"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Sunday, August 24, 2014

மத்திய ..மாநில அரசே 150 செம்மறி ஆடுகளை இழந்த சந்தானம் யாதவ் குடும்பத்துக்கும் கோபாலகிருஷ்ணன் யாதவ் குடும்பத்துக்கும் தகுந்த இழப்பீடு தொகை வழங்குமாறு கோரிக்கை வையுங்கள் யாதவ இன மக்களே


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, தண்டவாளத்தில் படுத்திருந்த 150 ஆடுகள் ரயில் மோதி உயிரிழந்தன. வயலில் அமைக்கப்பட்டிருந்த பட்டியில் நேற்றிரவு மழைநீர் புகுந்ததால், தண்டவாளத்தில் ஆடுகள் சென்று படுத்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இன்று அதிகாலை கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தில் சென்ற ரயில், ஆடுகள் மீது மோதியது. உயிரிழந்த செம்மறி ஆடுகளின் மதிப்பு 11 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என அவற்றின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சந்தானமும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனும் இணைந்து 350 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். அவர்கள் திருவிடைமருதூர் பகுதியில் அறுவடை செய்த வயல்களில் பட்டி அமைத்து ஆடுகளை மேய்ச்சலுக்காக விடுவது வழக்கம். நேற்றிரவு மழை பெய்ததால் வயலில் தண்ணீர் தேங்கியது.

மேலும், பட்டியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பும் சாய்ந்தது. இதனால், செம்மறி ஆடுகள் அனைத்தும், அருகிலிருந்த தண்டவளாகத்தில் படுத்துக்கிடந்தன.

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar