"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Friday, June 5, 2015

காரைக்குடி சுபலட்சுமி மண்டபம் உரிமையாளர் "சுப்பையா யாதவ் மணிமண்டபம் மற்றும் சிலை திறப்பு விழா"


காரைக்குடி சுபலட்சுமி மண்டபம் உரிமையாளர் உழைப்பால் உயர்ந்த உத்தமர் அய்யா "சுப்பையா யாதவ் மணிமண்டபம் மற்றும் சிலையை" சுப்ரீம் கோர்ட் நீதிபதி "அய்யா AR லக்ஷ்மணன்" அவர்கள் தொடங்கி வைத்தார்கள், அய்யா "கோபாலகிருஷ்ணன்" அவர்கள் தலைமையில் நடைபெற்றது, அய்யா மலேசிய பாண்டியன் குத்துவிளக்கு ஏற்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் 5000-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நினைவில் வாழும் "சுப்பையா யாதவ்" அவர்களின் புதல்வர் "சந்திர மோகன்" மற்றும் அவருடைய குடும்பத்தினர் மிக சிறப்பாக செய்தனர். நிகழ்ச்சிக்கு தேவையான பணிகளை "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" செய்து கொடுத்தது என்பதை பெருமையுடன் பதிவு செய்கிறோம்.

நிகழ்ச்சியின் தொடக்கம் முதல் இறுதிவரை சிறப்பு உணவு வழங்கப்பட்டது, கோடை வெயில் தெரியாதவாறு அரங்கம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல்வேறு கட்சிகளில் இருந்தும் அனைத்து மதம் மற்றும் சாதியினரை சேர்ந்த பெரியவர்களும், ஏரணிக்கோட்டை கிராமத்தினர் மற்றும் அதனை சுற்றியிருக்கூடிய கிராமத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். வெளிநாடுகளில் இருந்து நண்பர்களும் உறவினர்களும் வருகை தந்தனர்.

நாகரிகமாக வாழ வேண்டும் என்ற கட்டாயத்தில் தங்களுடைய அடையாளங்களை தமக்கே தெரியாமல் தொலைத்து செல்லும் இளைஞர்களுக்கு மத்தியில் நம் சகோதரர் சந்திர மோகன் அவர்கள் தன் தந்தைக்கு அவர் கட்டிய மணிமண்டபம் மற்றும் சிலை திறப்பு விழா நிகழ்வு நம் இளைஞர்களுக்கு ஒரு உந்து சக்தியாக அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை அதற்கு காரணமான சகோதரர் "சந்திர மோகன்" அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம் !!!


நன்றி!!!

யாதவர் தன்னுரிமைப் பணியகம் - காரைக்குடி மற்றும் மதுரை







0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar