"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Friday, May 19, 2017

மாட்டு வண்டிகளில் 8 நாள் பயணம் : 300 ஆண்டு பாரம்பரிய விழா

மாட்டு வண்டிகளில் பயணம்: 300 ஆண்டு பாரம்பரியம் மறக்காத பக்தர்கள்.

அபிராமம் அருகே 300 ஆண்டுகளாக பாரம்பரியத்தை மறக்காமல் மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து 8 நாள்கள் நடக்கும் திருவிழாவுக்காக, 8 நாள்கள் 200 கிமீ., துõரம் பக்தர்கள் பயணிக்கின்றனர்.

அபிராமம் அருகே அகத்தாரிருப்பிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன் அண்ணன் கூடலிங்கம், தம்பி இருளப்பன், தங்கை காளியம்மனுடன், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பஞ்சம் பிழைக்க சென்று, நற்காரியங்கள் செய்ததால் அங்கேயே தெய்வமாக பிறவி எடுத்தனர். அகத்தாரிருப்பை சேர்ந்த ராஜகுலத்தை சேர்ந்த ஆதிநாராயண கோனார் வகையறாக்களை சேர்ந்த அகத்தாரிருப்பு, நரியன்சுப்பராயபுரம், காடநகரி, முதுகுளத்துõர் அருகே செல்வநாயகபுரம், காமாட்சிபுரம், பூக்குளம், ராமநாதபுரம் அருகே கொம்பூதி, சிவகங்கை மாவட்டம் ஆரியூர், லட்சுமிபுரம் உட்பட 56 கிராமங்களை சேர்ந்தவர்கள் தெய்வமாக உருவெடுத்த அண்ணன், தம்பி, தங்கைகளை குல தெய்வமாக வழக்கமாக வணங்கி வழிபடுகின்றனர்.


அண்ணன் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுப்பட்டியில் கூடமுடையர் சுவாமியாகவும், கீழராஜகுலராமனில் தம்பி எத்தீஸ்வரர் பொன் இருளப்பசாமியாகவும், தங்கை ஸ்ரீவில்லிபுத்துõர் அருகே தைலாபுரத்தில் வீரகாளியம்மனாகவும் வீற்றிருக்கிறார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடபடும் கோயில் திருவிழாவுக்காக கமுதி அருகே அகத்தாரிருப்புக்கு முந்தைய நாள் இரவே பல்வேறு கிராமங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்கி, மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து 200 கிமீ., துõரத்தை, 8 நாள்கள் பயணித்து, 8 நாள்கள் திருவிழாவாக சொந்தங்களுடன் 16 நாள்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து அகத்தாரிருப்பு ஹரிநாராயணன் கூறுகையில், “ 300 ஆண்டுகளுக்கு மேலாக எங்களது மூதாதையர்கள் பின்பற்றி வந்த இத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் ஆதி நாராயண கோனார் வகையறாக்கள் அகத்தாரிருப்பில் முதல்நாளே வந்து தங்கி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூடமுடையர், பொன் இருளப்பசாமி, வீரமாகாளி ஆகிய தெய்வங்களை விரதம் இருந்து தரிசிக்க வருகின்றனர். எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும் மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து 200 கிமீ., துõரத்தை 8 நாள்கள் பயணிக்கின்றனர். திருத்தங்கல் அருகே கிருஷ்ணா கரை சேர்ந்து, பக்தர்கள் குழுவாக தனித்தனியாக பிரிந்து, தம்பி இருளப்பசாமி, தங்கை வீரமாகாளிக்கு 5 ஆம் நாள் இரவு கிடாவெட்டி அன்னதானம் வழங்கி, தம்பி, தங்கையை பக்தர்கள் புடைசூழ அழைத்து சென்று, அண்ணன் கூடலிங்கம் சுவாமி கோயிலுக்கு சென்று 8 வது நாள் கிடா வெட்டி விரதத்தை முறித்து, சொந்த ஊருக்கு 13 ஆம் நாள் திரும்பும் நிகழ்வு ஏற்படுகிறது. வயது முதிர்ந்த, நோய்வாய்ப்பட்டவர்கள் சரக்கு வாகனம், டிராக்டர்களில் கூடாரம் அமைத்து கோயிலுக்கு செல்வது சமீபகாலமாக உள்ளது. இருந்தபோதிலு
ம் பாரம்பரியத்தை மறக்காத பக்தர்கள் இன்னும் மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து 400 க்கும் மேற்பட்ட வண்டிகளில் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இத்திருவிழாவால், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியூர் சொந்தங்களை சந்தித்து, 16 நாள்கள் மகிழ்ச்சியுடன் வருவது நெஞ்சை வருடுகிறது”, என்றார்.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar