"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Showing posts with label இராமநாதபுரம். Show all posts
Showing posts with label இராமநாதபுரம். Show all posts

Sunday, February 26, 2017

பழமை வாய்ந்த இடையன்வயல் கோபாலமடம் புனரமைக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் இடையன்வயலில் சிதிலமடைந்து காணப்படும் பழமை வாய்ந்த கோபாலமடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மடம் 311 ஆண்டுகளுக்கு முன் அன்றைய சேதுபதி மன்னரான கிழவன் ரெகுநாத சேதுபதி காலத்தில் கட்டப்பட்டதாக செப்பேடுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன. இந்நிலையில் இந்த கோபாலமடமும், இங்குள்ள ராமர் பாதம் கோயிலும் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இவற்றை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து பேராசிரியர் வள்ளி கூறியதாவது: ராமேசுவரத்துக்கு அன்றைய கால கட்டங்களில் சேது யாத்திரையாக பக்தர்கள் வந்து சென்றனர். போக்குவரத்து வசதிகளும், தங்கும் இடமும் அவ்வளவாக இல்லாத அக்காலத்தில் சேதுபதி மன்னர்கள் ஆங்காங்கு சத்திரங்களையும், மடங்களையும் கட்டிக் கொடுத்தனர். செப்பேட்டில் குறிப்பிட்டுள்ள இந்த கோபாலமடம் சுந்தரபாண்டியபட்டினத்துக்கும், தீர்த்தாண்டதானத்திற்கும் இடையே அமைந்துள்ளது. இம்மடத்திற்கு அருகிலேயே ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோயிலும் உள்ளது. சேதுபதி மன்னரான கிழவன் ரெகுநாத சேதுபதி, பெருமாள் கோன் என்பவருக்கு தீர்த்தாண்டதானத்திற்கு வடக்கில் ஒரு மடம் கட்டிக் கொள்ள அனுமதியளித்து செப்புப் பட்டயம் கொடுத்துள்ளதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

இதனிடையே தற்போது சிதிலமடைந்து காணப்படும் இந்த இடையன்வயல் கோபாலமடத்தையும், ராமர் பாதம் உள்ள கோயிலையும் மீண்டும் புதிப்பித்து தர வேண்டும் என்பது பெருமாள் கோனின் 6-ஆவது தலைமுறையினராக தற்போது வசித்து வரும் பாண்டி, குமார் மற்றும் இவர்களது பெரியப்பா மகன் சந்திரன் ஆகியோரின் கோரிக்கையாகும்.

இதுகுறித்து குமார் கூறுகையில், 17 ஆம் நூற்றாண்டில் இந்த பணியினை எங்கள் முன்னோர்கள் மேற்கொண்டுள்ளனர். இன்றைக்கு செப்பேட்டில் உள்ளது போன்று எதுவும் இல்லாத நிலையில், எங்களது முன்னோர்களது பணியினை நாங்கள் தொடர வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

நன்றி தினமணி

Saturday, January 23, 2016

கோரிக்கையை ஏற்று அங்கீகாரம் வழங்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் யாதவ மகாசபை பொதுச்செயலாளர் பேட்டி

பரமக்குடியில் யாதவ சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று அங்கீகாரம் வழங்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று யாதவ மகாசபை பொதுச்செயலாளர் பேட்டிஅளித்தார்.

ஆலோசனைகூட்டம்

பரமக்குடியில் யாதவ மகாசபையின் ராமநாதபுரம் மாவட்ட ஆலோசனைகூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட பொறுப்பாளர் அண்ணாஇளம்பரிதி தலைமை தாங்கினார். தென்னவனூர் சந்திரன் முன்னிலைவகித்தார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் தர்மலிங்கம், மாவட்ட துணைத்தலைவர் வேலுமனோகரன் மற்றும் சண்முகராஜ், செந்தாமரைகண்ணன், பரமக்குடி யாதவர் சங்க தலைவர் வெள்ளைச்சாமி, மாவட்ட பொறுப்பாளர் ஹரிகரன், யாதவ சபை மாவட்ட பொறுப்பாளர் இளங்கோவன் உள்பட பலர் பேசினர். தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


பின்னர் தமிழ்நாடு யாதவ மகாசபையின் பொதுச்செயலாளர் தர்மலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:– தமிழ்நாட்டில் யாதவ மகாசபை நாளுக்குநாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. யாதவ சமுதாயத்துக்கு கொடுக்கவேண்டிய அரசியல் அங்கீகாரத்தை அ.தி.மு.க.,தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வழங்குவதில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குகளை பெற வருகின்றனர். வெற்றிபெற்ற பின்னர் கண்டுகொள்வதில்லை. 1931–ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் 4–வது சமுதாயமாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 80 லட்சம் பேர் உள்ளோம்.


அரசு விழா

வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட்டு வழங்கவேண்டும். எங்கள் கோரிக்கையை ஏற்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். தமிழகத்தில் நீதிபதிகள் நியமனத்தில் யாதவ சமுதாய மக்களுக்கு பங்களிப்பு இல்லாமல் உள்ளது. வீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கவேண்டும். வருகிற சட்டசபை தேர்தலில் எங்கள் கோரிக்கையை ஏற்று கட்சிகள் அங்கீகாரம் வழங்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது சட்டஆலோசகர் சதீஷ்வரன்,வக்கீல் ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டனர்

Tuesday, November 17, 2015

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்(யாதவ சமுதாயம்) அருள்பாளிக்க காத்திருக்கும் ஸ்ரீகண்ணன் ஆலயத்தின் கட்டுமான பணிகள் சிறப்பாக நடைபெருகிறது அதற்க்கான நன்கொடை வசூலிக்கப்படுகிறது.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்(யாதவ சமுதாயம்) அருள்பாளிக்க காத்திருக்கும் ஸ்ரீகண்ணன் ஆலயத்தின் கட்டுமான பணிகள் சிறப்பாக நடைபெருகிறது அதற்க்கான நன்கொடை வசூலிக்கப்படுகிறது.
நன்கொடை தரவிரும்பியவர்கள் கிழே கொடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்க்கவும்...
என்றும் சமுதாய பணியில்...

ம.மோகன்ஜீ யாதவ்(நரிவிழா)
இனையதள பொருப்பாளர் கோகுலம்
அறக்கட்டளை-தமிழ்நாடு
மற்றும்
கோகுலம் இளம் உள்ளங்கள்-நரிவிழா.

Saturday, September 5, 2015

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் நரிவிழா கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா(05.09.2015)

யாதவ சொந்தங்களுக்கு வணக்கம்
பரமக்குடி வட்டம் நரிவிழா கிராமத்தில்
நடைபெற்ற ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவில்
கோகுலம் அறக்கட்டளை நரிவிழா தோழர்கள் சார்பாக குழந்தைகளுக்கு நோட்டு பத்தகம் வழங்கப்பட்டது
இதற்க்கான ஏற்ப்பாடுகலை ம.மோகன்ஜீ யாதவ் கு.திருஜீ யாதவ் தலமையில் செய்யபட்டது
உறுப்பினர்கள்:
மு.சேதுராஜ் யாதவ்
க.குருஜீ யாதவ்
ஆ.ஜனாஜீ யாதவ்
இ.அக்கைக்குமார் யாதவ்
இவர்க்ளுக்கு நன்றி
என்றும் சமுதாய பணியில்
ம.மோகன்ஜீ யாதவ்(நரிவிழா)
இனையதள பொருப்பாளர்
கோகுலம் அறக்கட்டளை தோழர்கள்
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி
மற்றும்
கோகுல யாதவ இளைஞர் சங்கம்
கோகுல இளம் உள்ளங்கள்
முல்லை மகளிர் மன்றம்
நரிவிழா








Friday, August 7, 2015

இராமநாதபுரம் மாவட்டதில் மாவீரனின் அழகு முத்து கோன் திருவுருவச்சிலையை நிறுவுவ கோரி யாதவர் தேசிய பேரவை போராட்டம்12.8.2015

அன்பு யாதவர் சொந்தங்களே!
வணக்கம்12.8.2015 அன்று நடைபெறவிருக்கும் போராட்டத்தில்
இளைஞர்களாகிய நாம் ஒன்று கூடினால் முடியாதது இவ்வையகத்தில் உண்டோ சிந்திப்பீர் 
நம்முடைய முதல் போராட்டக்களம்
இராமநாதபுரம் மாவட்டதில் 
மாவீரனின் அழகு முத்து கோன்.திருவுருவச்சிலையை நிறுவுவ கோரியும் பூரண மதுவிலக்கு கோரியும் இதில் வெற்றி பெற்றாலே போதும்
நம்முடைய இலட்சியத்தை எளிதாக அடையலாம்
பெயரு
க்கு தான் ஜனநாயகம்
அரசாங்கம் மக்களை மக்காளாக பாவிக்கவில்லை
மக்களை ஒட்டு வங்கியாக மட்டுமே பார்க்கிறது
அதனால் ஒற்றுமையோடு வாய்திறந்து கேட்பவனுக்கு எல்லாம் கிடைக்கிறது
தமிழக அளவில் நம் சமுதாயத்தின் மீது அனைத்து அரசியல் கட்சிகளின் பார்வையை விழச்செய்வது நமது கடமை
சிந்திப்பீர் சொந்தங்களே
12.8.2015 அன்று நடைபெறவிருக்கும் இராமநாதபுரம்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு இளைஞர்களின் ஆதரவும் பங்களிப்பும் மிகவும் அவசியம்
இன உணர்வுள்ள யாதவனே சிந்தித்து செயல்படு
நம்முடைய முயற்சி நமக்காக மட்டுமல்ல
நம்முடைய வருங்கால சந்ததிகள் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக
வாழ்க யாதவம்
வளர்க யாதவர் ஒற்றுமை!தலைவர்.A.K.பூமிராஜன்யாதவ் .A. கரந்தமலை கண்ணன்யாதவ் மாநில பொதுசெயலாளர் அவர்கள்.அழைக்கிறது..யாதவர் தேசிய பேரவை.9047996890..9047274365

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar