"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Friday, March 18, 2016

திருவண்ணாமலை யாதவர் சங்கமம் அறிக்கை

யாதவ சொந்தங்களுக்கு வணக்கம்,
தற்போது இணையதலத்தில் திருவண்ணாமலையில் உள்ள அழகுமுத்து கோன் சிலை அவமதிக்கபட்டதாக ஒரு போஸ்டர் வெளிவந்துள்ளது.
அது 2011 ஆம் ஆண்டு நடந்தது. தற்போது எந்த பிரச்சனையும் இல்லை ஏன் சில நபர்கள் அந்த தகவலை இப்பொழுது பதிவிட்டார்கள் என்று தெரியவில்லை.
தகவல் அறிந்து யாதவர் சங்கமம் தலைவர் திரு. தியாகராசன் அவர்கள் இன்று காலை 10 மணி அளவில் சென்றுபார்வையிட்டார்கள்.எந்த பிரச்சனையும் இல்லை. 
மேலும் ஜனநாயக மக்கள் தமிழ்தேசம் கட்சி தலைவர் திரு ராமசந்திரமருதுபாண்டியர் அவர்களும் சிலை அருகில் தான் உள்ளார்.


தவறான தகவல்களை பதிவிட வேண்டாம் என கேட்டுகொள்கிறோம். பழய தகவல்களை பதிவிடும் போது எப்போழுது நடந்தது என தெளிவாக பதிவிடவும்
இப்படிக்கு
யாதவர் சங்கமம் திருவண்ணாமலை

Monday, March 14, 2016

யாதவர் தன்னுரிமைப் பணியகம்/Yadava Empowerment Services

உறவுகளுக்கு, வணக்கம்.
யாதவர் தன்னுரிமைப் பணியகம்/Yadava Empowerment Services

நாம் நமது உறவுகளுடன் மகிழ்ச்சியாக வாழ, நமக்குள் இணைப்பை ஏற்படுத்தி வாழ்வில் முன்னேற, ஒத்த கருத்துள்ளவர்களை ஒரு குடையின் கீழ் இணைக்க 'யாதவர் தன்னுரிமைப் பணியகம்' முயன்று வருகிறது. இதன் அலகுகளாக யாதவர் தொழில் வணிகக் கூடம், ஆயர் கருவூலம், முல்லைத்தாயம் கலைக்குழு ஆகியவை சமூக மக்களின் "வாழ்வை மேன்மைப்படுத்துதல்" எனும் உயரிய நோக்கோடு பணியாற்றுகின்றன.


YES is functioning with the soul aim of leading a pleasant life with our relatives, to improve the standard of our life having a bond among ourselves and to unite the people, who are with same attitude, under a safe roof. With those aspects Yadava Chamber of Commerce, Yadava Treasury, Mullaithayam are rendering their valuable service successfully.

'யாம்/YES' உறுப்பினராக இணைத்து கொள்ள தொடர்புக்கு: 0452 4354343www.yadavachamber.com

சமூக நலன் கருதி அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

செந்நாப்புலவர் பேராசிரியர் ஆ.கார்மேகக்கோனார் நினைவகம் மிக விரைவில் திறக்கப்பட உள்ளது - யாம்/YES





உறவுகளுக்கு வணக்கம்.

செந்நாப்புலவர் பேராசிரியர் ஆ.கார்மேகக்கோனார் நினைவகம் குடும்பத்தாரின் முயற்சியாலும் சமூகப் பெரியவர்கள் உதவியுடனும் மிக விரைவில் இராமநாதபுரம், அபிராமம் - அகத்தாரிருப்பு கிராமத்தில் திறக்கப்பட உள்ளது, இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. நன்றி.

இனஉணர்வின் நெகிழ்வில் - யாம்/YES
யாதவர் தன்னுரிமைப் பணியகம்

Saturday, March 12, 2016

ஆடுவளர்போர் சங்கம் அதிரடி' - நோட்டாவுக்கு எங்கள் ஒட்டு



வணக்கம். மதுரையில் யாம்/YES(யாதவர் தன்னுரிமைப் பணியகம்) முயற்சியால் "தமிழ்நாடு ஆடுவளர்ப்போர் சங்கம்" கோரிக்கையை அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது, கோரிக்கைகளுக்கு நம்பிக்கை வாக்கு அளிப்பவர்களுக்கு நன்றியோடு வாக்களிப்போம்... இல்லையென்றால் "நோட்டா/NOTA" வாக்களிப்போம் என அனைத்து கட்சிக்களுக்கும் ஆடு வளர்ப்போர் சங்கம் எச்சரிக்கை... சமூக நலன் கருதி அனைவருக்கும் தெரியப்படுத்தவும்... நன்றி - யாம்/YES

பசுமை விகடன்

தினமலர்


சட்டசபை தேர்தலில் எந்த கட்சி ஆடு வளர்ப்போருக்கான நலவாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கிறதோ, அக்கட்சிக்கு தான் எங்களது 25 லட்சம் ஓட்டுக்கள். இல்லையென்றால் நோட்டோவுக்கே எங்கள் ஓட்டு,' என தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் சங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஏதாவது போராட்டங்கள், அறிவிப்புகள் என வெளியிட்டால் தான் அதற்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். அ.தி.மு.க.,வின் ஐந்தாண்டு கால ஆட்சி முடிவடையும் நேரத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல போராட்டங்கள் அரங்கேறின. அந்த வழியில் தற்போது தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் சங்கத்தினரும் அரசியல் கட்சிகளிடம் கோரிக்கையை முன்வைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அச்சங்க மாநில தலைவர் திருநாகலிங்கம், பொது செயலாளர் குறுந்தாலிங்கம், பொருளாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:தமிழகத்தில் ஆடு வளர்க்கும் தொழிலில் 25 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்காக நலவாரியம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தினோம். தி.மு.க., ஆட்சியில் நடவடிக்கை எடுத்தும் செயல்பாடு இல்லை. நான்கு வழிச்சாலை அருகே உள்ள மேய்ச்சல் நிலங்கள், அழிக்கப்பட்டதால் ஆடு வளர்ப்போர் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர்.


லாரிகள் மோதி நுாற்றுக்கணக்கான ஆடுகள் ஒரே நேரத்தில் பலியாகின்றன. அதற்காக இன்சூரன்ஸ் பெறவும் வழியில்லை. வனப் பகுதியில் முன் அனுமதி பெற்று, ஆடு மேய்ப்பதற்காக, 3.3.2000ல் அரசு பிறப்பித்த உத்தரவையும் வன அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. வனப்பகுதியில் ஆடு மேய்க்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.


எனவே தமிழகம் முழுவதும் மேய்ச்சல் நிலத்தை கண்டறிந்து ஒதுக்க வேண்டும். முக்கியமாக ஆடு வளர்ப்போருக்கான நலவாரியம் அமைக்க வேண்டும். இதை எந்த கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் வெளியிடுகிறதோ அந்த கட்சிக்கு தான் எங்களின் 25 லட்சம் ஓட்டுக்கள்.

எந்த கட்சியும் வாக்குறுதி அளிக்கவில்லை என்றால் ஓட்டுக்கள் அனைத்தும் 'நோட்டோ' வுக்கு அளிப்போம் என்றனர்.

யாதவர் பண்பாட்டு கழக செயற்குழுக் கூட்டம்

மதுரையில் யாதவர் பண்பாட்டு கழக செயற்குழுக் கூட்டம் தலைவர் (பொறுப்பு) வீரணன் தலைமையில் நடந்தது. செயலாளர் கருப்பணழகு, பொருளாளர் குருசாமி முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், முத்துக்கிருஷ்ணன்,

சுந்தரராஜன் பேசினர். அரசு போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல், புதிய

உறுப்பினர்கள், அறங்காவலர்கள் சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Thursday, March 10, 2016

Association sseeks permission for rearing sheep

Tamil Nadu Yadava Goat Rearers Association today sought permission for rearing sheep in the forest lands and Government poramboke lands, as was done in many other states. 

Talking to newsmen K Kuruthalingam, state President of the Association, said since 2010 they were being harassed by the Officials despite the Government Order that they could graze the sheep freely in the forest lands for six months during the rainy season. 

Britishers charged Rs.One per goat and allowed them to graze,and it was increased to Rs three during the M G Ramachandran period and subsequently reduced to Rs two. Even though they were prepared to pay the fee the officials were not allowing them,and delaying providing them licence. 

"On the One hand the Government is giving free goat and on the otherhand the officials were also allowing them to graze the goat, he said. 

The association which had Ten lakh members sought a welfare board for the members who were nomads moving from place to place with their sheep for goats. 

Now the officials were trying to destroy the profession by preventing the sheep grazing in the forest areas during the rainy season. 

They wanted the government to launch vaccination programme for sheep ahead of the summer,and also two shops for the sheep rearers in the Government's Uzhavar sandhai.

Friday, March 4, 2016

ரயில் மறியல் முயற்சி: யாதவர் பேரவையினர் 55 பேர் கைது



யாதவர் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் ரயில் மறியலுக்கு முயன்ற யாதவர் தேசிய பேரவையினர் 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

யாதவர் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைப்பது, சாதிவாரிக் கணக்கெடுப்பு பட்டியலை வெளியிடுவது, ஆடு வளர்ப்போருக்குத் தனிவாரியம் அமைப்பது, யாதவர் கல்லூரி பிரச்னைக்குத் தீர்வு காண்பது, பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இப் போராட்டம் நடத்தப்பட்டது.

யாதவர் தேசிய பேரவை மாநிலத் தலைவர் ஏ.கே. பூமிராஜன் தலைமை வகித்தார். இளைஞரணித் தலைவர் பி. வேலுசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் மூவேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ரயில் மறியலுக்கு முயன்ற இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதையடுத்து, ரயில் நிலைய நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தில் ஈடுபட்ட யாதவர் தேசிய பேரவையைச் சேர்ந்த 55 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Thursday, March 3, 2016

கோகுல மக்கள் கட்சியில் போட்டியிட விருப்ப மனு

கோகுல மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்படுகிறது. வரும் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறலாம். கோகுல மக்கள் கட்சியின் தலைவர் எம்.வி.சேகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் சட்டமன்ற தேர்தலில் கோகுல மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், வரும் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறலாம். இந்த மனுக்களை பூர்த்தி செய்து 12ம் தேதிக்குள் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். பொது தொகுதிக்கு ₹2 ஆயிரம், தனி தொகுதி மற்றும் பெண்களுக்கு 1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar