"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Wednesday, December 30, 2015

புலிக்குளம் காளை

ஜல்லிக்கட்டு
புலிக்குளம் என்னும் ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. ஜல்லிகட்டுக்கு என்று பிரத்தேகமாக வளர்க்கப்படும் காளையினம் புலிக்குளம் . இது காங்கேயம் காளைகளை விட மிகவும் ஆக்ரோசமானது. புலிக்குளம் காளைகளை பாரம்பரிய கால்நடை வளர்பாளர்களான கோனார்களே (ஆயர்) வளர்த்து வருகின்றனர். உலகளவில் இந்திய நாட்டின பசுக்களின் பாலே அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதிலும் புலிக்குளம் இன பசுக்களின் பாலே சிறந்தது என்று விஞ்ஞானிகளால் நிருபிக்கப்பட்டுள்ளது.

Pulikulam cattle approved as indigenous breed

ஜல்லிக்கட்டு
Madurai’s own Pulikulam cattle breed which provides us those raging bulls that test the taming skills of bull fighters during the ancient sport of jallikattu held annually has now been approved and registered as an indigenous breed.


The Breed Registration Committee (BRC) of National Bureau of Animal Genetic Resources (NBAGR) coming under Indian Council for Agricultural Research (ICAR) has approved the registration. In a letter issued by B.K.Joshi, Director, NBAGR, it has been stated that the committee had approved the registration of Pulikulam cattle as a breed and the accession number of the breed is ‘01 Pulikulam Tamilnadu INDIA_CATTLE_1800_ PULIKULAM_03035.’

Thanks to the tireless efforts of SEVA (Sustainable agriculture and Environmental Voluntary Action) – an institution specialising in conservation of native cattle breeds – in Madurai which has been working hard over the years fighting for the protection of native cattle and livestock breeds.

NBAGR is the nodal agency for the registration of newly identified germplasm of the livestock and poultry of the country. The newly identified breed is approved by BRC headed by Deputy Director General (Animal Sciences), ICAR and represented by National Biodiversity Authority, Department of Animal Husbandry, Dairying & Fisheries, Assistant Director General (ICAR), Directors of ICARs, species specific animal science institutes and NBAGR.

SEVA in its study found that Pulikulam cattle were contributing significantly to organic farming of coconut, grapes, banana and spices crops of the area through manure and draft power. There were 55 herds (a herd comprising between 50 and 500 animals per livestock keeper / keepers) in the area with their total population being around about 5,000 in Madurai district.

Pulikulam is a village located in Sivaganga which was part of the erstwhile composite Ramanathapuram district, local myth says that the village got its name Puli Kulam (Tiger Pond) because the village some five hundred years ago was surrounded by thick forest consisting Karuvelam (Acacia Nilotica) trees and tigers used to come and quench their thirst in the pond.

The bulls here in the village are believed to be so raging that they would fight the tigers before going down. SEVA founder, P.Vivekanandan, while talking to The Hindu on Monday, said that the indigenous breed which is found in 8 villages in Sivaganga and 13 villages in Madurai were originally brought by the pastoralists who migrated from Pulikulam over the years. “Ninety nine per cent of the cattle is bred and maintained by the traditional cowherds belonging to Yadava caste and remaining one per cent is maintained by members of Mukkulathor caste.”

Starting from the month of October, till the harvest season in January the cattle would be kept in herds in their villages and during the remaining season they would be on the move going to hills and forest areas, however restrictions by forest department on access to grazing land has resulted in decrease of their numbers. Pulikulam cattle was widely used for ploughing but mechanization saw farmers no more using them, they are widely used for cattle penning wherein cattle are kept overnight in the field and urine and fecal matter added to the soil is incorporated to a shallow depth by working blade harrow or cultivator or cultivator.

Globalisation has led to a situation where the traditional role of pastoralists as custodians of animal genetic resources is on the wane. These indigenous breeds, which were maintained after a meticulous process of selection and breeding, could withstand local environment conditions. They are disease-resistant and culturally and religiously are part of our social imagination as property resource. The traditional herdsmen followed this process over centuries but they are all fading into memory says Mr.Vivekanandan.

Thanks to  

Tuesday, December 29, 2015

முல்லை நிலத்து மக்கள் வாழ்க்கை

முல்லை
மலைகளின் அடிவாரத்தில் உள்ளது முல்லை நிலம். சிறு குன்றுகளும் காடுகளும் காட்டாறுகளும் இங்கே இருந்தன. முல்லைக் கொடிகளும் கொன்றை (சரக் கொன்றை), குருந்து முதலான மரங்களும் இங்கு உண்டு. கானக்கோழி, மயில், முயல், மான் முதலானவை இங்கு இருந்தன.

இங்கு வாழ்ந்த மக்கள் இடையர்,  இடையர் பசுக்களையும் ஆடுகளையும் எருமைகளையும் வளர்த்தார்கள். அவைகளைக் காடுகளிலும் புற்றரைகளிலும் ஓட்டி மேய்த்தார்கள்.

வரகு, கேழ்வரகு ஆகிய தானியங்களைப் பயிரிட்டார்கள். அவரை, துவரை போன்றவைகளையும் பயிரிட்டார்கள். குளங்களிலிருந்து நீர் பாய்ச்சினார்கள். இவை வானம் பார்த்த பயிர்கள், மழையை, எதிர்பார்த்தே பயிர் செய்தார்கள். வரகு, கேழ்வரகு இவற்றை உணவாக உண்டார்கள். பால் தயிர் நெய்களையும் உணவாக உண்டார்கள்.

இவர்கள் தங்கள் வீடுகளைக் குடில்களாகக் கட்டிக் கொண்டிருந்தார்கள். வரகுத்தாள், கேழ்வரகுத் தாள்களைக் கூரையாக வேய்ந்தார்கள்.

இவர்களுடைய வீடுகள், குறிஞ்சி மக்களின் வீடுகளைவிட உயரமாகவும் நன்றாகவும் இருந்தன. பால், தயிர், மோர், நெய்களை விற்றார்கள். இவற்றைப் பெரும்பாலும் பண்ட மாற்றாகவே விற்றார்கள். முல்லை நிலத்து மக்கள் வாழ்க்கை, குறிஞ்சி நிலத்து மக்கள் வாழ்க்கையை விடச் சற்று உயர்ந்திருந்தது. இவர் கள் அவர்களை விட நன்றாகவும் நாகரிகமாகவும் வாழ்ந்தார்கள்.

விலங்குகள் காட்சி பட்டியலில் இருந்து காளையை நீக்கினால் ஜல்லிக்கட்டை நடத்தலாம்: சட்ட நிபுணர்கள் ஆலோசனை

ஜல்லிக்கட்டு
தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது மாட்டுப் பொங்கலன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வந்தது.

கடந்த 2011–ம் ஆண்டு பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு காளையை காட்சிப் பொருளாக பயன்படுத்த தடை விதித்தது.

காளைகள், எருதுகளை துன்புறுத்துவதற்கு உட்படுத்தும் எந்த போட்டியும் நடைபெறாத வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் விலங்குகள் நலவாரியம் இதை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு காரணமாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதுபோல மராட்டியத்தில் எருது வண்டி பந்தயம், பஞ்சாபில் எருது பந்தயம், கர்நாடகாவில் கம்பளா பந்தயம் ஆகியவற்றை நடத்த முடியவில்லை.

தமிழ்நாட்டில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், "ஜல்லிக்கட்டு மற்றும் எருது பந்தயங்களை நடத்த அனுமதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற 1–ந்தேதி வெளியாகும்" என்றார்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க கூடும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டு வர தேவை இல்லை. அரசாணையே போதும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு வெளியிட்ட அரசாணை மூலம்தான் 2011–ம் ஆண்டு விலங்குகள் காட்சிப் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டது. அந்த ஆணையின் காரணமாகவே காளைகளை காட்சிப் பொருளாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமானால் காட்சி பட்டியலில் காளையை சேர்த்து மத்திய அரசு கொண்டு வந்த விதியை நீக்கினால் போதும் என்று கூறப்படுகிறது.

அதாவது எப்படி அரசாணை மூலம் விலங்குகள் காட்சிப் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டதோ, அதே அரசாணை மூலம் காட்சி பட்டியலில் இருந்து காளை, எருதுவை நீக்க முடியும் என்கிறார்கள்.

அவசர சட்டத்தை பயன்படுத்தாமல் ஒரு அரசாணையாலே இதை செய்து விடமுடியும் என்று கருதப்படுவதால்தான் மத்திய மந்திரிகள் அடுத்தடுத்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி உறுதியாக நடைபெறும் என்று நம்பிக்கையோடு கூறி வருகிறார்கள். வரும் 1–ந்தேதி புத்தாண்டு பரிசாக இதை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்குவதற்கு மத்திய அரசு அரசாணையை பயன்படுத்தினால் அதை எதிர்ப்போம் என்று பீட்டா விலங்குகள் நல அமைப்பு கூறியுள்ளது. அந்த அரசாணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

அதுபோல விலங்குகள் நல ஆர்வலர்களும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் வகையில் மத்திய அரசு எந்த அரசாணையையும் திருத்தக்கூடாது என்று கூறியுள்ளது. விலங்குகள் தொடர்பாக எந்த அறிவிப்பு வெளியிடுவதாக இருந்ததாலும் விலங்குகள் நலவாரியத்திடம் முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

காட்சி பட்டியலில் இருந்து காளை நீக்கப்பட்டால் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வோம் என்று விலங்குகள் நலஆர்வலர் நந்திதா கிருஷ்ணா, பீட்டா விலங்குகள் நல அமைப்பு பிரதிநிதி நிகுஞ்ச் சர்மா கூறியுள்ளனர்.

இதனால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் வகையில் மத்திய அரசு எத்தகைய அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Monday, December 28, 2015

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

அழகுமுத்து கோன்
விடுதலை போராட்ட வீரர் அழகுமுத்து கோன் தபால் தலையை மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்ற விழாவில்
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டார் .

விழாவிற்கு தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு அழகு முத்துக்கோன் தபால் தலையை வெளியிட்டனர். அதனை தபால்துறை அதிகாரி சார்லஸ் பெற்றுக்கொண்டார்

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விழாவில்
பேசியதாவது :–

அழகு முத்துக்கோன் போன்ற விடுதலை வீரர்களின் பெருமைகளை நன்கு அறிந்துள்ளேன். இவரை போல நமது தேசத்துக்காக பாடுபட்ட விடுதலை வீரர்கள், புரட்சியாளர்கள் உள்ளிட்டோரின் பெருமைகளை ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பறைசாற்ற வேண்டும். இனிவரும் காலங்களில் விடுதலை வீரர்களின் பெயர்களை பட்டியலிட்டு அவர்களது சாதனைகளை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.

உலகத் தலைவர்களால் மதிக்கப்படும் பிரதமர்களில் நரேந்திர மோடிக்கு தனி இடம் உள்ளது. இன்னும் 5 வருடங்களில் இந்தியாவை வளர்ந்த நாடுகள் பட்டியலில் சேர்த்து விடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியாவில் புகழை உலகமெங்கும் கொண்டு சென்ற பெருமை பிரதமர் மோடியையே சாரும். அழகுமுத்துக்கோன் புகழ் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரப்பப்படும் என்று இங்கே நான், பாரதீய ஜனதா கட்சி சார்பில் உறுதி அளிக்கிறேன் என்று ரவிசங்கர் பிரசாத் பேசினார்.


விழாவில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:–

தற்போது விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் தபால் தலை வெளியிடுவது ஒரு சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் பெருமை அல்ல. ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்துக்கே பெருமையான விஷயம். அவர் நாட்டுக்காக வாழ்ந்ததை விட தர்மம் எப்போதும் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே வாழ்ந்து மறைந்துள்ளார். யாதவர் சமூகத்தினர் எப்போதும் நன்றிக்கு இலக்கணமாக இருக்கக்கூடியவர்கள்.

வருகிற தை திருநாளில் நிச்சயமாக ஜல்லிக்கட்டு நடக்கும். நடக்கும்... நடக்கும்... அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு சில சட்டச் சிக்கல்களும், பிரச்சனைகளும் இருக்கின்றன. அவை சரி செய்யப்பட்டு வருகிற பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடக்கும். அதற்கான முயற்சியில் தான் நாங்கள் இப்போது இறங்கி உள்ளோம் என்று பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.

விழாவில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்கள் முரளிதரராவ் பேசியதாவது:–


பிரதமர் மோடி தேச தியாகிகளை கவுரவப்படுத்தி வருகிறார். இந்த அரசுதான் தியாகிகளை கவுரப்படுத்தும் அரசாக இருக்கிறது. பசு மிகவும் புனிதமானது. பசுவையும் பாதுகாக்கும் அரசாக உள்ளது. ஜல்லிக்கட்டுக்குள்ள தடை நீங்க பிரார்த்திக்கிறேன் என்றார்.


இவ்விழாவில், பூபேந்தர் யாதவ் எம்.பி.,தமிழ்நாடு யாதவ மகா சபைத் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நாடார் மகாஜன சங்கத் தலைவர் கரிக்கோல்ராஜ், மெர்க்கன்டைல் வங்கி இயக்குநர் பெரீஸ்மகேந்திரவேல், தமிழ்நாடு யாதவ மகாசபை பொதுச்செயலாளர் தர்ம லிங்கம், மாநில பொருளாளர் எத்திராஜ்,மதுரை மக்களவை உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன், இந்திய மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் தி.தேவநாதன், யாதவ தன்னுரிமை பணியக நிர்வாகிகள் பா.சரவணன், பெரி.கபிலன், சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரா.சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர். அழகு முத்துக்கோன் வாரிசு அழகு முத்தம்மாள் நன்றி கூறினார்.
 உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Union Minister releases stamp to commemorate freedom fighter Veeran Alagumuthu Kone



அழகுமுத்து கோன்
The Union government wanted Tamil Nadu to grow and “whatever help is required will surely be given” to overcome the impact of the recent rains and floods, said Ravi Shankar Prasad, Union Minister for Communication and Information Technology, on Saturday.

Releasing a stamp to commemorate Veeran Alagumuthu Kone, one of the earliest freedom fighters, at a function organised by Yadava Empowerment Services here, the Union Minister said that the Modi government treated all States equally and wanted Tamil Nadu to grow.

In a meeting, which was high on political rhetoric, Mr. Prasad apologised to the family members of the freedom fighter for the delay in releasing a stamp. “History of Indian stamps shows that a lot of them are from one family,” he said even while claiming that the Modi government wanted to accord due recognition for all Indians.

It was a shame that a stamp on Alagumuthu Kone, who was killed by the British tied to the mouth of a cannon in 1759, should be released after 68 years of Independence, he said. To make the younger generation aware of the sacrifice made by many in the freedom movement, Mr. Prasad had asked his Ministry to compile a list of revolutionaries and freedom fighters as the Union government respected all those who had laid down their lives for the nation.

“Prime Minister Modi believed in cooperation of all and development of all,” Mr. Prasad said, adding that the Centre stood for respect, justice and growth of all communities.

Union Minister of State for State for Shipping and Road Transport Pon. Radhakrishnan gave an assurance that the Centre would take all steps to conduct jallikattu in Tamil Nadu this year. By releasing a stamp in memory of Alagumuthu Kone, the Modi government had honoured entire Tamil Nadu, he said.

BJP MP Bhupendra Yadav recalled how the Yadavs had a tradition for sacrificing their lives for the nation. P. Muralidhar Rao, BJP general secretary, said jallikattu was a symbol of Tamil culture and youth power and the Centre would take all steps to protect it.

State BJP president Tamizhisai Soundararajan saw a bright future for Tamil Nadu in several communities coming together. Those who offered felicitations included M. Gopalakrishnan, president, Tamil Nadu Yadava Mahasabha, and R. Srinivasan, State joint convenor, Swadeshi Jagran Manch.

Friday, December 25, 2015

Veeran Alagumuthu Kone Wikipedia

Veeran Alagumuthu Kone Wikipedia
Veeran Alagamuthu in Kattalankulam
Veeran Azhagu Muthu Kone , also known as Alagumuthu Konar, was a Tamil Konar warrior from India.He is regarded for having raised one of the first revolts against the British in India. He was based in Kattalankulam, a village in erstwhile Tirunelveli district of Tamil Nadu.


Government Memorial Activities


In the State Legislature on 29.04.1994 the government announced to celebrate annually by the Govt, in Tirunelveli the memory of Veeeran Alagumuthu Yadav. It was done for the year 1995. Then the government named a Transport Corporation with headquarters at Pudukottai and Government buses were operated with the name “Veeeran Alagumuthu Kone Transport Corporation” on 15.03.1996. On the same day (15.03.1996) a very big bronze statue of Veeran Alagumuthu was erected by the government near Madras Egmore Railway station. The statue was opened by Hon. Chief Minister Selvi J. Jayalalithaa under the presidentship of Thiru S. Kannappan (Yadav) Minster for PWD, Highways and Electricity. He was the force behind for getting the demands accepted by the government.

The function was attended by more than 7 lac Yadavas came on 4000 buses and lorries from throughout Tamilnadu. In that meeting Hon. Chief Minister Selvi J. Jayalalithaa announced that the fort built by Veeran Alagamuthu in Kattalankulam in Tuticorin district will be renovated and will be made a tourist spot. But after some days general election was announced and the AIADMK was voted out of power. DMK government came to power in 1996 June.

After coming to power the government decided in the cabinet meeting on 22.06.1998 bifurcate the Madurai district and name the new district as Veeran Alagumuthu District with Thene as its headquarters and it was implemented.

In Madurai Yadava College Veeran alagumuthu kone Statue opened by Shri Lalu Prasad Yadav Chief Minister of Bihar.

Later Some of Yadava Sangam and Yadav based political party to build  veeran alagumuthu kone statue in Thiruvannamalai ( Jananayaka Makkal tamil Desam Katchi under leadership of Thiru Ramachandra Maruthu Pandiyar)and Tirunelveli (Yadava mahasabai under leadership of Thiru T Devenathan yadav).



Every year July 11 Veeran alagumuthu kone Guru poojai function  conducted in Tamilnadu.

Veeran Alagumuthu Kone Wikipedia
Madurai Yadava College


Veeran Alagumuthu Kone Wikipedia
Thiruvannamalai

Veeran Alagumuthu Kone Wikipedia
Tirunelveli 







Thursday, December 24, 2015

Commemorative stamp on freedom fighter Azhagumuthu Kone to be released

The department of posts will release commemorative stamps on freedom fighter Azhagumuthu Kone While the stamp on Pant would be released on December 26, said a postal department press release.

Kone was one of the early freedom fighters to arouse public consciousness against foreign rule in Tiruneveli region of Tamil Nadu. He was a general with Ettayappa Naicker, a Polygar king of Ettayapuram.

The commemorative postage stamps, first day covers and information brochures can be purchased from the philatelic bureaux and counters across the country.

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோன் தபால் தலை: 26–ந்தேதி வெளியிட தபால் துறை திட்டம்

சுதந்திரத்திற்காக போராடிய மாவீரன் அழகுமுத்து கோன், ஜெகவீர ராமபாண்டி எட்டப்பன் என்ற எட்டயபுரம் அரசருக்கு நண்பர். கப்பம் கட்ட மறுத்து, முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தவர். 

மருதநாயகம் யூசுப்கான் சாகிப்பை எதிர்த்து, பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டு, வீரன் அழகுமுத்து கோன், படைத்தளபதிகளும், போர் வீரர்களும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டனர். இவர்களை கவுரவிக்கும் வகையில், அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் தலை, அஞ்சல் உறை வெளியிடப்படுகிறது. வரும் 26-ந்தேதி (சனிக்கிழமை) அழகுமுத்து கோன் நினைவு அஞ்சல் தலை, அஞ்சல் உறை, விவரக் குறிப்பேடும் அஞ்சலகங்களில் விற்பனைக்கு கிடைக்கும். 

மேற்கண்ட தகவலை அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tuesday, December 15, 2015

ஆனாய நாயனார் புராணம்-1




தொகை


"அலைமலிந்த புனன்மங்கை ஆனாயர்க் கடியேன்"


- திருத்தொண்டத்தொகை


வகை
தாயவன் யாவுக்குந் தாழ்சடை மேற்றனித் திங்கள்வைத்த
தூயவன் பாதந் தொடர்ந்துதொல் சீர்துளை யாற்பரவும்
வேயவன் மேன்மழ நாட்டு விரிபுனன் மங்கலக்கோன்
ஆயவ னானாய னென்னை யுவந்தாண் டருளினனே.




- திருத்தொண்டர் திருவந்தாதி


விரி
926.






மாடு விரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்,
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற,
ஈடு பெருக்கிய போர்களின் மேக மிளைத்தேற,
நீடு வளத்தது மேன்மழ நாடெனு நீர்நாடு.




1




புராணம் :- ஆனாயர் என்ற பெயராலறியப்படும் நாயனாரது சரித
வரலாறும் பண்புங் கூறும் பகுதி. நிறுத்த முறையானே இலை மலிந்த
சருக்கத்து ஏழாவது ஆனாய நாயனாரது புராணங்கூறத் தொடங்குகின்றார்.


தொகை :- அலைகள் பெருகிய புனல் சூழ்ந்த திருமங்கலம் என்ற
தலத்தில் அவதரித்த ஆனாயருக்கு அடியேனாவேன்.


மங்கை - திருமங்கலம். ஆனாயர் - ஆன் ஆயர் - ஆ மேய்க்கும்
ஆயர் குலத்தவர். ஆனாயர் (933) என்றது காண்க. நாயனாரது இயற்பெயர்
விளங்கவில்லை. ஊரும் ஊர்ச்சிறப்பும், பேரும், தொழிலும் திருத்தொண்டின்
குறிப்பும் முதனூல் பேசிற்று.


வகை :- யாவைக்கும் தாயானவரும், சடைமேற் பிறைவைத்த
தூயவரும்ஆகிய சிவபெருமானுடைய திருவடிகளை மனதில் விடாதுபற்றி,
அத்தொடர்ச்சியாலே அவருடைய பழமையாகிய சீர்களை வேய்ங்குழல்
நாதத்தினாற் பரவுகின்ற மேன்மழ நாட்டு நீர்வளம் மிக்க திருமங்கலத்தின்
ஆனாயர் என்னை மகிழ்ந்து ஆட்கொண்டருளியவர்.


மேன்மழ நாட்டு மங்கலக்கோன் ஆனாயன், தூயவன் பாதம்
தொடர்ந்து அவனது சீர் துளையாற் பரவுபவன்; அவன் என்னை ஆண்டவன்
எனமுடித்துக் கொள்க. தாயவன் யாவுக்கும் "தாயவன்காண் உலகுக்கு"
(கச்சித்திருத்தாண்டகம்). தொடர்தல் - விடாது பற்றுதல் குறித்தது.
துளைவேயாற் பரவுபவன் என மாற்றுக. துளைகளின் வழியே பண் எழுப்பிப்
பரவுதலால் துளையாற் பரவும் என்றார். மங்கலம் - நகரப்பெயர்.
விரிபுனன் மங்கலம் - "அலைமலிந்த புனன் மங்கை" என்பது முதனூல்;
(தொகை). என்னை உவந்து ஆண்டவன் - "அடியேன்" என்ற முதனூல்
முடிபின் தாற்பரிய முணர்த்திற்று. யான் அடியேன் எனப் பணிதலும்,
அவனும் என்னை ஆண்டனன். உவந்து - அடிமையை


ஏற்றுக்கொண்டு. விரிபுனல் இரண்டு ஆறுகள் கூடிச் சேர்தலால் இவ்வாறு
கூறினார். "இது அலைமலிந்த புனன்" என்ற முதனூற் பொருளை எடுத்து
ஆண்டு வற்புறுத்தியதாம்.

நாயனாரது, நாடு - மேன்மழ நாடு - (926); நகரம் - விரிபுனன்
மங்கலம் (932); பெயரும் குலமும் தொழிலும் - ஆனாயர். "ஆயர்
குலத்தவர்" (933); "ஆனிரை அளித்துள்ளார்" (935); திருத்தொண்டின்
திறமும் வரலாறும் - தொல் சீர் துளையாற் பரவும் வேயவன் என்றது
- "தம் பெருமானடி அன்புறு கானத்தின் மேவு துளைக்கருவிக் குழல்
வாசனை மேற்கொண்டார்" (937), (938), (939); "வாயினின் மெய்யின் வழுத்து
மனத்தின் வினைப்பாலின்..........பிரானடியல்லது பேணாதார்" (934);
"கொன்றையினை நேர்நோக்கி..........அன்பை உடையவர்பால் மடை திறந்தார்"
(946), (950), (952); தாயவன் - அருட்கருணை தானாய........தவவல்லியுடன்
(963); சடைமேற் றனித்திங்கள் வைத்த தூயவன் - மதி நாறும் சடைதாழ
(963); நாறுதல் - தோன்றுதல் - முளைத்தல். இவ்வாறு விரிவாய்
இப்பொருள்களை விரிநூல் விரித்தமை கண்டுகொள்க.

926. (இ-ள்.) மேன்மழ........நீர்நாடு - மேன்மழநாடு என்று
சொல்லப்படும் நீர்வளம் மிக்க நாடு; மாடு........வந்து ஏற - பக்கங்களில்
பரவுகின்ற வாசனையுடைய அழகிய சோலைகளில் வான்மதி வந்து ஏறவும்;
சூடு - சுரும்பு ஏற - சூடடிக்கும் நெல்லரிகள் பரப்பிய பண்ணையின்
வரம்புகளில் வண்டுகள் ஏறவும்; ஈடு.........இளைத்து ஏற - மேன் மேல்
அடுக்கியுயர்த்த வைக்கோற் போர்களில் மேகங்கள் இளைத்து ஏறவும்; நீடு
வளத்தது - நிலை பெறும் வளத்தையுடையது.

(வி-ரை.) விரைப்பொலிசோலை - விரை - மணம்; பொலிதல் -
அழகுடன் விளங்குதல். கண்ணுக்கினிய காட்சியழகு மட்டும்கொண்டு
மணமில்லாதசோலைகளைப் பெருஞ்சிரமப்பட்டு வைத்துக் களிக்கும்
இந்நாள்மாக்கள் இதனைச் சிந்திப்பார்களாக.


வான்மதி வந்து ஏற - மிக உயர்ந்து வளர்ந்த சோலையின் உயர்ச்சி
குறித்த உயர்வுநவிற்சியணி. மதி வானவீதியிற் செல்லுவதாயினும்,
இச்சோலையினது வானளாவிய உயர்ச்சியினாற் கீழிருந்து, புறத்துக்
காண்போர்க்கு, அது (மதி) இதனுள் வந்து நுழைந்து மேல் ஏறுவதாகப்
புலப்படும் என்பது. ஏறுதல் - மதி, முளைத்த இடத்தினின்றும் பொழுதேற
ஏற மேற்போதல். "வெண்மதியம், சோலைதொறு நுழைந்துபுறப் படும்பொழுது"
(திருஞான - புரா - 8) என்ற இடத்து இக்கருத்தை மேலும்நயம்பட விரித்தது
காண்க. சோலையின் மரங்களின் உயர்ச்சியை "மந்தியும் அறியா மரன்பயில்
அடுக்கத்து" என்று உயர்வு நவிற்சிபடக் கூறும் திருமுருகாற்றுப்படையும்,
"வான மதிதடவ லுற்ற விளமந்தி, கான முதுவேயின் கண்ணேறித் - தானங்,
கிருந்துயரக் கைநீட்டு மீங்கோயே நம்மேல், வருந்துயரந் தீர்ப்பான் மலை"
என்ற ஈங்கோய்மலை யெழுபதும் (68) பிறவும் காண்க.

சூடு பரப்பிய பண்ணை - சூடு - நெற்கதிர்களில், தலையடியில்
உதிராத மணிகளை உதிர்க்கும் பொருட்டுப் பரப்பிய நெல் அரிகள்.
இவற்றை மேதிகளால் மிதிப்பித்து (கடாவிடுதல் என்பர்) நெல்லுதிர்த்துச்
சேர்த்தல் மரபு. (அரிகளை முதலில் அடித்தபோது உதிர்ந்தநெல் தலையுதிரி
எனப்படும்.) 73ல் உரைத்தவை பார்க்க.

சூடு...........சுரும்பு ஏற - சூடு உதிர்க்கப் பரப்பிய வயல்களில்,
வரம்புகளில் வண்டுகள் ஏறுதலாவது சூடு அரிகள் பரப்பும்போது அங்குத்
தாமரை நீலம் முதலிய கொடிகளும் மலர்களும் உள்ளமையால் அவற்றின்
மொய்த்த வண்டுகள் தப்பி ஓடுதற்கு ஒதுங்கி அங்குநின்றும் வரம்புகளில்
ஏறுதல். "அரிதரு செந்நெற்சூட்டி னடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்......விரிமலர்க் கற்றை வேரி பொழிந்திழி

வெற்பு வைப்பார்" (73) என்றது காண்க.

ஈடு பெருக்கிய போர் - சூடு அடித்தபின் வைக்கோல்களைப் பெரும்
குவியல்களாக அடுக்கிக் குவித்த போர்கள். ஈடு - ஆதி நீண்டுவந்த
முதனிலைத் தொழிற்பெயர். ஈடு - இடுதலினாலே - ஒன்றன்மேல் ஒன்று
குவியலாக இடப்படுதலினாலே. போர் - வைக்கோற்போர். ஈடு -
ஒன்றுக்கொன்று சமமாகச்செய்த என்றும், பெருமைமிகச் செய்த என்றும் உரை
கூறுவாரும், போர் - நெற்போர் என்பாரும் உண்டு. இவை
பொருந்தாமையறிக.

போர்களின் மேகம் இளைத்து ஏற என்றது தாழவரும் மேகங்கள்
தங்கக்கூடிய வளவிலே மிக உயர்ந்தனவாக வைக்கோற் போர்கள்
இடப்பட்டன என்க. இன்றைக்கும் மலைபோல நிமிர்ந்து காணக்கூடியபடி
மிகஉயரமாகிய வைக்கோற் போர்கள் இந்நாட்டின் புறங்களிலும்
(இத்திருமங்கல) நகரிலும் காணலாம். இளைத்து ஏறுதல் - மெல்லத் தவழ்தல்.
இலக்கணை. "சோலைகள் மேலோடும், வெங்கதிர் தங்க விளங்கிய மேன்மழ
நன்னாடு" (932) என்றதும் அங்கு உரைப்பவையும் இங்கு வைத்துச் சிந்திக்க.

மேன்மழநாடு - இது நாட்டின் பெயர். மழநாடு - மழவர் என்ற
மரபினர் வாழ்வதும், அம்மரபினரால் அரசு செய்யப் பெற்றதும் ஆகிய நாடு.
இதுமேன் மழநாடு, கீழ் மழநாடு முதலிய பல பிரிவுகளையுடைய
தென்றறியப்படும். திருப்பாசசிலாச் சிராமத்தைத் தலை நகராகக் கொண்டு
கொல்லி மழவன் அரசு புரிந்த நாடும் மழநாட்டின் ஒரு பிரிவு. அது கீழ்
மழநாடு என்பது போலும். கொல்லி மழவனும் அவனது மரபினரும் வழி
வழியாகச் சிவனடிச் சார்புடைய சைவமரபு அரசர்கள் என்பது, "மறிவளருங்
கையார் பாதம் பற்றியே வருங்குலத்துப் பான்மையினா னாதலினால்"
(திருஞான - புரா - 312) என்றமையாலும், பிறவாற்றாலும் அறியப்படும்.
மழநாடு சோழ நாட்டின் ஒரு பகுதி. மழவ அரசர்களும் சோழ மன்னர்களின்
கீழ் வாழ்ந்த சிற்றரசர்களில் ஒருவராகும் என்ப. கொங்கு மழநாடு என்ற ஒரு
பகுதியும் உண்டு. பிற வரலாறுகள் சரித ஆயாய்ச்சிக் குறிப்பிற் கண்டு
கொள்க.

நீர் நாடு - நீர் வளம் பொருந்திய நாடு என்க. "அலைமலிந்த புனல்"
என்பது முதனூல். அதனை வழி நூலுள் (திருவந்தாதி) "விரிபுனல்" என்றார்.
அதனையே ஆசிரியர் "நீர்" என்றனர்.

நீடு வளத்தது - நீடு முக்காலத்துக்கும் பொதுவாகிய வினைத்தொகை.
இவ்வாக்கின் பயனாக இந்நாளிலும் இந்நாடு நீடும் வளமுடையதாய்
விளங்குதல் கண்கூடு.

சராசரமெல்லாம் சந்த இசைமயமாக்கிய ஆனாய நாயனாரது
சரிதமாதலின் சந்தப்பா யாப்பினால் ஆசிரியர் தொடக்கம் செய்கின்ற நயம்
காண்க. 1 ................

சு‌ப்பையா சுவா‌மிக‌ள்

திருநெ‌ல்வே‌லி அரு‌கி‌ல் உ‌ள்ள கடையனோடை எ‌ன்னு‌ம் ‌கிராம‌த்‌தி‌ல்‌வி‌ல்‌லிமு‌த்து‌க் கோனா‌ர்-நாராயணவடிவு த‌ம்ப‌தியரு‌க்கு 23.11.1908 ஆ‌ம் ஆ‌ண்டு‌பிற‌ந்தவ‌ர் மகா‌ன் சு‌ப்பையா சுவா‌மிக‌ள். ஒரே ஆ‌ண் வா‌ரிசான இவ‌ர், படி‌‌ப்‌பி‌ல்அ‌திக ஆர்வம் கொ‌ண்டவராகவும், அதே நேரத்தில் ஆன்மீக நாட்டமுடையவராகவும் இரு‌ந்தா‌ர். அ‌ப்போ‌து இரு‌ந்தே ந‌ண்ப‌ர்களுட‌ன் சே‌ர்‌ந்து பல கோ‌யி‌ல்க‌ள், சமா‌திகளை சு‌ற்‌றி வருவா‌ர்.
ஐ‌ந்தா‌ம் வகு‌ப்பு வரை கடையனோடை‌யி‌ல் படி‌த்த இவ‌ர், இ‌ப்படி கோ‌யி‌ல், சமாத‌ி எ‌ன்று ‌சு‌ற்‌றி ‌தி‌ரி‌ந்ததா‌ல் அவரது பெ‌ற்றோ‌ர், மூ‌த்த மக‌‌ள் இரு‌க்கு‌ம் குலசேகரப‌ட்டின‌த்‌தி‌ற்கு அனு‌ப்‌பி வை‌த்தன‌ர். அ‌ங்கு‌ள்ள பெ‌‌ரிய ப‌ள்‌ளி‌யி‌ல் சே‌ர்‌ந்தா‌ர். 
ஆனா‌ல் ‌அ‌ங்கு சு‌ப்பையா சுவா‌‌‌மி‌க்கு ந‌ண்ப‌ர்க‌ள் யாரு‌ம் ‌கிடை‌க்க‌வி‌ல்லை. வார ‌விடுமுறை நா‌ட்க‌ளி‌ல் அரு‌கி‌ல் உ‌ள்ள ‌திரு‌ச்செ‌ந்தூ‌ர் செ‌ன்று அ‌ங்கு‌ள்ள வ‌ள்‌ளி‌க்குகை, மூவ‌ர் சமா‌தி போ‌ன்ற இ‌ட‌ங்க‌ளி‌ல் த‌னிமை‌யி‌ல் அம‌‌ர்‌ந்து கொ‌ள்வா‌ர். அ‌ப்போது அ‌ங்கு வரு‌‌ம் சாது‌க்க‌ளுட‌ன் ‌சி‌த்த வை‌த்‌திய‌ம், யோக‌ம் போ‌ன்றவ‌ற்றை க‌ற்று‌‌க் கொ‌ண்டா‌ர். ‌பி‌ன்ன‌ர் மூ‌லிகை மரு‌ந்துக‌ள் தயா‌ரி‌த்து பலரு‌க்கு ‌சி‌கி‌ச்சை செ‌ய்தா‌ர். 7ஆ‌ம் வகு‌ப்பு வரை குலசேகர‌ப‌ட்டின‌த்த‌ி‌ல் படி‌த்த அவ‌ர், ம‌ீ‌ண்டு‌ம்கடையனோடை‌க்கு பெ‌ற்றோ‌ர்க‌ள் அழை‌த்து செ‌ன்றன‌ர். ‌பி‌ன்ன‌ர் ஆ‌ழ்வா‌ர்‌திருநக‌ரிலு‌ள்ள இ‌ந்து நடு‌நிலை‌ப்ப‌ள்‌ளி‌யி‌‌ல் 8ஆ‌ம் வகு‌ப்பும், ‌ திருவைகு‌ண்ட‌ம் காரனேஷ‌ன் உய‌ர் ‌நிலை‌ப்ப‌ள்‌ளி‌யி‌ல் 10ஆ‌ம் வகு‌ப்பு‌ம், பாளைய‌ங்கோ‌ட்டை தூய யோவா‌ன் க‌ல்லூ‌ரி‌யி‌ல் இ‌ண்ட‌ர்‌மீடிய‌ட் படி‌த்தா‌ர். இதையடு‌த்து மதுரை‌க்கு செ‌ன்று ‌பி.ஏ(hons) படி‌த்து முடி‌த்தா‌ர்.


க‌ல்லூ‌ரி பேரா‌சி‌ரிய‌ராக இரு‌ந்த க‌‌ல்யாண‌ம் ராமசா‌மி எ‌ன்பவருட‌ன் த‌ங்‌கி ‌சி‌த்துக‌ளிலு‌ம், மரு‌த்துவ‌த்‌திலு‌ம், ஆரா‌ய்‌ச்‌சி‌யிலு‌ம் ப‌யி‌ற்‌சி பெ‌ற்றா‌ர். மேலு‌ம் மூ‌லிகை, வை‌த்‌திய‌ம், உடற‌்கூறு, ‌சி‌த்து‌க‌ள், உற‌ங்காமை, உ‌ண்ணாமை போ‌ன்ற ப‌யி‌ற்‌சி பெ‌ற்றா‌ர். ஆனா‌ல் அத‌ி‌ல் நா‌ட்ட‌‌மி‌ல்லை.


த‌ன் ‌நில‌ங்களை ‌வி‌ற்று ஏழை அ‌ன்னதான‌ம் வழ‌ங்‌கினா‌‌ர். ‌பி‌ன்ன‌ர் கணப‌திமூலம‌ந்‌திர‌ம், ஸ்ரீராம ஜெய‌ம் போ‌ன்ற ம‌ந்‌திர‌ங்களை பலரு‌க்கு உபதே‌சி‌த்தா‌ர்.


மீ‌ண்டு‌ம் கு‌ற்றால‌ம், வ‌ள்‌ளி‌க் குகை, ‌திரு‌ச்செ‌ந்தூ‌ர் செ‌ன்றா‌ர். அதுவு‌ம் ச‌ரி‌ப்பட‌வி‌ல்லை. ‌‌பி‌ன்ன‌ர் ‌திரு‌‌ப்ப‌தி செ‌ன்றா‌ர். ‌பிறகு ‌விரு‌த்தாசல‌ம் செ‌ன்றா‌ர். அ‌ங்‌கிரு‌ந்து வடலூரை அடை‌ந்தா‌ர். அ‌ங்கு ‌சில மாத‌ங்க‌ள் த‌ங்‌கினா‌ர். ‌பி‌ன்ன‌ர் அ‌ங்‌கிரு‌ந்து ‌திரு‌க்கழு‌க்கு‌ன்ற‌ம் வ‌ந்தடை‌ந்தா‌ர். சு‌ப்பையா சுவா‌மிக‌ள் கடை‌சியாக‌ப்பே‌சியது திருக்கழு‌க் கு‌ன்ற மலை‌யிலம‌ர்‌ந்த ஓரா‌ண்டு வரைதா‌ன் (1951)
1951ஆ‌ம் ஆ‌ண்டு அ‌‌‌ங்கு வ‌ந்த சு‌ப்பையா சுவா‌மிக‌ள், அ‌ங்கு‌ள்ள மலை‌யி‌ன் ‌மீது அம‌ர்‌ந்து யோக ப‌யி‌ற்‌சி செ‌‌ய்வா‌ர். அ‌ப்போது அவரு‌க்கு பா‌ல், பழ‌ம் கொடு‌த்து உபச‌ரி‌த்தன‌ர். இர‌வி‌ல் ‌விஷ ஜ‌ந்து‌க்க‌ள், பு‌லி, ச‌ிறு‌த்தை எ‌ல்லா‌ம் நடமாடு‌ம் இ‌ட‌த்‌தி‌ல் எ‌ப்படி இரு‌க்‌கிற‌ீ‌ர்க‌ள் எ‌ன்று கே‌ட்டு‌ள்ளன‌ர். சுவா‌மி பு‌ன்முறுவலுட‌ன் இ‌ர‌ண்டொரு வா‌ர்‌த்ததை கூ‌றி அவ‌ர்களை அனு‌ப்‌பி வை‌த்தா‌ர். ‌பி‌ன்ன‌ர் மரண‌த்த‌ி‌ற்கு மூல‌ங்களை ந‌சி‌க்கு‌ம் உபாய‌த்துட‌ன் தவ‌ம் மே‌ற்கொ‌ண்டதா‌ல் பேசுவதை‌ந‌ிறு‌த்த‌ி‌‌க் கொ‌ண்டா‌ர். தன‌க்கு மு‌ன்பாக ‌திருவரு‌ட்பா எ‌ன்ற நூலை ம‌ட்டு‌ம் எ‌ப்போது‌ம் வை‌த்‌திரு‌ப்பா‌ர். ‌பி‌ன்ன‌ர் அ‌ங்கு‌ள்ள ம‌க்கள‌ா‌ல் கடையனோடை சுவா‌மி எ‌ன்று‌ம், ‌பி.ஏ. சுவா‌மி எ‌ன்று‌ம், ‌திரு‌க்கழு‌க்கு‌ன்ற‌ம் சுவா‌‌மி எ‌ன்று‌‌ம் அழை‌க்க‌‌ப்ப‌ட்டா‌ர்




சு‌ப்பையா சுவா‌மிக‌ள் கடையனோடை‌யி‌ல் அவதார‌ம் செ‌ய்தது முத‌ல் ‌திரு‌க்கழு‌க்கு‌ன்ற‌த்த‌ி‌ல் மு‌க்‌தியடை‌ந்தது வரை அவரு‌க்கு இ‌வ்வுலக உய‌ி‌ர்க‌ள்,சடமா‌யிரு‌ந்த கோ‌யி‌ல்க‌ள், சமா‌திக‌ள் முத‌லியவ‌ற்றுட‌ன் ‌நிறைய‌த் தொட‌ர்புக‌ள் உ‌ண்டு. எ‌வ்வுயிரு‌க்கு‌ம் ‌தீ‌ங்கு ‌நினை‌க்காதவனே வை‌ஷ்ணவ‌ன் எ‌ன்ப‌ர். அ‌வ்வ‌ழி வ‌ந்தவ‌ர் எ‌வ்வு‌யிரு‌க்கு‌ம் எவராலு‌ம் ‌தீ‌ங்கு வர‌க்கூடாது என எ‌ண்ணுபவ‌ன் ச‌ன்மா‌ர்‌க்‌கி என வை‌ஷ்ணவ‌த்‌‌தி‌ல் இரு‌ந்து ச‌ம்மா‌ர்‌க்க‌ம் வரை அவ‌ர் வ‌ந்த பாதையை பா‌ர்க‌்கு‌ம் போது அவ‌ரி‌ன் உ‌யி‌ர் எ‌த்தகைய உறவை ஒ‌வ்வொ‌ன்‌றிலு‌ம் ‌நிலை நா‌ட்டி‌யிரு‌க்‌கிறது எ‌ன‌ப் பா‌ர்‌‌த்தா‌ல் தெ‌ளிவு ஏ‌ற்படு‌ம்.




1961 ம் ஆண்டு அவர் தன்னுடன் தொடர்புடைய அன்பர்களிடம் தனது உடலில்
நாடி அடங்கும் நேரத்தை குறிப்பிட்டு இருந்தார்.அப்போது அவர் திருகழ்குகுன்ர மலை குகையில் இருந்தார். நாடி அடங்கியவுடன் அவரது உடல் கீழே கொண்டுவரப்பட்டது. அவர் விருப்பப்படி சமாதி கட்டப்பட்டு அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. மேலெ திறக்கும் வகையில் பலகைக் கல் வைத்து மூடப்பட்டது. 40 நாட்களுக்கு பூஜை செய்யப் பட்டது. பின்னர் அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் முன்னிலையில் சமாதியின் மூடி திறக்கப் பட்டது.
அவரது உடல் கெடாமல் அமர்ந்த நிலையில் அப்படியே இருக்கக் கண்டனர் மக்கள் அனைவருக்கும் ஆச்சரியம். THE BODY IS INTACT என்று அரசுக்கு அறிக்கை அனுப்பப் பட்டது.


சமாதியின் மேல் மூடி மூடப்பட்டது. மீண்டும் பத்து மாதங்களுக்கு பூசை செய்யப்பட்டது.அதன் பிறகு மீண்டும் சமாதியின் மூடி திறக்கப் பட்டது. உடல் கெடவில்லை. பின்னர் சமாதியின்மீது கட்டிடம் கட்டப் பட்டுள்ளது.
சமாதியில் தினசரி அன்னதானம் நடக்கிறது.தியான மண்டபம் கட்டப் பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டு மலர் வெளியிடப்பட்டுள்ளது.

Monday, November 30, 2015

யாம் கூடுகை விழா

மதுரையில் யாதவர் தொழில் வணிக கூடம் சார்பில் 'யாம் கூடுகை 2015' விழா நடந்தது. யாதவர் மகா சபை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.கோனார் விபூதி திட்டம், யாதவா சேம்பர்.காம் இணையதளத்தை ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி துவக்கி வைத்தார். யாதவர் தொழில் வணிகக்கூட கையேட்டை கல்யாணசுந்தரம் வெளியிட்டார். சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில இணை அமைப்பாளர் சீனிவாசன், திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமிகள் பேசினர். சரவணன் வரவேற்றார். கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Sunday, November 29, 2015

காளையார்கோவில் தாலுக்கா,காளக்கண்மாய் (ஊராட்சி) கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீ கோகுலக்கிருஷ்ணன் திருக்கோவில் திருப்பணிக்கு நன்கொடை

பேரன்புடையீர் வணக்கம்,
சிவகங்கை மாவட்டம்,காளையார்கோவில் தாலுக்கா,காளக்கண்மாய் (ஊராட்சி) கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீ கோகுலக்கிருஷ்ணன் திருக்கோவில் திருப்பணிக்கு தாங்களால் முயன்ற நிதி உதவியோ அல்லது பொருள் உதவியோ செய்து கோவில் கட்டிடப்பனிக்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவன்:
ஸ்ரீ கோகுலக்கிருஷ்ணன் திருக்கோவில் திருப்பனி குழுவினர்கள் 
காளக்கண்மாய்,சிவகங்கை,மாவட்டம்.
[ பதிவு எண் :835/2015 ]
தொடர்புக்கு:

செல் : 7200602104,9786531372 இ-மெயில் :krishnantemple974@gmail.com




Saturday, November 28, 2015

முல்லைசார்ந்த கற்பினள்

காலவோட்டத்தில் மலைகளில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டபோது அவர்கள் மலையைவிட்டு இறங்கிவந்தனர். அதாவது, மலையடிவாரத்தில் மண்டியிருந்த காட்டுப்பகுதிகளுக்குள் நுழைந்தனர். ஆடுமாடுகளை மேய்த்தலும் சிறு அளவில் உழுதலும் இவர்களுடைய தொழிலாக இருந்தது. இந்நிலங்கள் புன்செய்நிலங்கள்தான். இவர்கள் காடும் காடுசார்ந்த பகுதிகளிலும் குடியிருந்தனர். இந் நிலப்பகுதியை முல்லை என்றனர்.

காட்டுப்பகுதிகளில் வேட்டையாடி, கால்நடைகளை வளர்த்த ஆயர் (ஆ-பசு, நிரை – கூட்டம். ஆநிரையை மேய்த்ததால் இவர்களை ஆயர்கள் என்றனர்.), கோவலர், இடையர், அண்டர், பூழியர், குடவர் ஆகியோர் இனக்குழுமுறையில் இப்பகுதிகளில் வாழ்ந்துவந்தனர். இதற்குச் சான்றாக அகநானூற்றின் 101, 311, 393 ஆகிய பாடல்களைக் காட்டலாம். இவர்களிடம் இனக்குழுச் சமுதாயமான குறிஞ்சி நிலத்தவரின் பண்பாட்டு எச்சங்கள் மிகுந்திருந்தன. இவர்கள் கூட்டுழைப்பினர்கள். கூட்டாகவே உண்டனர். இவர்களின் உணவுப்பொருட்களாக வரகு, கொள், தினை, அவரைப் புழுக்கு போன்றன இருந்தன. சான்று பெரும்பாணாற்றுப்படை – 190 முதல் 196 வரையிலான அடிகள்.

இவர்களின் வாழ்விடப் பகுதியைச் “சீறூர்“ என்று இலக்கியங்கள் சுட்டியுள்ளன. சான்று புறநானூறு – 285 முதல் 335 வரையிலான பாடல்கள். இந்தச் சீறூரினை ஆண்ட மன்னர்கள், இனக்குழுத் தலைமையையும் அரசமைப்பின் தலைமையையும் கொண்ட இருகலப்புநிலைத் தலைமையுடைய ஒருவகையான ஆட்சியினை நடத்தினர். 

இவர்களின் பெருஞ்செல்வம் மாடுகள்தான். அவற்றைக் காக்கவும் அவற்றிலிருந்து பல்வேறு பொருட்களைப் பெற்றுத் தங்களின் உணவுத்தேவைகளைப் போக்கிக்கொள்ளவும் பெரும்பாடுபட்டனர். மாடுகளைத் தம் உடைமையாகக் கருதியதால் இவர்களின் சமுதாயத்தை “உடைமைச்சமுதாயம்“ என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்களின் மாடுகளைப் பகைவர்கள் கைப்பற்றவரும்போது, அவர்களைத் தடுத்து அவர்களிடமிருந்து அவற்றைக் காக்கும்பொருட்டு உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நடுகல் நட்டு வழிபாடு செய்துள்ளனர். இச்செயலினை அகநானூறு – 67, 131 ஆகிய இரண்டு பாடல்கள் விளக்கியுள்ளன.

ஓர் ஆடவருக்கு ஒரு பெண் என்ற கற்புடை வாழ்க்கை இந்நிலப்பகுதியில் வேரூன்றியது. குறிப்பாக ஒருத்தி ஒருவனுக்காகவே வாழ்ந்தாள் என்று உறுதியாகச் சொல்லலாம். அதனால்தான் இலக்கியங்கள் “முல்லைசார்ந்த கற்பினள்“ என்று குறிப்பிட்டுள்ளன.

“ஏறுதழுவுதல்“ என்ற மாட்டினை அடக்கும் வீரத்தை ஓர் ஆடவனின் திருமணத்தகுதியாகக் கொண்டனர். இது முல்லைத்திணைக்குரிய வீர விளையாட்டுகளுள் ஒன்றாகப் பிறந்து வளர்ந்தது. இன்றுவரை கொண்டாடப்படும் விழாவாகத் தமிழரிடையே உள்ளது.

குறிஞ்சி நிலத்தில் தலைமையுடையோரின் பெண்கள் சமுதாய நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. ஆனால், முல்லை நிலத்தில் தலைமையுடையோரின் மனைவி சமுதாய நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இது நாகரிக வளர்ச்சியில் ஒரு பாய்ச்சல். குறிஞ்சி நிலத்தலைவர்களின் பெயர்கள் இலக்கியத்தில் பதிவாகியுள்ளன. ஆனால், முல்லை நிலத்தலைவர்களின் பெயர்கள் குறிப்பாகவே இலக்கியத்தில் புலப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களும் குறிஞ்சி நிலத் தலைவர்கள்போல வள்ளல் தன்மையுடன் இருந்தாலும் இவர்களின் நிலப்பரப்பில் தொடர்ச்சியான வளம் இல்லை.

Friday, November 27, 2015

முல்லைக்கலி – 104வது பாடல்


இப்பாடலில் ஒரு வரலாற்றுச் செய்தி வருகிறது. தமிழகத்தில் பல கடல்கோள்கள் நிகழ்ந்தன. அதனால்தான் ஒல்காப் பெரும்புகழ் கொண்ட தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய பல செறிவு நிரம்பிய இலக்கியங்கள் அழிந்து விட்டன. தமிழின் தொன்மை ஏறத்தாழ கி.மு. ஐந்தாயிரம் எனக் குறிக்கிறார் முதுபெரும் அறிஞர் முனைவர். ச.வே. சுப்பிரமணியம் அவர்கள். கடல்கோள் நிகழ்ந்ததற்குச் சான்றாக 104 ஆவது முல்லைக்கலிப் பாடல் விளங்குகிறது. அக்கருத்து இதுதான். “தென் மதுரையும் கபாடபுரமும் கடலால் கொள்ளப்பட்ட காரணத்தால் பாண்டிய அரசன் சோழ நாட்டுப் பகுதியையும் பாண்டிய நாட்டுடன் 
tamil suvadikal
இணைத்துக் கொள்கிறான். இப்பாடலைப் பாடியவன் இவ்வரலாற்றுச் செய்தியைப் பதிவு செய்தவன் சோழன் நல்லுருத்திரன். கடலின் மிகுந்த அலைகள் தன் நாட்டினுள் புகுந்து கைக்கொண்டு (பாண்டி நாட்டினுள்) விடுதலால், தன் நாட்டின் பரப்பை பரப்பளவைக் கூட்டவேண்டி மனத்தில் இளைப்பின்றி பகைவரைத் (சேரனையும், சோழனையும்) தன் வலிமையால் வென்று மேலே சென்று சோழனின் புலி இலச்சினையையும், சேரனின் வில் இலச்சினையையும் அழித்து, விளங்கும் மீன் இலச்சினையை அங்கே பொறித்த புகழையுடைய பாண்டியனின் பழைய புகழை நிலைபெறச் செய்த குடியுடன் தோன்றிய முல்லை நிலத்தில் வாழும் ஆயர் (இடையர் குலத்தினர்) என்ற கருத்தில் பாண்டியனின் சிறப்புக் கூறப் படுகிறது.


அப்பாடல் வரிகள்

மலிதிரை ஊர்ந்து தன்மண் கடல் வௌவலின்
serasozhapandiyar
மெலிவின்றி, மெலிவின்றி மேல் சென்று மேவார்நாடு இடம்பட
புலியொடு வில்நீக்கி, புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய, வாடாச்சீர்த் தென்னவன்
தொல்இசை நட்ட குடியொடு தோன்றிய
நல்லினத்து ஆயர் ….

எனத் தொடரும் இப்பாடல் 80 வரிகளைக் கொண்டது.


“மலிதிரை ஊர்ந்து தன்மண் கடல்வௌவலின்
………………..
ஒருமொழி கொள்க, இவ்வுலகுடன் எனவே” எனும் வரி முடிய உள்ள இப்பாடல், பல்வேறு செய்திகளை உள்ளடக்கியது.

விளக்கம்


தலைவி ஒருவனை விரும்ப அவன் ஏறு தழுவினான். அக்காட்சியைத் தோழி தலைவிக்குக் காட்டினாள். பின் தலைவியின் சுற்றத்தார் அவனுக்கே தன் மகளை மணம் செய்துதர இசைந்தனர். பொதுவாக முல்லைக்கலிப் பாடல், காளைகளைப் பிடித்து அடக்கும் இளைஞர்களுக்கே தம் மகளை மணம் செய்து கொடுத்து இல்லறம் நடத்த இசைவர் எனும் செய்தியை விளக்குவதாகவே உள்ளது. காடும் காடுசார்ந்த இடம் முல்லை. அதில் ஆயர்குல மக்கள் வாழ்வர். அவர்கள் காளையை வென்ற இளைஞர்களுக்குத் தம் மகளை மணம் செய்து கொடுப்பது முல்லை நில ஒழுக்கம். இல்லறத்தில் நிலைபெற்று இருத்தலும், இருத்தல் நிமித்தமும் உரிப்பொருள்.
thamizharivom eruthazuval

இப்பாடலில்,

பால்நிற வண்ணன் கண்ணனின் அண்ணன் பலதேவன். அவன் பால் போல் வெண்ணிற மேனியன். நேமித் திருமார்பன் எனப்படும் சக்கரத்தை உடைய திருமால் பிறைநுதல் முக்கண்ணன் எனும் நெற்றிக்கண் உடைய முக்கட் பெருமானாம் சிவ பெருமான் ஏறும் வெள்ளையேறாகிய (ஏறு – காளை) காளையை அடக்கும் முல்லை நில ஆயர்குல வீரன். செட்டிநாட்டில் மஞ்சுவிரட்டுத் தொழு என்பர். இச்சொல், “தொழுவினுள் கொண்ட ஏறு எலாம்” எனத் தொழுவினுள் அடைத்து வைக்கப்பட்டுள்ள காளைகளைக் குறிக்கிறது. மேகத்தை விரட்ட நடத்தப்படும் மாடுகளை ஓடிப்பிடித்து ஏறி அடக்கும் விளையாட்டு மஞ்சுவிரட்டு. அதனை ஜல்லிக்கட்டு என்பர். இவ்விளையாட்டுக்குத் தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது. முல்லைக்கலிப் பாடல் முழுவதையும் படிக்கச் சுவையாக இருக்கும். படிப்பீர்… சுவைப்பீர்.

Wednesday, November 25, 2015

Tamil Nadu Yadava Maha Sabha Pleads the State Govt. for MBC Quota for Yadava Community

  • To hand over Rs. 5 lakh flood relief fund to the state government
  •  Extends gratitude to the central government for consent to release the special stamp of freedom fighter Azhagu Muthu kone


Chennai, 25th Nov. 2015

Tamil Nadu Yadava Maha Sabha has made plea to the Hounorable Chief Minister of Tamil Nadu for MBC reservation for Yadava community to the benefit of nearly seventy lakhs individuals of the caste.

“Despite the recommendations made by the commission under the headship of Shri. Satta Nathan and then by the commission of Shri. Ambashankar IAS (Retd) in 1983, the community has not been considered for reservations hindering the growth of our group that is third major community of the state,” said Dr. M. Gopalakrishnan, President of Tamil Nadu Yadava Maha Sabha and Former Chairman of Indian Bank, during a Press Meet organised today (25th November 2015) in the city, announcing the resolutions of Tamil Nadu Yadava Maha Sabha. The organisation is to extend its bit of help for those affected by the recent incessant rains by handing over Rs. 5 lakh flood relief fund to the state government.

“Also we appeal the state government for setting up Cattle Welfare Board and appoint a person from Yadava community as its head, keeping in view that the community’s conventional profession is cattle rearing,” added Dr. M. Gopalakrishnan.

“We express our sincere gratitude to the central government for its consent to release the special stamp of freedom fighter Azhagu Muthukon that was made possible by the gestures of Honourable Prime Minister Shri. Narendra Modi; Honourable Ministers Shri. Ravishankar Prasad and Shri. Pon. Radha Krishnan; Shri. Swadeshi Srinivasan and with the efforts of our committee members Mr. Peri. Kabilan and Mr. P. Saravanan,” said Mr. R.P. Dharmalingam, General Secretary of Tamil Nadu Yadava Maha Sabha.

Request was made that every ward of Chennai Corporation has cattle sheds, as in the past, to the advantage of the milk producers of the city. Other resolutions include appointment of eligible advocates of the community as High Court judges, liquor ban, supporting the party that offers opportunities for the Yadavas in the assembly elections, among others.

“It has been decided that we conduct the northern regional and southern regional conferences during Dec 2015 and Feb 2016, respectively at Thiruvannamalai and Madurai towards showcasing the strength of the community and demanding our share in the state politics ahead of the oncoming elections during mid of 2016,” he added.

The resolutions were passed during the recently held general meeting of Yadava community that witnessed the presence of Mr. K. Ethiraj, Treasurer; Mr. P. Varadarajan (Secretary – Youth Wing); Prof. Peri Kabilan, Member (High Level Committee), among others of Tamil Nadu Yadava Maha Sabha.

Tamil Nadu Yadava Maha Sabha is nearly a two decade old (established in the year 1996) association formed for the upliftment and welfare of the community spread across the state, remarkably spread in the regions of Chennai, Thiruvannamalai, Thiruvallur, Kancheepuram, Madurai, Tirunelveli, Ramanathapuram and Sivaganga and whose votes can decide the victory in election.

The organisation, strong with of over 10,000 members (planning to increase by 30,000 members within Dec 2015), conducts Community Awakening Meetings and other activities that focus on helping the community to gain political significance and reservation quota, etc.

Monday, November 23, 2015

கலித்தொகையில் ஆநீரை மேய்த்தல் (பண்டைய தமிழ் நூல்களில் இடையர்கள்)

ஆநீரை மேய்த்தல்
முல்லைநில மக்கள் ஆடு, மாடுகளையும் அவற்றைக் காத்து வைத்திருத்தலையும் முக்கியச் செயலாகக் கொண்டு வாழ்ந்தனர் என்பதனை முல்லைக்கலிப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

‘‘தத்தம் இனநிரை

பொழுதோடு தோன்றிய கார்நனை வியனிட புலத்தார்” (கலி-106)

‘‘மேயும் நிரைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோர் (கலி-108)

‘‘பாங்கரும் பாட்டாய்கால் கன்றோடு செவ்வோம்யாம்” (கலி-116)

என்பதன் மூலம் கோவலர்கள் மனைக்கு அருகில் உள்ள புல்வெளிகளுக்குக் கன்றோடு பசுவினையும் சேர்த்து மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றனர். மேலும் அதனைக் காப்பதற்காக கோவலர்கள் கோலூன்றி நின்றனர் என்பதையும் கலித்தொகை தெளிவுறுத்துகின்றது.

மோர் விற்றல்

முல்லை நில மகளிர் பசுக்களில் இருந்து பெற்ற பாலை மோராக மாற்றி விற்கும் தொழிலில் ஈடுபட்டனர். ஆயர்குலப் பெண்கள் அருகில் உள்ள சிற்றூரில் மோர் விற்றுத் திரும்பியதை,

‘‘அகலாங்கண் அளைமாறி அலமந்து பெயருங்கால்

அளைமாறிப் பெயர் தருவாய்” (கலி-108)

என்ற வரிகள் காட்சிப்படுத்துகின்றது.

வெண்ணெய் விற்றல்

முல்லை நிலத்துப் பெண்கள் மோரில் இருந்து வெண்ணெய் எடுத்து அதனையும் விற்றனர் எனபதை,

‘‘வெண்ணெய்க்கும் அன்னள்எனக் கொண்டாய் ஒண்ணுதல்”

(கலி-110)

‘‘வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே” (கலி-115)

பனங்குருத்தால் பெட்டி முடைதல்

பனை ஓலை, தென்னை ஓலைகளைக் கொண்டு அன்றாடத் தேவைகளுக்குரிய பொருட்களைச் செய்தனர். ஓலைகளைப் பயன்படுத்தி பலவிதமான கூடைகள் செய்தனர். அத்தகைய கூடைகள் ‘புட்பில்’ எனப்பட்டன. இதனை,

‘‘போழின் புனைந்த வலிப்புட்டில்” (கலி-117)

‘‘வரிகூழ வட்டி தழீஇ” (கலி-109)

என்ற முல்லைக்கலி வரிகள் எடுத்துரைக்கின்றன. முல்லை நில மக்கள் பனைஓலைகளிலும் தென்னை ஓலைகளிலும் செய்யப்பட்ட பெட்டிகளில் நெல்லினைக் கொண்டு சென்றதனையும் கலித்தொகை வரிகளால் அறிய முடிகின்றது.

Sunday, November 22, 2015

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையாள் காளியம்மன் திருக்கோவில் உருவான வரலாறு

ஆங்கிலேயர்களுக்கும் சிவகங்கைசீமையின் ராணி வேலுநாச்சியாருக்கும் இடையே சண்டை நடக்கும் போது ஒரு கட்டத்தில் வேலுநாச்சியார் கொல்லங்குடி காட்டு பகுதிக்குள் தஞ்சம் அடைகிறாள்.

வேலுநாச்சியார் குதிரையில் வருகிறாள் அப்போது வெள்ளைக்காரன் தன்னை நெருங்கியவுடன் குதிரையிலுரு
ந்து இறங்கி முட்புதர் ஒன்றில் மறைந்து கொள்கிறார்

அந்த இடத்தில் மாடுமேய்க்கும் யாதவகுல சமுதாயத்தை சேர்ந்த உடையாள் என்கிற இளம் பெண்ணை பிடித்துவைத்து இந்த குதிரையில் வந்த பெண் எங்கே என்று கேட்கிறான் ஒரு வெள்ளைக்காரன்.

அதற்கு அந்த இளம்பெண் சொல்லமுடியாது என்று பதில் சொல்கிறாள்அப்போது வெள்ளையர்கள் நீசொல்லவில்லையென்றால் உன்னை கொன்றுவிடுவோம் என்று சொல்கிறான்.

இதை புதரில் ஒளிந்து இருக்கும் வேலுநாச்சியார் பார்த்துக்கொண்டு இருக்கிறார் இப்படி வாதம் நடந்து கொண்டு இருக்கிறது. இறுதியாக மறைந்து இருக்கும் இடத்தை கூற மறுத்தவுடன் வெள்ளைக்காரன் உடையாளை வெட்டிசாய்க்கிறான் திருமணமாகாத 17வயது இளம் பெண் உடையாள் துடிதுடித்து சாகிறாள்

இதை மனதில்கொண்டு தமது உயிரை கொடுத்து என்உயிரை காப்பாற்றிய உடையாளே என்தெய்வம் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல்


அந்த இடத்தில் அவளுக்ககு மிகப்பெரிய கோயிலை கட்டி அந்த கோயிலுக்காக பதினெட்டு ஊரையும் நிலத்தையும் எழுதி வைத்து உயிருள்ளவரை தெய்வமாக உடையாளை வணங்கினார் வேலுநாச்சியார்.

இன்று கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையாள் காளியம்மன் திருக்கோவிலாக அது இன்று காட்சி தருகிறது. சிவகங்கை மாவட்டத்தின் குறிப்பிடக்கூடிய முக்கியமான வழிபாட்டு தலங்களுள் ஒன்றாக இன்று அது புகழ்பெற்று திகழ்கிறது.


Regards,
ALEX PANDIAN.P

முனைவர் மு.தமிழ்க்குடிமகன்


முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்களின் இயற்பெயர் மு.சாத்தையா ஆகும். 26.06.1939 இல் இன்றைய சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாத்தனூரில் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் முத்தையா, குப்பம்மாள் ஆவர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான கல்வியைச் சாத்தனூர் அரசு தொடக்கப்பள்ளியிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கல்வியைச் செங்குடி உரோமன் கத்தோலிக்க(R.C) நடுநிலைப் பள்ளியிலும்,ஒன்பது முதல் பதினொன்றாம் வகுப்பு வரையிலான கல்வியைத் தேவகோட்டை, தேபிரித்தோ உயர்நிலைப்பள்ளியிலும் பயின்றவர். இளம் அறிவியல்(கணக்கு) பட்டப்படிப்பைத் திருச்சிராப்பள்ளித் தூய வளனார் கல்லூரியில் முடித்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் படித்துத் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். 

1963-1964 ஆம் ஆண்டில் திருப்பாதிரிப்புலியூர் தூய வளனார் உயர்நிலைப்பள்ளிக் கணக்கு ஆசிரியராகவும், தென்மொழி துணையாசிரியராகவும் பணியாற்றியவர். அடுத்த இரண்டு ஆண்டுகள் பறம்புக்குடி ஆ.வை. உயர்நிலைப்பள்ளியில் கணக்கு ஆசிரியராகவும் பின் மூன்றாண்டுகள் நேரடி அரசியல் வாழ்க்கையிலும் இருந்தவர். 

1969 முதல் மதுரை யாதவர் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றியவர். 1979 முதல் 1988 வரை கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியவர்.1989 முதல் நேரடியாக அரசியலில் இயங்கியவர். 1989 முதல் 1991 வரை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பணியாற்றியும், 1996 முதல் தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் பணிபுரிந்தவர். 


எழுதிய நூல்கள்: 1. அந்தமானைப் பாருங்கள் 2. பாவேந்தர் கனவு 3. வாழ்ந்து காட்டுங்கள் 4. காலம் எனும் காட்டாறு 5. பாவேந்தரின் மனிதநேயம் 6. ஐரோப்பியப் பயணம் 7. மனம் கவர்ந்த மலேசியா 8. கலைஞரும் பாவேந்தரும் 9. தமிழில் வழிபாடு தடையென்ன நமக்கு? 10. சீன நாடும் சின்ன நாடும் 11. மலேசிய முழக்கம் 12. தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் (இருபாகங்கள்) 


இதழ்ப்பணி:
துணை ஆசிரியர்- தென்மொழி(1963-1966) 
ஆசிரியர்- அறிவு(1970-1971) 
ஆசிரியர்- கைகாட்டி (1971-1974)

சமுதாயப்பணிகள்: 

பரிசுச்சீட்டு, திரைப்படக்கீழ்மை, வரதட்சணை முதலியவற்றால் விளையும் சமுதாயத் தீங்குகளைக் களையும் நோக்கில் மதுரை முத்துவுடன் இணைந்து சமுதாயச் சீர்திருத்தப் பேரவையின் பொதுச்செயலாளராக இருந்தவர். மதுரை நுகர்வோர் உரிமைப் பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் இருந்து பணியாற்றியவர்

அரசியல் பணி: 
1989 இல் இளையான்குடித் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிபெற்றவர்.

1989 பிப்ரவரித் திங்கள் எட்டாம் நாள் முதல் 1991 ஆம் ஆண்டுவரை தமிழகச் சட்டமன்றப் பேரவைத் தலைவராகவும், 

பின்னர் 1996 முதல் தமிழ் வளர்ச்சிப் பண்ப்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்து பணிபுரிந்தவர். 


தமிழ்க்குடிமகன் கடந்த 1989,1996ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற தமிழக சட்டபேரவை தேர்தலில் திமுக சார்பில் இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு சட்டபேரவை உறுப்பினர் ஆனார்.

1989 முதல் 1991 வரை தமிழக சட்டபேரவை தலைவராக பணியாற்றினார்.


1996 முதல் 2001 வரை தமிழ் வளர்ச்சி மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

2001 மார்ச்சில் நடந்தசட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார்.

சோழர் காலத்துக்கோயிலும் சமூகமும்'' நூல் ஆய்வு(கோயிலும் இடையர் சமூகமும்)

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை முதுநிலை விரிவுரையாளராகிய முனைவர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் கோயிற்கலை, பண்பாடு, கல்வெட்டு, நாட்டாரியல் ஆகிய துறைகளில் கொண்டிருந்த ஈடுபாட்டின் பிரதிபலிப்பாக ஐம்பதுக்கு மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் பல ஆய்வுத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இந்நூலாசிரியரின் ஆய்வு முறையில் தமிழாய்வு, வரலாற்றாய்வு என்பதனை விடவும் சமூகவியல், நாட்டாரியல் ஆய்வுக்கூறுகள் ஆங்காங்கே மேலெழுந்துள்ளன. இத்தகைய துறைகளின் பால் புலமைத்துவம் பெற்றவராகிய முனைவர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் ""சோழர் காலத்துக்கோயிலும் சமூகமும்'' என்னும் நூலைத் தந்துள்ளார்.


கோயில்கள் பற்றிய ஆய்வுகள் நிறைய இதுவரை செய்யப்பட்டுள்ளன ஆயினும் பெரும்பாலும் அவ்வாய்வுகள் கோயில்களை ஒரு சமய நிறுவனம் அல்லது கட்டிடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் நிலைக்களம் என்றே நோக்கியுள்ளன. அதற்கு மாறாக வ. மகேஸ்வரன் கோயிலை ஒரு சமூக நிறுவனம் என்ற நோக்கில் ஆராய்ந்து பல புதிய உண்மைகளை இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கோயிலுக்கும் அரசுக்கும் இருந்த தொடர்பு கோயில் நடவடிக்கைகளில் இடையர் மற்றும் பெண்களின் பங்களிப்பு மற்றும் கோயில் நிருவாகத்தில் உள்ளூர் சமூகத்தின் பங்கு ஆகியவற்றை விரிவாக விளக்கியுள்ளார் என்று நூலுக்கு அணிந்துரை நல்கிய தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஓய்வு நிலைப்பேராசிரியர் ஏ.சுப்பராயலு தெரிவித்துள்ளார்.


தமிழ் சமூகத்தில் கோயில் உருவாக்கம், சோழர் காலத்தில் கோயில்கள், கோயிலும் பெண்களும், கோயிலும் இடையர் சமூகமும், கோயிலும் நிருவாக மாற்றங்களும் ஆகிய ஐந்து இயல்களில் தமது ஆய்வினை மேற்கொண்டு இந்நூலை ஆசிரியர் யாத்துள்ளார். காவிரியின் வளமை கொழிக்கும் திருவாரூர், திருவையாறு,திருவிசலூர், வேதாரண்யம், திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளிலிருந்து கல்வெட்டுத் தரவுகளை ஆராய்ந்து சில முடிகளை இந்நூலில் முன்வைத்துள்ளார். தமிழகத்தில் கோயில் கட்டட மரபின் வரலாற்றை இலக்கியத் தரவுகளோடு தொல்லியல் தரும் செய்திகளையும் பயன்படுத்தி நிரல்படச் சொல்லியுள்ளார்.மக்கள் பரவலாகப் போற்றிவந்த கிராமத் தெய்வங்கள், குறிப்பாக பிடாரிபோன்ற பெண் தெய்வங்கள் நாளடைவில் பல்லவ, சோழ அரச குலங்களால் போற்றப்பட்ட பெருந்தெய்வக் கோயில்களால் பின்தள்ளப்பட்டன என்பதையும் இந்நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய நோக்கில் பெருந்தெய்வக்கோயில்களின் அதிகாரமும் செல்வாக்கும் புலப்படுகிறது.தமிழர் சமூகத்தில் கோயில் என்ற அமைப்பின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் என்ற கருத்தியலை முறைப்படுத்துவதாகவே முதலாவது இயல் அமைகின்றது.


வழிபாடுகள் எவ்வெவ் வகையில் உருவாகி வளர்ந்தன என்பதும், கோயில் என்ற அமைப்பு அவ்வழிபாட்டின் தொடர் விளைவாக எவ்வாறு ஏற்பட்டது என்பதும் தொல்லியல் இலக்கியச் சான்றுகளால் விளக்கப்படுகின்றது. இவ்வியலில் பக்தி இயக்கச் செயற்பாடுளால் கோயில் முறைமை வளர்ச்சியடைந்ததும், கோயில் கட்டுமானங்கள் தொடர்பான கருத்து நிலைகள் பெறும் செல்வாக்கும் விவரிக்கப்படுகின்றது.


வரலாற்றுக்காலம் முதல் பல்லவ, பாண்டிய இறுதிக்காலம் வரை வளர்ந்து வந்த கோயில் முறைமை எவ்வாறான பின்புலங்களினூடாக சோழர் காலத்தில் வளர்ச்சி பெற்றதென்பது இரண்டாம் இயலில் ஆராயப்படுகின்றது. தொன்று தொட்டு நிலவி வந்த மரபும், பக்தி இயக்கமும் வளர்த்தெடுத்த பின்புலத்தினூடாக சோழர் காலக்கோயில் கட்டுமானப்பனிகள் அரசகுலத்தவராலும், ஏனையோராலும் எவ்வாறு வளர்த்தெடுக்கப்பட்டன என்பதும் அதன் ஆரம்ப இடைக்கால வேகமும் பிற்காலத்தில் ஏற்பட்ட தேக்கநிலையும் அதற்கான காரணங்களும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. மேலும் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட அரசுக் கோயில்கள் என்பவற்றின் கருத்தியல் அவற்றின் இயங்குதளம், செயற்பாடுகள் என்பனவற்றிலும் எடுத்துக்கூறப்பட்டுள்ளன. இவ்வியலின் இன்னோர் பகுதியாக அக்காலத்தில் நிலவிய கிராமியக் கடவுள் கோயில்கள் பற்றி ஆங்காங்கே தெரியவரும் செய்திகள் தொகுத்து ஆராயப்படுகின்றன.


கோயில் என்ற நிறுவனத்தில் பெண்கள் எல்லாவற்றிலும் கொண்டிருந்த தொடர்புகள் பற்றியதான செய்திகள் மூன்றாம் இயலில் கூறப்பட்டுள்ளது. அரசியல், குறுநிலமன்னர்களது மனைவியர், பிராமணப்பெண்டிர், வேளத்துப்பெண்டிர், வெள்ளாட்டிகள், தேவரடியார் என அவர்களை இனப்பிரித்து இவ்வியலில் ஆராயப்படுகின்றது. இத்தகைய பெண்களது கோயிலுடனான தொடர்பை அரசியல்பலம், அரசியல் உறவு, பொருளாதார பலம், சமூகமேன்மை முதலானவை எவ்வாறு கட்டமைந்தன என்பது பற்றி நோக்குவதாகவும் இவ்வியல் அமைந்துள்ளது. தேவரடியார் சமூகத்தின் தோற்றம், வளர்ச்சி என்பன வெட்டுமுகப் பார்வையினடியாக நோக்கப்பட்டு இவர்கள் கலையின் பிரதிநிதிகளாகக் கோயிலினுள் சேர்க்கப்பட்டார்களா, அல்லது அரச நிர்வாகம் அதனைத் தீர்மானித்ததா என்பது பற்றிய நோக்கும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் மொத்தக் கோயிற் கொடைகளில் பெண் பரவலும் அதற்கான செயல்முறைக்காரணிகளும் இவ்வியலின் கண் நூலாசிரியரின் தெளிவான பார்வை விழுந்துள்ளமை புலனாகின்றது.


கோயில்களில் அன்றாடம் விளக்கெரிப்பதற்குத் தேவையான நெய்யை வழங்குவதற்கான பண்டமாற்றுச் சேவை ஒன்றை அவர்கள் நிகழ்த்தி வந்துள்ளனர். அவ்வாறான சேவை பற்றியும், அதை நிகழ்த்திய இடையர் சமூகம் பற்றியுமே இவ்வியலில் ஆராயப்படுகின்றது. கோயில்களில் விளக்கேற்றுதல் அத்தியாவசியமான மரபாக வளர்ச்சி பெற்றது. கோயில் கட்டுமானங்கள் நிலையானவையாக உருவானபோது வழிபாட்டின் சின்னமாகவும்,கோயிலின் அக இருளை நீக்கும் கருவியாகவும் இது விளங்கியது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் இடையர்கள் பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் காணப்பட்டபோதும் அவர்களின் வாழிடங்கள் பற்றிய செய்திகள் அரிதாகவே கிடைத்துள்ளன. எனினும் இடையர் பற்றிய தஞ்சாவூர்க் கல்வெட்டின் மூலம் சோழமண்டலத்தின் பல பகுதிகளிலும் அவர்கள் பரந்து வாழ்ந்த செய்தியினை அறிய முடிகின்றது.


நாகரிக வளர்ச்சி காரணமாகவும் அரசுகளின் தோற்றங்களாலும் அவ்வரசுகளின் சமயஞ்சார்ந்த செயற்பாடுகளினாலும் ஒருங்கிணைந்த அமைப்பாகக் கோயில் என மாறியபோது அது சமூக நிறுவனமாகவும் உருவானது. இவ்வாறான உருமாற்றங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய நிறுவனங்களாக இடைக்காலத் தமிழகத்துக் கோயில்கள் விளங்கின. கோயில் நிருவாகிகளைத் தனத்தார் என்று குறிப்பிடும் வழக்கம் சோழர் காலத்தின் இறுதிப்பகுதியிலேதான் ஏற்பட்டுள்ளது. கோயில் நிவந்தங்களுக்கு என்று அமர்த்தப்பட்டவர்கள் பல பணி நிவந்தரக்காரர் ஆவர். தேவர் இடைச்சான்றார் ஆடுகளைப் பெற்று அவற்றிற்காக நெய்யால் விளக்கெரிக்கும் கடமையைச் செய்தனர். பிரõமணக்குழுக்களுக்குப் புறம்மாக வணிகர் முதலான பிறசாதியினரும் கோயிற் நிருவாகப் பணிக்குழுக்களாக இயங்கியதற்கு இவை சான்றுகளாகும்.காலநிதி, வல்லிபுரம் மகேஸ்வரனால் எழுதப்பட்ட இந்த நூல் சமூகம் பற்றிச் செல்லும் நிலைப்பாட்டைப் பார்க்கும்போது சாதிய வித்தியாசங்கள், ஏற்றத்தாழ்வுகள், புறக்கணிப்புக்கள் என்பன இருந்துள்ளமை வெளிப்படை. கோயில் நிர்வாகிகளாகிய தனத்தார் மற்றும் கோயில் பூசகர்களாகிய பிராமணர்கள் மற்றைய சாதிப்பிரிவுகளுக்குள் உள்பட்ட மக்களை எவ்வாறு நடத்தியிருப்பார்கள் என்பதை இந்நூல் நேரடியாகச் சுட்டிக்காட்டாவிட்டாலும் மறைமுகமாக அவர்களின் தொழில்சார்ந்த முறையில் பின்தள்ளப்பட்டிருப்பதை இயம்பியுள்ளது.சோழர் காலத்தில் மட்டுமல்ல இந்தியõவைப் பொறுத்தளவில் இது நீண்ட தொடராகவே இன்றும் இருந்து வருகின்றது.


இந்நூலை பல ஆராய்ச்சி முயற்சிகள் மூலம் பயனுள்ள கருத்தக்கருவூலமாகக்கொண்டு வந்த கலாநிதி வ. மகேஸ்வரனுக்கு சென்னை சேக்கிழார் ஆராய்ச்சிமையம் அண்மையில் சிறந்த நூல் பரிசினை வழங்கிச் சிறப்புச் செய்துள்ளது. இது அவரது ஆராய்ச்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என்பது புலனாகின்றது. ஈழத்து ஆராய்ச்சியாளர்கள் வரிசையிலே இன்றைய காலகட்டத்தில், தமிழ்துறை விரிவுரையாளர் கலாநிதி வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் முன்நிற்கிறார்கள்.
க. உயிரவன்
அறிவே ஆண்டவன்
thamilaali@gmail.com

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar