"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Friday, October 2, 2015

கரந்தைத்திணை

ஆநிரைகளைக் கவர்தல் தான் போருக்குத் தொடக்கமாக அமைகின்றது. ஆநிரை கவர்வோர் செயலை ஆநிரையை மீட்போர் மிகக் கடுமையாக எதிர்த்துப் போரிடுவர்.

பகைவன் நாட்டைக் கைப்பற்றவோ, அவ்வரசனின் மகளைப் பெண் கேட்டு, அவன் தர மறுக்கும்போதோ, போர் நடத்தப்பெறுதல் பெரும்பான்மை நிகழ்வாக இருக்கும். சில நேரங்களில் இகழ்ந்து பேசியதாலும் இகழ்ச்சிக்கு ஆட்பட்டவன் போர்தொடுத்தலும் நடைபெற்றுள்ளது.

புறத்திணைகள் போர்ப் பிரிவுகளைக் கூறினாலும் அவற்றிற்குரிய துறைகள் போரின் சிறு சிறு நிகழ்வுகளைக் கூறுவன ஆகும்.

போருக்கு அடிப்படைக் காரணம் உலகப் பொருள்கள் மேல் ஆசையும், பெண்ணாசையுமே ஆகும். புறத்திணைகளில் ஒன்றானகாஞ்சித் திணை உலக நிலையாமையை எடுத்துரைக்கிறது. வாழ்வில் ஏற்படும் பல்வேறு அனுபவங்களையும் இது எடுத்துக்கூறுகின்றது. ஆசைகளால் பயன் இல்லை என்கிறது இது.

போர் தொடங்குவதில் இருந்து போர் முடிந்து வெற்றி பெற்றோ, தோல்வியுற்றோ வரும்வரை ஓர் ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் தான் போர் நிகழ்விற்கும் ஓர் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களில் உள்ளபுறநானூறு, பதிற்றுப்பத்து ஆகியவையும், பத்துப்பாட்டில் உள்ளஆற்றுப்படை இலக்கியங்களும் மதுரைக் காஞ்சியும் மேற்கண்ட புற இலக்கணப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டே இயற்றப்பட்டுள்ளன.

வெட்சித்திணை:



பழைய காலத்தில் பகை அரசனிடம் போர்செய்ய நினைக்கும் ஒருவன் போரின் முதல் கட்டமாகப் பகைஅரசனது பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்வான். இதுவெட்சித்திணை எனப்படும். வெட்சி வீரன் வெட்சிப் பூச் சூடி,போருக்குச் செல்வான்.


கரந்தைத்திணை: பகை அரசன் கவர்ந்து சென்ற பசுக்கூட்டங்களை அவற்றிற்கு உரியவன் மீட்டுவரச் செய்யும் போர்,கரந்தைத்திணை எனப்படும். கரந்தை வீரன் கரந்தைப் பூச் சூடி,போருக்குச் செல்வான்.

ஆநிரை மீட்கச் செல்லல்

வெட்சி வீரர்கள் கவர்ந்து சென்ற தமது ஆநிரையைக் கரந்தை வீரர் மீட்டு வருதல் பொருட்டுச் செல்வதைப் பற்றிக் கரந்தை அரவம், அதரிடைச் செலவு என்னும் இரு துறைகள் கூறுகின்றன(அதா் - வழி).


கரந்தை அரவம்

பறிகொடுத்த ஆநிரைகளை மீட்பதற்காக, மன்னனின் ஆணைப்படி மறவர் கூடுகின்றனர். அப்போது எழும் முழக்கம் ஆதலின் கரந்தை அரவம்எனப்பட்டது. அரவம் - ஒலி; ஓசை.

கொளுவின் பொருளும் கொளுவும்
தமது ஆநிரைகளை வெட்சியார் கைப்பற்றிய செய்தியை அரசன் பறையறைந்து தெரிவித்தான். அதனைக் கேட்டவுடனேயே கரந்தையார் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையை மேலும் தொடராமல் அப்படியே போட்டுவிட்டு விரைந்து ஓரிடத்தில் குழுமினர். குழுமிய அதனைக் கூறுவதுகரந்தை அரவம் எனப்பெறும்.

நிரைகோள் கேட்டுச் செய்தொழில் ஒழிய

விரைவனர் குழூஉம் வகைஉரைத் தன்று.
எடுத்துக்காட்டு வெண்பா:

கால்ஆர் கழலார்; கடும்சிலையார்; கைக்கொண்ட

வேலார்; வெருவந்த தோற்றத்தார்; - காலன்

கிளர்ந்தாலும் போல்வார்; கிணைப்பூசல் கேட்டே

உளர்ந்தார்; நிரைப்பெயர்வும் உண்டு.




வெண்பாவின் பொருள்

கரந்தை மறவர்கள், தமது காலிலே வீரக்கழலை உடையவர்கள்; கையிலே, கொடுமையை வெளிப்படுத்தும் வில்லை உடையவர்கள்; வேலினையும் கொண்டவர்கள்; தம்மைக் கண்டவரை அஞ்சவைக்கும் தோற்றப் பொலிவை உடையவர்கள்; கூற்றுவனாகிய எமன் வெகுண்டது போன்ற சினத்தை உடையவர்கள். இவர்கள், ‘பசுநிரையை வெட்சிமறவர் கவர்ந்து சென்றனர்’ என்ற செய்தியை அறிவிக்கும் தடாரியின் ஓசையைக் கேட்டதும் போருக்கு எழுந்தனர். ஆதலால், இவர்கள் வெட்சியார் கவர்ந்து சென்ற பசுவின் திரளை மீட்கக் கூடும்.

துறைப் பொருத்தம்

இதனால், நிரை மீட்கும் போரில் ஒரு பகுதியை உரைத்தமை புலனாகின்றது.


அதரிடைச் செலவு


அதர் - வழி; செலவு - செல்லுதல். நிரை மீட்சியில் இறங்கிய கரந்தையார், வெட்சி மறவர்கள் நிரையுடன் செல்லும் வழியிடைச் செல்வது பற்றிக் கூறுவதால், அதரிடைச் செலவு எனப் பெற்றது.


கொளுவின் பொருளும் கொளுவும்

தம்மால் போற்றப்படாத வெட்சி மறவர் தாம் கவர்ந்து சென்ற ஆநிரையோடும் போன வழியில் கரந்தையார் அவற்றை மீட்கும் பொருட்டுச் சென்றதைச் சொல்வது, அதரிடைச் செலவு என்னும் துறையாகும்.

ஆற்றார் ஒழியக் கூற்றெனச் சினைஇப்

போற்றார் போகிய நெறியிடை ஏகின்று

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar