"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Tuesday, March 31, 2015

திருமந்திரம் தந்த திருமூலவரின் கதை!

திருவாவடுதுறை! இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவனின் பெயர் பசுபதியார். சிவ வாகனமான ச்நந்தியின் அருளைப் பெற்றவர்களில் சுந்தரநாதர் இவருக்கு அகத்தியரைக் கண்டு அவருடன் சில நாட்கள் தங்க விருப்பம் ஏற்பட அகத்தியரைக் காண புறப்பட்டார். அவர் செல்லும் வழியில் திருவாவடுதுறையில் உள்ள பசுபதிநாதரை வணங்கி சில காலம் அங்கேயே தங்கி, அங்குள்ள பிற தலங்களையும் தரிசிக்க நனைத்து காவிரியாற்றின் கரை வழியாக போய்க்கொண்டிருந்தார். அங்கு சாத்தனூரைச் சேர்ந்த இடையர் குல மூலன் என்பவன் பசுக்களை மேய்த்து கொண்டிருந்தான். இவன் அன்போடு மாடுகளை மேய்த்து அதன் மூலம் நல்ல வருமானம் பெற்று குடும்பத்தை நடத்தி வந்தான். அன்றும் மூலன் பசுக்களை மேய்த்துக்கொண்டிருக்கும்போது அவனது வாழ்நாள் ¬முடிந்து விட திடீரென மூலன் இறந்து விட்டான். இதைக்கண்ட இவன் அன்புடன் மேய்த்த பசுக்கள் எல்லாம் இவனைப் பிரிந்த துக்கத்தில் கதறி இறந்த மூலனின் உடலை நாக்கால் நக்கி அங்குமிங்கும் சுற்றித்திரிந்தன. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரநாதர் மூலனின் பிரிவால் அனைத்து பசுக்களும் பட்டினி கிடந்து உயிரை விட்டுவிடும் என நினைத்தார். எப்படியாவது பசுக்களில் உயிரைக்காப்பாற்ற வேண்டும் என உறுதி பூண்டார். கூடுவிட்டு கூடுபாயும் வித்தையைக் கற்றிருந்த தவசியார் மூலன் உடலுக்குள் தம் உயிரைப் புகுத்தினார்.

அவ்வளவுதான். மூலன் உறங்குபவன்போல் கண்விழித்து திருமூலராய் எழுந்தான்.இதனைக் கண்ட பசுக்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. திருமூலராகிய சித்தருக்கு சந்தோஷம் தாங்க ¬டியவில்லை. பின்னர் பசுக்களையெல்லாம் அதற்குரிய இடத்தில் சேர்த்துவிட்டு தான் மட்டும் வீட்டிற்கு செல்லாமல் மூலனின் வீட்டு நிலையை தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். மூலனுக்கோ திருமணம் ஆகி இருந்தது. என்னசெய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது மூலனின் மனைவி அவன் வீடு வர தாமதமானதால் அவனை தேடி வந்தும் விட்டாள். மூலனிடம் தாமதத்திற்கான காரணம் கேட்டாள். மூலனோ மவுனம் சாதித்தார். இதனால் வருத்தமடைந்த அவள் திருமூலரின் கையைப்பிடித்து வீட்டிற்கு அழைத்தாள். பதறிப்போன திருமூலர் அவளிடம் இனிமேல் நான் உன் வீட்டிற்கு வரமாட்டேன். உனக்கும் எனக்கும் இனி எந்த உறவும் கிடையாது எனவே நீ சிவனை வழிபட்டு அமைதி அடைய வேண்டும் என்று கூறியதோடு பக்கத்திலிருந்து மடத்திற்கு சென்று தியானத்தில் ஆழ்ந்தார். கவலையுடன் வீடு திரும்பிய அவள் மறுநாள் தன் சுற்றத்தாருடன் திருமூலரை சந்திக்க சென்றாள். அங்கு நிஷ்டையில் இருந்த அவரின் முகத்தில் தெய்வ சக்தி ஜொலித்தது. இதைக்கண்ட அனைவரும் திகைத்தனர். இருந்தாலும் அந்த பெண்ணிற்காக திருமூலரிடம் வாதாடினர். எந்த பலனும் இல்லை.

அதன் பின் தான் திருமூலர் ¬முனிவர் என்பதையும் அவருடன் வாழ்வது முடியாத காரியம் என்பதையும் தெளிவாக அந்த பெண்ணிடம் சுற்றத்தார் தெரிவித்தனர். இதைக்கேட்ட அந்தப்பெண் அழுது புலம்பி பின் திருமூலரை வணங்கிவிட்டு தன் இருப்பிடம் சேர்ந்தாள். சிறிது நேரத்தில் யோகநிலை கலைந்த திருமூலர் மறைத்து வைத்திருந்த பழைய திருமேனியை தேடினார். கிடைக்கவில்லை. இறைவன் அருளிய ஆகமப் பொருளை தமிழிலே வகுத்து உலகிற்கு உணர்த்தவே சிவன் தன் உடலை மறைத்துவிட்டார் என்பதை தன் ஞான திருஷ்டியால் திருமூலர் உணர்ந்தார். உடனே இறைவனின் கட்டளையை நிறைவேற்றிட திருவாவடுதுறை பசுபதிநாதரை வணங்கி கோயில் மதிலுக்கு மேற்கு பக்கமாக அமைந்துள்ள அரசமரத்தடியில் அமர்ந்து சிவயோகம் செய்ய ஆரம்பித்தார். சிவயோகத்தில் நிலைத்துநின்று இதய கமலத்தில் எழுந்தருளிய எம்பெருமானுடன் ஒன்றினார். இங்குதான் மூவாயிரம் மந்திரங்கள் அடங்கிய திருமந்திரத்தை இயற்றினார். சிவயோக நுணுக்கங்களை விளக்கமாகக்கூறும் திருமந்திரம் ஓர் அற்புதமான அறநூல்! இப்புனிதமான திருமந்திரத் திரு¬றைக்கு நிகராக வேறு திருமுறைகளே இல்லை.

இடையர்கள் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள்

இடையர்கள் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள்
ஓர் இடையன் பாலைக் கொடுத்து அதற்கு ஈடாய் தானியத்தைப் பெற்றுக்கொண்டதை முதுகூத்தனாரின் குறுந்தொகைச் செய்யுள் விளக்குகிறது.


"பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாருடை இடையன்'' (குறு.221:3-4)

இடைச்சியர் நெய்யைப் பண்டமாற்று செய்யாமல், காசுக்கு விற்று அக்காசுகளைச் சேமித்து, குறிப்பிட்ட தொகை சேர்ந்த பின்னர் அக்காசுகளைக் கொடுத்துப் பசுவையும், எருமையையும் விலைக்கு வாங்கினர் என்பதை, பெரும்பாணாற்றுப்படை தெரிவிக்கிறது (பெரும்பாண்.164-166)

ஆயர்களின் உணவு குறித்து தமிழ் இலக்கியப் பதிவுகள்

ஆயர் உணவு

முல்லை நிலத்தில் வாழ்பவர்கள் ஆயர் ஆவார். காடும் காடு சார்ந்த நிலத்தில் வாழும் ஆயராகிய இடையர்கள் ஆடுமாடுகளைச் செல்வமாகக் கொண்டவர்கள். இவர்களுடைய உணவு காடுகளாகிய புன்செய் நிலத்தில் விளையும் தானியங்களே ஆகும். நண்டுக்குஞ்சுகளைப் போலக் காணப்படும் தினைச்சோறும் காலும் அவர்கள் உண்ணும் உணவாகும். இவ்வுணவைத் தாமும் உண்டு தம் விருந்தினருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர் என்பதை,

“மடிவாய்க் கோவலர் குடிவயின் சேப்பின்
இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவீர்” (166-168)

-என்ற பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது.
ஆடுகள் மேய்த்து வந்த ஆயர்கள் பாலுணவை அதிகம் உண்டனர். அவர்ளின் இருப்பிடத்திற்கு வந்தவர்களுக்கு பசும்பாலை உண்பதற்காக்க் கொடுத்தனர். இதனை,

“வேறுபுலம் படர்ந்த ஏறுடையினத்த
வளைஆன் தீம்பால் மிளைசூழ் கோவலர்
வளையோர் உவப்பத் தருவனர் சொரிதலின்
பலம பெறுநசையொடு பதிவயின் தீர்ந்தநும்
புலமபுசேண் அகலப் புதுவிர் ஆகுவிர்” (408-412)

-மலைபடுகடாம் குறிப்பிடுகின்றது. இவ்வரிகளில் ஆயர்பெருமக்களின் அன்புள்ளத்தைக் காணலாம். மேலும் அவர்கள் இரவில் பாலையும் பாற்சோற்றையுதம் உண்பார்கள். விருந்தினர்களுக்கும் கொடுப்பர் என்பதை,

“கல்லென் கடத்திடைக கடலின் இரைக்கும்
பல்யாட்டு இனநிரை எல்லினிர் புகினே
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவீர்” (415-417)

-மலைபடுகடாம் மொழிகின்றது.

நன்றி
இடையர் விழுதுகள்

Monday, March 30, 2015

இன்று 306 வது பிறந்த நாள் காணும் செங்கல்பட்டை ஆண்ட மன்னர் திரு.ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ......

அவரை பற்றிய வரலாறு கீழே உங்களுக்காக......
(1709 மார்ச் 30 - 1761 ஜனவரி 10) பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் உரைபெயர்ப்பாளராகவும் துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தவர்.

1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார். உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியான புகழ் பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீசு என்பவரைப் போன்று தமிழில் நாட்குறிப்பு எழுதியமையால், இவர் இந்தியாவின் பெப்பீசு எனவும் நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றப்படுகின்றார். இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது.

பிரெஞ்சு ஆளுநர் துய்ப்ளெக்சின் அந்தரங்கப் பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பன்மொழிப் புலவராகவும் இருந்தவர். இவரின் நாட்குறிப்பு மூலம் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டு தென்னிந்திய ஆளுமைகளைப் பற்றியும், முக்கியமான அரசியல், இராணுவ நிகழ்வுகளைப் பற்றியும் அறிய முடிகிறது. இவரது நாட்குறிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன.

18 ஆம் நூற்றாண்டின் வரலாற்றை அறிந்து கொள்ளப் பெரிதும் துணையாக இருப்பது 18 ஆம் நூற்றாண்டில் புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கம் பிள்ளை (1709 - 1761), ரெங்கப்பத் திருவேங்கடம் பிள்ளை (1737-1791) இரண்டாம் வீரா நாயக்கர் (1755), முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை (1777 - 1801) ஆகிய நால்வரும் எழுதிய நாட்குறிப்புகளாகும். மேற்கூறிய நால்வர் மட்டுமின்றி 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆனந்தரங்கம் பிள்ளையின் மாமா நைநியப்பப் பிள்ளையின் மகனான குருவப்ப பிள்ளை என்பவரும், ஆனந்தரங்கம் பிள்ளையின் தம்பியான திருவேங்கடம் பிள்ளை (1713-1754) என்பவரும் நாட்குறிப்பு எழுதியுள்ளனர். (ஜெயசீலன் ஸ்டீபன் 1999; 32) ஆனால் இவையிரண்டும் இன்னும் வரலாற்றாய்வாளர்களின் பார்வைக்குக் கிட்டவில்லை.

ஆனந்தரங்கம் சென்னையில் உள்ள பெரம்பூரில் பிறந்தார். மூன்று வயதில் தாயை இழந்தார். தந்தை திருவேங்கடம், மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார். அங்கு அரசுப் பணியில் உதவியாளராகச் சேர்ந்து, நாளடைவில் திவானாகப் பதவி உயர்வு பெற்றார். ஆனந்தரங்கம் தொடக்கத்தில் எம்பார் என்பவரிடம் கல்வி பயின்றார். கல்வி கற்ற பின் பாக்குக் கிடங்கினை நடத்தி வந்த ஆனந்தரங்கம் அரசுப் பணிகள் சிலவற்றில் தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார். இவரது மனைவி செங்கல்பட்டு சேசாத்ரி பிள்ளையின் மகள் மங்கதாயி என்பவராவார். இவருக்கு மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் இருந்தனர்.

என்ற பெயரில் சொந்தமாகப் பாய்க்கப்பல் ஒன்று இவருக்கிருந்தது. துணி ஏற்றுமதியிலும் இவருக்குப் பங்கிருந்தது. சாராய உற்பத்தி உரிமையும் பெற்றிருந்தார். அதிகாரமும், பொருள் வளமும் ஒரு சேரப் பெற்றிருந்த ஆனந்தரங்கம், அன்றாட நிகழ்வுகளைக் குறிப்பாக எழுதி வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். தாம் கேட்ட செய்திகளை மட்டுமல்லாது அலுவல் நிமித்தமாக அவர் படித்த கடிதங்களையும் கூட தம் நாட்குறிப்பிற்குப் பயன்படுத்தியுள்ளார்.
ஜோசப் பிரான்கோயிஸ் துய்ப்ளெக்சு துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக இருந்த கனகராய முதலி என்பவர் இறந்ததால், பன்மொழியறிவு பெற்ற ஆனந்தரங்கம் 1747- ல் அப்பணிக்குத் அமர்த்தப்பட்டார். ஆனந்தரங்கம் தமிழில் எழுதிய நாட்குறிப்புகளால் புகழ் பெற்றார். அக்காலத்தில் நாட்குறிப்பினை வைத்து வாழ்க்கை நிகழ்வுகளைச் சொல்லும் வழக்கம் இல்லை. அவ்வகையில் ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பை புதிய தமிழிலக்கிய வகையாகக் கருதலாம். நாட்குறிப்பு இலக்கியத்தை இவர்தான் தொடங்கினார் எனச் சொல்லமுடியாது; ஆனால், முதன்முறையாக இவருடைய நாட்குறிப்புகளே கிடைத்துள்ளன. ஆனந்தரங்கம்பிள்ளைக்கு முன் அவருடைய மாமா குருவப்பப் பிள்ளை தமிழில் நாட்குறிப்பு எழுதியதாக நம்பப்படுகிறது; ஆனால் அது மறைந்து விட்டது.
ஆனந்தரங்கம் பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக இருபத்தைந்து ஆண்டுகள் பணியாற்றினார். அக்காலத்தில் நடந்தவற்றை நாட்குறிப்பாக பதிவு செய்துள்ளார். தம் நாட்குறிப்புகளுக்குத் தினப்படிச் செய்திக்குறிப்பு, சொஸ்த லிகிதம் (சொஸ்த- தெளிந்த அல்லது உரிமையுடைய, லிகிதம்- கடிதம் அல்லது ஆவணம்) என்றே பெயரிட்டார். இடையில் சில நாட்கள் எழுதப்படாமலும் சில நாட்கள் குறிப்புகள் முழுமையின்றிக் காணப்பட்டாலும் இருபத்தைந்து ஆண்டு கால அரசியல், பொருளாதார, சமுதாய நிகழ்ச்சிகளின் பதிவேடாக இது அமைந்துள்ளது. ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பில் வரலாற்றுச் செய்திகள், அரசியலமைப்பு, நிருவாகமுறை, பிரெஞ்சுப்படை காரைக்காலைப் பிடிக்கச் சென்று தோல்வியடைந்தது, தில்லியின் மீதான பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கிய செய்திகள், இலபூர்தொனே கப்பல் பிரெஞ்சு நாட்டிலிருந்து சென்றது, வெளிநாட்டுப் பயணிகள் இந்தியா வந்து சென்ற நிகழ்வுகள் போன்ற முக்கிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெறுகின்றன. எனவே ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பு ஒரு வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது.
அரசியல் சூழ்ச்சிகள், சமுதாய நிகழ்ச்சிகள், கலகங்கள் முற்றுகைகள், கப்பல் போக்குவரத்து, வாணிப நிலை, முகலாய மன்னர் நடத்தை, நவாபின் அத்தாணி மண்டபம், ஆங்கிலேயரின் போக்கு, பிரெஞ்சுக்காரரின் அரசாளும் முயற்சி, அக்கால மக்கள் பட்டபாடு, வெளிநாட்டார் அடித்த கொள்ளை, புதுச்சேரி, ஆர்க்காடு, வந்தவாசி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, ஐதராபாத், தில்லி முதலிய இடங்களில் நடந்த சம்பவங்கள், போர்த் தந்திரங்கள், துய்ப்ளேக்ஸ், இலபூர்தோனே, பராதி, இலல்லதொலாந்தால் முதலிய பிரெஞ்சுத் தலைவர்களின் தன்மை அக்காலப் பிரமுகர் வரலாறுகள், நீதியுரைகள், சோதிடக் குறிப்புக்கள், புலமையளவு முதலிய பலவற்றையும் ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பு தன்னகத்தே கொண்டிருக்கிறது. எளிமையான தமிழிலே எழுதப்பட்டிருக்கிறது.

ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்புக்களின் பெரும்பகுதி வணிகச் செய்திகளையே விவரித்துள்ளன. துறைமுக நகரங்களில் உள்ள மக்களின் வருவாய்க்கு அடிப்படையாய் அமைவது அங்கு வரும் கப்பல்களின் போக்குவரத்தே ஆகும். கப்பல் வந்த போது வாணிகம் செழிப்பதும் மக்கள் மகிழ்வதையும் இவர் தமது நாட்குறிப்பில் குறித்துள்ளார். புதுச்சேரிக்குக் கப்பல்கள் வந்த செய்தி கேட்டதும் மக்கள் மகிழ்ந்தனராம். இதனை
"நாட்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற்போலவும், மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்ததைப் போலவும், அவரவர் வளவிலே கலியாணம் நடப்பது போலவும், நீண்ட நாள் தவங்கிடந்து புத்திர பாக்கியம் கிட்டினாற்போலவும் தேவாமிர்தத்தைச் சுவைத்தது போலவும் மக்கள் சந்தோசித்தார்கள்; அதைக் காகிதத்தில் எழுத முடியாது"
என்று தாம் வியந்ததை நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.

நீதி வழங்கல், தண்டனை அளித்தல் ஆகிய செய்திகளும் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன. பிரெஞ்சுப் படையிலிருந்து ஓடிப்போன வீரன் ஒருவனைப் பிடித்து அவனைப் பதினைந்து நாள் கிடங்கில் (சிறையில்) வைத்து பின்பு மற்றவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் மரண தண்டனை அளிக்கப்பட்டது. வீடுகளில் தொடர்ந்து திருடி வந்த கும்பல் ஒன்றின் தலைவனைக் கடைத்தெருவில் தூக்கில் தொங்க விட்டனர். ஏனைய இருவருக்கு காதுகளையும் அறுத்து ஐம்பது கசையடிகளும் தரப்பட்டன. இவ்வாறு கடுந்தண்டணைகளை வழங்கியதால் குற்றங்கள் குறைந்தன என்பதை ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பு தெரிவிக்கிறது.

ஆனந்தரங்கம் தம் நாட்குறிப்பில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு, பெரியவர்களை மதிக்கும் பண்பு, பெரியவர்களுக்கு வணக்கஞ் செய்தல், கோவில் திருவிழாக்கள், பழக்கவழக்கங்கள், சடங்குகள் எவ்வாறிருந்தன என்பதைப் பதித்துள்ளார். சுங்கு சேஷாசல செட்டியாரின் பெண்கள் இருவருக்கு நடைபெற்ற திருமண ஊர்வலத்தையும், திருமணம் நடைபெற்ற முறையையும், ஆளுநர் அத்திருமணத்துக்கு வந்திருந்ததையும் இவரின் நாட்குறிப்பு மூலமாக அறிய முடிகிறது.
"இந்தக் கலியாணத்திற்கு இற்றை நாள் (9-6-1746) வியாழக்கிழமை சாயங்காலம் ஆறு மணிக்குத் துரையவர்கள், முசே துய்ப்ளே அவர்கள் பெண்சாதியும், மதாம் தெப்ரமேனி, இவர்களெல்லாம் வந்து அரை நாழிகை (12 நிமிடம்) உட்கார்ந்து, பிறகு எழுந்திருந்து வீட்டுக்குள்ளே முதல் கட்டிலே போய் மாப்பிள்ளையையும் பெண்ணையும் பார்த்துவிட்டு மறுபடியும் பந்தலிலே வந்து உட்கார்ந்து, மேசையிலே உட்கார்ந்து தித்திப்புச் சாப்பிட்டு அரை நாழிகை இருந்து, பிற்பாடு புறப்பட்டு வளவு போய் விட்டார்கள். வருகையிலே 21, உட்காரச்சே 21, சாப்பிடச்சே 21, எழுந்திருக்கச்சே 21 சுட்டார்கள் (பீரங்கி முழக்கம்). துரையவர்கள் வந்தபடியினாலெ வெகுமானப் பணம் துரையவர்களுக்கு ஆயிரம், மதாமுக்கு நூறு அந்தரங்கத்திலே கொடுத்துவிட்டு பந்தலிலே பாக்கு வெத்திலை, பன்னீர், புஷ்பம் மாத்திரம் கொடுத்தார்கள்."
திருமணத்திற்கு வரும் மதிப்பு மிக்கவர்களுக்குத் தரும் வெகுமானம், மரியாதை முதலியன அன்றைய நடைமுறையாக இருந்தது தெரிய வருகிறது.

1748 செப்டம்பரில் புதுச்சேரி நகரை சென்னையிலிருந்து வந்த ஆங்கிலப்படை முற்றுகையிட்டுப் பீரங்கிகளால் தாக்கியது. பீரங்கிக் குண்டுகள் புதுச்சேரியில் மக்கள் வாழும் பகுதியில் விழுந்ததை 1748 செப்டம்பர் 9 ஆம் நாள் எழுதிய நாட்குறிப்பில் பின்வருமாறு ஆனந்தரங்கம் பதிவு செய்துள்ளார்.
"மற்றபடி அவன் (இங்கிலீஷ்காரன்) போட்ட தீக்குடுக்கைகள் எல்லாம் நாற்பதுக்கும் உண்டு. அது இப்படி சகல ஜனங்களும் அவஸ்தைப்பட்டார்கள். இந்த தீக்குடுக்கை 1-க்கு சிறிது நூற்றைம்பது ராத்தல் முதல் இருநூத்தி பத்து, பதினைந்து மட்டுக்குமிருக்கிறது. இது வரும்போது ஒரு சோதி போல புறப்படுகிற வேடிக்கையும், அப்பாலே மெள்ள அசைந்து அசைந்து கொண்டு அப்பாலே விழுந்தவுடனே வெடிக்கிற வேடிக்கையும், பார்க்கிறதற்கு ஒரு வேடிக்கையாகத் தானே இருந்தது. இத்தனை தீக்குடுக்கை விழுந்தும் ஒரு மனுஷருக்குச் சேதமில்லை. ஒருத்தருக்கும் காயம் பட்டதுமில்லை. இன்றையத் தினம் இராத்திரி இப்படி நடந்தேறி போனது தீக்குடுக்கையினுடைய மகத்துவம். அதனுடைய சப்தமானதும் இந்த மட்டுக்கும் அது ஒருத்தருக்கும் தெரியாது. இன்றைய தினம் சிறு பெண்கள் பிள்ளைகள் சமஸ்தான பேருக்கும் தெரிய வந்தது. தீக்குடுக்கை பயம், சிறிது பேருக்கு பயம் அரைவாசி தீர்ந்தது. சுட்டதும் ஒரு சப்தம், புறப்படும்போது ஒரு சூரியன் தோன்றுகிறதென்றுவருகிறாப் போலே வருகிறது. வருகிறது வெகு சப்தத்துடனே வருகிறதுமல்லாமல் வெகு தொந்தியுள்ளவன் நடக்க மாட்டாமல் மெள்ள வருவானே அப்படி வருகிறபடியினாலே சமீபத்திலே வரும்போது மனுஷர் தப்பித்துக்கொள்ள விலகிப் போகலாமென்று வெகு பேருக்கெல்லாம் தைரியமுண்டாகி தீக்குடுக்கையென்றால் அதை சட்டை பண்ணி அது வருகிறதோ போகிறதா என்கிறதுகூட கேழ்க்கிறதுகூட விட்டுவிட்டார்கள். இப்படி நடந்ததைப் பார்த்து கேள்விப்பட்டதையும் சுருக்கமாயெழுதினேன். "ஆனாலின்றையதினம் பயந்தவர்களுக்குள்ளே வெள்ளைக்காரர் வெள்ளைக்கார்ச்சிகளுக்கு நம்முடைய தமிழர்கள் வெகு தைரியவான்களென்று நூறு தரம் சொல்லலாம்."
இவ்வாறு சுவையான சமூக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு செய்திகள் ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.

ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பு அக்காலப் பேச்சுத்தமிழ், சொற்கள், சொற்றொடர்கள், இலக்கணக் கூறுகளை எடுத்துரைக்கின்றது. பிற மொழிகளிலிருந்து கடன் பெற்ற சொற்கள், அன்று வழங்கி, இன்று வழக்கிழந்த சொற்கள் முதலானவற்றையும் அவரது நாட்குறிப்புக்கள் வாயிலாக அறியலாம்.

ஆன்ந்தரங்கம் காலத்திய கர்நாடக மாகாணம்
ஆனந்தரங்கம் இந்திய மன்னர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஒரு பாலமாக விளங்கினார். 1749 ஆம் ஆண்டு முசபர்சங் என்ற இந்திய மன்னர் ஆனந்தரங்கத்துக்கு 3000 குதிரைகளை வழங்கி, அவருக்கு மன்சுபேதார் என்ற பட்டத்தையும் வழங்கினார். பின்பு செங்கல்பட்டு கோட்டைக்குத் தளபதியாகவும், அம்மாவட்டம் முழுமைக்கும் ஜாகீர்தாரராகவும் நியமனம் பெற்றார். ஆளுநருக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுவோர் தமிழ் மக்களின் தலைவராக அறிவிக்கப்படுவார். அவ்வகையில் ஆனந்தரங்கம் வணிகராக, மொழிபெயர்ப்பாளராக இருந்த போதிலும் மன்னர் போல் மதிக்கப் பெற்றார். ஆளுநர் துய்ப்ளே ஆட்சியில் ஆனந்த ரங்கத்துக்கு தனிப்பட்ட சில உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கில் செல்லும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு செல்லும்போது மங்கல ஒலிகள் ஒலிக்கும். அவர் தங்கப் பிடி போட்ட கைத்தடி வைத்துக்கொள்ளவும் செருப்பணிந்து ஆளுநர் மாளிகைக்குள் செல்லவும் உரிமை இருந்தது. பொதுமக்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் உரிமையும் அவருக்கு இருந்தது. ஆளுநர் துய்ப்ளேக்சு தன் அரசாங்க விவகாரங்களையும், வீட்டு விவகாரங்களையும் இவரிடம் மனம் விட்டுப் பேசினார். இத்தகைய பல செய்திகள் அவரது நாட்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அருணாசலக் கவிராயர் தம் இராம நாடகத்தைத் திருவரங்கத்திலே அரங்கேற்றிய பிறகு, மீண்டும் ஒருமுறை ஆனந்தரங்கம் முன்னிலையில் அரங்கேற்றினார் என்று குறிப்பிடுவர்.
"ஆனந்தரங்கத்தினுடைய நாட்குறிப்புக்கள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி"- கே. கே. பிள்ளை.
"தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப்போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார்." - வ. வே. சு. ஐயர்.
(தமது ‘பால பாரதி’ இதழில்)
ஆனந்தரங்கம் குறித்து வெளிவந்துள்ள இலக்கியங்கள் 
ஆனந்தரங்கம் இந்து மதத்தையும் கலைகளையும் தமிழ், தெலுங்குப் புலவர்களையும் போற்றி வந்துள்ளார். நமசிவாயர், கஸ்தூரி ரங்கையார், தியாகராச தேசிகர் போன்ற தமிழ் புலவர்களை இவர் ஆதரித்துள்ளதாகத் தெரிகிறது. இவரின் நாட்குறிப்பில் வேதபுரீசுவரர் கோவிலுக்கு செய்த தொண்டுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனந்தரங்ககோவை
ஆனந்தரங்கன் தனிப்பாடல்கள்
கள்வன் நொண்டிச் சிந்து
ஆனந்தரங்கம் பிள்ளைத்தமிழ் - அரிமதி தென்னகன்
ஆனந்தரங்கம் புதினங்கள்
ஆனந்தரங்க விஜயசம்பு -- சீனிவாசர் (வடமொழி நூல்)
ஆனந்தரங்க ராட்சந்தமு - கஸ்தூரிரங்கக் கவி ( தெலுங்கு நூல்)

ஆனந்தரங்கம் மறைந்து 85 ஆண்டுகள் கழித்தே அவர் எழுதிய நாட்குறிப்புக்கள் கிடைத்தன. இந்த நாட்குறிப்புக்களை 1896 இல் பிரெஞ்சு அரசாங்கம் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளது. இவரின் நாட்குறிப்பு எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது. ஆனந்தரங்கம் தமிழ் மொழியில் பற்றுடையவராகத் திகழ்ந்தார். தமிழிலேயே தான் கையெழுத்திட்டார். நவீன தமிழ் இலக்கியத்தில் அவரது பங்கு முக்கியமானதாகும். இவர் தனது 51 ஆம் வயதில் 1761 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 10 ஆம் நாள் மறைந்தார்.

1846 ஆம் ஆண்டு புதுச்சேரியில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணியாற்றிய 'அர்மோன்கலுவா மொபார்' என்ற பிரெஞ்சுக்காரரால் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புக்கள் ஆனந்தரங்கம் பிள்ளையின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. 1836 இல் நாட்குறிப்பின் மூலப் பிரதியிலிருந்து நகலெடுக்கும் பணியை அவர் செய்து முடித்தார். 'எதுவார் ஆரியேல்' என்ற பிரெஞ்சுக்காரரும் 1849 - 50 களில் ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் மூலத்திலிருந்து படியெடுக்கும் பணியைச் செய்து முடித்தார். இந்நகல்கள் இரண்டும் பாரிஸ் நகரிலுள்ள தேசிய நூலகத்தில் உள்ளன. அர்மோன்கலுவா மொபார் முதன் முறையாக எடுத்த நகலிலிருந்து மற்றொரு நகலைத் தயாரிக்கும் பணியை சென்னை ஆவணக் காப்பகம் மேற்கொண்டது. 1892 இல் தொடங்கிய இப்பணி 1896 இல் முடிந்தது.
மூல நகலிலிருந்து எடுத்த மூன்றாவது நகலை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பன்னிரெண்டு தொகுதிகளாக சென்னை அரசாங்கம் வெளியிட்டது. 1894 இல் தொடங்கி 1928 வரையிலான கால கட்டத்தில் இத்தொகுதிகள் ஆங்கிலத்தில் வெளிவந்தன. பின்னர் பிரெஞ்சு மொழியிலும் வெளியானது. இவற்றிற்கெல்லாம் பின்னரே 1736 செப்டெம்பர் 6 தொடங்கி 1753 செப்டெம்பர் எட்டு வரையிலான காலத்திய நாட்குறிப்புக்கள் எட்டுத் தொகுதிகளாக (ஒன்பது நூல்கள்) பின்வரும் காலகட்டங்களில் தமிழில் வெளியாகின. முதல்தொகுதி (1948), இரண்டாம் தொகுதி (1949), மூன்றாம் தொகுதி (1950), நான்காம் தொகுதி (1951), ஐந்தாம் தொகுதி (1954), ஆறாம் தொகுதி (1956), ஏழு, எட்டாம் தொகுதிகள் (1963). 1755 செப்டம்பர் எட்டாம் நாளுக்குப் பின் தொடங்கி 1764 சனவரி 12 ஆம் நாள் வரை அவர் எழுதிய நாட்குறிப்புக்களில் எஞ்சிய பகுதிகள் இன்னும் தமிழில் வெளிவரவில்லை. தமிழில் எழுதப்பட்ட நாட்குறிப்பு ஒன்றின் முழுவடிவம் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் கிடைக்க, தமிழில் எட்டுத் தொகுதிகள் மட்டுமே இன்று வரை வெளியிடப்பட்டுள்ளது. புதுவை அரசின் கலைப் பண்பாட்டுத் துறை மேற்கூறிய எட்டுத் தொகுதிகளையும் எவ்வித மாற்றமுமின்றி நகல் பதிப்பாக மலிவு விலையில் 1998 இல் வெளியிட்டது. இதுவரை அச்சில் வராத எஞ்சிய பகுதிகளையும் உள்ளடக்கிய ஆய்வுப் பதிப்பை வெளியிடுவதாக இப்பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தாலும் இன்று வரை அவை வெளியாகவில்லை.
தாங்கள் இதை பகிர்வதன் மூலம் இந்த தமிழரின் திறமையை பலர் அறிய செய்யலாமே ....பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவிக்கலாமே ....

இன்று அரசியல் அறிஞர் ஆனந்தரெங்கம்பிள்ளை (யாதவர்) (1709-1761) அவர்களின் பிறந்தநாள்

யாதவர் தன்னுரிமைப் பணியகம் மூலமாக வருடம் தோறும் வழங்கும் ஆயர் விருதுகளில் "ஆனந்தரெங்கம்பிள்ளை - பொற்கிழி விருது" வழங்கி வருவதை அனைவரும் அறிவோம்.

ஏப்ரல் 3-ம் தேதி மதுரையில் நடைபெறும் "யாதவர் தொழில் வணிகக் கூடம்" கருத்தரங்கில் "அரசியல் அறிஞர் ஆனந்தரெங்கம்பிள்ளை" அவர்களின் "உருவப்படம்" 306 -வது பிறந்தநாளை வெளிப்படுத்தும் விதமாக திறக்கப்பட உள்ளது என்பதை பெருமையுடன் பதிவு செய்கிறோம். நன்றி!!!

இன்று தி இந்து தமிழ் நாளிதழ் - நன்றி!!!

நாட்குறிப்பு மூலம் வரலாற்றை பதிவு செய்தவரும் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் மொழிபெயர்ப்பாளருமான ஆனந்த ரங்கம் பிள்ளை (Ananda Ranga Pillai) பிறந்த தினம் இன்று (மார்ச் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

- சென்னை பெரம்பூரில் (1709) பிறந்தவர். பாண்டிச்சேரியில் குடியேறிய தந்தை, அரசுப் பணியில் சேர்ந்து, திவானாகப் பதவி உயர்வு பெற்றார். எம்பார் என்பவரிடம் கல்வி பயின்ற ஆனந்த ரங்க பிள்ளை, அரசுப் பணிகளில் அப்பாவுக்கு உதவி யாக இருந்தார். பிரெஞ்சு ஆளுநர் ட்யூப்ளக்ஸின் மொழி பெயர்ப்பாளராக 1747-ல் நியமிக்கப்பட்டார்.

- பல தொழில்கள் செய்தார். சொந்தமாக கப்பல் வைத்திருந்தார். தினசரி நடக்கும் நாட்டு நிகழ்வுகளைக் குறிப்புகளாக எழுதிவைக்கும் பழக்கம் கொண்டவர்.

- பன்மொழிப் புலமை படைத்த இவர் இந்திய மன்னர்கள் பிரெஞ்சுக்காரர்கள் இடையே பாலமாக விளங்கினார். முசபர்சங் என்ற மன்னர் இவருக்கு 3 ஆயிரம் குதிரைகளை வழங்கி, மன்சுபேதார் பட்டத்தையும் வழங்கினார். செங்கல்பட்டு கோட்டைக்குத் தளபதியாக, ஜாகீர்தாராகவும் நியமிக்கப்பட்டார்.

- மக்கள் மத்தியில் மன்னருக்கு நிகரான செல்வாக்கு பெற்றிருந்தார். 1749-ல் ‘துபாஷி’ பட்டத்தை ஆளுநர் இவருக்கு வழங்கினார்.

- ஏறக்குறைய 25 ஆண்டுகாலம் நாட்குறிப்பு எழுதியுள்ளார். 18-ம் நூற்றாண்டின் சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள், பிரெஞ்சுப் படையின் வெற்றி, தோல்விகள், டெல்லி மீதான பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட கடும் தண்டனைகள், கடல் வணிகம், இந்தியா வந்த வெளிநாட்டுப் பயணிகள் விவரம் உட்பட பல நிகழ்வுகளின் முக்கிய வரலாற்றுப் பதிவாக இவரது நாட்குறிப்பு திகழ்கிறது.

- மன்னர்களின் குணங்கள், ஆங்கிலேயரின் போக்கு, மக்கள் பட்ட அவதி, வெளிநாட்டினர் அடித்த கொள்ளை, புதுச்சேரி, ஆற்காடு, வந்தவாசி, தஞ்சாவூர், திருச்சி, ஹைதராபாத், டெல்லியில் நடந்த சம்பவங்கள், போர்த் தந்திரங்கள், நீதியுரைகள், ஜோதிடக் குறிப்புகள்கூட நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.

- இவை அனைத்தும் எளிய தமிழில் உள்ளன. இவரது நாட்குறிப்புகளின் பெரும் பகுதி வணிகச் செய்திகளை உள்ளடக்கியவை. பேச்சுத் தமிழ், சொற்கள், சொற்றொடர்கள், இலக்கணக் கூறுகளையும் இவரது குறிப்புகள் எடுத்துக்கூறுகின்றன.

- உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியாகப் புகழ்பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீஸுடன் (Samuel Pepys) இவரை ஒப்பிட்டு, ‘இந்தியாவின் பெப்பீஸ்’ எனவும், நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றப்படுகிறார்.

- இவரைப் பற்றி பல பாடல்கள், புத்தகங்கள் எழுதப்பட்டுள் ளன. இவர் மறைந்து 85 ஆண்டுகளுக்குப் பிறகே இவரது நாட்குறிப்புகள் கிடைத்தன. பிரெஞ்சு அரசாங்கம் இவற்றை பிரெஞ்ச்சில் மொழிபெயர்த்து 8 தொகுதிகளாக வெளியிட்டது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

- 1736 முதல் 1753 ஆண்டு காலம் வரையிலான நாட்குறிப்புகள், தமிழில் 8 தொகுதிகளாக வந்தன. அதன் பிறகு அவர் எழுதிய நாட்குறிப்புகள் இன்னமும் தமிழில் வெளிவரவில்லை. தமிழ் எழுத்துலகின் ஒரு புது இலக்கிய வடிவத்துக்கு முன்னோடியான ஆனந்த ரங்கம் பிள்ளை 51 வயதில் (1761) மறைந்தார்.

- "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" மற்றும் "யாதவர் தொழில் வணிகக் கூடம்"

Thursday, March 26, 2015

மதுரை கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் பாரத முன்னேற்ற கழகம் பங்கேற்பு



முதல் சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலை அமைக்க இடம் ஒதுக்க கோரி மதுரையில் ஏப்ரல் 9 ம் தேதி யாதவ இளைஞர் ம்காசபை தலைவர் மணிவண்ணன் யாதவ்..தலைமையிலும் கோவை வேல்ராஜ் யாதவ் முன்னிலையிலும் நடைபெறும் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்ற கழகத்தின் சார்பில் தலைவர் பாரதராஜா யாதவ்.பொதுச்செயலர் வக்கீல் எஸ்.ஆர்.கிஷோர் குமார் மற்றும் ஏராளமான பா.மு.க.வின் போராளிகள் பங்கேற்கிறார்கள்

Tuesday, March 24, 2015

மதுரையில் வீரன் அழகு முத்துக்கோன் சிலை அமைக்க வேண்டும்: கோகுல மக்கள் கட்சி தலைவர் வற்புறுத்தல்

கோகுல மக்கள் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் பொன்னேரியில் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் N.சரவணன் தலைமை தாங்கினார் S.P.கோனார், M.M.ஸ்ரீதர்,ராஜீகோபிநாத்,ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட செயலாளர் V.C.காந்தராஜ் அனைவரையும் வரவேற்றார்.கூட்டத்தில் கோகுல மக்கள் கட்சியின் நிறுவனர்-தலைவர் M.V.சேகர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அப்போழுது மதுரையில் சுதந்திரபோராட்ட வீரன் அழகுமுத்துகோன் சிலை வைக்க இடம் ஓதுக்கி தரவேண்டும். என்றும் மேலும் அண்ணாரின் வாழ்க்கை வரலாரை பாடபுத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்றும் கூரினார்.
மேலும் விவசாயிக்களின் அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களை 
கையக்ப்படுத்த கூடாது, மத்திய அரசு இத்திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் கூரினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதசார அடிப்படையில் இடஓதுக்கிடு வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டார். 

மேகதாத்தில் அனைகட்டிட


துடிக்கும் கர்நாடக அரசின் செயலை மத்திய அரசு தடுத்து நிறுத்தி தமிழக விவசாயப் பெருமக்களுக்கு பாதுகாப்பு வழங்க்கிட வேண்டும் என மத்திய மாநிலஅரசை கேட்டுக் கொண்டார். 

உயர்நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதயாமான யாதவ சமுதயத்தினரை நீதிபதியாகவும், தேர்வாணைகுழு உறுப்பினராக யாதவரை நியமிக்த்திட வேண்டும் என்றும் மத்திய மாநிலஅரசை கேட்டுக் கொண்டார். 

திருவள்ளுர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட சாலைகளை உடனடியாக சீர்மைத்திட போர்கால அடுப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட பல கோரிக்கைளை வலியுருத்தி பேசினார்...
மேலும் கொள்கைபரப்பு செயலாளர் L.V.ஆதவன்,உள்ளிட்ட மாநில, மாவட்ட, முக்கிய நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.
T.P.முர்த்தி மாவட்ட இளைஞரணி நன்றியுரை வழங்கினார்.

நம் கையை விட்டு நழுவிச் செல்லும் "யாதவர் கல்லூரியை" மீண்டும் நம் கைகளுக்குள் கொண்டுவருவதற்கான "கருத்தாய்வு கூட்டம்".


உறவுகளுக்கு, வணக்கம்.

நம் கையை விட்டு நழுவிச் செல்லும் "யாதவர் கல்லூரியை" மீண்டும் நம் கைகளுக்குள் கொண்டுவருவதற்கான "கருத்தாய்வு கூட்டம்".

போற்றுதல்குறிய கல்லூரி உறுப்பினர்கள், சமுக பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களுக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் கலந்து கொள்ள வேண்டும்.

நன்றி !!!

முடிந்தளவு அனைவருக்கும் (SHARE)தெரியப்படுத்தவும் !!!

சமுக பணியில் - யாதவர் தன்னுரிமைப் பணியகம்.

Tuesday, March 17, 2015

யாதவ இளைஞர்களின் பாதை..........கோகுலம் அறக்கட்டளை

அன்புகொண்ட யாதவ சொந்தங்களே, 

உலகம் முழுதும் இருக்கும் யாதவ இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ் கொணர்ந்து, வலுவான சமூக அடித்தளம் அமைக்கும் செயல்பாட்டை கோகுலம் அறக்கட்டளை முன்னெடுத்து வருகிறது. அந்த வலுவான சமூக அடித்தளமே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை தரும். இன்று யாதவர்களின் எண்ணிக்கை குறித்த பல செய்திகளை / அரசு கொடுத்துள்ள புள்ளிவிபரங்களை தவிர்த்து நேரடியான புள்ளி விபரங்களை சேகரித்து வெளிப்படுத்துவதின் மூலம் நமக்கான விகிதாசார உரிமையை அனைத்து தளங்களிலும் நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கோகுலம் அறக்கட்டளை எந்த வித அரசியல் பின்னனியில் இயங்காது அமைப்பு மற்றும் இயக்கத்துடன் செயல்படும் தியாகி அய்யா அழகுமுத்துக்கோன் தியாகம் ,வீரம், செயல்பாடுகளை உலகிற்கு உணர்த்தும் வகையில் நினைவு சின்னம் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது நினைவிடம் நாம் அவருக்கு செலுத்தும் நன்றிகடனா?. எவ்வித எதிர்பார்ப்புமின்றி கடல் தாண்டி வேலை செய்யும் யாதவர்கள், தமிழகம் முழுதும் உள்ள இளைஞர்களையும் ஒன்றினைத்து நினைவு தூன் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஐயா சுபாஷ் யாதவ் உதவிடன் நினைவுதூன் அமைப்போம் இதில் வேறுபாடு வேண்டாம் அனைவரும் யாதவம் செய்வோம் என் மேல் உங்களுக்கு கோபம் என்றால் அதை பிறகு பார்போம் இப்பொழுது நம் அனைவரும்ஒன்று படுவோம் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் முன்னேற்றத்தை மையப்படுத்தி அறிவுசார் தளத்தை உருவாக்கவும் அதன் வழிகாட்டுதலின் படி செயல்திட்டங்களை நடைமுறைபடுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உறுதியான, திடமான, நேர்மையான, தொடர்ச்சியான செயல்பாட்டில் சமூகத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. இதில் கோகுலம் அறக்கட்டளை தொடர்ந்து பயனிக்கும் இயன்றதை செய்வோம் நம் இனத்திற்குசெய்வோம் 

என்றும் சமூக உணர்வுடன்
 ஜெ மூர்த்தி யாதவன் 
கோகுலம் அறக்கட்டளை 
00968-91614631 
gokulamarakkattalai@gmail.com

Saturday, March 14, 2015

பாலை திரைப்படம் (2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய தமிழ் ஆயர்களின் வரலாறு)


கிமு. 3ஆம் நூற்றாண்டில் படம் தொடங்குகிறது. முதலில் ஆயர் என்னும் சங்ககால தமிழ் மக்களில் ஒரு குழுவினர் ஆய்க்குடி என்னும் வளமான ஊரில் வாழ்கின்றனர். வேற்று மொழி பேசும் வந்தேறி கூட்டமொன்று அவ்வூரில் உள்ள ஆயர்களில் பலரைக்கொன்று மீண்டவர்களை ஊரை விட்டு வெளியேற்றுகின்றனர். தப்பித்த ஆயர்கள் தங்களுக்கென முல்லைக்கொடி என்ற ஊரை உருவாக்கி வாழ்கின்றனர். அந்த ஊரில் பாலை என்னும் நில வறட்சிக்காலம் வரப்போவதாக அந்த ஊரைச்சேர்ந்த முதியவரும்
கணியருமான பாலை முதுவன் கூறுகிறார். அந்த நில வறட்சிக்காலம் வந்தால் வேட்டையாடுதல், ஆநிரை மேய்த்தல், உழவு செய்தல், மீன் பிடித்தல் என நால்வகை திணைத்தொழில்களையும் செய்யாமல் பாலை நில மக்கள் செய்யும் களவு வேலை செய்தே பிழைக்க வேண்டும் என்று அவ்வூர் மக்களையும் தலைவனையும் எச்சரிக்கிறார் முதுவன். வரட்சி வருமோ என்று பயந்து முல்லைக்கொடி மக்கள் சிலர் ஆயக்குடியில் உள்ள வந்தேறி மக்களின் வணிகச்சாத்தனை கொல்கின்றனர். இது முல்லைக்கொடி தலைவனுக்கு தெரிய வர ஆயக்குடி வந்தேறிகளின் வணிகச்சாத்தனை கொன்றவர்களை கண்டித்ததுடன் வணிகச்சாத்தனின் பிணத்தை ஆயக்குடி வந்தேறிகளின் தலைவனிடம் அனுப்பி மன்னிப்பு கோருகிறார் முல்லைக்கொடித் தலைவன் விருத்திரன். மன்னித்து விட்டதாகக் கூறி நாடகமாடி இணக்கம் பேச வேறொரு இடத்துக்கு வருமாறு அழைத்து வணிகச்சாத்தனின் மீது வேலெறிந்து கொன்றவனை வணிகச்சாத்தனின் இணையாள் மூலமாகவே கொல்கிறான் வந்தேறிகளின் தலைவன் அரிமாவன். அதோடு நில்லாது முல்லைக்கொடியில் முக்கியமானவனான வளன் என்பவனை கடத்திக் கொடுமையும் செய்கிறான். தப்பித்த மற்றவர்கள் முல்லைக்கொடிக்கு செல்கின்றனர். வலனை மீட்பதற்கு விருத்திரன் தம் மக்களிடம் ஆய்க்குடி வந்தேறிகள் மீது போர் தொடுக்குமாறு கூறுகிறார். ஆனால் அவர்களை எதிர்க்க சில சூதான வழிகளை கையாள வேண்டும் என்கிறார் முன்னாள் முல்லைக்கொடி தலைவரும் விருத்திரனின் தந்தையுமான பாலை முதுவன். வலனை அவர்கள் கடத்தியதற்கு விருத்திரனின் கவனக் குறைவு தான் காரணம் என்கிறார் பாலை முதுவன். இதை பொருக்காத விருத்திரனின் துணைவியார் பாலை முதுவனிடம் கேள்வியை கேட்க அப்போது பேசப்படும் வசனம் தான் பின் வருவது.

உரையாடல் 

விருத்திரனின் தலைவி - புடுங்கி வாழாம உழைத்து வாழ வேண்டும் என என் தலைவர் சொல்றார். அதில் என்ன குத்தத்த கண்டீங்க.


பாலை முதுவன் - என் பெயர் வெறும் முதுவன் அல்ல. பாலை முதுவன். பாலை முதுவன். ஏனென்றால் நான் பலையப் பார்த்தவன். நானும் என் தலைவி ஆதிமந்தியும் கூடிச் சிரித்து உடன்போக்கு சென்று கற்பு மணம் பூண்டு பிள்ளையை பெற்ற போது இதே முல்லை நிலத்தில் பாலை வந்தது. பாலை வந்தது.

வெப்பம் சுட்டெறிச்சுது. புல் பூண்டுகள் கருகிப் போச்சு. ஆநிரைகள் நாவிழந்து மடிஞ்சி போச்சு. என்ற புள்ளைங்க பாலுக்கு ஏங்கி அழும். அவ தாய் முலவத்தி சுருண்டு கிடக்கும். என்ற புள்ள அவ தாய் முலய போயி சவச்சுப் பாப்பான். அங்க ஒன்னும் வராது. ஒன்னும் வராது.

குடிக்க நீரில்ல. மக்கள் மாண்டு விழுந்துச்சு. ஒருநாள் என்ற பிள்ளை வீதிக்கு ஓடி வந்து மண்ணத் தின்னான். நாங்க ஓடிப் போயி பாக்கேயில வயிறு வீங்கி செத்துப் போயிட்டான். என்ற மூத்த புள்ள வயிறு வீங்கி செத்துப் போயிட்டான். மண் தின்னு செத்தான் என் மூத்த பிள்ள. அது தான் மக்களே பாலை. அதுதான் மக்களே பாலை.


நானும் துவண்டு போகல. ஆநிரை மேய்த்த ஆயன் ஆரலைக் கள்வனானேன். பாலை மறவன் ஆனேன். ஒரு வண்டியும் விடல. மறிச்சேன். பறிச்சேன். குடிகளுக்கு கொடுத்தேன். மறு மழை வர ஏழு ஆண்டுகள் ஆச்சு. அதுவர பாலை நிலத்துல மறவனா வாழ்ந்தேன். பாலை நிலத்துல மறவனா வாழ்ந்தேன். விருத்திரனும் தான்
குறிஞ்சி நிலத்தில் வேட்டையாடனும். முல்லை நிலத்தில் ஆநிரை மேய்க்கனும். மருத நிலத்தில் உழவு செய்யனும். நெய்தல் நிலத்தில் மீன் பிடிக்கனும். பாலை நிலத்தில் கொள்ளை தானய்யா அடிக்கோனும்.

முன்கதைச் சுருக்கம்

மேற்கொடுத்த காட்சிக்கு பிறகு முல்லைக் கொடி மக்களுக்கு பாலை முதுவன் பயிற்சி அளித்து விருத்திரனின் கீழ் மூன்று வீரர்களை அனுப்பி வைக்கிறார். அவர்கள் ஆய்க்குடி வந்தேறிகளின் ஆநிரை அனைத்தையும் கவர்ந்து வந்தேறிகளிடம் நீங்கள் வலனை ஒப்படைத்தால் தான் நாங்கள் ஆநிரைகளை மீண்டும் தருவோம் என்று எச்சரித்து அடித்து விரட்டுகின்றனர். பின்னர் சங்ககால மக்களுக்கு ஊரிய கல்வெறியாட்டத்தை மற்ற மூன்று வீரர்களும் ஆடிக்கொண்டு இருக்கையில் முல்லைக் கொடி தலைவன் விருத்திரன் மட்டும் அமைதியாக எதையோ யோசித்த படி அமர்ந்திருக்கிறான். தன் வீரர்களுக்கு நமது தாய் நிலமான ஆய்க்குடியை எவ்வாறு இழந்தோம் எனவும் வந்தேறிகளை விட அக்காலத்தில் ஆய்க்குடியின் பூர்வ மக்களான முல்லைக்கொடி மக்கள் வீரம் நிறைந்தவர்களாக இருந்த போதும் எவ்வாறு ஆய்க்குடியை வந்தேறிகளிடம் இழந்தோம் என்பதையும் உணர்த்த நினைக்கிறார் விருத்திரன். அப்போது தலைவன் விருத்திரனுக்கும் வீரர்களுக்கும் நடக்கும் உரையாடல் தான் பின் வருவது.

உரையாடல்

விருத்திரன் - அரிமாவன் என்றால் என்ன? (வந்தேரிகளின் தலைவன் அரிமாவன். அவர்களின் கொடி சிங்கம்)

முதல் வீரன் - சிங்க ஏறு போன்றவனோ? (ஏளனமாகச் சிரிக்கிறான்) சரியோ?

விருத்திரன் - அவன் சிங்கம் என்றால் நாம் யார்?

இரண்டாம் வீரன் - நாமெல்லாம் புலி (ஆய்க்குடியின் பூர்விக குடிகளும் தற்போதைய முல்லைக் கொடி வாசிகளுமான பூர்விக மக்களின் கொடி புலி.)

விருத்திரன் - புலி தான் சிங்கத்தை எதிர்க்கும். சரியோ?

வீரர்கள் - ஆம் சரி.

விருத்திரன் - முடிவில் வெற்றி யாருக்கு கிடைக்கும். சிங்கத்துக்கா? புலிக்கா?

வீரர்கள் - புலிக்கு.



விருத்திரன் - சிங்கம் நம் நாட்டு விலங்கல்ல. அது எங்கிருந்தோ வந்தது. ஆனால் வந்த இடத்த புடிச்சி வைக்குற வெறி அதிகம். புலி... இங்க புறந்தது தான். ஆனா அதுக்கு கவனக் குறைவு அதிகம். அதனால இருந்த இடத்த எல்லாத்தயும் விட்டிருச்சி.
ஆனால் சிங்கம் சுகமா வாழப் பழகுனது. கூட்டமா தான் வாழும். நிறைய இறை வேனும். பசி பொறுக்காது.

புலி துன்பங்கள் தாங்கும். தனியா வேட்டையாடும். பசி பொறுக்கும். ஆகையால போரில் சிங்கம் முதலில் வெல்லும். இறுதிக்கும் இறுதியாக புலி தான் வெல்லும்.
வீரர்கள் - தலைவன் கூற வருவதை உணர்ந்தது போல் சிரிக்கின்றனர்.

விருத்திரன் - நீ புலி என்றால் தனிச்சும் போர் செய்யனும். எதிரி கூட்டமாத்தான் வருவான். நாம தனித்து நிக்கனும். ஆளு இருந்தாலும் அடிக்கனும். இல்லனாலும் அடிக்கனும். எதிரி பலத்தோட வந்தால் பதுங்கு. எத்தன காலமானாலும் பதுங்கியே இரு. அவன் என்னக்காவது சோர்வடையும் போது ஒரே அடியில வீழ்த்து.
நான் போர்ல காணாம போயிட்டாலோ செத்துப் போயிட்டாலோ தலைவன் எங்க இருக்கான் தலைவன் எங்க இருக்கான்னு என்னத் தேடாத. எதிரி எங்க இருக்கான் எதிரி எங்க இருக்கான்னு அவனத் தேடு. இதெல்லாம் செஞ்சா மட்டும் தான் நீ புலி.


Friday, March 13, 2015

இறைவனை கண்டு சொன்ன இடையன்

வைத்தீஸ்வரன்கோயில் – மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் திருநின்றியூர் இருக்கிறது. மயிலாடுதுறையிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. 

பரசுராமனால் இங்கு வந்த சிவன்:
 ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா. கணவரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் தன் வீடே திருக்கோயில் என வாழ்ந்து வந்தார். ஒருநாள் இவர்களின் வாழ்க்கையில் விதிவிளையாட தொடங்கியது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பரசுராமரின் புகழ் உலகமெல்லாம் தெரியவேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டியிருந்திருக்கலாம். ஆம், ஒருநாள் ஏதோ ஒருகாரணத்தால் தன் மனைவியின் மேல் கோபம் கொண்டார் ஜமதக்னி முனிவர். தன் மகனை அழைத்து, “நீ உன் தாயின் தலையை வெட்டி எடு.” என்றார். ஒருபக்கம் தாயின் பாசம் மறுபக்கம் தந்தையின் கட்டளை. என்ன செய்வது என்று தெரியவில்லை பரசுராமனுக்கு. “தந்தையே நீங்கள் கூறியதுபோல் என் தாய் ரேணுகாவை கொன்றுவிடுகிறேன். 

ஆனால் மீண்டும் என் தாயை நீங்கள் உயிர்பித்து தரவேண்டும்.” என்றார் பரசுராமர். முனிவரும் தன் மகனின் பேச்சில் நியாயம் இருப்பதை உணர்ந்தார். மகனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டார். அதன்படி பரசுராமர் தன்தாயின் தலையை வெட்டினார். பரசுராமர் தன் மகனுக்கு தந்த வாக்குறுதிக்கேற்ப இறந்துகிடந்த ரேணுகாவுக்கு உயிர் தந்தார் ஜமதக்னி முனிவர். ஆனால் முதலில் தாயின் உயிரை எடுத்ததால் பரசுராமருக்கு பிரம்ஹத்தி தோஷம் பிடித்துக்கொள்கிறது. அதில் இருந்துவிடுபட என்ன செய்யவேண்டும்? என்று தன் தந்தையிடம் கேட்டார். “என் மனைவியும் உன் தாயுமான ரேணுகாவின் மீது அர்த்தமற்ற என் கோபத்தால் அவளை கொல்ல சொன்னதால் எனக்கும் பாவமும் தோஷமும் பிடித்து கொண்டது. ஆகவே நாம் இருவரும் பாவ-தோஷத்திலிருந்து விடுபட சிவபெருமானை நினைத்து தவம் செய்ய வேண்டும்.” என்ற கூறி திருநின்றியூருக்கு தந்தையும் மகனும் வந்தார்கள். அங்கு பரசுராமர் ஒரு சிவலிங்கத்தையும், ஜமதக்னி முனிவர் இன்னொரு சிவலிங்கத்தையும் உருவாக்கி அதை பூஜித்து வந்தார்கள். இவர்களின் அன்பான பக்தியை ஏற்ற சிவபெருமான், பரசுராமர் உருவாக்கி பூஜித்த லிங்கத்தில் காட்சி கொடுத்து பரசுராமரின் தோஷத்தை போக்கினார். அந்த சிவலிங்கத்தின் பெயர் பரசுராமலிங்கம். ஜமதக்னி முனிவர் வழிபட்டலிங்கத்திற்கு ஜமதக்னீஸ்வரர் என்று பெயர். 

சிவபெருமான், சிறிய பாண வடிவில் காட்சி தந்து அவரின் பாவத்தையும் போக்கினார். பின்னொரு சமயம் ஸ்ரீமகாலஷ்மி சிவபெருமானை வேண்டி தவம் செய்து வரங்களை பெற்றார். சிவனிடம் வரத்தை பெற்றதால் மகிழ்ச்சியடைந்த மகாலஷ்மி, தன் அண்ணனான சிவபெருமானை எப்போதும் தரிசித்து கொண்டே இருக்க அங்கேயே தங்கிவிட்டார். இதனால் தன் மனைவியான ஸ்ரீமகாலஷ்மியை பிரிய விரும்பாத ஸ்ரீமகாவிஷ்ணுவும் இங்கு வந்து விட்டார். திருமகள் இவ்வூரில் தங்கிவிட்டால் “திரு” என்று ஊரின் முதல் எழுத்து உருவானது. இறைவனான சிவபெருமானுக்கு மகாலட்சுமீஸ்வரர் என்ற பெயரும் உண்டானது. 

 கோவில் உருவான கதை:
 சிலந்தியும் யானையும் சண்டையிட்டுக்கொண்டு ஒருகட்டத்தில் சிலந்தி, யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து யானையை கொன்றாது இப்படி பாவகாரியம் செய்ததால் சிலந்தி மீண்டும் ஒரு பிறவி எடுத்தது. அந்த சிலந்தியே சோழ மன்னரான சுபவேதர்-கமலாவதியின் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்து கோச்செங்கட்சோழன் என்ற பெயரை பெற்றார். முன்ஜென்ம பகையின் காரணமாக யானை நுழைய முடியாத கோயில்களை கட்டியவர் என்று பெயர் பெற்றவர் இவர்.ஒரு சமயம் கோச்செங்கட்சோழன்,இரவு நேரத்தில் மாறுவேடத்தில் தன்நாட்டை சுற்றிப் பார்த்தார். இப்படி போகும் போது ஒரு காட்டுபகுதி வழியாகத்தான் செல்ல வேண்டும். அந்த காட்டு பகுதிக்கு செல்லும் போது காவலர் கையில் இருக்கும் தீவட்டி அணைந்து விடும். மீண்டும் பல முறை எரிக்க முயற்சித்தாலும் அந்த தீவட்டி எரியாது. பிறகு காட்டின் உள்ளே செல்ல செல்ல காட்டின் நடுவழியில் தானாகவே தீவட்டி பிரகாசமாக எரிய ஆரம்பிக்கும். இதுபோல் ஒருமுறை மட்டுமல்ல, பல தடவை இப்படியே நடப்பதால் இந்த காட்டு பகுதியில் ஏதோ ஒரு தெய்வசக்தி இருக்கிறது என்பதை உணர்ந்தார் கோச்செங்கட்சோழன். இது தெய்வசக்தியா? அல்லது தீயசக்தியா? என்ற சந்தேகமும் ஏற்பட்டது அரசருக்கு. அந்தகாட்டு பகுதியில் பசுக்களை மேய்த்து வந்த ஒரு இடையனிடம், “அந்த காட்டுபகுதியில் ஏதோ சக்தி இருக்கிறது. அது நல்லசக்தியா? தீயசக்தியா? என்பதை அறிந்து சொல். காரணம் பசுவின் கண்களுக்கு தீயசக்தி தெரிந்தால் மீண்டும் அந்த இடத்திற்குள் பசு நுழையாது என்கிறது சாஸ்திரம்” என்றார் அரசர் கோச்செங்கட்சோழன் . ஏதோ தெய்வசக்தி-தீயசக்தி என்கிறாரே அரசர் என்று பயந்துபோன இடையன், தன் துணைக்கு அரண்மனை காவலர்களையும் அழைத்துக் கொண்டு காட்டுக்குள் தினமும் சென்று வந்தான். அங்கு நடந்த அதிசயத்தை வந்து அரசருக்கு விவரித்தான். “அரசே இந்த இடத்தில் தெய்வசக்திதான் நிறைந்து இருக்கிறது. என் பசுமாடு தினமும் ஒர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று தாமாகவே பால் சொரிகிறது” என்றான். அவன் சொல்வது உண்மைதான் என்றார்கள் அரண்மனை காவலர்கள். உடனே அரசரே இடையன் கூறிய இடத்திற்கு சென்று பார்த்தார். ஒரு இடத்தில் அரசரின் கால்தடுமாறி விழுந்தார். “இந்த இடத்தை தோண்டுங்கள்.” என்று உத்தரவிட்டார் கோச்செங்கட்சோழன்.பலமாக அந்த இடத்தை கோடாரியால் தோண்டியபோது அந்த இடத்தில் இருந்து ரத்தம் வெளியே வந்தது. இதைகண்ட அரசர் திடுக்கிட்டார். இருந்தாலும் சிவபக்தரான மன்னர் கோச்செங்கட்சோழன், சிவபெருமானை வேண்டி தைரியமாக தன் வெறும் கைகளாலேயே அந்த இடத்தை தோண்டி பார்த்தார். அப்போது ஒரு சுயம்பு லிங்கம் வெளிப்பட்டது. “ஓம் நமசிவாய” என்று ஆனந்த கண்ணீருடன் தந்த சுயம்பு லிங்கத்தை கட்டி தழுவினார் அரசர். அது ஒரு காட்டுபகுதியாக இருந்தாலும் இறைவனுக்காக அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டினார். இன்றுவரை மூலவர் சுயம்புலிங்கத்தின் மீது கோடாரிபட்ட வெட்டு பள்ளமாக சிவலிங்கத்தில் இருக்கிறது. 

இந்த கோயிலில் என்ன பரிகார சிறப்பு? 
இந்த ஆலயத்தில் உள்ள நவகிரக சந்நிதியில் சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் பார்ப்பதாகவும், அதனால் இங்கு வந்து அவர்களை வணங்கினால் பித்துருதோஷம் நீங்கும் என்கிறது ஸ்தலபுராணம். “மகாலட்சுமிபுரீஸ்வரரையும் அன்னை உலகநாயகியையும் வணங்கினால் சகல தோஷங்களும் விலகும். ஸ்ரீமகாலஷமி தவம் செய்த இடமான இந்த இடத்தில் வந்து வணங்கினால் அஷ்டஐஸ்வர்யங்கள் பரிபூரணமாக கிடைக்கும். இதைதான் திருஞானசம்பந்தரும் சொல்லி இருக்கிறார். இந்த திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பயம், பாவம், நோய் முதலியன நீங்கி நலமுடன் வாழ்வர்.

Reference :http://bhakthiplanet.com/2011/08/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9-2/

Wednesday, March 11, 2015

Veeran Azhagu Muthu Kone

‘Veeran Azhagu Muthu Kone' , also known as Alagumuthu konar’and Servaikarar (meaning as Head or Sevice provider to public) was a Indian revolutionary and Indian independence activist. He is regarded for having raised one of the first revolts against the British in India. 

Kone belonged to a Konar family and was born and brought up in Kattalankulam, a village in erstwhile Tirunelveli district of Tamil Nadu.

Many historians and school books tells us that the Sepoy Mutiny in 1857 was the first freedom struggle against the British. But the fact is that, Azhagu Muthu Kone led a fight against the British 100 years before the Sepoy Mutiny and it has not got recognized. It needs to be incorporated in the History books since the school levels. Sad to see many people in our country doesn't even know the name of the man who initiated the revolts against British.

It was in 1750s, Azhagu Muthu Kone, the commander in chief of Ettayapuram,veera Azhagu muthu kone is king of kattakulam  belonging to Yadhava Community led and initiated the fight against the British. 

In 1757, in a bid to oppress the revolution, the British took over the kingdom and the king and Azhagu Muthu Kone went hiding in the forest.

Due to the betrayal of locals in Pethanayakanur, Azhagu Muthu Kone and his seven close aides were killed in a place called ‘Beerangimedu’ when they tried to fight against the British.

The right hands of 248 persons who were with the leader were cut off.

When : 

In the State Legislature on 29 April 1994, the Government announced to celebrate annually , in Tirunelveli the memory of Veeeran Alagumuthu Kone . It was done for the year 1995. 

Then the government named a Transport Corporation with headquarters at Pudukottai and Government buses were operated with the name “Veeeran Alagumuthu Transport Corporation” on 3 May 1996. On the same day a large bronze statue of Veeran Alagumuthu erected by the government near Madras Egmore Railway station. 





Monday, March 9, 2015

கடலூர் யாதவா சங்கத்தின் வேண்டுகோள்

அன்பான யாதவ சொந்தங்களே..... ஒரு அன்பான வேண்டுகோள்....
கடலூர் துறைமுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணா யாதவா சங்கத்தின் சாா்பில் ஸ்ரீ கோபாலகிருஷ்ணா பஜனை மடம் கட்டுமானபணிகள் நடந்துகொண்டிருக்கிறது. யாதவ சொந்தங்கள் தங்களாலான நிதி உதவியோ,பொருளுதவியோ கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.........
தொடர்புக்கு...
B.ராஜி யாதவ் -9688002470,,, 
K.K.கதிரவன் யாதவ் -7373523235,,9842778848.......

தமிழ்நாடு யாதவ சங்கம் சார்பாக யாதவர்களை MBC.யில் சேர்க்க கோரி மதுரையில் ரயில் மறியல்(9-03-2015)

மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 55 பேரை போ லீசார் கைது செய்தனர். யாதவர் சமுதாயத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு யாதவர் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

மதுரையில் நேற்று நடந்த போராட்டத்துக்கு யாதவர் சங்கத் தலைவர் சரசுமுத்து தலைமை வகித்தார். மாநில வக்கீல் அணி தலைவர் சங்கராஜித், மாநில இளைஞரணி தலைவர் சுரேஷ், தென் மண்டல அமைப்பாளர் கண்ணன் மற்றும் ஆடு வளர்ப்போர் உரிமையாளர் சங்கத் தலைவர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனால், அவர்கள் எச்சரிக்கையை மீறி ரயில்வே ஸ்டேஷனுக்குள் சென்று ரயிலை மறிக்க முயன்றனர். இதையடுத்து, 55 பேரை திலகர்திடல் போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.






இதில் தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை சார்பில் 20 நபர்கள் கலந்துகொண்டனர்.





முத்துப்பேட்டை தர்காவும் கருப்பையா கோனரும்

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் தஞ்சை மாவட்டத்தின் முத்துப்பேட்டை ஜாம்புவனோடையில்முல்லைநில தரிசு நிலத்தில் ஆயர் குலப்பெரியார் கருப்பையா கோனார்  என்பவர் தனது ஆட்களுடன் சென்றுஏர்பூட்டி உழத் தொடங்கினார். அப்போது ஏரின் கொழுமுனை கீறிய ஓரிடத்தில் இருந்து இரத்தம் பீரிட்டடித்தது.அதே நேரம் கோனாரின் இரு கண்களும் ஒளி மங்கி பார்வை இழந்தன. அச்சத்தில் கை கால் நடுங்கிபுலம்பியவராக உழவை நிறுத்திவிட்டு கோனார் தம் இல்லம் சென்று படுத்துவிட்டார். அன்றிரவு அவர் கனவில்அரபிகளின் தோற்றமுடைய பெரியார் ஒருவர் தோன்றினார்கள்.

கோனாரை விளித்து கருப்பையா ! நீ ஏர் உழுத நிலத்தில் வெகு காலத்திற்கு முன் நான் அடக்கமாகி இருக்கிறேன். என் பெயர் ஷெய்கு தாவூது ஆகும். உன் பார்வையைப் பற்றி நீ கவலைப்படாமல் உடன் எழுந்து.ஆறுகல் அருகிலுள்ள நாச்சிகுளத்துக்கு சென்று அங்கு வசிக்கும் கபீர்கான். ஹமீத்கான் என்ற இரு

தவசீலர்களிடம் நடந்தவைகளைக் கூறு ! என்றார்கள். கோனார் விழித்தெழுந்தும் தன் இரு கண்களிலும் பார்வை. வந்துவிட்டதை உணர்ந்தார். உடன் அவர் எழுந்து நாச்சிகுளம் போய் சேர்ந்தார். அவர் அங்கு செல்லும் முன்பே தவசீலர்கள் இருவரின் கனவிலும் ஆண்டகை அவர்கள் தோன்றி ஆயர் வருவதுபற்றி அறிவுறுத்தி இருந்தார்கள் கோனார் கொண்டு வந்த நற்செய்தியை கேட்டு மகிழ்ச்சியடைந்த தவசீலர்கள் விரைந்து வந்து மேற்படி நிலத்தை வந்தடைந்தபோது அங்கு இரத்தம் பீரிட்டு அடித்த இடத்தில் மல்லிகை கொடி வளர்ந்து மலர்கள் சொரிந்திருப்பதைப் பார்த்து குறிப்பிடப்பட்ட இடத்தில் கபர்ஷரிஃப் ஒன்றை எழுப்பினார்கள். முத்துப்பேட்டையிலும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் வசிக்கும் மக்கள் இந்த அதிசயத்தை கேள்விப்பட்டு பெருந்திலராக வந்து கூடி தரிசனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். கபர் ஷரீஃபை சுற்றியுள்ள தனக்கு சொந்தமான ஐந்தரை வேளி நிலத்தையும் கோனார் அண்ணல் ஷெய்கு தாவூது ஆண்டகை பெயரால் இனாம் சாசனம் எழுதிவைத்தவிட்டார்.

அதன் பின் ஆண்டகை அவர்களின் தரிசனத்துக்காக வெளியூரிலிருந்தும் ஏராளமான மக்கள் திரண்டு வரவே

எஜமான் அவர்களின் அடக்கஸலத்தில் மஜார் ஷரீஃபொன்று கட்டப்பட வேண்டுமென்று மக்கள் முடிவெடுத்தனர்.சிற்பிகளையும் கட்டிட தொழில் நிபுணர்களையும் வரவழைத்தனர்.எழுபத்தெழு முழு நீளத்திலும் இருபத்தொன்பது முழு அகளத்திலும் எட்டு முழு உயரத்திலும் நாற்புமும் சுவர்எழுப்பப்பட்டது. அதற்குமேல் முட்டை வடிவத்திலும் 15 வளைவு மண்டபங்கள் உயர்த்தப்பட்டன. மல்லிகைபுஷ்பங்கள் பொலிந்து கிடந்த அடையாள இடத்தில் கபுர்ஷரீஃப் கட்டப்பட்டு அதன் தலைமாட்டில் ஓரு குமுசும்கால்மாட்டில்ஒரு குமுசும் கட்டப்பட்டது தர்காவின் இந்த அமைப்பு பூர்த்தி செய்யப்பட்டு ஆயிரம் ஆண்டுகள்ஆகின்றன.

Thursday, March 5, 2015

மருது பாண்டியர் வாழ்வின் நிகழ்வுகள்-ராமுக்கோன்,ஆட்டு மந்தையின் காவல்

மருதுபாண்டியர்களால் கட்டப்பட்ட காளையார்கோவிலில் வருடந்தோறும் நடக்கும் திருவிழாவில் யாதவர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்படுகிறது. அன்றைய நாள் முழுவதும் கோவில் யாதவர்களின் கட்டுபாட்டில் இருக்கும். மாட்டுவண்டி பந்தயம் குதிரை பந்தயம் நடக்கும். இரவு முழுவதும் கலை நிகழ்ச்சி நடக்கும். அன்றைய நாள் சிவகங்கை மாவட்ட யாதவர்கள் அனைவரும் அங்கு கூடியிருப்பார்கள்.
சிவகங்கை சீமையின் பாளையக்காரர் மருதுபாண்டியர்களின் படையில் வீரனாக இருந்தவர் ராமுக்கோன். உருவாட்டி அருகே அம்பலார் ஒருவர் ஆட்டு மந்தை வைத்துளார்.
அவரின் மந்தையில் தினமும் ஒரு ஆடு காணாமல் போய்விடுமாம் அம்பலாரால் எப்படி காணாமல் போகிறது என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. அதனால் அவர் மருதுபாண்டியரை சந்தித்து முறையிட்டார்.மருதுபாண்டியர் உடனே அம்பலாரே கவலைவேண்டாம் கோனாரை அனுப்புகிறேன் போய்வாருங்கள் என்றார். அன்று இரவு கோனார் அவர்கள் ஆட்டு மந்தையில் காவலில் இருந்தார். திடீரென்று ஒரு கரடி ஆட்டை தாக்கியது உடனே கோனார் சீறி பாய்ந்து கரடியிடம் சண்டையிட்டு அதனின் தலையை வெட்டி எடுத்தார். மருதுபாண்டியரிடம் சென்று இந்த மிருகம்தான் ஆட்டை பிடித்து உண்கிறது என்றார். மருதுபாண்டியர் மிரன்டு போனார். கரடியின் தலையை வெட்டி எடுத்து வந்து சாதாரணமாக சொல்கிறாரே என்று கோனாரை பாராட்டியதோடு மட்டும் அல்லாமல் அவர்கள் கட்டிய காளையார்கோயிலில் இராஜகோபுரத்துக்கு முன்பு கரடி தலையுடன் கூடிய ராமுக்கோன் சிலையை நிருவினார். அந்த சிலை இன்றும் உள்ளது

Wednesday, March 4, 2015

குருசாமி யாதவ் அவர்கள் பிறந்தநாள் விழாவில் கோகுலம் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் & இரத்ததானம்

கோகுலம் அறக்கட்டளை சார்பில் குருசாமி யாதவ் 50வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடந்தது .இம்முகாமில் டாக்டர்.கமலவாசன் குழுவினர் இரத்தத்தை சேகரித்தனர். இம்முகாமில் 30க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கோகுலம் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.















கோகுலம் அறக்கட்டளை  மாவீரன் குருசாமி யாதவ் பிறந்தநாள் விழா

நன்றி
திரு மணிவண்னன் யாதவ்
தமிழ் நாடு இளைஞர் யாதவ மகாசபை

சங்கரன் கோவில் - ஆட்கொண்டார்குளத்தில் இரத்த தான முகாமிற்கு காவல் காவல்துறை அனுமதி மறுப்பு

பெருமை மிகு உறவுகளுக்கு வணக்கம்

"சங்கரன் கோவில் - ஆட்கொண்டார்குளம்" இளைஞர்கள் அழைப்பின் பேரில் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" சார்பாக மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து அதிகாரிகளுடன் காலை 7.45 மணியளவில் புறப்பட்டு சங்கரன்கோவிலுக்கு 11 மணிக்கு சென்று அடைந்தனர் ஆனால் அப்பொழுது காவல்துறை வழிமறித்து உங்களுக்கு அனுமதியில்லை என்று கூறினார், எவ்வளவோ பேசியும் பயன் இல்லாமல் நிகழ்ச்சி ரத்தானது.

இரத்த தானம் செய்ய காவல்துறை அனுமதி தராததால், , அங்கிருந்த இளைஞர்கள் வருத்தத்துடன் திரும்பி சென்றனர் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன் !!!

யாதவர் தன்னுரிமைப் பணியகம் 
ஆட்கொண்டார்குளம் - சங்கரன் கோவில்


மாவீரன் குருசாமி யாதவ் அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா-இராமநாதபுரம்

பெருமை மிகு உறவுகளுக்கு வணக்கம்
"மாவீரன் குருசாமி யாதவ்" அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா

"இராமநாதபுரம்" யாதவர் திருமண மண்டபத்தில் இரத்த தானம் முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது, 50 -க்கும் அதிகமான இளைஞர்கள் இரத்ததானம் அளித்தனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். அரசு மருத்துவமனை இரத்த வங்கி அலுவலர்கள் மிகச் சிறப்பாக செய்தனர், காவல்துறை அனுமதியுடன் சிறப்பாக முடிந்தது.


நன்றி !!! யாதவர் தன்னுரிமைப் பணியகம் 
இராமநாதபுரம்






 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar