசாரே அவர்கள், நிதி பற்றாக்குறையால் தன்னுடைய பள்ளிப்படிப்பை ஏழாம் வகுப்போடு முடித்துக்கொண்டு, மும்பை ரயில் நிலையத்தில் பூ விற்க ஆரம்பித்தார். பிறகு தனியாக பூக்கடை ஒன்றினையும் தொடங்கினார்.
இந்திய இராணுவத்தில் அண்ணா ஹசாரே
1962 ஆம் ஆண்டு நடந்த இந்திய சீனப் போர், இந்திய இராணுவத்தில் அவசர ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு வழிவகுத்தது. ஹசாரே போதிய உடல்தகுதி இல்லாதவராக இருந்த போதிலும், 1963 ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்க்கப்பட்டு, பயிற்சி மேற்கொண்ட பிறகு ஒரு சிப்பாயாக தன்னுடைய பணியைத் தொடங்கினார். 1965 ஆம் ஆண்டு நடந்த இந்திய பாகிஸ்தான் போரில் “கேம் கரன்” துறையில் எல்லைப்பணிக்காக அனுப்பப்பட்டார் அங்கு நடந்த போர்கல அனுபவம் அவரை மிகவும் பாதித்தது என கூறியுள்ளார். அவர் தன்னுடைய ஓய்வு நேரங்களை சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் வினோபா பாவே போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி படிப்பதில் செலவிட்டார். பிறகு 1975 ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வினை பெற்றுக்கொண்டு, தனது சொந்த ஊரான “ரலேகன் சித்தி” கிராமத்திற்கு வந்தார். 13 வருடங்கள் இராணுவத்தில் பணிபுரிந்த அவர் சிக்கிம், பூட்டான், ஜம்மு & காஷ்மீர், அசாம், மிசோரம், மற்றும் லடாக் போன்ற பல்வேறு மாநிலங்களில் பணியாற்றியுள்ளார்.
ரலேகன் சித்தி கிராமத்தை மேம்படுத்துவதில் ஹசாரேவின் பங்கு
அண்ணா ஹசாரே அவர்கள், இராணுவ பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தன்னை மக்கள் சேவைக்கு அற்பணிக்க விரும்பினார். கடுமையான வறுமை, தண்ணீர் பற்றாக்குறை, சுகாதாரமற்ற சுற்றுசூழல் மற்றும் ஒரு நம்பிக்கை இழந்த கிராமமாக இருந்த “ரலேகன் சித்தி” கிராமத்திற்கு சமுதாய மற்றும் பொருளாதார மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென தீர்மானித்தார். இராணுவப் பணியில் தான் சம்பாதித்த பணத்தைக்கொண்டு, அழியும் நிலையிலிருந்த கோவிலை மீட்டு சீர்படுத்தினார். அதிக அளவில் இளைஞர்கள் தங்களை இந்த பணியில் ஈடுபடுத்திகொண்டதால் “தருண் மண்டல்” என்ற இளைஞர்கள் இயக்கத்தை தொடங்கினார். இதன் மூலம் கிராமத்தில் மதுக்கடைகளை மூடியது மட்டுமல்லாமல், மதுகுடிப்பவர்களுக்கு தண்டனையும் கொடுக்கப்பட்டது. கிராமத்தில் பீடி, புகையிலை மற்றும் சிகரெட் போன்றவை விற்கத் தடைவிதிக்கப்பட்டது.
1980 ஆம் ஆண்டு “தானிய வங்கி” என்ற ஒன்றை தொடங்கி, குறைந்த விலையில் தானியம் வழங்கப்பட்டு பசி மற்றும் கடன் தொல்லைக்கு முற்றுபுள்ளி வைத்தார். பிறகு “ஆற்று பள்ளதாக்கு வளர்ச்சித் திட்டத்தை” உருவாக்கி நிலத்தடி நீர் சேமிப்பின் மூலம் பாசனத்தை மேம்படுத்தவும் செய்தார். இந்த திட்டத்தின் மூலம், தண்ணீர் பற்றாக்குறை பெருமளவு தீர்க்கப்பட்டது எனவும் கூறலாம். அவர் அந்த கிராமத்திற்கு வரும்பொழுது 70 ஏக்கர் நிலத்தில் மட்டுமே பாசனம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த வளர்ச்சித் திட்டத்திற்கு பிறகு 1500 ஏக்கராக மாறியது. கால்நடை வளர்ச்சியை ஊக்குவித்து, பால் உற்பத்தியை பெருக்கவும் வழிவகை செய்தார். கிராமத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்த 1976 ஆம் ஆண்டு ஒரு மாதிரிபள்ளியும், 1979ல் ஒர் உயர்நிலைப் பள்ளியும் தொடங்கப்பட்டது. ரலேகன் சித்தி கிராமத்தில் நிலவிய சமூக தடைகள் மற்றும் பாகுபாடுகள் அறவே ஒழிக்கப்பட்டது. “கூட்டு திருமண திட்டத்தின்” மூலம் ஏழை எளிய மக்களின் கடன் சுமை பெருமளவு குறைக்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு புறக்கணிக்கப்பட்ட மற்றும் நம்பிக்கையிழந்த இந்திய கிராமங்களில் ஒன்றாக இருந்த “ரலேகன் சித்தி” கிராமம், இந்தியாவில் பல கிராமங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறியது எனலாம். இந்த கிராமத்தின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பிற்கு அவருடைய சிறப்பான பங்களிப்பை பாராட்டி நாட்டின் உயரிய விருதான “பத்ம பூஷன்” விருதை இந்திய அரசு அவருக்கு வழங்கி கெளரவித்தது.
அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரானப் போராட்டங்கள்
ஊழலுக்கு எதிராக போராட ஒரு வெகுஜன இயக்கமான “பிராஷ்டாசார் விரோதி ஜன் ஆண்டோலன்” என்ற மக்களமைப்பை 1991 ஆம் ஆண்டு, அண்ணா ஹசாரே “ரலேகன் சித்தி” கிராமத்தில் தொடங்கினார். இந்த இயக்கத்தின் மூலம் 40 வனத்துறை அதிகாரிகள் மற்றும் மர வியாபாரிகளின் கூட்டு சதிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமல்லாமல், தற்கால பணிநீக்கம் மற்றும் இடமாற்றத்திற்கு வழிவகுத்தது. 2003 ல் தேசியவாத காங்கிரசு அமைப்பின் நான்கு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றசாட்டை எழுப்பி, 2003 ஆகஸ்ட் 9 ஆம் தேதி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினார். பிறகு, சுஷில் குமார் தோஷி அவரின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, தனிநபர் ஆணை குழு ஒன்றை நியமித்ததால், 2003 ஆகஸ்ட் 17 ஆம் தேதி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் மற்றும் அரசு உதவிப்பெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட “தகவல் பெரும் உரிமைச் சட்டம்” 2005 ஆம் ஆண்டு நீக்கப்பட்டதால், இதற்கு எதிராக 2006 ஆகஸ்ட் 9ஆம் தேதி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். பிறகு, அரசு தன்னுடைய முடிவை மாற்றி கொண்டதால், 2006 ஆகஸ்ட் 19 ஆம் தேதி உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். இடமாற்றங்கள் ஒழுங்குமுறை மற்றும் உத்தியோகப்பூர்வ பணியில் தாமதம் போன்றவற்றிற்காக அண்ணா ஹசாரே கடுமையாகப் போராடினார். உணவு தானியங்களிலிருந்து, மது தயாரிக்க ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் கொள்கையை எதிர்த்தும் போராடினார்.
ஜன்லோக்பால் மசோதா இயக்கம்
2011 ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிரான ஒரு வலுவான “ஜன் லோக்பால் மசோதாவை” (இந்தியாவில் ஊழல் மற்றும் பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை சித்தாந்தத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மசோதா ஆகும்) இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என ஒரு சத்தியாகிரக இயக்கத்தைத் தொடங்கினார். உச்சநீதிமன்ற நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே, வழக்கறிஞர் பிராஷாந்த் பூஷன், அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் “ஊழலுக்கெதிரான இந்தியா” என்ற இயக்கத்தின் உறுப்பினர்கள் சேர்ந்து இந்த “ஜன் லோக்பால் மசோதாவை” வரையறுத்தனர். சுதந்திரமான இந்த மசோதாவை, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நிராகரித்ததால், ஹசாரே தன்னுடைய காலவரையற்ற உண்ணாவிரதத்தை 2011 ஏப்ரல் 5 ஆம் தேதி புது தில்லியிலுள்ள ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் தொடங்கினார்.
இந்த ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேவின் போராட்டம் நாடுமுழுவதும் லட்சகணக்கான மக்களை அணிவகுக்கச் செய்தது. மேதா பட்கர், சமூக ஆர்வலர் அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி, ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் தங்களுடைய ஆதரவைக் கொடுத்தனர். சென்னை, மும்பை, அகமதாபாத், ஷில்லாங் போன்ற பலநகரங்களில் எதிர்ப்புகள் பெருகியதால், 2011 ஏப்ரல் 8 ஆம் தேதி அரசாங்கம் இவ்வியக்கத்தின் கோரிக்கைகளை ஏற்றது மட்டுமல்லாமல், ஒரு கூட்டுக்குழு அமைக்கவும், அந்த கூட்டுக்குழுவில் இந்திய அரசால் தேர்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் ஐந்து மக்கள் சமூக பிரதநிதிகள் இடம் பெறுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால், 2001 ஏப்ரல் 9 ஆம் தேதி அண்ணா ஹசாரே தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துகொண்டார். இந்த கூட்டுக்குழு அமைப்பில் இந்திய அரசு வேட்பாளராக பிரணாப்முகர்ஜி, ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித் ஆகியோரும் அரசியல் அல்லாத சமூக பிரதநிதிகளாக அண்ணா ஹசாரே, என்.சந்தோஷ் ஹெக்டே, மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷன், பிரஷாந்த் பூஷன் மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் இடம் பெற்றனர்.
உண்ணாவிரதத்தை முடித்துகொண்ட அவர், 2011  ஆகஸ்ட் 15 ஆம் தேதியை மசோதா அமைக்க கெடுவாக விதித்தார். கருப்புப்பணத்திற்கு எதிராகவும், ஊழலுக்கெதிராகவும் அரசாங்கத்தின் தீவிரத்தை எதிர்த்தும், 2011 ஜூன் 5 ஆம் தேதி சமூக பிரதிநிதிகள் உண்ணாவிரதத்தில் இருந்த பொழுது, சுவாமி ராம்தேவ் அவர்களைக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியது மட்டுமல்லாமல், லோக்பால் மசோதா நிறைவேற்ற படவில்லையென்றால், 2011  ஆகஸ்ட் 16 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கப்போவதாக அறிவித்து பிரதமருக்கு கடிதமும் எழுதினார். 2011 ஆகஸ்ட் 16 ஆம் தேதி உண்ணாவிரதம் தொடங்க இருந்த அவரை, இந்திய அரசு சட்டம் ஒழுங்கு நிலைமையை காரணம் காட்டி கைதுசெய்தது. ஆனால், சிறையில் தன்னுடைய உண்ணாவிரதத்தைத் தொடங்கிய ஹசாரேவிற்கு நாடுமுழுவதும் மக்களிடமிருந்து ஆதரவு பெருகியது. 2011 ஆகஸ்ட் 20 ஆம் தேதி விடுதலைசெய்யப்பட்டு ராம் லீலா மைதானத்திற்கு வந்த அவர், வலுவான “ஜன் லோக்பால் மசோதா” நிறைவேற தனது கடைசி மூட்சிவரை போராடப் போவதாகவும் அறிவித்து, தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். 2011 ஆகஸ்ட் 28 ஆம் தேதி “லோக்பால் மசோதா” ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
ஊழலுக்கெதிரான தன்னுடைய உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம், நாடு முழுவதிலும் கோடிக்கணக்கான மக்களை தன் பின்னால் அணிவகுக்கச் செய்த காந்தியவாதியான அண்ணா ஹசாரேவிற்கு இந்தப் போராட்டம் வெற்றியைத் தந்தாலும் பல சர்ச்சைகளும், விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் அவர் மேல் விழத்தான் செய்தது. இருந்தாலும், அவருடைய போராட்டங்கள் இந்திய வரலாற்றில் மற்றுமொரு சுதந்திர போராட்டத்தை வலியுறுத்தியது எனவும் கூறலாம்.
விருதுகளும் அங்கீகாரங்களும்:
  • 1986 – “இந்திரா பிரியதர்ஷனி வ்ரிஷமித்ரா விருது” இந்திய அரசால் வழங்கப்பட்டது.
  • 1989 ஆம் ஆண்டு “வேளாண் பூஷணா விருது” மகாராஷ்டிர அரசால் வழங்கப்பட்டது.
  • 1990 ஆம் ஆண்டு “பத்ம ஸ்ரீ” விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது.
  • 1992 ஆம் ஆண்டு “பத்ம பூஷன்” விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது.
  • 1996 ஆம் ஆண்டு “ஷிரோமணி விருது” வழங்கப்பட்டது.
  • 1997 ஆம் ஆண்டு “மஹாவீர் விருது” வழங்கப்பட்டது.
  • 1998 ஆம் ஆண்டு கேர் நிவாரண அமைப்பால் “கேர் சர்வதேச விருது” வழங்கப்பட்டது.
  • 2003 ஆம் ஆண்டு “வெளிப்படையான சர்வதேச ஒருமைப்பாட்டு விருது” வழங்கப்பட்டது.
  • 2005 ஆம் ஆண்டு ‘காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம்’ மூலம் “கௌரவ டாக்டர் பட்டம்” வழங்கப்பட்டது.
  • 2008 ஆம் ஆண்டு உலக வங்கியால் “சிட் கில் நினைவு விருது” வழங்கப்பட்டது.
காலவரிசை:
1937 – மகாராட்டிரம் மாநிலத்திலுள்ள பிங்கார் என்ற இடத்தில் பிறந்தார்.
1952 – மும்பைக்கு சென்றார்.
1963 – இந்திய இராணுவத்தில் ஓட்டுனராக தேர்வு செய்யப்பட்டார்.
1965 – இந்திய பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தான் விமானதாக்குதலில் இருந்து உயிர் தப்பினார்.
1975 – இந்திய இராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
1990 – “பத்ம ஸ்ரீ” விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது.
1991 – “பிராஷ்டாசார் விரோதி ஜன் ஆண்டோலன்” என்ற ஊழலுக்கு எதிரான ஒரு மக்கள் அமைப்பைத் தொடங்கினார்.
1992 –“பத்ம பூஷன்” விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது.
2003 –‘தகவல் பெரும் உரிமை சட்டம்’ அனுமதி பெற காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
2011 – ஊழலுக்கு எதிரான ஒரு வலுவான “ஜன் லோக்பால் மசோதாவை” கொண்டுவரகோரி உண்ணாவிரத போராட்டம்.
2011 – ஆகஸ்ட் 16 ஆம் தேதி உண்ணாவிரதம் தொடங்க இருந்த அவரை, இந்திய அரசு சட்டம் ஒழுங்கு நிலைமையை காரணம் காட்டி கைதுசெய்து சிறையில் அடைத்தது.


பாபா ராம்தேவ் (or) ராமகிருஷ்ண யாதவ்.

பாபா ராம்தேவ் அவர்கள், இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்திலிருக்கும் மஹேந்திரகார் மாவட்டத்தில் உள்ள அலிப்பூர் என்னும் கிராமத்தில், ராம் நிவாஸ் யாதவ் மற்றும் குலாபோ தேவி தம்பதியருக்கு மகனாக டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி, 1965 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது இயற்பெயர் ராமகிருஷ்ண யாதவ்.





ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
அலிப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். எட்டாம் வகுப்பு வரை, அப்பள்ளியில் பயின்ற அவர், பின்னர் குருகுலத்தில் சேர்ந்தார். அவர், பல்வேறு குருக்குலங்கில் சேர்ந்து, இந்திய இலக்கியம், யோகா மற்றும் சமஸ்க்ருதம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார். குருக்குலங்களில் சன்யாசிகளிடம் பாடம் கற்ற அவர், அவர்களைப் போலவே மாற விரும்பினார். இதன் வெளிப்பாடாக, அவர் காவி உடைத் தரித்து, துறவறம் பூண்டார். ராமகிருஷ்ண யாதவாகப் பிறந்த அவர், ‘பாபா ராம்தேவ்’ என்று அன்றுமுதல் அழைக்கப்பட்டார்.

துறவியாக பாபா ராம்தேவ்
ஹரியானாவில் உள்ள ஜிந்த் மாவட்டத்தில் இருக்கும் கல்வா குருகுலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவர் அங்குள்ள கிராம மக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளித்தார். பின்னர், பண்டைய இந்திய வேதங்களைக் கற்கும் நோக்கமாக அவர் ஹரித்வாரில் உள்ள குருகுல் காங்க்ரி விஸ்வவித்யாலயாவிற்குச் சென்றார். அங்குப் பல ஆண்டுகள் செலவிட்ட அவர், அரபிந்தோ கோஷின் ‘யோகிக் சதன்’ என்ற புத்தகத்தைப் படித்தார். அரிய புத்தகமான ‘யோகிக் சதனை’ படித்தப் பிறகு, அவர் இமயமலைக் குகைகளுக்குச் சென்று, சுய கட்டுப்பாடு மற்றும் தியானம் போன்றவற்றில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டார்.

யோகாவும், ராம்தேவும்
சுய கட்டுப்பாடு மற்றும் தியானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்ட அவர், ‘திவ்யா யோக் மந்திர் டிரஸ்ட்’ என்ற அமைப்பை, ஆச்சார்யா நிதின் சோனி அவர்களின் நிறுவனத்துடன் இணைந்து நிறுவினார். முதன்முதலில், அவரது யோகா பயற்சி ‘ஆஸ்தா தொலைக்காட்சியில்’ ஒளிபரப்பானது. இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்ததால், அவரைப் பலரும் பின்பற்றத் தொடங்கினர். அவர், திரைப்படப் பிரமுகர்களான அமிதாப் பச்சன், ஷில்பா ஷெட்டி, மற்றும் பலருக்கும் யோகா கற்றுக் கொடுத்திருக்கிறார். மேலும், அவர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலும், முஸ்லீம் மத குருக்களின் கல்லூரியிலும் யோகா பயிற்சியளித்திருக்கிறார். பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் போன்ற பல நாடுகளில் யோகா பயிற்சியளித்து பிரசித்தி பெற்ற அவரின் பதஞ்சலி யோகபீடத்திற்கு, ஸ்காட்லான்டடில் ஒரு தீவை, இந்தியாவில் இருந்து சென்று அங்கு குடிபெயர்ந்த தம்பதியர்கள் பரிசாக்கினர். மேலும், அவரது பிராணயாமா பயிற்சிகளாலும், ஆயுர்வேத முறைகளாலும் பல நோய்கள் குணமடைவதை உணர்ந்த அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம், யோகா மற்றும் ஆயுர்வேதம் சம்பந்தமான பாடங்களை அறிமுகப்படுத்தியது.
அரசியல் மற்றும் சமூக பிரச்சாரங்கள்
பாபா ராம்தேவ் அவர்கள் ஊழலுக்கு எதிராகவும், கருப்புப் பணத்திற்கு எதிராகவும் பல போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் நடத்தியும், ஈடுபட்டும் உள்ளார். அவர், 2011ஆம் ஆண்டில் நடந்த ‘ஜன லோக்பால்’ போராட்டத்தில் கலந்து கொண்டார்.
பிப்ரவரி மாதம், 27 ஆம் தேதி 2011 ஆம் ஆண்டில், ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் 1 லட்சம் மக்கள் கொண்ட பெரிய பேரணியை வழிநடத்தினார். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்கவும், ஊழலைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜூன் 4, 2011 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க விருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், அவர் அரசுக்கு, கருப்புப் பணத்தை வெளிக்கொணரவும், ஒழிக்கவும் அவர் பல வழிகளைப் பரிந்துரைத்தார்.இதனால், போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், 15 நாட்கள் கழித்து, விடுதலை செய்யப்பட்டார். இதன் பின்விளைவாக, ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி, 2011 ஆம் ஆண்டில் அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். பெங்களூர், மும்பை, ஹைதெராபாத், ஜம்மு மற்றும் லக்னோ போன்ற இடங்களில் போராட்டங்களை நிகழ்த்திய அவர், பல சமூக ஆர்வலர்களின் விண்ணப்பங்களை ஏற்று 9 வது நாள் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.


பால்காரரின் மகனாக பிறந்து பீகாரின் முதல்வராக உயர்ந்த லாலு பிரசாத் யாதவ்


லாலு பிரசாத் யாதவ் குந்தன் ராய் என்ற பால்காரரின் மகனாக பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வரியா கிராமத்தில் பிறந்தார்.




அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதரர்கள். வீடு வீடாகச் சென்று பால் ஊற்றிய தனது தாய் மரிசியா தேவியுடன் சிறுவன் லாலுவும் செல்வார்.

பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் லூலுவின் அண்ணன் பியூனாக இருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி தான் லூலு பி.என். கல்லூரியில் படித்து அண்ணன் வேலை பார்த்த கல்லூரியிலேயே கிளார்க்காக சேர்ந்தார்.


அவர் 1990ம் ஆண்டில் முதல்வராகும் வரையில் இங்கு தான் தங்கி இருந்தார்.

ஜனதா கட்சியின் சார்பில் லாலு கடந்த 1977ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.


கல்லூரியில் படிக்கையில் லாலு 10ஏ பேருந்தில் தான் சென்றுள்ளார். 1977ம் ஆண்டு எம்.பி. ஆன போது அவர் டெல்லிக்கு சோன்பத்ரா எக்ஸ்பிரஸில் சென்றுள்ளார்.


1980ம் ஆண்டு அவர் லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்றை வாங்கினார்.

லாலு 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது லாலு லோக் சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

1990ம் ஆண்டு ஜனதா கட்சி பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போதைய துணை பிரதமர் தேவி லால், லாலு பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்பினார்.



ஆனால் பிரதமர் வி.பி. சிங்கோ ராம் சுந்தர் தாஸை முதல்வராக்க விரும்பினார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் லாலு வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.

லாலு மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். ஆனால் 1997ம் ஆண்டு மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார்.

இதனால் தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கிவிட்டு சிறையில் இருந்து கொண்டே தனது மனைவி மூலம் ஆட்சி செய்தார்.

2004ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சர் ஆனார். அவரது நிர்வாகத் திறமைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.

லாலு 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை ஜனதா கட்சியின் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.


லாலு பிரசாத் யாதவ் குந்தன் ராய் என்ற பால்காரரின் மகனாக பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வரியா கிராமத்தில் பிறந்தார்.
அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதரர்கள். வீடு வீடாகச் சென்று பால் ஊற்றிய தனது தாய் மரிசியா தேவியுடன் சிறுவன் லாலுவும் செல்வார்.
பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் லூலுவின் அண்ணன் பியூனாக இருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி தான் லூலு பி.என். கல்லூரியில் படித்து அண்ணன் வேலை பார்த்த கல்லூரியிலேயே கிளார்க்காக சேர்ந்தார்.
அவர் 1990ம் ஆண்டில் முதல்வராகும் வரையில் இங்கு தான் தங்கி இருந்தார்.
ஜனதா கட்சியின் சார்பில் லாலு கடந்த 1977ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
கல்லூரியில் படிக்கையில் லாலு 10ஏ பேருந்தில் தான் சென்றுள்ளார். 1977ம் ஆண்டு எம்.பி. ஆன போது அவர் டெல்லிக்கு சோன்பத்ரா எக்ஸ்பிரஸில் சென்றுள்ளார்.
1980ம் ஆண்டு அவர் லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்றை வாங்கினார்.
லாலு 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது லாலு லோக் சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1990ம் ஆண்டு ஜனதா கட்சி பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போதைய துணை பிரதமர் தேவி லால், லாலு பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் பிரதமர் வி.பி. சிங்கோ ராம் சுந்தர் தாஸை முதல்வராக்க விரும்பினார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் லாலு வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.
லாலு மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். ஆனால் 1997ம் ஆண்டு மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார்.
இதனால் தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கிவிட்டு சிறையில் இருந்து கொண்டே தனது மனைவி மூலம் ஆட்சி செய்தார்.
2004ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சர் ஆனார். அவரது நிர்வாகத் திறமைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.
லாலு 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை ஜனதா கட்சியின் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.
- See more at: http://vannimedia.com/site/news_detail/24807#sthash.pFOBWkKQ.dpuf
லாலு பிரசாத் யாதவ் குந்தன் ராய் என்ற பால்காரரின் மகனாக பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வரியா கிராமத்தில் பிறந்தார்.
அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதரர்கள். வீடு வீடாகச் சென்று பால் ஊற்றிய தனது தாய் மரிசியா தேவியுடன் சிறுவன் லாலுவும் செல்வார்.
பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் லூலுவின் அண்ணன் பியூனாக இருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி தான் லூலு பி.என். கல்லூரியில் படித்து அண்ணன் வேலை பார்த்த கல்லூரியிலேயே கிளார்க்காக சேர்ந்தார்.
அவர் 1990ம் ஆண்டில் முதல்வராகும் வரையில் இங்கு தான் தங்கி இருந்தார்.
ஜனதா கட்சியின் சார்பில் லாலு கடந்த 1977ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
கல்லூரியில் படிக்கையில் லாலு 10ஏ பேருந்தில் தான் சென்றுள்ளார். 1977ம் ஆண்டு எம்.பி. ஆன போது அவர் டெல்லிக்கு சோன்பத்ரா எக்ஸ்பிரஸில் சென்றுள்ளார்.
1980ம் ஆண்டு அவர் லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்றை வாங்கினார்.
லாலு 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது லாலு லோக் சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1990ம் ஆண்டு ஜனதா கட்சி பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போதைய துணை பிரதமர் தேவி லால், லாலு பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் பிரதமர் வி.பி. சிங்கோ ராம் சுந்தர் தாஸை முதல்வராக்க விரும்பினார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் லாலு வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.
லாலு மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். ஆனால் 1997ம் ஆண்டு மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார்.
இதனால் தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கிவிட்டு சிறையில் இருந்து கொண்டே தனது மனைவி மூலம் ஆட்சி செய்தார்.
2004ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சர் ஆனார். அவரது நிர்வாகத் திறமைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.
லாலு 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை ஜனதா கட்சியின் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.
- See more at: http://vannimedia.com/site/news_detail/24807#sthash.pFOBWkKQ.dpuf
லாலு பிரசாத் யாதவ் குந்தன் ராய் என்ற பால்காரரின் மகனாக பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வரியா கிராமத்தில் பிறந்தார்.
அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதரர்கள். வீடு வீடாகச் சென்று பால் ஊற்றிய தனது தாய் மரிசியா தேவியுடன் சிறுவன் லாலுவும் செல்வார்.
பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் லூலுவின் அண்ணன் பியூனாக இருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி தான் லூலு பி.என். கல்லூரியில் படித்து அண்ணன் வேலை பார்த்த கல்லூரியிலேயே கிளார்க்காக சேர்ந்தார்.
அவர் 1990ம் ஆண்டில் முதல்வராகும் வரையில் இங்கு தான் தங்கி இருந்தார்.
ஜனதா கட்சியின் சார்பில் லாலு கடந்த 1977ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
கல்லூரியில் படிக்கையில் லாலு 10ஏ பேருந்தில் தான் சென்றுள்ளார். 1977ம் ஆண்டு எம்.பி. ஆன போது அவர் டெல்லிக்கு சோன்பத்ரா எக்ஸ்பிரஸில் சென்றுள்ளார்.
1980ம் ஆண்டு அவர் லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்றை வாங்கினார்.
லாலு 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது லாலு லோக் சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1990ம் ஆண்டு ஜனதா கட்சி பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போதைய துணை பிரதமர் தேவி லால், லாலு பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் பிரதமர் வி.பி. சிங்கோ ராம் சுந்தர் தாஸை முதல்வராக்க விரும்பினார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் லாலு வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.
லாலு மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். ஆனால் 1997ம் ஆண்டு மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார்.
இதனால் தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கிவிட்டு சிறையில் இருந்து கொண்டே தனது மனைவி மூலம் ஆட்சி செய்தார்.
2004ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சர் ஆனார். அவரது நிர்வாகத் திறமைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.
லாலு 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை ஜனதா கட்சியின் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.
- See more at: http://vannimedia.com/site/news_detail/24807#sthash.pFOBWkKQ.dpuf
லாலு பிரசாத் யாதவ் குந்தன் ராய் என்ற பால்காரரின் மகனாக பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வரியா கிராமத்தில் பிறந்தார்.
அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதரர்கள். வீடு வீடாகச் சென்று பால் ஊற்றிய தனது தாய் மரிசியா தேவியுடன் சிறுவன் லாலுவும் செல்வார்.
பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் லூலுவின் அண்ணன் பியூனாக இருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி தான் லூலு பி.என். கல்லூரியில் படித்து அண்ணன் வேலை பார்த்த கல்லூரியிலேயே கிளார்க்காக சேர்ந்தார்.
அவர் 1990ம் ஆண்டில் முதல்வராகும் வரையில் இங்கு தான் தங்கி இருந்தார்.
ஜனதா கட்சியின் சார்பில் லாலு கடந்த 1977ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
கல்லூரியில் படிக்கையில் லாலு 10ஏ பேருந்தில் தான் சென்றுள்ளார். 1977ம் ஆண்டு எம்.பி. ஆன போது அவர் டெல்லிக்கு சோன்பத்ரா எக்ஸ்பிரஸில் சென்றுள்ளார்.
1980ம் ஆண்டு அவர் லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்றை வாங்கினார்.
லாலு 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது லாலு லோக் சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1990ம் ஆண்டு ஜனதா கட்சி பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போதைய துணை பிரதமர் தேவி லால், லாலு பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் பிரதமர் வி.பி. சிங்கோ ராம் சுந்தர் தாஸை முதல்வராக்க விரும்பினார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் லாலு வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.
லாலு மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். ஆனால் 1997ம் ஆண்டு மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார்.
இதனால் தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கிவிட்டு சிறையில் இருந்து கொண்டே தனது மனைவி மூலம் ஆட்சி செய்தார்.
2004ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சர் ஆனார். அவரது நிர்வாகத் திறமைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.
லாலு 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை ஜனதா கட்சியின் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.
- See more at: http://vannimedia.com/site/news_detail/24807#sthash.pFOBWkKQ.dpuf
லாலு பிரசாத் யாதவ் குந்தன் ராய் என்ற பால்காரரின் மகனாக பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வரியா கிராமத்தில் பிறந்தார்.
அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதரர்கள். வீடு வீடாகச் சென்று பால் ஊற்றிய தனது தாய் மரிசியா தேவியுடன் சிறுவன் லாலுவும் செல்வார்.
பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் லூலுவின் அண்ணன் பியூனாக இருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி தான் லூலு பி.என். கல்லூரியில் படித்து அண்ணன் வேலை பார்த்த கல்லூரியிலேயே கிளார்க்காக சேர்ந்தார்.
அவர் 1990ம் ஆண்டில் முதல்வராகும் வரையில் இங்கு தான் தங்கி இருந்தார்.
ஜனதா கட்சியின் சார்பில் லாலு கடந்த 1977ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
கல்லூரியில் படிக்கையில் லாலு 10ஏ பேருந்தில் தான் சென்றுள்ளார். 1977ம் ஆண்டு எம்.பி. ஆன போது அவர் டெல்லிக்கு சோன்பத்ரா எக்ஸ்பிரஸில் சென்றுள்ளார்.
1980ம் ஆண்டு அவர் லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்றை வாங்கினார்.
லாலு 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது லாலு லோக் சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1990ம் ஆண்டு ஜனதா கட்சி பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போதைய துணை பிரதமர் தேவி லால், லாலு பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் பிரதமர் வி.பி. சிங்கோ ராம் சுந்தர் தாஸை முதல்வராக்க விரும்பினார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் லாலு வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.
லாலு மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். ஆனால் 1997ம் ஆண்டு மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார்.
இதனால் தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கிவிட்டு சிறையில் இருந்து கொண்டே தனது மனைவி மூலம் ஆட்சி செய்தார்.
2004ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சர் ஆனார். அவரது நிர்வாகத் திறமைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.
லாலு 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை ஜனதா கட்சியின் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.
- See more at: http://vannimedia.com/site/news_detail/24807#sthash.pFOBWkKQ.dpuf

Monday, November 18, 2013

நற்றிணையில் மாயோனும் வாலியோனும்...

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன்களாலும் காதல் கொண்டு தலைவனும் தலைவியும் பகலிலும் இரவிலும் ஒருவரை ஒருவர் தனிமையில் கண்டு கூடிக் குலாவி மகிழ்ந்து பின்னர் தலைவியைப் பிரிந்து தலைவன் சென்ற போது அவன் பிரிவை எண்ணி வருந்தும் தலைவியரையே சங்க இலக்கியத்தில் பல முறை காண்கிறோம். நற்றிணையில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலோ கூடிப் பிரிந்த தலைவன் தலைவியை மீண்டும் காண்பதற்காக வருந்தி வரும் போது அவனை ஏதோ ஒரு காரணத்தால் மறுத்து விலகியிருக்கும் தலைவியைக் காட்டுகிறது.

மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி!
அம்மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய்!
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவறிந்து அளவல் வேண்டும்! மறுதரற்கு
அரிய! தோழி வாழி! பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே!

நற்றிணை 32ம் பாடல்
திணை: குறிஞ்சி
துறை: இது தலைவிக்குக் குறைநயப்புக் கூறியது
இயற்றியவர்: கபிலர் (பாடியவர் என்றும் சொல்லலாமோ?)


பாடலின் பொருள்: மாயோனைப் போல் கரு நிறம் கொண்டு ஓங்கி உயர்ந்து நிற்கும் மலையின் ஒரு பக்கத்தில் மாயோனின் முன்னவனாகத் தோன்றிய பலராமன் என்னும் வாலியோனின் நிறம் போல் வெள்ளை நிறம் கொண்ட அழகிய அருவி இருக்கிறது. அந்த மலையின் தலைவன் உன் உறவினை விரும்பி வேண்டி நமது அண்டையில் அடிக்கடி வந்து நின்று வருந்துகிறான் என்று நான் சொன்னால் அந்த வார்த்தையை நீ ஏற்றுக் கொள்ளவில்லை! நீயே அதனை நேரில் கண்டு உனது மற்ற தோழியரோடு சேர்ந்து சிந்தித்து அவனது காதலை உணர்ந்து அவனுடன் அளவளாவுதல் வேண்டும். அவனது காதல் மறுத்தற்கு அரியது. தோழி நீ வாழ்க! பெரியவர்கள் நட்பு கொள்வதற்கு முன்னர் நட்பு வேண்டி வந்தவர்களைப் பற்றி ஆராய்வார்கள்! உன்னைப் போல் நட்பு கொண்ட பின்னர் நட்பு கொண்டவர்களிடத்து ஆராய்ச்சியைச் செய்ய மாட்டார்கள்!

செல்வத்திலும் அறிவிலும் வலிமையிலும் ஆற்றலிலும் சிறந்த ஆளும் திறத்தவராகிய தலைமக்களே சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் பேசப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பாடலில் காதலன் 'மலைக் கிழவோன்' என்று குறிக்கப்படுவதன் வழி அவனும் அப்படி செல்வத்திலும் ஆட்சியிலும் மற்ற வகைகளிலும் சிறந்த ஒரு தலைமகன் என்பது சொல்லப்படுகிறது. அதனை இங்கே 'அவன் உனக்கு ஏற்றவன். அவன் மலையின் தலைவன். அதனால் உன் காதலைப் பெறும் தகுதியுடையவன்' என்று தோழி சுட்டிக் காட்டுவதன் மூலம் காதலியும் ஒரு தலைமகள் என்பதைக் காட்டுகிறது. சங்கப் பாடல்கள் பெரும்பாலும் தலைமக்களையும் அவர்தம் காதலையும் உணர்வுகளையுமே பேசியதால் தான் அவர்களைக் காதலன் காதலி என்று குறிக்காமல் தலைவன் தலைவி என்றும் கிழவன் கிழத்தி என்றும் பாடலை எழுதியவர்களும் உரையாசிரியர்களும் குறித்தார்கள் போலும்.

கபிலரின் இந்தப் பாடலில் வரும் 'பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே' என்னும் கருத்தே கொஞ்சம் மாற்றத்துடன் திருக்குறளில் 'நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாளவர்க்கு' என்று (கருத்தை அழுத்தமாய் வலியுறுத்த?) எதிர்மறையாக வருவதைக் காணலாம். அதனால் 'ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்; நட்டபின் ஆராய்தல் பிழை' என்பது ஒரு பழமொழியைப் போல் சங்க காலத்தில் வழங்கியிருத்தல் கூடும் என்று தோன்றுகிறது.

குறிஞ்சித் திணைப் பாடலாகிய இந்தப் பாடலில் முல்லைக்குரிய மாயோனும் அவனுடனே பெரும்பாலும் குறிக்கப்படும் வாலியோனும் பேசப்படுகிறார்கள். மக்கள் நன்கு அறிந்த ஒன்றையே உவமையாகக் கூறுவார்கள் என்பதால் மாயோன் என்னும் கண்ணனின் கருநிறமும் அவனது நெடிய தோற்றமும் இங்கே மலைக்கு உவமையாகவும், வாலியோன் என்னும் பலதேவனின் வெண்ணிறமும் அவனது வலிமையும் இங்கே அருவிக்கு உவமையாகவும் அமைந்திருக்கிறது.

திருமால், சிவன், முருகன் எனும் மூவரைப் போற்றும் திருமுருகாற்றுப்படை


முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் என்று சொல்லும் வழக்கம் திருமுருகாற்றுப்படையின் அடிப்படையிலேயே வந்தது என்பது பலருக்கும் தெரியும். பரிசு பெற்ற ஒரு புலவர் பரிசு தந்த புரவலரின் - வள்ளலின் பெருமைகளைக் கூறி, அந்த வள்ளலின் ஊருக்குச் செல்லும் வழியை இன்னொரு புலவருக்குச் சொல்லுதல் ஆற்றுப்படை எனப்படும். முருகப்பெருமானின் திருவருளைப் பெற்ற நக்கீரர் என்னும் தெய்வப்புலவர் திருமுருகனின் பெருமைகளைக் கூறி அவனின் ஊர்களான ஆறு வீடுகளைப் பற்றிப் பாடி மற்றவருக்குச் சொல்வது திருமுருகாற்றுப்படை. இந்த சங்க கால நூலில் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர், திருவாவினன்குடி என்னும் பழனி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்னும் ஆறுபடை வீடுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதில் திருவேரகம் சுவாமிமலை என்றும் குன்றுதோறாடல் 'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்று சொல்வது போல் இவ்வைந்தும் போக இருக்கும் எல்லா முருகன் திருக்கோவில்களையும் குறிக்கும் என்றும் சொல்லுவார்கள்.

முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகப் பாடும் இந்தத் திருமுருகாற்றுப்படையில் முப்பெரும் தெய்வங்களாக மூவர் போற்றப்படுகின்றனர்.

...வால் எயிற்று
அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்பு படப் புடைக்கும் பல் வரிக் கொடுஞ்சிறைப்
புள்ளணி நீள் கொடிச் செல்வனும், வெள்ளேறு
வலைவயின் உயரிய பலர் புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்,
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடைத்
தாழ் பெருந்தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்,
நாற்பெரும் தெய்வத்து நன்னகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப்
பலர் புகழ் மூவரும் தலைவராக
...

ஒளிவீசும் நெற்றியுடன் தீயென மூச்சினை விடும் அஞ்சும் படி வரும் மிகுந்த வலிமை கொண்ட பாம்புகளும் அஞ்சும் படி அவற்றைத் தாக்கும் பல வரிகளுடன் கூடிய நீண்ட வலிய சிறகுகளைக் கொண்ட பறவையைக் (கருடனைக்) கொடியில் கொண்ட செல்வனும் (திருமாலும்), வெண்மையான எருதின் மேல் எல்லோரும் போற்றும் உமையம்மையோடு அமர்ந்து விளங்கும் இமைக்காத மூன்று கண்களையுடைய மூன்று கோட்டைகளை கொளுத்திய சினம் மிகுந்த செல்வனும் (சிவபெருமானும்), மலை போன்ற உடலையும் அழகான நடையும் நீண்ட தும்பிக்கையும் கொண்ட யானையின் மேல் அமர்ந்திருக்கும் பெருமையும் புகழும் உடைய செல்வனும் (திருமுருகனும்)...

நாஞ்சில் (கலப்பை) கொடியுடைய பலராமனும், புட்கொடியுடைய திருமாலும், எருதேறிய சிவபெருமானும், பிணிமுகம் ஏறிய முருகப்பெருமானும் உலகம் காக்கும் நாற்பெருந்தெய்வங்களாகத் திருமுருகாற்றுப்படையில் சொல்லப்படுகின்றனர் என்ற குறிப்பைக் கண்டு இணையத்தில் திருமுருகாற்றுப்படை நூலைப் பார்த்தேன். நான் தேடிய வரையில் பலராமனைப் பற்றிய பாடல் அடிகள் கிடைக்கவில்லை. சங்க நூலான திருமுருகாற்றுப்படையை உரையின் உதவியின்றி விளங்கிக் கொள்ள என்னால் இயலாததால் பலராமனைக் குறிக்கும் பாடல் அடிகள் என் கண்ணிற்குத் தென்படாமல் சென்றிருக்கலாம். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

மாயோன் புகழ் பாடும் தொல்காப்பியம்

பழந்தமிழ் இலக்கியங்களில் தற்போது கிடைக்கும் இலக்கியங்களில் மிகவும் தொன்மையானது தொல்காப்பியம் என்று கருதப்படுகிறது. தற்போது கிடைக்கும் சங்க நூற்களின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படும் போது தொல்காப்பியம் இதில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலைபெற்றிருக்கிறது. இந்த சங்க நூற்களின் காலத்தை இன்னும் முன்னால் கொண்டு சென்று கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தொடங்குகிறது இப்போது கிடைக்கும் நூற்களின் காலம் என்ற கருத்தும் இப்போது கேட்கத் தொடங்கியிருக்கிறது. தொல்காப்பியத்தின் காலத்தைப் பற்றிய கருத்துகளை விவரிப்பது இந்த இடுகையின் நோக்கமில்லை. இந்த நூலின் தொன்மையைச் சுட்டிக்காட்டுவதற்காக இந்த கருத்துகளை இங்கே தொட்டுச் செல்கிறேன்.

தொல்காப்பியம் எனும் இலக்கண நூலில் எல்லா இலக்கண விதிகளும் சூத்திர முறையில் கூறப்பட்டிருக்கின்றன. அகத்திணையியலில் ஐந்தாம் சூத்திரம் ஐவகை நிலங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நானிலங்களைப் பற்றிக் கூறும் போது அவற்றின் தெய்வங்களையும் குறிக்கிறது.

மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே


முல்லை என்பது காடுகள் நிறைந்த நிலம். அதில் மாயோன் உறைகிறான்.
குறிஞ்சி என்பது மலைகள் நிறைந்த நிலம். அதில் சேயோன் உறைகிறான்.
மருதம் என்பது நன்னீர் நிறைந்த நிலம். அதில் வேந்தன் உறைகிறான்.
நெய்தல் என்பது எங்கு நோக்கினும் மணல் நிறைந்து காணப்படும் நிலம். அதில் வருணன் உறைகிறான்.

இங்கே மாயோன் என்பவன் கண்ணன் என்றும், சேயோன் என்பவன் முருகன் என்றும், வேந்தன் என்பவன் இந்திரன் என்றும் பொருள் கூறுவார்கள். பிற்கால இலக்கியங்களில் எல்லாம் மாயவன் என்று கண்ணனே அறியப்படுவதால் கண்ணன் தான் இங்கே மாயோன் என்று சொல்லப்படுகிறான் என்ற பொருள் பொருந்தும். அப்படியே பிற்கால இலக்கியங்களில் குறிஞ்சித் தலைவனாக முருகனே அறியப்படுவதாலும் அவன் சிவனின் மகன் என்றும் கொற்றவை சிறுவன் என்றும் அறியப்படுவதாலும் சேயோன் என்பது முருகனே என்ற பொருளும் பொருந்தும். வேந்தன் என்றால் இந்திரன் தானா? இந்திரன் என்ற சொல்லும் வேந்தன் என்ற சொல்லும் அரசன் என்ற பொதுப் பொருளைக் கொண்டிருப்பதாலும் இந்திரன் மழைக்கு தலைவன் என்று வடமொழி இலக்கியங்களும் பிற்கால தமிழ் இலக்கியங்களும் கூறுவதாலும் நீர் நிறைந்த நிலத்திற்கு இந்திரன் தலைவன் என்பதும் பொருந்தும். வருணன் என்பவன் வடமொழி வேதம் சொல்லும் வருணன் தானா? இல்லை வேறு தெய்வமா? இந்த கேள்வியும் உண்டு. வடமொழி வேதம் சொல்லும் தேவனாம் வருணனும் கடலுக்கு அரசனாகத் தான் அறியப்படுகிறான். இங்கும் கடலும் கடல் சார்ந்த இடமும் என்று வகுக்கப்படும் நிலமாம் நெய்தலுக்கு உரியவனாக வருணன் அறியப்படுகிறான். இங்கே பிற்கால இலக்கியங்கள் என்று சொன்னது தொல்காப்பியத்திற்குப் பின்னால் எழுந்த இலக்கியங்கள். அவற்றில் சங்க இலக்கியங்களும் அடக்கம்.

இப்படிப் பொருள் சொல்வதை மறுப்பவர்களும் உண்டு.

***

புறத்திணையியலில் ஐந்தாம் சூத்திரத்தின் ஒரு பகுதியில் பூவை நிலை என்னும் துறையைப் பற்றி விளக்கும் போது மாயோன் மீண்டும் சொல்லப்படுகிறான்.

மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ் பூவை நிலையும்


மாயோனின் நிலைத்த பெருஞ்சிறப்பின் எல்லாவற்றையும் மிஞ்சும் பெரும்புகழைப் பாடுவதைப் போல் தலைவனின் புகழைப் பாடுவது பூவை நிலை. மாயோனின் சிறப்பையும் பெருமையையும் பாட்டுடைத் தலைவனுக்கு உவமையாகச் சொல்வதும் பூவை நிலை. சிறப்பான் ஒன்றையே உவமையாகக் கூறுவார்கள். இங்கே மாயோனின் சிறப்பையும் புகழையும் மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுவிடாமல் மன்பெருஞ்சிறப்பு என்றும் தாவா விழுப்புகழ் என்றும் மிக மிக உயர்வாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து மாயோன் என்னும் தெய்வம் தமிழர்களின் மிகப் பெரும் தெய்வமாக இருந்திருக்கிறது என்பது விளங்கும்.

Friday, November 15, 2013

Veeran Azhgumuthu Kone tamil Song Free Download

Indian First Freedom First Freedom Veeran Azhgumuthu kone Songs

Download Veeran Azhgumuthu Kone Songs and Yadavar songs

Veeran azhgumuthu kone Download Songs1

Veeran azhgumuthu kone Download Song2

Veeran azhgumuthu kone Download Song3

Gurusamy Yadav Song Download
மாவீரன் அழகு முத்துக்கோன்

Thursday, November 7, 2013

சத்திரபதி சிவாஜி

பொதுவாக சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போஸ்லே (பிப்ரவரி 19, 1627 - ஏப்ரல் 3, 1680), மராட்டியப் பேரரசின் அடித்தளங்களை அமைத்து அளித்தளித்தவராவார். சாஹாஜி போஸ்லே மற்றும் ஜிஜாபாயின் இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார். பிஜாப்பூர் சுல்தானியம், டெக்கான் சுல்தானியர்கள் மற்றும் மொகாலியர்களுக்கு எதிராக பல்வேறு காலங்களில் இராணுவ சேவைகளை அளித்த அவர் தந்தை சாஹாஜி, ஒரு மராட்டிய தளபதியாக விளங்கியவர். ஹிந்தவி சுயராஜ்ஜியத்தின் (இந்திய சுயாட்சி) சித்தாந்தத்திற்கு ஆதரவளித்த சிவாஜி ராஜே போஸ்லே, பிஜாப்பூர் சுல்தானியத்திற்கும், இறுதியாக வலிமைமிக்க மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் அன்னிய ஆட்சிக்கும் நேரடியாக சவால் விட அவர்தம் தோழர்களுடனும், வீரர்களுடனும் ஓர் இந்து கோவிலில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். சிவாஜி, அவரின் வாழ்நாளில், மேற்கத்திய இந்தியாவின் தற்போதைய மாநிலமான மஹாராஷ்டிராவில் வலிமையாக பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியைக் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்தார்.
சிவாஜி மகாராஜாவின் ஹிந்தவி சுயராஜ்ஜிய சித்தாந்தமும், அதன் தொடர்ச்சியாக மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் தொடர்ச்சியான விரிவாக்கமும் தற்போதைய மகராஷ்டிர வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தால் அவர்கள் தவிர்க்கமுடியாமல் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர், இந்தியாவில் சுதந்திர பேரரசை உருவாக்கவதிலும், ஒரு வெற்றிகரமான மராட்டிய தலைமுறையை ஊக்குவித்ததிலும் ஹிந்தவி சுயராஜ்ஜியத்தின் சித்தாந்தம் பெரும் பங்கு வகித்தது. இந்த சித்தாந்தம், இஸ்லாமிற்கு எதிராகவோ அல்லது இந்துத்துவத்தைப் பரப்புவதை நோக்கியோ திருப்பி விடப்பட்டிருக்கவில்லை. ஒடுக்குமுறை ஆட்சியாளர்களால் தாக்குதல்களுக்கு உட்படாத ஓர் ஐக்கிய இந்தியா தான் சிவாஜியின் நோக்கமாக இருந்தது.
நன்கு நெறிப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவம் மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட நிர்வாக அமைப்புகளின் உதவியுடன் பேரரசர் சிவாஜி, ஒரு பொதுவாட்சியை உருவாக்கி அமைத்தார். பெண்களை யுத்த காரணத்திற்காக பயன்படுத்துதல், மத அடையாள சின்னங்களை அழித்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய மத மாற்றம் போன்ற அப்போதிருந்த பொதுவான பழக்கங்கள் அவர் நிர்வாகத்தில் முற்றிலுமாக எதிர்க்கப்பட்டன. அவர் தம்முடைய காலத்தில் பக்தியும், பரந்த மனப்பான்மையும் கொண்ட சிறந்த அரசராக விளங்கினார். சிவாஜி மகாராஜா, அவருக்கென இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான முறைகளை வகுத்திருந்தார். மராத்தியில் கானிமி காவா என்றழைக்கப்படும், கொரில்லா உத்திகளைப் பயன்படுத்துவதில் அவர் நிபுணராக விளங்கினார். அது இறப்பு எண்ணிக்கையையும், வேக தாக்குதல், திடீர் தாக்குதல், ஒருமுகப்பட்ட தாக்குதல் போன்ற பல்வேறு காரணிகளை மையப்படுத்தி இருந்தது. அவரின் எதிரிகளை ஒப்பிடும் போது, பேரரசர் சிவாஜியிடம் மிகச் சிறிய இராணுவமே இருந்தது. ஆகவே இந்த சமமின்மையைச் சமாளிக்க உதவும் வகையில் தான், அவர் கொரில்லா யுத்தத்தை செய்ய வேண்டி இருந்தது.
அவர் பேரரசின் பெரும்பாலான பகுதிகள் கடற்கரையாக இருந்தன, அவர் தம் தளபதி கான்ஹோஜி ஆங்ரேயின் கீழ் அதனை ஒரு வலிமையான கடற்படை கொண்டு பாதுகாத்து வந்தார். வெளிநாட்டு கடற்படை கப்பல்களை, குறிப்பாக போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிஷாரின் கப்பல்களை மடக்கி வைப்பதில் அவர் வெற்றிகரமாக இருந்தார். மிகப் பெரிய முதல் கடற்படை தளத்தை உருவாக்குவதற்கான அவரின் தொலைநோக்கு பார்வையால், அவர் "இந்திய கடற்படையின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். கடற்புற மற்றும் நிலப்பகுதி கோட்டைகளை உருவாக்குவது மற்றும் பாதுகாப்பதென்பது சிவாஜி மகாராஜின் இராணுவ வரலாற்றில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன. கடற்கரை மற்றும் கடல்எல்லைகள் மீதான சிவாஜியின் பாதுகாப்பு, பிரிட்டிஷ் ஆட்சியின் விரிவாக்கத்தையும், இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் அவர்களின் வர்த்தகத்தையும் தவிர்க்க முடியாமல் தாமதப்படுத்தியது.

பிறப்பு:

சிவாஜி மகாராஜ், சஹாஜி மற்றும் ஜிஜாபாய் போஸ்லே ஆகியோரின் இளைய மகன் ஆவார். சிவாஜி மகாராஜின் பிறந்த தேதியைக் குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. ஆனால் 1627 பிப்ரவரி 19 என்று கருதப்படும் நாள் சமீபத்தில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.அவர் பூனேவிற்கு 60 கிலோமீட்டர் வடக்கில், ஜூன்னாரில் உள்ள சிவனேரி கோட்டையில் பிறந்தார். அக்கோட்டையின் பெண்தெய்வமான ஷிவை என்பதன் நினைவாக சிவா என்று பெயரிடப்பட்டார். ஜிஜாபாயிற்கு சிவாஜி மகாராஜ் ஐந்தாவது குழந்தையாக பிறந்தார், அவர்களில் மூவர் மழலையிலேயே இறந்துவிட்டனர், சாம்பாஜி ஒருவர் மட்டுமே உயிரோடு இருந்தார். சிவாஜி மகாராஜ் பெரும்பாலும் அவர் அன்னையுடன் இருந்தார், சாம்பாஜி அவர் தந்தையுடன் பெங்களூரில் (தற்போது பெங்களூரூ) வசித்து வந்தார். சிவாஜி மகாராஜின் பிறந்த காலத்தில், மகாராஷ்டிராவின் அதிகாரம் பிஜாப்பூர் சுல்தானியம், அஹ்மதாபாத் சுல்தானியம் மற்றும் கொல்கொண்டா சுல்தானியம் ஆகிய மூன்று சுல்தானியங்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்தது. அப்போதிருந்த பெரும்பாலான மராட்டியர்களின் படைகள், அவர்களின் உடைமைகளை இந்த சுல்தானியங்களில் ஒன்றிடம் பிணையமாக வைத்திருந்தார்கள் மற்றும் பரஸ்பர நட்பு மற்றும் பகைமைகளின் ஒரு தொடர்ச்சியான விளையாட்டிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
சிவாஜியின் தந்தை சஹாஜி போஸ்லே, வேரூலில் (தற்போது மகாராஷ்டிராவின் எல்லோரா) இருந்த மலோஜி போஸ்லேயின் மூத்த மகனாவார். நிஜாம்ஷாஹியில் இருந்த ஒரு சர்தாரான லக்கூஜிராவ் ஜாதவ் தம் மகளான ஜிஜாபாயின் (சிவாஜி மகாராஜின் அன்னை) திருமணத்தை அவர் மகனான சஹாஜிக்கு முடித்து வைக்க மறுத்த விவகாரத்தில், லக்கூஜிராவினால் மலோஜி போஸ்லே அவமதிக்கப்பட்டதாக புராணங்கள் உள்ளன. இது நிஜாம்ஷாஹியின் கீழ் உயர்ந்த மதிப்புகளையும், ஒரு முக்கிய பொறுப்பையும் பெற வெற்றி பெறுவதற்கு மலோஜியை இட்டு சென்றது, இது தவிர்க்க முடியாமல் அவரை மான்சாப்தார் (இராணுவ தளபதி மற்றும் ஒரு ஏகாதிபத்திய நிர்வாகி) பட்டத்தைப் பெறவும் இட்டு சென்றது. இந்த புதிய புகழ் மற்றும் அதிகாரத்தைப் பெற்றதால், ஜாதவ்ராவ் அவரின் மகளை தம் மகன் சஹாஜிக்கு திருமணம் முடிக்க அவரை மலோஜி போஸ்லேவினால் சமாதானப்படுத்த முடிந்தது.
சஹாஜி பல்வேறு டெக்கான் யுத்தங்களில் அவர் தந்தை வகித்த ஒரு முக்கிய பாத்திரத்தை தொடர்ந்து ஏற்று சென்றார். அவர் அஹ்மதாபாத்தில் உள்ள இளம் நிஜாம்ஷாவுடனும், 1600ன் மொகலாயர்கள் தாக்குதலின் போது அவர்கள் பெற்ற மாவட்டங்களை மீண்டும் நிஜாம்ஷாவிற்காக வென்றெடுத்த நிஜாமின் மந்திரி மலிக் அம்பருடனும் இணைந்து தம் சேவையைத் தொடங்கினார்.அதிலிருந்து, லாகூஜி ஜாதவ், சஹாஜியின் மாமனார் சஹாஜியைத் தாக்கினார், அத்துடன் அவரை மஹூலி கோட்டையில், நான்கு மாத கர்ப்பிணியான ஜிஜாபாயுடன் சேர்த்து முற்றுக்கையிட்டார். நிஜாமிடமிருந்து எந்த உதவியும் வராததைத் தொடர்ந்து, சஹாஜி கோட்டையை விட்டு விட்டு, தப்பிவிட திட்டமிட்டார். அவர் தமது கட்டுப்பாட்டில் இருந்த சிவனேரி கோட்டைக்கு ஜிஜாபாயைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். அங்கு, சிவனேரியில் தான் சிவாஜி மகாராஜ் பிறந்தார். இதற்கிடையில், லாகூஜியின் கடமையில் சந்தேகப்பட்டு, லாகூஜியும், நிஜாம்ஷாவின் படைகளில் சேர வந்திருந்த அவர் மூன்று மகன்களும், அவர்தம் நீதிமன்றத்தில் கொல்லப்பட்டார்கள். இந்த சம்பவத்தால் அதிருப்தி அடைந்த சஹாஜி ராஜே, நிஜாம்ஷாஹி சுல்தானியத்தில் இருந்து விலகி செல்ல முடிவெடுத்தார், மற்றும் சுதந்திர பதாகையை உயர்த்தினார். அத்துடன் ஒரு சுதந்திர பேரரசை உருவாக்கினார்.
இந்த பாகத்திற்கு பின்னர் அஹ்மதாபாத் மொகாலய சக்ரவர்த்தி ஷா ஜஹானிடம் வீழ்ச்சி அடைந்தது, அதன்பின்னர் குறுகிய காலத்தில் நிஜாமின் தளபதியாக இருந்த சஹாஜி மொகாலய படைகளைத் தாக்கி அந்த பகுதியின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றினார். இதற்கு பிரதிபலிப்பாக திரும்பவும் அந்த பகுதியைக் கைப்பற்ற ஒரு பெரிய படையை 1635ல் அனுப்பிய மொகாலயர்கள், மஹூலிக்குள் சஹாஜி பின்னடைய வேண்டிய நிலைக்கு கட்டாயப்படுத்தினார்கள். 1636ஆம் ஆண்டில் இந்த பகுதியை ஆள்வதற்கு அதிகாரத்தை மீட்டு கொடுத்ததற்காக மொகலாயர்களுக்கு திறை செலுத்த பிஜாப்பூரின் அடில்ஷா உடன்பட்டார்.அதன்பின்னர், பிஜாப்பூரின் அடில்ஷாவால் சஹாஜி சம்பிரதாயப்படி பதவியில் அமர்த்தப்பட்டார். மேலும் ஒரு தொலைதூர ஜாகிர் நிலவுடைமைகள் (தற்போது இது பெங்களூர்), இவருக்கு அளிக்கப்பட்டன, அத்துடன் பூனேயில் இருந்த அவரின் பழைய நிலங்களையும், உடைமைகளையும் வைத்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார்

சாம்ராஜ்ஜியத்தின் உருவாக்கம்:

சிவாஜி மகாராஜின் அன்னையான ஜிஜாபாய் கவனிப்பின் கீழ், பூனே உடைமைகளை நிர்வகிக்க இளம்வயது சிவாஜி மகாராஜை சஹாஜி நியமித்தார். நிர்வாகத்தில் சிவாஜி மகாராஜிற்கு உதவவும், பயிற்றுவிக்கவும் ஒரு சிறிய அமைச்சர்கள் குழுவும் நியமிக்கப்பட்டது. இந்த குழுவில் ஷாம்ராவ் நீல்கந்த் பேஷ்வாவாகவும் (பிரதம மந்திரி), பாலகிருஷ்ண பாண்ட் முஜூம்தார் ஆகவும், ரகுநாத் பல்லால் சப்னீசாகவும் , சோனோபண்ட் தாபீரா கவும், சாத்தியப்பட்ட வகையில் தாதோஜி கொண்டியோ ஆலோசகராகவும் இருந்தனர். இந்த மந்திரிகள் தவிர, இராணுவ தளபதிகள் கன்ஹோஜி ஜிட்ஹே மற்றும் பாஜி பாசல்கார் ஆகியோர் சிவாஜி மகாராஜை இராணுவ கலைகளில் பயிற்சி அளிக்க நியமிக்கப்பட்டார்கள்.1644ல், பூனேயில் தம் மனைவிக்காகவும், மகன் சிவாஜி மகாராஜிற்காகவும் சஹாஜி லால் மஹால் கட்டினார். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஓர் இராஜமுத்திரை, இது சஹாஜியின் மகனான சிவாஜியின் இராஜமுத்திரையாகும் என்று குறிப்பிடுகிறது. இந்த இராஜமுத்திரை மக்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டது. பிறைநிலா வளர்வது போல் இருந்த இந்த முத்திரை (முத்திரையின் விதி) , சிவாஜி மகாராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு சிவாஜி மகாராஜ்ர அரசியல் செயல்திட்டத்தின் ஒரு சிறிய பேரரசின் சுதந்திரமான ஓர் இளம் இளவரசராக அவரின் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். சிவாஜி மகாராஜ், ராஜா (அரசர்) என்ற பட்டத்தையே சஹாஜியின் மரணத்திற்கு பின்னர் தான் பயன்படுத்தினார்.
தாய்நாட்டின் மீதும், அதன் மக்கள் மீதும் தம் பற்றை அவர் அன்னை தமது பாடங்களுடன் கூறி ஓர் அழிக்க முடியாத நம்பிக்கையை அவருக்குள் உருவாக்கினார். சிவாஜி மகாராஜ், அரசியல் சுதந்திரத்திற்கான அவர் தந்தையின் தோல்வி முயற்சிகளில் இருந்து நிறைய பாடங்களைக் கற்று கொண்டார்: அதாவது அவரின் தனித்துவமான இராணுவ திறமைகள் மற்றும் சாதனைகள், சமஸ்கிருதம், இந்து பண்பாடு, கலைச்சிறப்புகள், அவரின் யுத்த தந்திரங்கள் மற்றும் அமைதிகால இராஜாங்கம் ஆகியவற்றை கற்று கொண்டார். விடுதலை மற்றும் சுதந்திரத்திற்கான அவர் குடும்பத்தின் இலட்சியம் அவருக்கு கற்று கொடுக்கப்பட்டது, அவற்றால் ஊக்கமளிக்கப்பட்டார். மேலும், அப்பிராந்திய அரசர் நிஜாம்ஷாவினால் நடத்தப்பட்ட ஒரு துரோககரமான சதியால் அவர் அன்னை, தம் தந்தையையும், மூன்று சகோதரர்களையும் இழந்திருந்தார். அன்னிய நாட்டு ஆட்சியாளர்களாக அவர் கருதியவர்களின் உள்ளூர் மக்கள் மீதான ஏளனம் மற்றும் உணர்வுகளை மதிக்காத தன்மையால் அவர்களை அவர் வெறுத்தார். இவ்வாறு சுய-மரியாதை மீதான ஓர் இயற்கையான பற்றையும், அன்னிய அரசியல் செல்வாக்கின் மீதான வெறுப்பையும் ஜிஜாபாய் சிவாஜி மகாராஜிற்குள் ஊற்றி வளர்த்தார்.
சொந்த கலாச்சாரத்தின் மீதான அவரின் பற்றும், பொறுப்பும், அத்துடன் சிறந்த இந்திய புராணங்களான மகாபாரதம் மற்றும் இராமாயணத்தில் இருந்து எடுத்துக்கூறிய கதைகளும் சிவாஜி மகாராஜாவின் பண்பை வடிவமைத்தன, அவரை இணையற்றவராக (அவருக்கு விரோதமான வரலாற்றாளரான காஃபி கான் கூட இதை உறுதிப்படுத்துகிறார்) குறிப்பாக பிற மதம் மீதான அவரின் சகிப்புத்தன்மை குணம், அத்துடன் பெண்கள் மற்றும் போரில் ஈடுபடாதவர்கள் மீதான அவரின் கருணை, இரக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்க அவருக்கு உதவியது. ஷாஹாஜியின் இலக்கு , ஜிஜாபாயின் கல்வி மற்றும் ஊக்கம், தாதோஜி கொண்டதேவ் போன்ற நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களாலும், கோமாஜி நாயக் பன்சம்பால் மற்றும் பாஜி பசால்கர் போன்ற இராணுவ தளபதிகளாலும் அளிக்கப்பட்ட சிறந்த பயிற்சிகள் தான் சிவாஜி மகாராஜை ஒரு தைரியமான மற்றும் அச்சமற்ற இராணுவ தலைவராகவும், அத்துடன் ஒரு பொறுப்புள்ள நிர்வாகியாகவும் மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தன. சிவாஜி மகாராஜ் அவர் மாவல் நண்பர்களுடனும், வீரர்களுடனும் சேர்ந்து ரோஹிதேஷ்வாரா கோவிலில் சுயராஜ்ஜியத்திற்காக இரத்தத்தால் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

பிராந்திய சுல்தானியர்களுடன் மோதல்

1645ல், 17 வயதில், பிஜாப்பூர் பேரரசின் டோர்னா கோட்டையைத் தாக்கி கைப்பற்றியதன் மூலம் சிவாஜி மகாராஜ் அவரின் முதல் இராணுவ தாக்குதலை நடத்தினார். 1647 வாக்கில், அவர் கொண்டனா மற்றும் ராஜ்காட் கோட்டைகளை கைப்பற்றினார், அத்துடன் தெற்கு பூனே பிராந்தியத்தின் பெரும்பகுதிகளையும் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். 1654 வாக்கில், சிவாஜி மகாராஜ் மேற்கத்திய தொடர்களில் இருந்த கோட்டைகளையும், அத்துடன் கொங்கன் கடற்கரையையும் கைப்பற்றினார். சிவாஜி மகாராஜின் திறமையான தலைமையின் கீழ் மராட்டியர்களின் இந்த நகர்வை நாசம் செய்வதற்கான ஒரு திட்டத்தில், அடில்ஷா அவர் தந்தை சஹாஜியைப் போலி காரணத்திற்காக கைது செய்தார், மேலும் பெங்களூரில் இருந்த சிவாஜி மகாராஜின் மூத்த சகோதரரான சம்பாஜிக்கு எதிராக (பர்ரத்கான் தலைமையில்) ஒரு இராணுவத்தையும், புரந்தரில் சிவாஜி மகாராஜிற்கு எதிராக (பட்டீகான் தலைமையில்) ஓர் இராணுவத்தையும் அனுப்பி வைத்தார். எவ்வாறிருப்பினும், இரண்டு போஸ்லே சகோதரர்களும் அந்த எல்லைமீறி நுழைந்த இராணுங்களைத் தோற்கடித்து - சிவாஜி மகாராஜ் ஷாஜஹானின் உதவியைக் கேட்டு மனு செய்ததற்கான சாத்தியக்கூறுகளும் இதில் இருக்கின்றன - அவர்களின் தந்தையை விடுவித்து காப்பாற்றினார்கள். அதன்பின்னர், பக்குவப்பட்ட ஒரு தளபதியும், காரியத்தை நிறைவேற்ற கூடிய ஒரு போர்வீரரும் ஆன அப்ஜல் கான், பிஜாப்பூரால் ஒரு பிராந்திய புரட்சியாக பார்க்கப்பட்டதை மாற்றியமைத்து சிவாஜி மகாராஜை தோற்கடிக்க அனுப்பி வைக்கப்பட்டார்.

பிரதாப்கட் போர்

பிஜாப்பூரை விட்டு நகர்ந்த அப்ஜல்கான், துல்ஜாபூர் மற்றும் பண்டர்பூரில் உள்ள இந்து கோயில்களை நாசப்படுத்தினார். சிவாஜி மகாராஜை உணர்வுப்பூர்வமான கொந்தளிப்பிற்கு உள்ளாக்கி, எண்ணிக்கையில் உயர்ந்த, சிறந்த ஆயுதமேந்திய மற்றும் மிக துல்லியமான பிஜாப்பூர் இராணுவத்தால் அவரின் சிறிய இராணுவ வளங்களைப் பழிக்குப்பழி வாங்கவும், அவ்வாறு அவரை வெற்றி கொள்ளவும் மற்றும் அவரிடம் அரும்பி வந்த இராணுவ அதிகாரத்தை எளிதாக அழிக்கவும் அவர் திட்டமிட்டார். எவ்வாறிருப்பினும், சிவாஜி மகாராஜ் வேறொரு யோசனைகளைக் கொண்டிருந்தார். தாம் அப்ஜல்கானை முகங்கொடுக்க விரும்பவில்லை என்றும், ஏதாவதொரு வகை புரிந்துணர்வுக்கு வர விரும்புவதாகவும் அவர் ஒரு கடிதம் அனுப்பினார். மிக கவனமாக தமது கருத்துக்களை முன்னிறுத்திய சிவாஜி மகாராஜ், இராஜாங்க பேச்சுவார்த்தைகள் என்ற புனைவில் அப்ஜல்கானை ஆச்சரியப்படுத்தவும், எதிர்கொள்ளவும் தந்திரமாக முடிவெடுத்தார். பிரதாப்கட் கோட்டையின் அடிவாரத்தில் சிவாஜி மகாராஜிற்கும், அப்ஜல்கானிற்கும் இடையிலான ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தின் போது, அப்ஜல்கான் சிவாஜி மகாராஜைக் கொல்ல திட்டமிட்டிருந்தான் என்ற தகவல் அவருக்கு கிடைத்தது.
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக பிச்சுவா (குத்துவாள்), வாஹ் நாக் (புலிநகம்) மற்றும் சில்காட் (சங்கிலி கவசம்) போன்ற ஆயுதங்களால் சிவாஜி மகாராஜ் தம்மைத்தாமே ஆயுதபாணியாக்கி கொண்டார். அந்த பேச்சுவார்த்தையின் போது என்ன சம்பவித்தது என்பது படியெழுதுபவர்களால் பதிவு செய்யப்படவில்லை, ஆனால் அவர்களின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் வெகு விரைவில், உயரமான அப்ஜல்கான் - வழக்கமாக கட்டித்தழுவலின் போது - அவரின் இடது கையால் சிவாஜி மகாராஜின் கழுத்தைப் பிடித்து இறுக்கி கொண்டு, அவரின் வலது கையால் ஒரு குத்துவாளினால் சிவாஜி மகாராஜை குத்தினார். எவ்வாறிருப்பினும், சிவாஜி மகாராஜின் கவசம் அவரை காப்பாற்றியது. பழிவாங்கும் நடவடிக்கையில், அவர் அப்ஜல்கானை ஒரு வாஹ்நாக் மற்றும் பிச்சுவாவினால் தாக்கினார், அவர் இரத்தமும், குடலும் தரையில் வந்து விழுந்தன. உடனே அப்ஜல்கானின் காவலாளி சையத் பாண்டா வாட்களுடன் சிவாஜி மகாராஜை தாக்கினான், ஆனால் சிவாஜி மகாராஜின் பிரத்யேக பாதுகாவலன் ஜீவா மஹாலா அவனை அடித்து கீழே தள்ளியதுடன், சையத் பாண்டாவின் ஒரு கரத்தை தண்டாபட்டாவினால் (படா - கோடாளி போன்ற ஆயுதம்) வெட்டி எறிந்தான். கூடாரத்தி்ல் இருந்து உதவியைப் பெற தட்டுத்தடுமாறி வெளியே வந்த அப்ஜல்கான், நிறுத்தி இருந்த சிவிகையில் ஏற முற்பட்டான், ஆனால் தப்பிப்பதற்கு, எச்சரிக்கை ஒலியை எழுப்புவதற்கும் முன்னால் சிவாஜி மகாராஜின் கூட்டாளி சம்பாஜி காவ்ஜி கொண்டல்கரால் தாக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டான்.
1659 நவம்பர் 30ல் அடர்ந்த ஜாவ்லி காட்டில் தொடர்ந்து கொண்டிருந்த பிரதாப்கர் யுத்தத்தில், சிவாஜி மகாராஜின் இராணுவங்கள் பிஜாப்பூரின் (அப்ஜல் கானின்) படைகளை தாக்கின, அவர்களை திடீர் தாக்குதல் உத்திகளில் சிக்க வைத்திருந்தனர். அப்ஜல்கானை கொன்ற உடனேயே, சிவாஜி மகாராஜ் அவரின் தளபதிகளுடன் கோட்டையை நோக்கி இருந்த சரிவை நோக்கி விரைந்து சென்றார், அத்துடன் பீரங்கிகள் மூலம் குண்டு வீசவும் உத்தரவிட்டார். இது, உடனடியாக அப்ஜல்கானின் படைகளைத் தாக்க, அடர்த்தியாக இருந்த பள்ளத்தாக்கில் தந்திரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர் காலாட்படைகளுக்கு அளிக்கப்பட்ட ஒரு சமிக்ஞையாக ஆகும்.1,500 முஸ்கீதர்களைத் தாக்கிய கன்ஹோஜி ஜீதேவின் கீழ் இருந்த மராட்டிய துருப்புகள், அவர்களை கோட்டையின் அடிவாரத்திற்கு திருப்பி விட்டது. பின்னர் ஒரு விரைவான அணிவகுப்புடன், முஷீகான் தலைமையிலான அடில்ஷாஹி படைகளின் ஒரு பிரிவு தாக்குதலில் ஈடுபட்டது. இதில் காயப்பட்ட முஷீகான், அவரின் வீரர்கள் தங்களுக்குதாங்களே தற்சார்பாக நிற்க விட்டுவிட்டு களத்தை விட்டு வெளியேறினார். தளபதி மோரோபாண்ட் பின்கலே, அடில்ஷாஹி துருப்புகளின் கைவிடப்பட்ட பகுதியின் அந்த காலாட்படைகளுக்கு தலைமை ஏற்று நடத்தினார். படைத்தங்கும் இடத்திற்கு நெருக்கத்தில் வந்து அவர் அளித்த திடீர் தாக்குதலால், அடில்ஷாவின் இராணுவம் நிலைகுலைந்து போனது. குதிரைப்படைகள் யுத்தத்திற்கு தயாராவதற்கு முன்னதாகவே தளபதி ரகோ ஆட்ரி விரைவாக குதிரைப்படையைத் தாக்கினார், அதில் பெரும்பாலும் ஒட்டுமொத்தமும் அழிக்கப்பட்டது. வேயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அடில்ஷாஹி படைகளுன் இணைய முயற்சித்த அடில்ஷாஹி படைகளைப் பின்வாங்கச் செய்யும் ஓர் உச்சக்கட்ட முயற்சியில் நேதாஜி பால்கர் தலைமையிலான குதிரைப்படை வேய் நோக்கி விரைந்து சென்றது. யுத்தத்தில் ஈடுபட்டிருந்த அப்ஜல்கானின் பின்வாங்கிய படைகள் திருப்பி விடப்பட்டன.[6]
இந்த வெற்றி சிவாஜி மகாராஜை மராட்டிய நாட்டுபுறத்தில் ஒரு கதாநாயகனாகவும், அவர் மக்கள் மத்தியில் ஒரு சரித்திர பிரபலமாகவும் மாற்றியது. பெரும் எண்ணிக்கையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், குதிரைகள், கவசங்கள் மற்றும் பிற பொருட்கள் ஆரம்பகட்டத்தில் வளர்ந்து கொண்டிருந்த மராட்டிய இராணுவத்தை வலிமைப்படுத்த உதவியாக இருந்தது. மொகலாய சாம்ராஜ்ஜிய அவுரங்காசீப், சிவாஜி மகாராஜை அவரின் வலிமை வாய்ந்த மொகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக கண்டார். அதன்பின்னர் விரைவிலேயே, சிவாஜி மகாராஜ், சஹாஜி மற்றும்உ நேதாஜி பால்கர் (மராட்டிய குதிரைப்படையின் தலைவர்) ஆகியோரால் பிஜாப்பூரின் அடில்ஷாஹி பேரரசைத் தாக்கி தோற்கடிக்க வேண்டுமென்று ஒரு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், சஹாஜியின் உடல்நிலை மோசமடைந்ததால் திட்டமிட்டப்படி செயல்கள் நடைபெறவில்லை, ஆகவே அவர்கள் தங்களின் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். எவ்வாறிருப்பினும், நேதாஜி பால்கர், அடில்ஷா பேரரசிற்கு தொல்லை அளிக்கும் சிறியளவிலான தாக்குதல்களுடனும் இந்த திட்டத்தை கையில் எடுத்தார்.
அதே வேளையில், சிவாஜி மகாராஜ் அவரின் இராணுவத்தை கணிசமாக விஸ்தரிப்பதற்கு முன்னதாக அவரை தோற்கடிக்கவும், பின்னிருத்தவும் ஆப்கானிய சிப்பாய்களை முதன்மையாக கொண்ட ஒரு மேற்தட்டு புஷ்தான் இராணுவத்தை பிஜாப்பூர் சுல்தான் அனுப்பினார். அதன் விளைவாக ஏற்பட்ட யுத்தத்தில், பிஜாப்பூர் புஷ்தானின் இராணுவம் மராட்டிய துருப்புகளால் நசுக்கப்பட்டது. இந்த தீவிர, இரத்தந்தோய்ந்த யுத்தம், பிஜாப்பூர் படைகள் சிவாஜி மகாராஜிற்கு நிபந்தனையற்ற முறையில் சரணடைந்தவுடன் முடிவுக்கு வந்தது.

கோல்ஹாபூர் போர்:

பிரதாப்கட் இழப்பை ஈடுகட்டவும், புதிதாக உருவாகி வரும் மராட்டிய சக்தியை தோற்கடிக்கவும், இந்த முறை 10,000த்திற்கும் மேலான எண்ணிக்கை கொண்ட மற்றொரு இராணுவம், பிஜாப்பூரின் புதிய அபிசீனியன் ஜெனரல் ருஸ்தாம்ஜமான் தலைமையில் சிவாஜி மகாராஜிற்கு எதிராக அனுப்பி வைக்கப்பட்டது.5000 மராட்டிய குதிரைப்படைகளுடன், 1659 டிசம்பர் 28ஆம் தேதி கோல்ஹாபூரில் சிவாஜி மகாராஜ் அவர்களைத் தாக்கினார்.
ஒரு விரைவான போராட்டத்தில், சிவாஜி மகாராஜ் தலைமையில் எதிரி படைகளின் மத்தியில் ஒரு முழு முன்னணி தாக்குதல் நடத்தப்பட்டது, அதேவேளை அவரின் குதிரைப்படைகளின் மற்ற இரண்டு பிரிவுகள் பக்கவாட்டில் இருந்து தாக்கின. பல மணி நேரம் தொடர்ந்த இந்த யுத்தத்தின் இறுதியில் பிஜாப்பூர் படைகள் கடுமையான தோல்வியைத் தழுவின, ருஸ்தாம்ஜமான் இழிவான வகையில் யுத்தக்களத்தை விட்டு ஓடிவிட்டார். அடில்ஷாஹி படைகள் சுமார் 2000 குதிரைகளையும், 12 யானைகளையும் மராட்டியர்களிடம் இழந்தார்கள். இந்த வெற்றி, அப்போது சிவாஜி மகாராஜை ஏளனம் செய்யும் வகையில் "மலைவாழ் எலி" என்று குறிப்பிட்டு வந்த வலிமையான மொகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு எச்சரிக்கை மணி அடித்தது. முக்கியமான மராட்டிய அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வர, மொகலாய சக்ரவர்த்தி அவுரங்காசீப் அப்போது முழு பலத்தையும், மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் வளங்களையும் ஒட்டுமொத்தமாக கொண்டு வர தயாராகி கொண்டிருந்தார்.
1660 ஜனவரியில் பிஜாப்பூரின் படி பேகமின் வேண்டுகோளின் பேரில், சிவாஜி மகாராஜை தோற்கடிக்க 10,000த்திற்கும் மேற்பட்ட இராணுவ எண்ணிக்கையுடனும், சக்திவாய்ந்த ஆயுதங்களுடனும் அவுரங்காசீப் அவரின் தாய்வழி மாமாவான சாய்ஸ்தா கானை அனுப்பினார். துர்க்தாஜ், ஹூசைன், ஹைதர், நாம்தார் கான், கர்தாலப் கான், உஜ்பெக் கான், பதெக் ஜங்க் மற்றும் பானு சிங், சியாம் சிங், ராய் சிங், சிசோதியா, பிரத்யூமன் போன்ற ராஜபுத்திரர்களுடன் மேலும் பலரையும் சேர்த்து கொண்டிருந்த திறமையான தளபதிகளைக் கான் கொண்டிருந்தார். அனுபவம் வாய்ந்த தளபதியான கான், 1636ல் அதே பிராந்தியத்தில் சஹாஜியை தோற்கடித்திருந்தார். சிட்தி ஜௌஹரின் தலைமையிலான பிஜாப்பூர் இராணுவத்துடன் இணைந்து மராட்டிய பேரரசை எதிர்க்க அவர் உத்திரவிடப்பட்டிருந்தார். ஜௌஹரால் சிவாஜி தோற்றகடிக்கப்பட்ட பின்னர், மராட்டிய பேரரசை கைப்பற்ற (அதன் மூலம் அடில்ஷாவை ஏமாற்ற) சாய்ஸ்தா கானுக்கு அவுரங்காசீப் உத்தரவிட்டிருந்தார். சிவாஜி தற்போது மொகலாயர்கள் மற்றும் அடில்ஷா படைகள் ஆகிய இரண்டின் தாக்குதலையும் முகங்கொடுக்க தயாரானார்.

பன்ஹாலா முற்றுகை

 

1660ல், சிவாஜி மகாராஜை தோற்கடிக்க ஒரு தலைச்சிறந்த ஜெனரலான சிட்தி ஜௌஹரை அடில்ஷா அனுப்பினார். மஹாராஷ்டிராவின் கோலாப்பூருக்கு வடக்கே சிவாஜி மகாராஜை எதிர்கொண்டு, அனைவருக்குமாக தோற்கடிக்க 40,000 பேர் கொண்ட அவர் இராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டார். பாலாவானியின் ஜஸ்வந்த்ராவ் தால்வி மற்றும் ஸ்ரிங்கர்பூரின் சூர்யாராவ் சர்வே ஆகியோர் சிவாஜி மகாராஜை தோற்கடிக்க சிட்தி ஜௌஹருக்கு உதவினார்கள்.அந்த நேரத்தில், சிவாஜி மகாராஜ் அவரின் 8,000 மராட்டிய படைவீரர்களுடன், அவரின் அதிகாரத்தி்ற்குட்பட்ட எல்லையின் தெற்கில் இருந்த, தற்போதைய கோலாப்பூருக்கு அருகில் உள்ள பன்ஹாலா கோட்டையில் முகாமிட்டிருந்தார். சிட்தி ஜௌஹரின் இராணுவம் 1660 மார்ச் 2ஆம் தேதி, பன்ஹாலாவின் அனைத்து வினியோக வழிகளையும் அடைத்து விட்டு கோட்டையை முற்றுகையிட்டது. பாஜி கோர்பேட் மற்றும் சிட்தி மாசூத்தினால் மேற்கிலும், சதக் கான் மற்றும் பாய்கானினால் வடக்கிலும், ரஸ்லாம் ஜமாம் மற்றும் பேட்கானினால் கிழக்கிலும், சிட்தி ஜௌஹர் மற்றும் பஜல் கானினால் தெற்கிலும் அந்த கோட்டை முற்றுகை இடப்பட்டிருந்தது. மராட்டிய படையின் கமாண்டர்-இன்-சீஃப் நேதாஜி பால்கர், அடில்ஷாஹி மாகாணத்தை தாக்குவதற்கும், நசுக்குவதற்கும் பன்ஹாலாவில் இருந்து தொலைவில் இருந்தார் என்பதால் சிவாஜி மகாராஜின் உதவிக்கு அவரால் வர முடியவில்லை. அந்த நேரத்தில், சாய்ஸ்தா கான் பாராமதியில் இருந்து சிர்வாலாவிற்கு நகர்ந்தார்.
பன்ஹாலா மிகவும் வலிமைமிக்க கோட்டையாகும். அடில்ஷா இராணுவம் தொடர்ச்சியாக பீரங்கி குண்டு வீச்சுகள் மற்றும் வலிமையான பாறை-மோதல்களுடன் போராடி வந்தது. இவ்வாறு, சிட்தி ஜௌஹர் ராஜ்பூர் துறைமுகத்தில் இருந்த பிரிட்டிஷ் தலைவர் ஹென்ரி ரிவிங்டன்னிடம் தொலைதூர மற்றும் நவீன பீரங்கிகளை கேட்டார். எதிர்கால உதவிகளின் நிபந்தனைகளுடன் ஹென்ரி அவருக்கு உதவ முன்வந்தார், பன்ஹாலா கோட்டை உடையத் தொடங்கியது. இதற்கிடையில், இந்த மராட்டியர்கள் பன்ஹாலாவைக் காப்பாற்றுவதற்கான முயற்சியைத் தொடர்ந்தார்கள். அத்துடன் சிட்தி ஜௌஹரை வளைகுடாவில் நிறுத்தி வைப்பதற்கான முயற்சியையும் தொடர்ந்தார்கள்.மராட்டியர்கள் சிலமுறை அடில்ஷாவின் முகாம்களை தாக்கினார்கள், ஆனால் அதல் பெரும் வெற்றி பெற முடியவில்லை. எவ்வாறிருப்பினும், இதுபோன்ற ஒரு தாக்குதலில், டிரையம்பாக் பாஸ்கர் மற்றும் கொண்டாஜி பார்ஜண்ட் இருவரும் முறையே தங்களைத்தாங்களே பிரிட்டிஷ் அதிகாரி போன்றும், அடில்ஷாவின் ஒரு வீரரைப் போலவும் மாறுவேடமிட்டார்கள். அவர்கள் அடில்ஷாவின் முகாமிற்குள் வந்து ஹென்றி ரெவிங்டன் மற்றும் அவர் கூட்டாளிகளைச் சந்தித்தார்கள். அவர்கள் ஒரு பிரிட்டிஷ் அதிகாரியை கொன்றதுடன், ஹென்றியையும் காயப்படுத்தினார்கள். அதன்பின்னர், பீரங்கிகளை அழித்ததுடன், அவர்களை அவர்களே பயனற்றவர்களாகவும் ஆக்கி கொண்டார்கள். இதனால் ஜௌஹர் லிவிட் முற்றுகையை மேலும் இறுக்கினார். பன்ஹாலாவைச் சுற்றியுள்ள முற்றுகை தளர்ந்து விடாமல் இருப்பதை உறுதி செய்ய, ஜௌஹர் ஒரு கல் கூட நகரவிடவில்லை. ஜௌஹர் தனிப்பட்ட முறையில் மிகவும் கவனமாக இருந்தார், அவர் இராணுவத்தில் இருந்த ஒருவர் கூட அகமகிழ்வுடன் இல்லை.ஆரவாரமான மழையையும் எதிர்கொள்ள ஏற்பாடுகள் செய்த அவர், கடுமையான மழையிலும் கூட முற்றுகையைத் தொடர்ந்தார். பன்ஹாலாவின் கடுமையான முற்றுகையை பற்றி அறிந்த நேதாஜி பால்கர் பிஜாப்பூரில் இருந்து திரும்பி பன்ஹாலாவைச் சுற்றி இருந்த அடில்ஷாவின் படைகளைத் தாக்கினார். முற்றுகையை உடைக்க அவர் முயன்றார், ஆனால் சிறியளவிலான மராட்டிய படை, பெரிய எண்ணிக்கையிலான அடில்ஷாஹி இராணுவத்தால் பின்னுக்கு தள்ளப்பட்டது.[13]
அது முதல், சிவாஜி மகாராஜ், அருகில் இருந்த விஷால்கட் கோட்டைக்கு தப்பிவிடவும், அங்கு அவரின் வீரர்களை மீண்டும் ஒன்று திரட்டி, சிட்தி ஜௌஹர் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்த தீர்மானித்தார். சிவாஜி மகாராஜ் தாம் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், தங்குமிடம், புரிந்துணர்வு மற்றும் கருணையை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டு சிட்தி ஜௌஹருக்கு திசைதிருப்பும் செய்திகளை அனுப்பினார். அதற்கிடையில், பிஜாப்பூரைத் தாக்க சிவாஜி வலிமையான சிட்தி ஜௌஹருக்கு பணம் மற்றும் ஆட்களை அளித்து உதவுகிறார் என்ற வதந்திகளையும் சிவாஜி பரவவிட்டார். இந்த செய்தியால், அடில்ஷா வீரர்கள் சற்று தளர்ந்தார்கள், சிவாஜி மகாராஜ் 1660 ஜூலை 12ஆம் தேதி இரவு 10 மணிக்கு ஒரு பயங்கர இரவில் தப்பித்தார்.சிவாஜி மகாராஜை தப்புவிக்க எதிரிகளைத் திசைதிருப்புவதற்காக சிவாஜி மகாராஜ் போன்ற தோற்றமுடைய சிவகாஷித்தை அவர் போன்றே உடையணிவித்து வெளியில் அணுப்பினார், ஜௌஹரின் வீரர்கள் போலியான சிவாஜி மகாராஜ் உட்பட மராட்டியர்களின் ஒரு சிறு குழுவை பிடித்தார்கள். பிடிக்கப்பட்டவர் சிவாஜி மகாராஜைப் போன்றே தோற்றமுடையவர் என்பதையும், சிவாஜி மகாராஜூம் அவர் இராணுவமும் விஷால்கட்டிற்கு சென்று விட்டார்கள் என்பதையும் ஜௌஹரின் வீரர்கள் பின்னர் புரிந்து கொண்டார்கள்.

பவன்கிண்ட் யுத்தம்

எதிரிகளின் குதிரைப்படை விரைவாக தங்களை நெருங்கி வருவதை உணர்ந்த சிவாஜி மகாராஜ் தோல்வியையும், பிடிபடுவதையும் தவிர்க்க விரும்பினார். ஒரு மராட்டிய சர்தாரான பாஜி பிரபு தேஷ்பாண்டே, அவரின் 300 வீரர்களுடன் எதிரிகளை கோட்கிண்டில் (விஷால்கண்டில் இருந்து 4 மைல்கள் தூரத்தில் இருந்த காஜாபூருக்கு அருகில் இருந்த ஒரு மலைப்பாதை) நிறுத்தி வைக்க இறக்கும் வரை போராட தாமாக முன்வந்தார், இதன் மூலம் சிவாஜி மகாராஜூம், அவரின் எஞ்சிய இராணுவமும் விஷால்கட்டிற்கு பாதுகாப்பாக சென்றடைய ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
பவன்கிண்ட் யுத்தத்தைத் தொடர்ந்து, பாஜி பிரபு தேஷ்பாண்டே கடுமையாக போராடினார். முற்றிலுமாக மிக கடுமையாக அவர் காயப்பட்டிருந்த போதினும், சிவாஜி மகாராஜ் பாதுகாப்பாக கோட்டையைச் சென்றடைந்து விட்டார் என்பதற்கு அறிகுறியாக விஷால்கட்டில் இருந்து பீரங்கி முழக்கம் கேட்கும் வரை அவர் தொடர்ந்து போராட்டத்தைத் தக்க வைத்திருந்தார். இதன் விளைவு இந்த கொடூரமான யுத்தத்தில் 300 மராட்டியர்களின் மரணம் மற்றும் அடில்ஷா துருப்புகளில் 1286 வீரர்களின் மரணம். சிவாஜி 1660 ஜூலை 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு அக்கோட்டையைச் சென்றடைந்தார் அதன்பின்னர் சிவாஜி மகாராஜாவின் பேரரசை சுதந்திர நாடாக உத்தியோகப்பூர்வமாக அங்கீகரித்தும், உறுதியளித்தும் சிவாஜி மகாராஜிற்கும், அடில்ஷாவிற்கும் இடையில் சஹாஜியின் மூலம் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. மேலும், அமைதி பேச்சுவார்த்தையின் அடிப்படையில், பன்ஹாலா கோட்டை சிட்தி ஜௌஹருக்கு அளிக்கப்பட்டது
பாஜி பிரபு தேஷ்பாண்டே, ஷிபோசிங் ஜாதவ், புலோஜி, பண்டால் சமூக மக்கள் (அந்த பிராந்தியம் பற்றிய அறிவு, மலையேற்ற திறன், இராணுவ பண்புகள் ஆகிய காரணங்களை மனதில் கொண்டு பன்ஹாலாவில் இருந்து தப்பிக்கும் போது குறிப்பாக பண்டால் சமூகத்தின் மக்கள் சிவாஜியால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்) மற்றும் கோட்கண்டில் போராடிய பிற வீரர்களை கௌரவிக்கும் வகையில் கோட்கிண்ட் (கிண்ட்=ஒரு குறுகலான மலைப்பாதை), பவன்கிண்ட் (புனித பாதை) என்று பெயர் மாற்றப்பட்டது.பாஜி பிரபு மற்றும் அவர் உடனிருந்தவர்களின் துணிவிற்கு மதிப்பளிக்கும் வகையில் இன்றும் கூட ஒரு சிறிய நினைவுச்சின்னம் அங்கு நிற்கிறது. இந்நிலை சஹாஜியின் மரணம் வரை நீடித்தது. அதன்பின்னர் டெக்கானில் மராட்டியர்கள் ஓர் உத்தியோகப்பூர்வ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சக்தியாக இருந்தார்கள். சிட்தி ஜௌஹரின் துரோகத்தைச் சந்தேகித்து, அடில்ஷாவால் அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டார்.

பிரிட்டிஷ் மீதான தாக்குதல், ராஜா ஜஸ்வந்த்ராவ் மற்றும் ராஜா சூர்யாராவ்

சிவாஜி தற்போது ரத்னகிரி கடற்கரை பகுதியில் உள்ள ராஜாபூர் கோட்டையில் இருந்த பிரிட்டிஷாரின் பக்கம் அவரின் கவனத்தைத் திருப்பினார்.பிரதாப்கட் யுத்தத்திற்கு முன்னர், ஹென்ரி உட்பட பல பிரிட்டிஷ் அதிகாரிகளை மராட்டியர்கள் கைது செய்தனர், ஆனால் அவர்களை வெளியில் செல்ல அனுமதித்து விட்டனர். யுத்தத்திற்கு முன்னர், அப்ஜல்கான் அவர்களுக்கு அவர் கப்பல்களை அளித்திருந்தார், யுத்தத்திற்கு பின்னர் அவற்றை மராட்டியர்களிடம் திருப்பி அளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். இவ்வாறு அவர்கள் மராட்டியர்களால் கைது செய்யப்பட்டனர், எவ்வாறிருப்பினும் ஹென்ரி மற்றும் அவர் சக பிரிட்டிஷார் சிவாஜி மகாராஜின் பாதையில் ஒருபோதும் குறிக்கிட மாட்டோம் என்று உறுதி அளித்ததுடன், நேச உடன்படிக்கை ஒன்றையும் செய்து கொண்டதால் சிவாஜி மகாராஜ் அவர்களை மீண்டும் விட்டு வி்ட்டார். சிவாஜியால் இரண்டு முறை மரணதண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட போதினும், ஹென்ரி ரேவிங்டன் அவரின் வார்த்தைகளைக் காப்பாற்றவில்லை என்பதுடன் மராட்டியர்களுக்கு எதிராகவும் சவால் விடுத்தார். சிட்தி ஜௌஹருக்கு அவரின் பன்ஹாலா முற்றுகையின் போது, ஹென்ரி அவருக்கு நவீன ஆயுதங்களை அளித்ததோடு மட்டுமின்றி, பீரங்கிகளை இயக்க ஆட்களையும் (ஆயுத கண்காணிப்பாளர், இதர பிறரையும்) அளித்தார். அதிலிருந்து, இந்த அன்னிய நாட்டவர்கள் தங்களை வெறுமனே வர்த்தகர்களாக காட்டிக் கொள்கிறார்கள், ஆனால் உண்மையில் அவர்களின் சொந்த ஆட்சியை அமைக்கவும், விரிவாக்கவும் அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்ற தீர்மானத்திற்கு சிவாஜி மகாராஜ் வந்தார்.
இவ்வாறு, வர்த்தகம் என்ற பெயரில் அப்போதைய காலத்தில் பிரிட்டிஷார் கொண்டிருந்த சில பாதுகாப்பான துறைமுகங்களில் ஒன்றான ராஜாப்பூர் துறைமுகத்தை சிவாஜி தாக்க தீர்மானித்தார். சிவாஜி தாமே ராஜாப்பூர் துறைமுகத்திற்கு அணிவகுத்து சென்றார். ஜௌஹருக்கு உதவியது தங்களின் தவறு தான் ஒத்துகொண்டதுடன், இதுபோன்று மீண்டும் நடக்காது என்றும் கூறி சிவாஜியை சமாதானப்படுத்த பிரிட்டிஷார் முயற்சித்தார்கள். தற்போது பிரிட்டிஷாரை நம்ப தயாராக இல்லாத சிவாஜி, ராஜாப்பூர் துறைமுகத்தில் இருந்து அனைத்து பிரிட்டிஷாரையும் துல்லியமாக கைது செய்தார்கள், அத்துடன் அவர்களின் வக்கார் - அதாவது வர்த்தக உடமைகளையும் கைப்பற்றினார்கள்.
சிட்தி ஜௌஹர் கட்டளையின்படி விஷால்கட்டை முற்றுகையிட்டவர்களும், சிவாஜிக்கு எதிராக இருந்தவர்களுமான ஜஸ்வந்த்ராவ் தால்வி (பால்வன் மகாராஜா) மற்றும் சூர்யராவ் சுர்வே (சிங்கர்பூரின் மகாராஜா) இருவருக்கும் சிவாஜி தற்போது பாடங்கற்பிக்க விரும்பினார். பால்வனை நோக்கி சிவாஜி அணிவகுத்து சென்றவுடன், அச்சப்பட்ட ஜஸ்வந்த்ராவ் தப்பி ஓடி, சூர்யராவின் சிங்கர்பூரில் அகதியாக தஞ்சமடைந்தார். பின்னர் சூர்யராவுடன் நட்புக்கரம் நீட்டிய சிவாஜி, அன்னிய சக்திகளுக்கு எதிராக போராட அவர்கள் ஒன்றுபட வேண்டியதன் தேவையை அவர்களுக்கு புரிய வைக்க அவர் முயற்சித்தார்.சிவாஜியின் கருத்தை ஒத்துக்கொண்ட சூர்யராவ், சிவாஜி இல்லாத போதும் சிங்கர்பூரில் நிறுத்தப்பட்ட அவரின் இராணுவத்தை முழுமையாக கவனித்து கொள்வதாகவும் உறுதியளித்தார். எவ்வாறிருப்பினும், துரோக நாடகம் நடத்திய சூர்யராவ் ஆயத்தமாக இல்லாத மராட்டிய இராணுவத்தை தாக்கினார். தானாஜி மலூசரேயின் தலைமையிலான மராட்டிய இராணுவம், சூர்யராவின் ஆட்களுக்கு எதிராக போராடியது, அவர்களை பின்னுக்கு தள்ளியது. சூர்யராவின் துரோகத்தால் ஆத்திரமடைந்த சிவாஜி, திரும்பி வந்து சிங்கர்பூரைத் தாக்கினார். எவ்வாறிருப்பினும், சூர்யராவ் தப்பியோடினார் மற்றும் சிங்கர்பூர் சிவாஜியால் கைப்பற்றப்பட்டது.

மொகலாயர்களுடன் மோதல்

கொங்கன் வெற்றி

1661, பி்ப்ரவரி 3ல் கொங்கன் பகுதியில் சிவாஜி மகாராஜாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கோட்டைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், அவர் மீது தாக்குதல் தொடுக்கவும் ஓர் உஸ்பெக் தளபதியான கர்தாலாப் கானை சாய்ஸ்தா கான் அனுப்பி வைத்தான். அவர் 30,000 துருப்புகளுடன் பூனேவிற்கு அருகில் இருந்த அவர் முகாமை விட்டு புறப்பட்டார். இந்த முறை மொகாலயர்கள் வெளிப்படையாக அணிவகுத்து வரவில்லை, சிவாஜி மகாராஜை அதிர்ச்சிக்குள்ளாக்க அவர்கள் நாட்டின் சுற்றுப்பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், மாறாக, 'அம்பர் கிண்ட்' (இன்றைய பென் அருகில் உள்ள ஓர் அடர்த்தியான காடு) என்ற பாதையில் சிவாஜி மகாராஜ் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார், அத்துடன் அவர்களை அனைத்து திசைகளில் இருந்தும் தாக்கினார். அந்த அடர்த்தியான காட்டில் மறைந்திருந்த மராட்டியர்கள், ஒரு நன்கு ஒருங்கிணைந்த தாக்குதலை மொகலாயார்கள் மீது நடத்தினார்கள்.சிவாஜி மகாராஜ் தாமே ஒரு மேற்தட்டு குதிரைப்படை பிரிவுடன் முன்னனியில் இருந்தார். மற்ற மூன்று பக்கங்களும் சிவாஜி மகாராஜின் மிதமான காலாட்படைகளால் பக்கவாட்டில் இருந்து தாக்குதலைத் தொடுத்தன.
மிதமான காலாட்படை மற்றும் குதிரைப்படையின் ஒரு நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டத்தில், சிவாஜி மகாராஜ் அவர்களை வெற்றி கொண்டார். மொகலாய படைகளுக்கு துணை-தலைமை வகித்து வந்த ஒரு மராட்டிய பெண்மணியான தளபதி ராய்பகான் சூழ்நிலையை ஆராய்ந்தார், தோல்வி தவிர்க்க முடியாதது இருப்பதை உணர்ந்த அவர், தோல்வியை ஒப்புக்கொண்டு, சிவாஜி மகாராஜூடன் சமாதானத்தை ஏற்படுத்தி கொள்ளுமாறு கர்தாலாப்கானுக்கு ஆலோசனை வழங்கினார்.நான்கு மணிநேர தாக்குதல்களுக்கு உள்ளாகவே எதிரிகள் தோல்வியை ஒப்புக்கொண்டனர். அவர்கள் தங்களின் அனைத்து ஆயுதங்களையும், பொருட்களையும் மற்றும் உடைமைகளையும் ஒப்படைத்தார்கள். மொகலாய இராணுவம் பெரியளவில் காயப்பட்டிருந்தது. தோல்வியடைந்த இராணுவம் பாதுகாப்பாக செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. பெண்கள் மற்றும் நிராயுதபாணியான பொதுமக்கள் மீதான சிவாஜி மகாராஜின் நீண்டகால கொள்கையின் அடிப்படையில் கர்தாலாப்கான் மற்றும் ராய்பகான் இருவரும் மரியாதையுடன் விடுவிக்கப்பட்டனர்

சாய்ஸ்தா கான்

இதற்கிடையில், சாய்ஸ்தாகான் அவரின் சிறந்த மற்றும் மீதமிருந்த 100,000 இராணுவத்துடன் பூனேவையும், அதன் அருகில் இருந்த சகான் கோட்டையையும் முற்றுகையிட்டார்.
அந்த சமயத்தில், 300-350 மராட்டிய வீரர்களால் பாதுகாக்கப்பட்ட சகான் கோட்டையின் கில்லேடராக (தளபதியாக) பிரான்கோஜி நர்சாலா இருந்தார். மொகலாயர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து அவர்களால் ஒன்றரை மாதம் மட்டும் தாக்கு பிடிக்க முடிந்தது. பின்னர், பரூஜ் (வெளிப்புற சுவர்) வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டது. இது கோட்டைக்குள் மொகலாயர்கள் நுழைய அனுமதிக்கும் வகையில் ஒரு வழியை ஏற்படுத்தி கொடுத்தது.எண்ணிக்கையில் அதிகமாக இருந்த மொகலாய இராணுவத்திற்கு எதிராக பிரான்கோஜி தாமே மராட்டியர்களை முன்னின்று வழிநடத்தினார். தவிர்க்க முடியாமல், கோட்டையின் இழப்புடன்,பிரான்கோஜியும் கைது செய்யப்பட்டார். பிரான்கோஜியின் வீரத்தை பாராட்டிய சாய்ஸ்தா கானின் முன்னால் அவர் கொண்டு வரப்பட்டார், மொகலாய படையில் அவர் சேர்ந்தால் அவருக்கு ஜஹாகிர் (இராணுவ கமிஷன்) அளிக்கப்படும் என்ற நிபந்தனை வழங்கப்பட்டது, ஆனால் அதை பிரான்கோஜி நிராகரித்தார். அவரின் இராஜ விசுவாசத்தைக் கண்டு ஆச்சரியமடைந்த சாய்ஸ்தா கான் பிரான்கோஜியை மன்னித்து விடுவித்தார். சிவாஜியிடம் திரும்பி வந்த பிரான்கோஜிக்கு, அவர் புபல்கட் என்ற கோட்டையை விருதாக வழங்கினார்.
சாய்ஸ்தா கான் அவரின் பெரிய, நன்கு வசதிகளைப் பெற்றிருந்த மற்றும் கடுமையான ஆயுதமேந்திய இராணுவத்துவத்துடன் சில மராட்டிய மாகாணங்களின் சாலைகளில் காலடி பதித்தார். சிவாஜியை அடிபணியச் செய்ய முடியாத சாய்ஸ்தாவின் தோல்வியால் வெறுப்படைந்திருந்த அவுரங்காசீப்பை சமாதானப்படுத்த, அவர் பரிந்தா என்ற அடில்ஷாஹியின் கோட்டையையும் கூட கைப்பற்றினார். இருப்பினும், அவர் பூனேயை ஓர் ஆண்டிற்கும் மேலாக அவரின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார், அதன் பின்னரும் அவருக்கு சில வெற்றிகள் கிடைத்தன. அவர் பூனேயில் சிவாஜியின் அரண்மனையான லால் மஹாலை அவர் இருப்பிடமாக கொண்டிருந்தார்.சாய்ஸ்தாவினால் சிவாஜியை அடிபணிய வைக்க முடியாததைப் பார்த்த அவுரங்கசீப், சாய்ஸ்தாகானுக்கு உதவ மகாராஜா ஜஸ்வந்த் சிங்கை (இவர் அவுரங்காசீப் டெல்லியின் சிம்மாசனத்தில் ஏற முயன்ற போது, முன்னதாக ஷா ஜஹான் கட்டளையின் கீழ் தாபி ஆற்றங்கரையில் அவுரங்காசீப்பை நிறுத்தி ஒரு இராஜபுத்திரர் ஆவார்) அனுப்பினார்.
சாய்ஸ்தாகான் பூனேயில் கடுமையான காவலை ஏற்படுத்தி வைத்திருந்தார். எவ்வாறிருப்பினும், இந்த கடுமையான காவலுக்கு இடையிலும் சாய்ஸ்தா கான் மீதான ஒரு தாக்குதலுக்கு சிவாஜி மகாராஜ் திட்டமிட்டார். 1663 ஏப்ரலில், ஒரு திருமண விழா ஓர் ஊர்வலத்திற்கான சிறப்பு அனுமதியைப் பெற்றிருந்தது; அந்த திருமண விழாவை பயன்படுத்தி ஒரு தாக்குதலைத் தொடுக்க சிவாஜி மகாராஜ் திட்டமிட்டார். மராட்டியர்கள் தங்களை பெண் மற்றும் மாப்பிள்ளை ஊர்வலத்தில் மாறுவேடம் பூண்டு பூனேவிற்குள் நுழைந்தார்கள். சிவாஜி மகாராஜ் அவரின் இளமைகாலத்தின் பெரும்பகுதியை பூனேவில் கழித்திருந்தார், அதனால் அந்நகரையும், அவரின் சொந்த அரண்மனையான லால் மஹாலைச் சுற்றிலும் இருந்த அனைத்து வழிகளும் அவருக்கு தெரியும்.[6] சிவாஜி மகாராஜின் சிறுவயது நண்பர்களில் ஒருவரான சிம்மானாஜி தேஷ்பாண்டே, ஒரு பிரத்யேக காவல் சேவைகள் வழங்கியதன் மூலம் இந்த தாக்குதலில் அவருக்கு உதவி செய்தார். பாபாசாஹேப் புரன்தரேவின் கருத்துப்படி, மொகலாய இராணுவத்தில் மராட்டிய வீரர்களும் அடங்கி இருந்ததால், சிவாஜி மகாராஜாவின் வீரர்களுக்கும், மொகலாய இராணுவத்தில் இருந்த மராட்டிய வீரர்களுக்கும் இடையில் வித்தியாசத்தைக் கண்டறிவது யாருக்கும் சிரமாக இருந்தது. இவ்வாறு, இந்த குழப்பத்தை ஆதாயமாக்கி, சிவாஜி மகாராஜூம் அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆட்களும் மொகலாய முகாமிற்குள் ஊடுறுவினார்கள்.
அரண்மனை காவலாளிகளை வேட்டையாடிய பின், மராட்டியர்கள் ஒரு சுவரை இடித்து அரண்மனைக்குள் நுழைந்தார்கள். சிம்னாஜி மற்றும் நேதாஜி பால்கர் இருவரும் சிவாஜி மகாராஜாவிற்கு பாதுகாப்பளிக்க முதலில் நுழைந்தார்கள். சிவாஜி மகாராஜாவின் மற்றொரு நீண்டகால விசுவாசியான பாபாஜி தேஷ்பாண்டே இந்த தாக்குதலின் போது அவருக்கு உண்மையான பாதுகாப்பை அளித்தார்கள். லால் மஹால் தாக்குதலுக்கு உட்பட்டிருப்பதைப் பார்த்த சாய்ஸ்தா ஹரமில் (பெண்கள் பகுதி) சென்று ஒளிந்து கொண்டார். பின்னர் சிவாஜி மகாராஜ் 'நேருக்கு நேர்' சாய்ஸ்தா கானை எதிர்கொண்டார். ஆபத்தை உணர்ந்து கொண்ட சாய்ஸ்தாவின் மனைவியரில் ஒருவர் உடனடியாக விளக்குகளை அணைத்து விட்டார். சிவாஜி சாய்ஸ்தாவைத் தாக்கினார், இதில் சிவாஜி (இருட்டிலேயே) தம் வாளால் அவர் மூன்று விரல்களை வெட்டினார், உடனே சாய்ஸ்தா திறந்திருந்த ஜன்னல் வழியாக தப்பி ஓடினார். சாய்ஸ்தா கான் மரணத்தின் மிக அருகிலிருந்து தப்பிவிட்டார்; ஆனால் இந்த படையெடுப்பில் அவரின் மகனையும், அவரின் பாதுகாவலர்களையும், வீரர்களையும் இழந்தார்.
இந்த தாக்குதலின் 24 மணி நேரத்திற்குள், சாய்ஸ்தா கான் பூனேயை விட்டு விட்டு ஆக்ராவை நோக்கி வடக்கில் ஓடிவிட்டார். பூனேயில் அவரின் இந்த இழிவான தோல்வியால் மொகலாயர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டமைக்கு தண்டனை அளிக்கும் வகையில் கோபமடைந்த அவுரங்காசீப் அவரை தொலைதூர வங்காளத்திற்கு மாற்றிவிட்டார்.

 

சூரத்தும், மிர்ஜா ராஜா ஜெய்சிங்கும்

1664ல் சிவாஜி மகாராஜ், ஒரு முக்கியமான மற்றும் செல்வவளம் மிக்க மொகலாய வர்த்தக நகரான சூரத் மீது படையெடுத்தார், தற்போது வெறுமையாக இருந்த அவரின் கருவூலத்தை நிரப்பவும், சாய்ஸ்தா கானினால் மராட்டிய மாகாணம் சூறையாடப்பட்டதற்கும், கைபற்றபட்டதற்கும் பலிவாங்கும் நடவடிக்கையாக சிவாஜி அதை சூறையாடினார். 1670ல், சூரத் மீண்டும் சிவாஜியால் சூறையாடப்பட்டது.
கோபமடைந்த அவுரங்காசீப், சிவாஜி மகாராஜைத் தோற்கடிக்க 100,000த்திற்கும் மேலான எண்ணிக்கை கொண்ட இராணுவத்துடன் முதலாம் மிர்ஜா ராஜா ஜெய் சிங்கை அனுப்பினார். ஆரம்பகட்ட யுத்தங்களில் மொகலாய படைகள் தடுத்த நிறுத்த முடியாதபடிக்கு இருந்தன, சிவாஜி மகாராஜ் அவுரங்காசீப்புடன் பேச்சுவார்த்தையில் இறங்க முடிவெடுத்தார். சிவாஜி மகாராஜ் மற்றும் ஜெய்சிங்கிற்கு இடையில் கையெழுத்தான புரந்தர் உடன்படிக்கையில், சிவாஜி மகாராஜ் அவரின் 23 கோட்டைகளையும், ரூ. 400,000த்தையும் மொகலாயர்களுக்கு அளிக்க ஒப்பு கொண்டார். மேலும் அவர் மகன் சம்பாஜியை ஒரு மொகலாய சர்தாராக அனுப்பவும், அவுரங்காசீப்பின் மொகலாய சபையில் சேவை செய்யவும் அவர் ஒப்புகொண்டார்.

ஆக்ராவிற்கான பயணமும், தப்பிப்பும்

1666ல், அவுரங்காசீப் அவரின் ஐம்பதாவது பிறந்தநாள் விழாவில் சிவாஜியும், அவரின் ஆறு வயது மகன் சம்பாஜியையும் ஆக்ராவிற்கு வர அழைப்பு விடுத்திருந்தார். மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் வடமேற்கத்திய எல்லைகளை ஒருங்கிணைக்க, நவீன காலத்தில் ஆப்கானிஸ்தானாக இருக்கும் கண்டாஹாருக்கு சிவாஜி மகாராஜை அனுப்ப அவுரங்காசீப் திட்டமிட்டிருந்தார். எவ்வாறிருப்பினும், 1666 மே 12ல், அவுரங்காசீப் அவரின் சபையில் மன்சாப்தார்களுக்கு (இராணுவ தளபதிகளுக்கு) பின்னால் சிவாஜி நிற்குமாறு செய்தார். இந்த அவமரியாதைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவாஜி மகாராஜ் சபையை விட்டு திடீரென வெளியேறினார். ஆகவே ஆக்ராவின் கோட்வலான புலத்கானின் கண்காணிப்பில் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவர்தம் ஒற்றர்கள் மூலம், அவர் வசிப்பிடத்தை ராஜா வித்தல்தாஸ் ஹவேலிக்கு மாற்றவும், பின்னர் அவரை கொன்று விடவும் அல்லது ஆப்கான் எல்லைகளில் அவரை சண்டைக்கு அனுப்பவும் அவுரங்காசீப் திட்டமிட்டிருந்தார் என்பதை சிவாஜி அறிந்தார். இதன் விளைவாக அங்கிருந்து தப்பிக்க சிவாஜி திட்டமிட்டார்.
கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருப்பது போல் நடித்த அவர், அவரின் படைப்பிரிவின் பெரும்பகுதியை டெக்கானுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார், இதன் மூலம் அவர் இராணுவத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவுரங்காசீப்பை ஏமாற்றவும் முயற்சித்தார். இதன்பின்னர், அவரின் வேண்டுகோளின் பேரில், அவர் குணமடைவதற்காக ஆக்ராவிலுள்ள சன்னியாசிகள், பகீர்கள் மற்றும் கோயில்களுக்கு தினமும் இனிப்புகளும், பலகாரங்களும் அளிக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இனிப்புகள் கொண்ட பெட்டிகளை பல நாட்கள் மற்றும் வாரங்களுக்கு அனுப்பிய பின்னர், சிவாஜியும் அவரின் ஆறு வயது மகனும் இரண்டு பெட்டிகளில் ஒளிந்து கொண்டு தப்பித்தார்கள். சாதுக்களைப் (புனித மனிதர்கள்) போன்று போலி வேடமிட்டு சிவாஜியும், அவர் மகனும் டெக்கானுக்கு தப்பினார்கள். இந்த தப்பித்தலுக்கு பின்னர், மொகலாயர்களை ஏமாற்றவும், அவர்களிடமிருந்து சாம்பாஜியைக் காப்பாற்றவும் சிவாஜி அவரே, சாம்பாஜி இறந்துவிட்டதாக வதந்திகளைப் பரப்பினார்.
அக்ரயாஹூன் சுட்கா என்கிற ஒரு புத்தகத்தில் டாக்டர். அஜீத் ஜோஷி, ஹவேலி மைதானங்களில் சிவாஜி மத சடங்குகளை செய்து காட்டிய பின்னர், ஒரு பிராமணரைப் போன்று மாறுவேடமிட்டு, அங்கிருந்து புறப்பட்ட அந்தண பரிவாரங்களுடன் கலந்து தப்பித்திருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார்.எவ்வாறிருப்பினும், ஸ்ரீமன் யோகி (இந்த புத்தகம் பின்னர் சிவாஜி தி கிரேட் என்று மொழிபெயர்க்கப்பட்டது) என்ற மராத்திய புத்தகத்தின் ஆசிரியரான திரு. ரஞ்சித் தேசாயின் கருத்துப்படி, பரிசுகளாக அனுப்பப்பட்ட இனிப்பு பெட்டிகளைக் கொண்டு சென்ற சேவகர்களில் ஒருவராக சிவாஜி மகாராஜ் மாறுவேடமிட்டு இருந்தார்.

போருக்கான தயாரிப்பும், சின்ஹாகட் யுத்தமும்

1667-69 ஆகிய ஆண்டுகளில், சிவாஜி ஒரு குறை பெயரையே பெற்றார், அக்காலங்களில் அவர் சுறுசுறுப்பாக அவர் இராணுவத்தை கட்டமைக்க தொடங்கினார். அவர் இராணுவத்தில் அப்பொழுது 40,000 குதிரைப்படைகளும், 60,000 காலாட்படைகளும் இருந்தன, அத்துடன் ஒரு வலிமையான கடற்படையும், ஆற்றல்மிக்க ஆயுதங்களும் உள்ளடங்கி இருந்தன. தற்போது ஒரு வீணான படை தான் அவரிடம் இருப்பதாகவும், மேற்கொண்டு அவர்கள் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்றும் மொகலாயர்கள் எண்ணினார்கள். ஆனால் சிவாஜி யுத்தத்திற்கு அடிவைத்து கொண்டிருந்தார், மேலும் மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் ஒருங்கிணைந்த சக்தியை நேரடியாக கைப்பற்றவும் அவர் திட்டமிட்டார். 1670 ஜனவரியில், மஹாராஷ்டிராவில் மொகலயா காவற்படைகளின் மீது ஒரு பன்முக தாக்குதலைத் தொடுத்தார். ஆறுமாதத்திற்குள் அவர் முன்னர் ஏற்கனவே கொண்டிருந்த மாகாணங்களை மீண்டும் கைப்பற்றியதுடன், அதற்கு மேலும் கைப்பற்றினார். 1670 முதல் 1674 வரை, மஹாராஷ்டிராவின் முக்கிய பகுதிகளையும், நவீன நாட்களின் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு எனப்படும் நீண்ட தெற்கு பகுதிகளையும் உள்ளடக்க அவரின் பேரரசை சிவாஜி விரிவாக்கினார்.
பூனேயின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள கொண்டனா கோட்டை தொடர்ந்து மொகலாய கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. கோட்டை காவலர் உதய் பான் ரதோட், தலைமையில் சுமார் 1500 ராஜபுத்திரர்கள் மற்றும் மொகலாயர்கள் அந்த கோட்டை காவலுக்கு இருந்தனர். 1670 பிப்ரவரி 4ல், கொண்டனாவைக் கைப்பற்றும் ஒரு திட்டத்தைத் தலைமை ஏற்று நடத்த, சிவாஜி அவரின் மிக மூத்தவரும், நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவருமான தானாஜி மலூசரேவை நியமித்தார். அந்த நேரத்தில், தானாஜி மகனின் (ராய்பாவின்) திருமணம் நடைபெற இருந்தது. எவ்வாறிருப்பினும், தம் குடும்பத்தை விட மராட்டிய மண்ணின் கடமையை முதலில் கொண்டு, "அதி லாங் கொண்டன்யாச்சா, மங் மாஜ்யா ராய்பாச்சா" (முதலில் கொண்டனா வெற்றி கொள்ளப்படும், பின்னர் ராய்பாவிற்கு திருமணம் நடக்கும்) என்று அவர் தெரிவித்தார்.
தானாஜி மலுசரேவின் கீழ் அளிக்கப்பட்டிருந்த மராட்டிய இராணுவம், கோட்டையில் நிறுத்தப்பட்டிருந்த மொகலாய இராணுவத்தை விட மிக குறைவாகும். தானாஜி மலுசரே சில நாட்கள் கோட்டையையும், அதன் பாதுகாப்பையும் கணக்கிட்டார். அக்கோட்டை நன்கு பாதுகாக்கப்பட்டிருந்தது. தானாஜியின் கண்களில் ஒரு மிக கூர்மையான பாறை தென்பட்டது. இந்த செங்குத்தான பக்கத்தில் இருந்து கோட்டைக்கு மேல் ஏற முடியும் என்று ஒருவரால் கற்பனையும் செய்ய முடியாது என்பதால் அந்த பக்கம் குறைவாகவே பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்தது. கோட்டைக்குள் நுழைய இந்த செங்குத்தான பகுதியை அளக்க தானாஜி முடிவெடுத்தார். ஓர் அமாவாசையன்று இந்த செங்குத்தான பகுதியில் ஏற, அவர் ஓர் ஒடும்பின் (யேஷ்வந்தி என்று பெயரிடப்பட்ட மராட்டியில் கோர்பண்ட் என்று அறியப்படும்) உடலில் கயறைக் கட்டி பயன்படுத்தினார் என்பது புராணம்.அந்த ஒடும்பின் கோட்டையின் மேலே ஏற உதவியது. இந்த ஒடும்பின் முக்கிய பண்பு, இறுக்கி பிடிப்பதென்பதால் கோட்டையின் ஒரு முனையில் அது கவ்வி நின்றது. பின் மேலே ஏறிய ஒரு வீரர் பிறரும் ஏற இடமளிக்கும் வகையில் கயிறுகளை வீசினார்.
இதற்கிடையில் தானாஜியின் சகோதரர் சூர்யாஜி, மற்றொரு 300 மாவலாக்களுடன் கால்யாண் தார்வாஜா எனும் கோட்டை கதவுகளுக்கு அருகில் வந்தார். அந்த கதவுகள் விரைவில் திறக்கப்பட்டன, அவரின் அனைத்து வீரர்களும் திடீர் தாக்குதலில் தானாஜியுடன் சேர்ந்து கொண்டார்கள். தானாஜியும், உதய்பானும் நேருக்கு நேர் மோதினார்கள், மற்றும் ஒரு கடுமையான போர் உறுதியாயிற்று. உதய்பானு ஒரே வீச்சில் தானாஜியின் கவசத்தை உடைத்தெறிந்தார், இதில் சிறிதும் தயங்காத தானாஜி, அவரின் காயங்கள் மற்றும் இரத்தப்போக்கை நிறுத்த அவரின் தலைப்பாகையை பாதுகாப்பிற்காக அவர் இடது கையில் சுற்றி கொண்டு தொடர்ந்து போரிட்டார். படுமோசமாக காயப்பட்டிருந்த தானாஜி, தள்ளாடி கீழே விழுந்தார். தங்கள் தலைவர் கடுமையான காயத்துடன் தங்கள் கண்முன்னால் இறப்பதைக் கண்ட மராட்டிய வீரர்கள் பின்திரும்பவும், பின்னடையவும் தொடங்கினார்கள், சூர்யாஜி மற்றும் ஷீலர் மாமா முன்னோக்கி சென்று தலைமை ஏற்றார்கள். தனது எழுபதாவது வயதில் இருந்த ஒரு பழைய சர்தார்ஜியான ஷீலர் மாமா பொறுப்பேற்றார், உதய்பானுவை எதிர்நின்று போராடியதுடன் வெகு விரைவிலேயே அவனை கொன்று வீசினார். அச்சமயம் துருப்புகளை வழிநடத்தவும், ஒடுக்குமுறையில் அவர்களைத் திருப்பவும் சூர்யாஜி முற்பகுதிக்கும், மையத்திற்கும் அடியெடுத்து வைத்தார். தற்போது மராட்டியர்கள் மொகலாய தடுப்பாளர்கள் மீது அவர்களின் தாக்குதலை மீண்டும் தொடங்கினார்கள், இதன் மூலம் கோட்டையைக் கைப்பற்றுவதிலும் வெற்றி பெற்றார்கள்.
வெற்றிக்குப் பின் சிவாஜி கோட்டைக்கு வந்த போது, தம் அருமை நண்பர் தானாஜியின் இழப்பிற்காக மிகவும் ஆழமாக வருத்தப்பட்டார். அவர் மிகவும் சோகத்துடன், "கத் ஆலா பன் சின்ஹா கேலா" (கோட்டை வெற்றி கொள்ளப்பட்டது, ஆனால் சிங்கம் இழக்கப்பட்டது) என்று குறிப்பிட்டார். இதற்கு பின்னர், தானாஜி மாலுசரேயின் வீரத்தை கௌரவிக்கும் வகையில் கொண்டனா கோட்டை சின்ஹாகட் என்று பெயர் மாற்றப்பட்டது

பட்டமளிப்புகளும், தெற்கத்திய பிரயாணமும்

1674, ஜூன் 6ல், ராய்கட் கோட்டையில் சிவாஜி உத்தியோகப்பூர்வமாக சத்ரபதி யாக (சத்ரியர்களின் அரசர் அல்லது தலைவர்) முடிசூட்டி கொண்டார். அத்துடன் சத்ரிய குலவன்தாஸ் சின்ஹசனாதீஷ்வர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்ற பட்டமும் வழக்கப்பட்டது. வாரணாசியிலிருந்து வந்த ஒரு புகழ்பெற்ற பிராமணரான பண்டிட் காகாபட், அந்த விழாவிற்கு தலைமை தாங்கியதுடன், சிவாஜியின் வழிமரபு ஒரு உண்மையான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சத்ரிய மரபு என்று அறிவித்தார். சிவாஜி உண்மையில் தன்ங்கார் சமயபோதர் வழிமரபில் இருந்து (அவர் அதிலிருந்து வந்தவர் தான் என்பதால்) வந்தவர் என்று கூறி உள்ளூர் சன்னியாசிகள் இதை நிராகரித்தார்கள். அவர் வேதங்களால் ஜான்வா (ஹிந்தியில் - ஜான்யூ, சத்திய பாதை) வழங்கப்பட்டவர், மேலும் அபிஷேகத்திலும் நீராட்டப்பட்டவர். 9ஆம் நூற்றாண்டில் இருந்து வழக்கில் இல்லாமல் இருந்து வந்த இந்திரபிஷேக் சடங்கிற்கு சிவாஜி முக்கியத்துவம் அளித்து கொண்டிருந்தார். அப்போது சிவாஜிக்கு "சக்கார்தா" என்ற பட்டம் வழங்கப்பட்டது. அவர் தனது சொந்த நாட்காட்டியைத் தொடங்கினார். சில நாட்களுக்கு பின்னர், இரண்டாம் விழா நடத்தப்பட்டது, இந்த முறை டான்ட்ரிசத்திற்கான வங்காள பள்ளியின் கருத்துப்படி, நிஸ்சல் பூரியின் தலைமையி்ல் நடத்தப்பட்டது.
இந்த பட்டமளிப்புக்கு பின்னர், 1676ன் இறுதியில், 50,000 (30,000 குதிரைப்படை & 20,000 காலாட்படை) துருப்புகளைக் கொண்ட ஒரு மாபெரும் படையுடன் சிவாஜி மகாராஜ் தெற்கத்திய இந்தியாவில் வெற்றி அலைகளை நிகழ்த்தினார். அவர் கர்நாடகாவின் பிஜாப்பூருக்கு அருகில் உள்ள (தற்போது தமிழ்நாட்டில் உள்ளன) வேலூர் மற்றும் செஞ்சி கோட்டைகளைக் கைப்பற்றினார். அவர் கொல்கொண்டாவின் குதுப்ஷாவுடன் ஒரு நேச உடன்படிக்கையும் செய்து கொண்டார். இந்த வெற்றிகள் அதற்கடுத்து ஏற்பட்ட யுத்தங்களில் மிக முக்கியத்துவமானவை என்பதை நிரூபித்தன. 27 ஆண்டுகள் யுத்தத்தின் போது செஞ்சி 9 ஆண்டுகள் மராட்டியர்களின் தலைநகராக விளங்கியது. எவ்வாறிருப்பினும், சஹாஜிக்கு பின்னர் தஞ்சாவூரை ஆண்ட வென்கோஜியுடன் (மொஹிட்டி குடும்பத்திலிருந்து வந்த சஹாஜியின் இரண்டாவது மனைவின் மகன்) சமரச செய்து கொள்வது தான் அவரின் முக்கிய நோக்கமாக இருந்தது. அவர்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள், சிவாஜி மகாராஜூடன் சமரசப்படுவதற்கான அறிகுறிகளை வென்கோஜி (ஈகோஜி I) காட்டினார் என்றாலும், பின்னர் எவ்விதமான உறுதியான விளைவும் ஏற்படவில்லை. எவ்வாறிருப்பினும், அவர்கள் இருவரும் எதிரிகளாக இல்லை, அவர்கள் வெவ்வேறு பேரரசுகளை ஆண்டு வந்தார்கள்.

ஆட்சி

சிவாஜி மகாராஜ் ஒரு திறமையான நிர்வாகியாக இருந்தார், அவர் மந்திரிசபை (அஸ்தபிரதான் மண்டல் ), வெளி விவகாரத்துறை (தர்பார் ) மற்றும் உள்நாட்டு உளவுத்துறை போன்ற நவீன கருவுருக்களை உட்கொண்டிருந்த ஓர் அரசாங்கத்தை உருவாக்கினார். சிவாஜி மகாராஜ் ஒரு சிறப்பான பொது மற்றும் இராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்தினார். ஒரு சக்திவாய்ந்த கடற்படையையும் உருவாக்கிய அவர், சிந்துதுர்க் போன்ற துறைமுகங்களையும் கட்டியதுடன், மேற்கு கடற்கரையில் அமைந்திருந்த விஜய்துர்க் போன்ற பழையவைகளையும் வலிமைப்படுத்தினார்.[6] பிரிட்டிஷ், போர்ச்சுகீசிய மற்றும் டச்காரர்களுக்கு எதிராக தனது சொந்த கடற்படையை மராட்டியர்கள் கொண்டிருந்தார்கள்
சிவாஜி மகாராஜ் அவரின் விஷயங்களில் அவரின் பரந்த மனப்பான்மையைக் கொண்டிருந்தார் என்பது நன்கு அறியப்பட்டதாகும். அரசு மற்றும் குடிமக்களுக்கு இடையில் ஒரு நெருங்கிய உறவு உண்டு என்று அவர் நம்பினார். அவர் திறமையான மற்றும் சவாலான தனிநபர்கள் அனைவரையும் ஒவ்வொரு அரசியல்/இராணுவ போராட்டத்திலும் பங்குபெற ஊக்கப்படுத்தினார். அவர் ஒரு நல்ல மனம் படைத்த அரசராக நினைவு கூரப்படுகிறார். அவர் இராணுவ அமைப்புகள், துறைமுக கட்டுமானங்கள், சமூக மற்றும் அரசியலில் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டு வந்தார்.[சிவாஜி மகாராஜ் பல முக்கிய எதிரி தாக்குதல்களை முறியடிக்கவும், வெற்றி கொள்ளவும் அவர்தம் படைகளை வெற்றிகரமாக வழிநடத்தினார். அவர் பேரரசின் எல்லைகளை விரிவாக்குவதில் அவர் உறுதியாக இருந்தார். ஒரு சுதந்திரமான, விடுதலைப்பெற்ற தாய்நாட்டை உருவாக்குவதற்கான அவரின் தீர்மானத்தால் அவர் வெற்றி உந்தப்பட்டிருந்தது. அவரின் இலக்கில் அவர் அவரின் வீரர்கள், தொண்டர்கள் மற்றும் குடிமக்களின் உயர்மட்ட இராஜவிசுவாசம், மதிப்பு மற்றும் பொறுப்புணர்ச்சி ஆகியவற்றால் ஆதரவு பெற்றார்.
ஒரு கண்டுபிடிப்பாளரான அவர் ஒரு திறமையான தளபதியாகவும் இருந்தார், தாக்கி விட்டு ஓடுவது, மாகாணங்கள் மற்றும் கோட்டைகளின் மூலோபாய விரிவாக்கம், விரைவாக நகரக்கூடிய பிரகாசமான குதிரைப்படைகள் மற்றும் காலாட்படைகளை உருவாக்குதல், மூலோபாய யுத்த திட்டங்கள் மற்றும் தந்திரங்களைக் கையாளுதல் உட்பட பல திறமையான உத்திகளை அவர் வெற்றிகரமான கையாண்டார், இவற்றின் மூலமாக அவரை விட மிக பெரிய பெயர்பெற்ற எதிரிகளைக் கூட அவரால் காலத்துடனும், மீண்டும் மீண்டும் கூட வெற்றி கொள்ள முடிந்தது. அவர் ஆட்சி இறுதிகட்டத்தின் போது, அவர் ஓராயிரத்திற்கும் மேலான வலிமையுடன் மராட்டிய படைகளைத் தயார் செய்து வைத்திருந்தார்.
அவர் தம் பேரரசை தமிழ்நாட்டில் உள்ள செஞ்சியை நோக்கி விரிவாக்கும் போது, மொகலாய படைகளை அவரால் திறமையாக மடக்கி வைக்கவும், தாக்குதல் நடத்த முடியாநிலையிலும் வைக்க முடிந்தது.இந்தியாவிற்குள் மொகலாய சக்திகளுக்கு எதிராக ஒரு ஹிந்து அரணாக சிவாஜி மகாராஜின் பேரரசு இருந்தது. யுத்தகளத்தில் அவரின் புத்திசாலித்தனமான உத்திகள் மற்றும் மூலோபாயங்களும், துல்லியமான நிர்வாகமும் மற்றும் நிர்வாக திறமையும் இந்தியாவில் எதிர்கால மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பதற்கான அடித்தளங்களை அமைக்க அவருக்கு உதவின.

 


பண்புகள்

அவரின் நீண்ட இராணுவ வாழ்க்கை மற்றும் பல்வேறு போராட்டங்களின் போதும், அவரின் ஆழ்ந்த மத மற்றும் வீர நெறிமுறைகள், பின்பற்றத்தக்க பாத்திரம் மற்றும் ஆழ்ந்திருந்த மற்றும் விட்டுக்கொடுக்காத ஆன்மீக தேற்றங்களானது, அவரை வழிபாட்டு தளங்கள், போர் நடக்காத இடங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க தூண்டியது. அவர் எப்போதும் அனைத்து மத மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு மதிப்பளித்தார், பாதுகாப்பளித்தார் மற்றும் காப்பாற்றி வைத்திருந்தார்.

டெல்லி பிர்லா மந்தீரில் உள்ள சிவாஜி மஹாராஜின் சிலை
ஒருமுறை சீருடை அணிந்த ஒரு மராட்டிய கேப்டனினால் ஓர் அழகிய இளம் நங்கை யுத்த செல்வமாக சிவாஜி மகாராஜாவிற்கு அளிக்கப்பட்டாள். அவள் மஹாராஷ்டிராவின் கல்யாணை ஆண்ட தோற்கடிக்கப்பட்ட முஸ்லீம் அமீரின் மருமகள் ஆவாள். அவள் அழகு மயக்கும் தன்மை கொண்டதாகவும், ஆனால் அவர் அன்னை அவளை விட அழகானவர், அதைபோலவே தாமும் அழகானவர் என்று சிவாஜி மகாராஜ் கூறியதாக கூறப்பட்டது. அவர் அமைதியாக, எவ்வித பாதிப்பும் இல்லாமல், அவரின் பாதுகாப்பின் கீழ் அவளை அவர் குடும்பத்திற்கு திரும்ப செல்லுமாறு கூறினார். அவர் நடவடிக்கை, எப்போதும் உயர்ந்த நீதிக்கு கட்டுப்பட்டதாகவே அவரை சுற்றி இருந்தவர்களால் பார்க்கப்பட்டது. ஓர் உண்மையான உயர்மனிதனின் நல்லொழுக்கம் மற்றும் அறநெறிகளை அவர் தன்னகத்தே கொண்டிருந்தார்
அவரின் பெரியளவிலான எதிர்களிடம் இருந்து அவர் நாட்டிற்கு சுதந்திரம் மற்றும் விடுதலையைப் பெறவும், நாட்டை காப்பாற்றவும் அவர் வாழ்வையும், அவர் செல்வத்தையும், அவர் தனிப்பட்ட நலனையும் மற்றும் அவர் குடும்பத்தையும் அவர் மிக தைரியமாக ஆபத்தில் பணயம் வைத்தார். வலிமையான மொகலாய சாம்ராஜ்ஜியம் மற்றும் பிற சுல்தானியர்களால் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூழ்கடிக்கும் தாக்குதல்களை அவர் தயக்கமின்றி எதிர்த்து நின்றார். அவர் எதிரிகளால் நிலைநிறுத்தப்பட்ட ஒரு நிகரற்ற அளவிலான பிரச்சனைகள் மற்றும் சவால்களை முகங்கொடுப்பதில் அவர் வெற்றி பெற்றார். சுய-அதிகார பெருக்கம் அல்லது போலி கவுரவத்திற்காக வடிவமைக்கப்பட்ட திட்டங்களிலும் அவர் எவ்வித ஆதாரங்களையும் செலவிடவில்லை, மாறாக அவர் தன் மக்கள் மற்றும் நாட்டின் மீது ஆழமாக கொண்ட தர்ம உணர்வால் (புனித கடமை) உந்தப்பட்டிருந்தார். திறமை, சுயநலமின்மை, சுதந்திரம், விடுதலை, சகோதரத்துவம் மற்றும்உ நிகரில்லா தைரியம் ஆகியவை அவரின் பரம்பரை சொத்தாக இருந்தது, ஆகவே அவ்வாறு அக்காலகட்டத்தில் அவர் ஒரு முன்மாதிரியாக விளங்கினார்.
சிவாஜி மகாராஜ் ஒரு அரச பதவிக்குரியவராக நடத்தப்படுவதில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை, உண்மையில் ஒரு சிறந்த தலைவராகவும், அரசராவும் விளங்க அதற்காக அவர் தன் சகாக்களுடன் நேரத்தைச் செலவிட சுதந்திரமாக அவர்களுடன் கலந்திருந்தார். அவர் நசுக்கிய வெங்காயம் மற்றும் ஒரு வகையான இந்திய விவசாய உணவான 'பக்ரீஸ்' ஆகியவற்றுடன் அவரின் அடிமட்ட வீரர்களுடன் (மாவ்லாஸ்) சேர்ந்த சாதாரண உணவை உட்கொள்வதில் மகிழ்ச்சி அடைந்ததாக கூறப்பட்டது. அவரின் குணநலன் சிறந்த உணர்வுப்பூர்வமான நடைமுறைக்கேற்றதாக கூறப்பட்டது, அதேசமயம் அவரின் திட்டத்தை அவர் கையில் எடுத்த போது மிகவும் தீவிரமாகவும், அவர் மக்களின் நலன் மற்றும் அவர்களின் பாதுகாப்பிற்கு அப்பாற்பட்டு தம் தேவைகளைக் கூட அவர் கவனித்து கொள்ள மாட்டார் என்பதாக இருந்தது.இதன் விளைவாக சிவாஜி மகாராஜ் அவரை பின்பற்றுபவர்களுடனும், குடிமக்களுடனும் ஓர் ஆழ்ந்த நெருக்கத்தைக் கொண்டிருந்தார். அவரை பின்பற்றுபவர்கள் மற்றும் சகாக்களிடமிருந்து அவர் சம்பாதித்த உயர்மட்ட நிர்வாகம் மற்றும் மதிப்பானது, பதிவு செய்யப்பட்ட இந்திய வரலாற்றில் உள்ள பிற பெரும்பாலான இந்திய அரசர்கள் அல்லது தலைவர்களை விட அவரை மிக உயரத்தில் நிறுத்துகிறது. இன்றும் கூட அவர் இந்தியாவில், குறிப்பாக மஹாராஷ்டிராவில் பயபக்தியுடனும், ஆச்சரியத்துடனும் மதிக்கப்படுகிறார், மேலும் இதிகாசத்தின் கதாநாயகனாகவும் அவர் பார்க்கப்படுகிறார்.

இராணுவம், கப்பற்படை மற்றும் கோட்டைகள்

மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் அழிவு வரை அழிக்கப்பட முடியாததாக இருந்த சிவாஜியின் இராணுவ அமைப்பில் அவரின் மேதமை மிக வெளிப்படையாக இருந்தது. ஒரு யுத்தகளம் போன்றதற்கு பயன்படுத்தப்படும் வார்த்தையான "கனிமி காவா" (நவீன காலத்தில் "கமாண்டோ" என்ற வார்த்தை) என்ற கமாண்டோ நடவடிக்கைகளில் இருந்த முன்னோடிகளில் அவரும் ஒருவராக இருந்தார். 'ஹர் ஹர் மஹாதேவ்' (சிவனை போற்றுவோம்) என்பது அவரின் மாவலா இராணுவத்தின் யுத்த முழக்கமாக இருந்தது.இராணுவ அமைப்பில் பல மாற்றங்களைச் செய்வித்ததில் சிவாஜி முக்கிய பங்காற்றினார்.இதில் உள்ளடங்குவன -
  • பாகா என்று அழைக்கப்படும் அரசுக்கு சொந்தமான ஒரு நிலைநிறுத்தப்பட்ட இராணுவம்;
  • அனைத்து போர் குதிரைகளும் அரசுக்கு சொந்தமாகும்; அவற்றை பாதுகாப்பதற்கான பொறுப்பு அரசைச் சாரும்.
  • விவசாயிகளில் இருந்து பகுதி நேர படைவீரர்களை உருவாக்கியது, இவர்கள் எட்டு மாதங்கள் வயல்களில் உழைத்தனர், மீத நான்கு மாதங்கள் யுத்தத்திற்கு உதவினார்கள்.
  • இடம்பெயரக்கூடிய மற்றும் இலகுவான காலாட்படை மற்றும் குதிரைப்படை ஆகியவை அவரின் கண்டுபிடிப்புகள், அவை கமாண்டோ உத்திகளில் பயன்படுத்தப்பட்டன.
  • மத்திய புலனாய்வு துறை, ஒற்று அறியும் முறை (சிவாஜியின் அனைத்து தாக்குதல்களிலும் அவரின் எதிரி தகவல்களை சிவாஜிக்கு அளித்த முக்கிய ஒற்றராக இருந்தவர் பாஹிர்ஜி நாயக் ஆவார், பிரதாப்கண்ட் போரில் விஷ்வாஸ் நானா டிகே முதன்மை ஒற்றராக இருந்தார், பன்ஹாலா முற்றுகையின் போது விஸ்வாஸ்ராவ் முசேகர் முதன்மை ஒற்றராக இருந்தார்), சிறப்பார்ந்த கப்பற்படை மற்றும் தொடர்ச்சியான கமாண்டோ-வரிசை ஆகியவற்றின் அறிமுகம்.
  • யுத்தகள முறையின் அறிமுகம் கொரில்லா யுத்தமுறை, கமாண்டோ நடவடிக்கைகள், பக்கவாட்டிலிருந்து துரித தாக்குதல்கள் மூலம்
  • ஆயுதங்கள் மற்றும் நெருப்புசக்தியின் கண்டுபிடிப்பு, புலி நகம் அல்லது 'பாக்நாக்' போன்ற பாரம்பரிய ஆயுதங்களின் கண்டுபிடிப்பு. 'விதா' என்கிற ஆயுதம் சிவாஜியால் அறிமுகப்படுத்தப்பட்டது;
  • எல்லா வர்க்கங்களும் உட்பட, பெரும்பாலும் முழு சமுதாயமும் இராணுவமயமாக்கப்பட்டது. கோட்டைக்கு அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் குடியேறியவர்களின் மொத்த விவசாய மக்களும் தங்களின் பாதுகாப்பிற்காக துடிப்புடன் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
ஒரு பாதுகாப்பான கடற்கரை பகுதி அமைந்திருக்க வேண்டியதன் அவசியத்தையும், சிட்தியின் கப்பற்படை தாக்குதலில் இருந்து மேற்கத்திய கொங்கண் கடற்கரையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் சிவாஜி உணர்ந்தார். ஒரு வலிமையான கப்பற்படையைக் கொண்டிருந்தால் இருக்க கூடிய இராஜதந்திர ஆதாயத்தை உணர்ந்த அவர், இந்த யோசனைக்கு செயல்வடிவம் அளிக்க முடிவெடுத்தார்.
இந்திய கடற்பகுதிகளில் பிரித்தானிய இந்தியக் கப்பற்படையின் அதிகரித்து வரும் செல்வாக்கு குறித்து கவலை கொண்டிருந்த சிவாஜி, இந்த பிரச்சனையைச் சமாளிக்க அவர்தம் கப்பற்படையை உருவாக்க தொடங்கினார். இந்த முக்கிய காரணத்திற்காக, அவர் "இந்திய கப்பற்படையின் தந்தை" என்றும் அழைக்கப்படுகிறார்.
கரடுமுரடான மேற்கத்திய தொடர்களுக்கு குறுக்காக ஓராயிரம் கிலோமீட்டருக்கும் மேலான தூரத்தில் 300 அல்லது அதற்கும் மேற்பட்ட கோட்டைகளைத் தொடர்ச்சியாக சிவாஜி கட்டி அமைத்தார். அவ்வாறான கோட்டைகள் ஒரு துரோகியால் எதிரிகளுக்கு அளிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொன்றும் சமமான பதவியில் இருந்த மூன்று அதிகாரிகளின் கீழ் அளிக்கப்பட்டது. அந்த அதிகாரிகள் (சப்னிஸ், ஹவல்தார், சார்-ஐ-நௌபாத்) கூட்டாக செயல்பட்டார்கள் மற்றும் பரஸ்பர தடுப்புகளையும் சமமாக அளித்தார்கள். சிவாஜி இறக்கும் போது 360 கோட்டைகள் அவர் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.

சமஸ்கிருதத்தின் வளர்ச்சி

சிவாஜி மகாராஜாவின் வீடு, சமஸ்கிருதத்துடன் நன்கு பரிச்சயமான மற்றும் அதை வளர்த்தெடுத்த சிறந்த இந்திய குடும்பங்களில் ஒன்றாகும். இதன் மூலவேர் சஹாஜியிலிருந்து கொண்டு வரப்பட்டது, அவர் ஜெய்ராம் பிண்டியே மற்றும் அவரைப் போன்ற பலரை ஆதரித்தார். சிவாஜி மகாராஜாவின் முத்திரையும் அவரால் தான் உருவாக்கப்பட்டது. அதே பாரம்பரியத்தைத் தொடர்ந்த சிவாஜி மகாராஜ், அதை மேலும் வளர்த்தெடுத்தார். சிந்து துர்க், பிராசாண்ட்கர், சுவர்ண்துர்க் மற்றும் இதுபோன்ற பெயர்களில் அவர் கோட்டைகளுக்கு பெயரிட்டார். நியாயதிஷ், சேனாபதி மற்றும் இதுபோன்ற இதர பிறவற்றின் வழியில் சமஸ்கிருத இடுபெயராக ஆஸ்தா பிரதான் (மந்திரிசபை) என்று அவர் பெயரிட்டார். ராஜ்ஜிய விவகார் கோஷையும் (அரசியல் ஆலோசனை குழு) அவர் தயாராக வைத்திருந்தார். அவரின் அரசபுரோகிதர் கேஷவ் பண்டிட் தாமே ஒரு சமஸ்கிருத புலவரும், மேதையாகவும் இருந்தார். அவர் மரணத்திற்கு பின், தாமே ஒரு சமஸ்கிருத மேதையாக (அவர் வார்த்தைகளில் - புத்பூஷணம்) இருந்த சாம்பாஜி அதை தொடர்ந்தார். அவரின் பேரன் ஷாஹூ அவர் குழந்தைப்பருவம் முழுவதையும் மொகலாய ஆளுகையில் செலவிட்டிருந்ததால், அவரின் ஆர்வம் அதில் குறைந்திருந்தது. ஆனால் படித்த பிராமணர்களுக்கு அவர் பரிசுகளை வாரி வழங்கினார். போஸ்லேவின் தஞ்சாவூர் பிரிவிலிருந்த இரண்டாம் ஷெர்போஜி, மராட்டி தேவநாகரியில் முதல் புத்தகத்தை அச்சிட்டு இந்த பாரம்பரியத்தைத் தொடர்ந்தார்.
சம்பாஜி ஒரு தனபத்ரா வை (நன்கொடை பத்திரம்) அளித்தார், அவராலேயே சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்த அதில் அவர் தன் தந்தை பற்றி பின்வருமாறு எழுதுகிறார்:
  1. யவனரம்பா க்ரிதத் ம்ளிசக்ஷாதிக்ஷா : அதாவது, சிவாஜி ஒரு சத்தியபிராமானம் எடுத்து கொண்டார், தாக்குதல் நடத்துபவர்களை தோற்கடிக்கும் செயல்திட்டத்தில் அவர் இருந்தார்.
  2. தில்லின்டிராமன் பிரத்வன்ஸ்பது : டெல்லி மொகலாய சாம்ராஜ்ஜியத்தைத் தோற்கடித்த ஒருவர்
  3. விஜயபுரதீஷ்வர் ப்ரத்தர்மன்யா பூஜ்சச்யாய : விஜய்பூரில் அடில்ஷாஹி அரசரால் இவரிடம் உதவி கோரப்பட்டது.

 

மதம்

 

புராணங்களின்படி, போஷ்லேவின் தெய்வீக குடும்பத்தின் பெண் தெய்வமான பவானி சிவாஜி மஹாராஜாவிற்கு ஒரு தெய்வீக வாளை அளித்தது.]] ஒரு வயதான மற்றும் நோய்வாய்பட்டிருந்த ஒரு நபரான ராம்தாஸால் முறையிடப்பட்ட பின்னர், பராலி கோட்டையில் தங்க அவர் அனுமதிக்கப்பட்டார். விரைவிலேயே, அவரின் சொந்த விருப்பத்தின் பேரில், ஆனால் சிவாஜி மரணத்திற்கு பின்னர், ராம்தாஸ் அவரின் நிரந்தர மடத்தை அங்கு உருவாக்கினார். அதை தொடர்ந்து அந்த கோட்டை "சஜ்ஜன்கட்" (புனிதர்களுக்கான கோட்டை) என்று பெயர் மாற்றப்பட்டது.
1674ல் சிவாஜி மகாராஜாவும், ராம்தாஸூம் முதன்முதலில் சந்தித்து கொண்டார்கள் என்று கூறப்பட்டது. சாது துக்காராம் தான் சிவாஜி ராஜேவின் ஆன்மீக குருவாக இருந்தார் என்பதற்கான பல நம்பத்தகுந்த வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.
கடவுள் நம்பிக்கையுள்ள ஒரு ஹிந்துவான சத்ரபதி சிவாஜி மகாராஜா, அந்த பிராந்தியத்திற்குள் இருந்த அனைத்து மதங்களுக்கும் மரியாதை அளித்தார். துகாராம் போன்ற வார்காரி சாதுக்களுக்கும், கொண்கனில் இருந்த சுஃபி முஸ்லீம் பிர் ஷேக் யாகூப் பாபா அவாலியா ஆகியோருக்கு சிவாஜி மகாராஜ் மிகுந்த மரியாதை அளித்தார்.அவர் கோல்ஹாபூர் மாவட்டத்தின் பட்காவ்விலுள்ள (கார்கோட்டிக்கு அருகில் உள்ள புதர்கட் தாலுகா) சமாதி மற்றும் மௌனி மகாராஜ் கோயிலையும் சென்று பார்த்தார். அஹ்மதாபாத்தில் உள்ள சாஹா-ஷரீப் தர்காவிற்கு சஹாஜி ஒரு பரந்த நிலத்தை அன்பளிப்பாக அளித்திருந்தார். (சிவாஜி மகாராஜின் தந்தை "சஹாஜி" மற்றும் சிவாஜி மகாராஜின் மாமா "சர்போஜி" ஆகியோரின் பெயர்கள் இந்த ஷாஹ் ஷரீப்ஜி என்பதை பிரித்து அதிலிருந்து எடுக்கப்பட்டதாகும்)
சிவாஜி மகாராஜ் அவர் சகாக்களின் மத சுதந்திரத்தை அனுமதித்தார், அத்துடன் கட்டாய மத மாற்றத்தையும் எதிர்த்தார். ஒரு வெற்றிக்கு பின் சிவாஜி மகாராஜ் செய்த முதல் வேலை, மசூதிகள் மற்றும் முஸ்லீம் கோபுரங்களின் பாதுகாப்பதேயாகும்.
சிவாஜியின் இராணுவத்தில் குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லீம்கள் இடம் பெற்றிருந்தார்கள். அவரின் அனைத்து படையெடுப்புகளிலும் இருந்த மிகுந்த நம்பிக்கை வாய்ந்த ஜெனரல்களில் ஒருவர் ஹைதர் அலி கோஹரி ஆவார்; நூர் கான் பெக் ஒருமுறை காலாட்படையின் தலைவராக இருந்தார்; இப்ராஹிம் கானும், தௌலத் கானும் கப்பற்படையில் முக்கியமானவர்களாக இருந்தார்கள்; பீரங்கிப்படைக்கு சிட்டி இப்ராஹிம் ஒருமுறை தலைவராக இருந்தார்.
இஸ்லாமின் சுஃபி பாரம்பரியத்தின் மீது சிவாஜி மகாராஜ் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். சுஃபி முஸ்லீம் சாதுவான பாபா சரீப்புதீனின் கல்லறையில் சென்று சிவாஜி மகாராஜ் வணங்குவதுண்டு. அவர் மற்றொரு சுஃபி சாதுவான கொண்கனின் ஷேக் யாகூப்பின் ஆசிகளை வேண்டுவதற்காக அவரின் இருப்பிடத்திற்கும் அவர் சென்றுள்ளார். ரத்னகிரியில் உள்ள ஹஜ்ரத் பாபாவை அவர், பாஹூத் தோர்வாலே பாவ் , அதாவது "மூத்த சகோதரர்" என்று அழைத்தார். அவர் தமது நண்பர்களிடமும், எதிரிகளிடமும் அவரின் சிறந்த அணுகுமுறையால் அவர் கட்டளைக்கு கீழிருந்த முஸ்லீம்களையும் மரியாதையுடனும், நிறைமையுடனும் நடத்தினார்.மொகலாய வரலாற்றாளர் காஃபி கான் மற்றும் ஒரு பிரெஞ்சு பயணரான பெர்னர் ஆகியோரால் அவரின் மத கொள்கைகள் பற்றி உயர்வாக பேசப்பட்டுள்ளார். நேதாஜி பால்கர் மற்றும் பஜாஜி போன்ற மதம் மாறியவர்களையும் மீண்டும் ஹிந்துத்துவத்திற்கு கொண்டு வந்தார். அவர் தம் பேரரசில் அடிமைத்தனத்திற்கு தடை விதித்தார்.சிவாஜி மகாராஜ் அவர் ஆட்சியில் இருந்த பெண்களுக்கு மனிதாபிமான மற்றும் தாராளவாத கொள்கைகளை அளித்தார்.மதம், நாடு அல்லது சமய கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் சிவாஜி மகாராஜ் பெண்களை மதித்தது குறித்து நாட்டுப்புறவியலில் பல சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
பிற மதங்களை உள்ளடக்கியது மற்றும் ஏற்றுக்கொண்டது மீதான சிவாஜியின் உணர்வுகள், அவுரங்காசீப்பிற்கு எழுதப்பட்ட கடிதத்தில் காணக்கிடைக்கின்றன, அவர் எழுதியதாவது:
"Verily, Islam and Hinduism are terms of contrast. They are used by the true Divine Painter for blending the colours and filling in the outlines. If it is a mosque, the call to prayer is chanted in remembrance of him. If it is a temple, the bells are rung in yearning for him alone.

 

மரணமும், வெற்றிகளும்

8 ஏடி காலத்திய தெற்காசியாவின் அரசியல் வரைபடம்]] அவர் ஓர் இரத்தபெருக்கு நோயான,[மேற்கோள் தேவை] இன்டெஸ்டினல் ஆன்த்ரக்ஸினால் இறந்ததாக கூறப்படுகிறது.[மேற்கோள் தேவை] அவரின் இறுதிச்சடங்கு அவர் மகன் ராஜாராம் மற்றும் மனைவி சோயராபாய் முன்னிலையில் ராய்கட்டில் நடைபெற்றது. சிவாஜி மகாராஜின் இறப்பிற்கு பின்னர், அவர் மூத்த மகன் சாம்பாஜியும், சோயராபாயும் பேரரசின் கட்டுப்பாட்டைக் காப்பாற்ற போராடினார்கள். ஒரு சிறிய போராட்டத்திற்கு பின்னர் சாம்பாஜி சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டார்
சிவாஜி மகாராஜின் மரணத்திற்கு ஒரு சில மாதங்களுக்கு பின்னர், அவுரங்காசீப்பின் மகனான இளவரசர் அக்பர் தம் தந்தைக்கு எதிராக போராடினார், அவருக்கு சாம்பாஜி பாதுகாப்பளித்தார். அதன்பின்னர், 1681ல், மராட்டிய சக்தியை முற்றிலுமாக அழிப்பதற்கான ஓர் ஒட்டுமொத்த யுத்தத்திற்காக அவுரங்காசீப்பும், அவர் இராணுவமும் டெக்கானை சுற்றி வளைத்தது, ராயல் கோர்ட் மொத்தமாக உள்நுழைந்தது. இது தான் 27 ஆண்டுகள் யுத்தத்தின் தொடக்கமாக இருந்தது, இதில் அவுரங்காசீப்பால் அதிகமாக சாதிக்க முடியவில்லை, ஆனால் பின்னர், சாம்பாஜி வஞ்சகமாக பிடிக்கப்பட்டார். இது மராட்டிய பேரரசை ஒரு குழப்பத்திற்குள் தள்ளியது, மொகலாய தாக்குதலின் தீவிரத்தால் ஆபத்துக்குள்ளான மராட்டிய தலைநகரம் ராய்கட்டில் இருந்து தெற்கில் இருந்த செஞ்சிக்கு மாற்றப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது, ஒரே முறையிலும், ஒட்டுமொத்தமாகவும், மராட்டிய அச்சுறுத்தலை அவுரங்காசீப்பின் புறநிலை வெளியேற்றி விட்டதாக சிறிது காலத்திற்கு தோன்றியது. எவ்வாறிருப்பினும், அதை தொடர்ந்து வந்த மாதங்களிலும், ஆண்டுகளிலும் யுத்தத்தின் போக்கு திரும்ப தொடங்கியது.
பெரிய ஆனால் மிக பொறுமையாக நகர்ந்து கொண்டிருந்த மொகலாய அச்சுறுத்தலை சிறப்பாக சமாளித்த மராட்டியர்கள், அவுரங்காசீப்பை ஓர் இக்கட்டான நிலைக்கு கொண்டு வர போராடினார்கள். இரண்டாம் தசாப்தத்தின் இறுதியில், பரந்த வலிமையை ஈட்டிய மராட்டியர்கள், யுத்தத்தின் போக்கை மாற்ற தொடங்கினார்கள். சந்தாஜி கோர்பேட் மற்றும் தானாஜி ஜாதவ் போன்ற திறமையான மராட்டிய தளபதிகளால் நடத்தப்பட்ட பல தீவிர வீச்சுக்களால் மொகலாய படைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அவர்கள் ஆரம்பகாலத்தில் சிவாஜி மகாராஜினால் துல்லியமாக பயன்படுத்தப்பட்ட மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்ட உத்திகளான மின்னல் வேக தாக்குதல்களையும், வேகமாக நகரும் தாக்குதல்களையும் துல்லியமாக நடத்தினார்கள்.1705ல் வெளிப்படையாக உடைந்து போன, தோல்வியுற்ற அவுரங்காசீப், டெக்கானில் இருந்து நோய்வாய்பட்டு விரட்டியடிக்கப்பட்டார். இறுதியான மொகலாயர்களின் வெளியேற்றம் அதற்கடுத்த இரண்டாண்டுகளுக்கு பின்னர் நடந்தது. அவர் மராட்டியர்களைத் தோற்கடிக்க மீதமிருந்த தம் பெரும்பாலான ஆதாரங்களையும், மனிதசக்தியையும் செலவிட்டு கொண்டிருந்தார், இறுதியில் ஒருகாலத்தில் வலிமைமிக்க மொகலாய சாம்ராஜ்ஜியமாக இருந்ததைக் கணிசமாக பலவீனமாக்கி முடிவுக்கு கொண்டு வந்தார். அவுரங்காசீப்பின் மரபில் வந்தவர்கள் அதற்கு பின்னர் ஒருபோதும் மராட்டியர்களுடன் போட்டியிடவில்லை, மேலும் சிவாஜி மகாராஜ் மறைந்து எழுபது ஆண்டுகளுக்கு பின்னர், இறுதியாக அவர்கள் மராட்டியர்களால் வென்றெடுக்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டார்கள். 1751-52ல், மராட்டியர்களுக்கும், மொகலாயர்களுக்கும் இடையில் அஹம்தியா உடன்படிக்கை கையெழுத்தானது, அப்போது விரிந்து பரந்திருந்த மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் பேஷ்வாவாகவும், ஆட்சிலாளராகவும் இருந்தவர் பாலாஜி பாஜிராவ்.இந்த உடன்படிக்கையின்படி, தோற்றநிலையில் இந்திய முழுவதும் மராட்டியர்களின் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது, மொகலாயர்கள் டெல்லி வரையில் மட்டும் நிறுத்தப்பட்டார்கள் (மொகலாயர்கள் டெல்லியின் நியமன தலைவர்களாக இருந்தார்கள்). பாலாஜி பாஜிராவிற்கு பின்னர், மராட்டிய சாம்ராஜ்ஜியம் மாதவ்ராவ் பேஷ்வாவினாலும், இரண்டு மராட்டிய சர்தார்களான சிந்தியா மற்றும் ஹோல்கர் ஆகியோரால் மேலும் பலப்படுத்தப்பட்டது.
இந்திய துணைகண்டத்தின் ஆக்கிரமிப்பிற்கான இந்த தசாப்தங்களில் நடந்த நீண்ட சகாப்த போராட்டங்களின் போது சுமார் 500,000 மொகலாயர்களும், 200,000 மராட்டியர்களும் இறந்திருக்க கூடும் என்று ஒரு குறிப்பிடத்தக்க இந்திய வரலாற்றாளரும், மேதையுமான சர் ஜாதுநாத் சர்கார் கணக்கிட்டார். சிவாஜி மகாராஜின் வீரதீரத்தின் சிறப்பு குறித்து எழுதிய மற்றொரு வரலாற்றாளரான பாம்பர் காஸ்கோய்னியின் கருத்துக்களை குறிப்பிடுவதும் பொருத்தமாக இருக்கும். அவர் குறிப்பிட்டதாவது:
"He (Shivaji) taught the modern Hindus to rise to the full stature of their growth. So, when viewed with hindsight through twentieth century prizm, Aurangzeb on the one side and Shivaji on the other come to be seen as key figures in the development of India. What Shivaji began Gandhi could complete …… and what Aurangzeb stood for would lead to the establishment of the separate state of Pakistan." (The Great Moghuls, London: Constable)

 


 

 


 


 


 


 

 



 


 


 


 


 


 


 

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar