"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Saturday, December 14, 2013

தேவகிரியை ஆண்ட யாதவ மன்னர்கள் (கி.பி. 12-14 ஆம் நூற்றாண்டுகள்)

                  தேவகிரியை ஆட்சி செய்த யாதவகள் மகாபாரத நாயகனான கிருஷ்ண பகவானின் வழிவந்தவர்கள். இவர்கள் நாசிக் முதல் தேவகிரி (இன்றைய தௌலதாபாத்) வரையில் அமைந்திருந்த செவுனா பகுதியை ஆட்சி செய்ததால் யாதவர்கள் செவுனர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களின் மன்னோர்கள் இராட்டிரகூடர்கள் என்கின்ற பேரரசர்களிடமும் பிற்கால மேலைச் சாளுக்கிய பேரரசர்களிடமும் குறு நில மன்னர்களாக இருந்தார்கள். ஐந்தாம் பில்லம்மா (கி.பி.1175/1190). கல்யாணியை ஆண்ட மேலைச் சாளுக்கியர்களின் வீழ்ச்சியை பயன்படுத்திக் கொண்டு அவ்வழி வந்த அரசர் சோமேசுவரனைத் ஐந்தாம் பில்லம்மா என்கின்ற யாதவ மன்ன்ன் போரிட்டு தோற்கடித்து தம்மை அப்பகுதியின் சுதந்திர அரசாக அறிவித்துக்கொண்டார். ஹொய்சள அரசர் இரண்டாம் வீரபல்லாளனுடன் போரிட்டு லக்கண்டி போர்களத்தில் அய்தாம்பில்லம்மா இறந்தார். இதன் பிறகு அய்தாம் பில்லம்மா மகன் ஜெய்திரபாலா ஆட்சிக்கு வந்தார். இவர் 1191 முதல் 1210 வரை காகதீயர்கள், காளச்சூரிகள் மற்றும் கூஜர்கள் ஆகிய மன்னர்களை தோற்கடித்து தனது அதிகாரத்தை மேலும் விரிவு படுத்தியுள்ளார், இவர் காகதீய அரசர் மகாதேவனை வென்றார், ஹொய்சாள மன்ன்ன் இரண்டாம் வீரபல்லாளனை தோற்கடித்து கிருஷ்ணா நதியையும் கடந்து தனது எல்லையை விரிவு படுத்தினார். குஜராத் மீது பல முறை படையெடுத்து வென்றுள்ளார். சில்ஹாரா மரபின் கீழ் இருந்த கொல்லாபூரை வெற்று தம் நாட்டுடன் இணைத்துக்கொண்டார். இதன்பிறகு இவரது மகன் இராமச்சந்திரதேவர் கி.பி.1271ல் ஆட்சிக்கு வந்தவர் இவரே தேவகிரி யாதவ அரசர்களில் கடைசி மன்ன்ன் ஆவார். இவ அலாவுதீன் கில்ஜி தோற்கடித்து டெல்லிக்கு வரி(திறை) செலுத்தும் அரசாக மாற்றினார். இவரை அடுத்து இவரை அடுத்து இராமச்சந்திர தேவர் மகன் சங்கர தேவர் 1390ல் அரசர் ஆனார் இவர் டெல்லி சுல்தானுக்கு திறை செலுத்த மறுத்த்தால் மாலிக்கபூர் என்ற மகலாயரால் 1312ல் போரிட்டு சங்கர தேவனை கொன்றான். யாதவர்கள் வடக்கிலும், தெற்கிலும் மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்துள்ளார்கள் என்பது இவ்வரலாறு மூலம் உறுதி செய்யப்படுகிறது. (புகழ்மிக்க தேவகிரி கோட்டை யாதவர்களால் கட்டப்பட்டது வலிமை வாய்ந்த இந்தியக் கோட்டைகளில் தேவகிரி கோட்டையும் ஒன்று இன்று வரை இக்கோட்டை உறுதியுடன் உள்ளது. மேலும் யாதவர்கள் அறிவியலையும், வானவியலையும் ஆதரித்து வளர்த்து வந்துள்ளனர்.)

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar