"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Showing posts with label சிவகங்கை. Show all posts
Showing posts with label சிவகங்கை. Show all posts

Wednesday, December 30, 2015

புலிக்குளம் காளை

ஜல்லிக்கட்டு
புலிக்குளம் என்னும் ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. ஜல்லிகட்டுக்கு என்று பிரத்தேகமாக வளர்க்கப்படும் காளையினம் புலிக்குளம் . இது காங்கேயம் காளைகளை விட மிகவும் ஆக்ரோசமானது. புலிக்குளம் காளைகளை பாரம்பரிய கால்நடை வளர்பாளர்களான கோனார்களே (ஆயர்) வளர்த்து வருகின்றனர். உலகளவில் இந்திய நாட்டின பசுக்களின் பாலே அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதிலும் புலிக்குளம் இன பசுக்களின் பாலே சிறந்தது என்று விஞ்ஞானிகளால் நிருபிக்கப்பட்டுள்ளது.

Sunday, November 29, 2015

காளையார்கோவில் தாலுக்கா,காளக்கண்மாய் (ஊராட்சி) கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீ கோகுலக்கிருஷ்ணன் திருக்கோவில் திருப்பணிக்கு நன்கொடை

பேரன்புடையீர் வணக்கம்,
சிவகங்கை மாவட்டம்,காளையார்கோவில் தாலுக்கா,காளக்கண்மாய் (ஊராட்சி) கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீ கோகுலக்கிருஷ்ணன் திருக்கோவில் திருப்பணிக்கு தாங்களால் முயன்ற நிதி உதவியோ அல்லது பொருள் உதவியோ செய்து கோவில் கட்டிடப்பனிக்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவன்:
ஸ்ரீ கோகுலக்கிருஷ்ணன் திருக்கோவில் திருப்பனி குழுவினர்கள் 
காளக்கண்மாய்,சிவகங்கை,மாவட்டம்.
[ பதிவு எண் :835/2015 ]
தொடர்புக்கு:

செல் : 7200602104,9786531372 இ-மெயில் :krishnantemple974@gmail.com




Monday, October 26, 2015

ஆற்றிலே வந்த அம்மன்

ஒருகாலத்தில் வற்றாத நதியாக ஓடிக்கொண்டிருந்த தேனாற்றில் கண்டெடுக்கப்பட்ட அம்மன்தான் தேனாற்று அம்மன்.

பிள்ளையார்பட்டியைத் தழுவி நிற்கும் சிராவயல் புதூர் கிராமம், மஞ்சு விரட்டுக்குப் புகழ்பெற்றது. இவ்வூரில்தான் இருக்கும் திருத்தலம் தேனாட்சியம்மன் கோயில். சிராவயல் புதூரைச் சேர்ந்த இடையர் குலத்து பெண் ஒருவர், தினமும் தலைச் சுமையாய் மோர்ப் பானையைத் தூக்கிச் சென்று அக்கம் பக்கத்து ஊர்களில் மோர் விற்றுவிட்டு வருவார். திரும்பி வருகிறபோது மோர்ப்பானை, உழக்கு, கரண்டி இவற்றை தேனாற்றில் கழுவி எடுத்துச் செல்வது அவரது வாடிக்கை.

ஒருநாள் அப்படி பானையைக் கழுவிக்கொண்டிருந்தபோது ஆற்றுக்குள் மார்பளவு தண்ணீரில் அம்மன் சிலை ஒன்று நிற்பதைக் கண்டார். பக்திப் பரவசத்தில் கைகூப்பி அம்மனை வனங்கியவர், ஊருக்குள் ஓடினார். ஊரார் வரும்வரை அப்படியே அம்மன் சிலை நின்றதாக நம்பப்படுகிறது. ஆற்றுக்குள் இருந்த அம்மன் சிலையைக் கரைக்குக் கொண்டு வந்தவர்கள் பின்னர் அம்மன் வழிகாட்டுதல்படியே ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பிரதிஷ்டை செய்தனர்.

சேவை செய்த இடையர் குலப்பெண்

தேனாற்றில் கண்டெடுத்த தெய்வம் என்பதால் அம் மனுக்கு ‘தேனாற்று நாச்சி’ என்று பெயர் சூட்டினார்கள். பிறகு அதுவே தேனாட்சியம்மனாக மருவியது. அந்தக் கோயிலைச் சுற்றி குட்டியாய் இரு கிராமம் உருவானது. அது அம்மன் பெயராலேயே தேனாட்சியம்மன் கோயில் என்றானது. அம்மனைக் கண்டெடுத்த இடையர் குலப்பெண், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அம்மனே கதி என்று கிடந்தார். உணவு, உறக்கம் மறந்து அம்மனே பித்தாகக் கிடந்து முக்தியடைந்தார். அதன் பிறகு, அம்மனுக்கு எதிரே இடையர் குலப் பெண்ணுக்கும் சிலை வைத்த மக்கள், அதை இடைச்சி அம்மனாக வழிபடத் தொடங்கினார்கள்.

சித்ரா பவுர்ணமி

ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியின்போது பூச்சொரிதல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட வைபவங்கள் அம்மனுக்கு அதிவிமர்சையாக நடைபெறுகின்றன. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை அம்மனுக்குப் பத்து நாள் செவ்வாய் திருவிழாவும் நடக்கிறது.

Thursday, August 13, 2015

ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் திருப்பணிக்கு நன்கொடை வரவேற்கபடுகிறது:கோவில் திருப்பணி குழுவினர், படமாத்தூர்,சிவகங்கை


பேரன்புடையீர் வணக்கம்,
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகா ,படமாத்தூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் திருப்பணிக்கு தாங்களால் முயன்ற நிதி உதவியோ,பொருள் உதவியோ செய்து கோவில் கட்டிட பணிக்கு உதவி செயும்மாறு அன்புடன் கேட்டு கொள்ளுகிறோம் .. 
கோவில் திருப்பணி குழுவினர் ,
படமாத்தூர் .
தொடர்புக்கு 
செல்: 9566782141, 7639962947

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar