"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Thursday, October 15, 2015

மதுர கவிராயரும் ஆனந்தரங்கம் பிள்ளையும்

ஆனந்தரங்கம் பிள்ளை
அக்காலத்தில் சென்னையில் உள்ள பெரம்பூரில் ஆனந்தரங்கம் பிள்ளை என்பவர் இருந்தார். அவர் தமது தந்தையாருடன் புதுவைக்குச் சென்று வாழ்ந்தார். அப்போது புதுவையில் இருந்து ஆட்சி புரிந்த டுயூப்ளே என்பவர், ஆனந்தரங்கம் பிள்ளையின் அறிவாற்றலையும், அரசியல் தந்திரத்தையும் அறிந்தார். அவரைத் தம் உள்நாட்டு, வெளிநாட்டு அமைச்சராக நியமித்தார்.
அக்காலத்தில் அவருக்கு அந்த உயர்ந்த பதவி கிடைத்தது, குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலாகும். ஏனென்றால், அக்காலத்தில் ஏகபோக உரிமை பிரெஞ்சுக்காரருக்கே இருந்தது. பிரெஞ்சு ஆட்சியில் பிரெஞ்சு சரித்திரத்தில் முதலிடம் பெற்ற இந்தியர் ஆனந்தரங்கம் பிள்ளையே.
ஆனந்தரங்கம் பிள்ளை அருந்தமிழில் பெரும் பற்றும், புலவர்களிடத்தில் பேரன்பும் கொண்டிருந்தார். அவரது பெருங்குணத்தைப் பற்றி மதுர கவிராயர் என்பவர் கேள்விப்பட்டார். மதுர கவிராயரின் தமிழ் உள்ளம், பிள்ளையவர்களைக் காண விரும்பியது. அதனால், அவர் புதுவை நகர் வந்தடைந்தார்.
புதுவையை அடைந்த மதுர கவிராயர், ஆனந்தரங்கம்பிள்ளையின் அழகிய மாளிகையைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது பிள்ளையவர்கள் மாளிகையில் இல்லை. மாளிகையில் இருந்தோர், பிள்ளையவர்கள் வயற்புறம் சென்றிருப்பதாகக் கூறினர்.
அதனை அறிந்த கவிராயரும் வயற்புறம் நோக்கிச் சென்றார். சலசல என்று ஓடும் வாய்க்கால் நீரும், அதை எதிர்த்து உடலசைத்துச் சென்ற மீன்களும் கவிராயருக்குக் களிப்பை உண்டாக்கின. வயல்களில் கதிர்களின் பாரத்தைத் தாங்க முடியாமல் பயிர்கள் சாய்ந்து கிடந்தன. அவை சாய்ந்து கிடந்தமையால் வயல்கள் மறைப்புண்டு கிடந்தன. சில வயல்களில் விண்ணில் நட்சத்திரங்கள் சிதறிக் கிடப்பதைப் போல் செந்நெல் மணிகள் விழுந்து கிடந்தன.
ஆனந்தரங்கம்பிள்ளை அந்நெல்மணிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். மதுரகவிராயர் மெதுவாகச் சென்று அவர் எதிரே அரவமின்றி நின்றார். பிள்ளையவர்கள் தற்செயலாகத் தலை நிமிர்ந்தார். கவிராயரைக் கண்டார்.
அன்பு நிறைந்த முகத்துடன், ""வணக்கம்! அந்த வரப்பின் மேல் உட்காருங்கள் வந்து விடுகிறேன்!'' என்று கூறினார்.
அவர் கூறியபடியே மதுரகவிராயர், புற்கள் நிறைந்திருந்த வரப்பின் மேல் உட்கார்ந்தார். சிறிது நேரம் சென்ற பிறகு பிள்ளையவர்கள் முன் போலவே நெல்மணிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் வருவார் என்று கருதி அமர்ந்திருந்த கவிராயர், எழுந்திருப்பதும், உட்காருவதும், சிறிது நடப்பதுமாக இருந்தார். அவ்வாறெல்லாம் செய்வதன் மூலம் தம்முடைய அவசரத்தை அவருக்கு உணர்த்தினார்.
அதனை அறிந்த பிள்ளையவர்கள் கவிராயரைப் பார்த்து, ""ஏன் பறக்கிறீர்?'' என்று கேட்டார்.
அதைக் கேட்ட கவிராயரின் முகத்தில் சினக்குறி தோன்றியது. பிள்ளையவர்களின் வார்த்தை கவிராயருக்குக் கடுமையானதாகத் தோன்றியது. கவிராயரின் உள்ளத்தை அவருடைய வார்த்தை சுருக்கென்று சுட்டது.
கவிராயர் உடனே பிள்ளையவர்களைப் பார்த்து, ""கொக்குப் பறக்கும், புறா பறக்கும், குருவி பறக்கும், நக்குப் பொறுக்கிகளும் பறப்பர். மக்கள் தலைவனே! நான் ஏன் பறப்பேன்?'' என்று கருத்தமைந்த ஒரு பாடலைப் பதிலாகப் பாடினார்.
ஆனந்தரங்கம் பிள்ளையவர்கள் அந்தப் பாடலின் சுவையைச் சுவைத்துக் கொண்டே தம் வீட்டிற்குப் புறப்பட்டார். கவிராயர் முன்னே செல்ல, பிள்ளையவர்கள் பின்னே சென்றார். பிள்ளையவர்கள் மதுரகவியாரைத் தம் மாளிகைக்குள் அழைத்துச் சென்றார். அம்மாளிகையின் மீது பிரெஞ்சுக்கொடி பறந்து கொண்டிருந்தது.
அந்த மாளிகையில் மதுரகவிராயர் களைப்பாறினார். அவருக்கு உணவளிக்க பிள்ளையவர்கள் தலை வாழை இலையை அவர் முன் போட்டர். கவிராயருக்கோ கடும்பசி. பிள்ளையவர்கள் வெள்ளித் தட்டில் பொற்காசுகளைக் கொண்டு வந்து கவிராயர் முன் இருந்த இலையில் வைத்தார். வைத்துவிட்டு, கவிராயரை முகமலர்ச்சியுடன் பார்த்து, ""மதுரகவி பாடும் மதுரகவிராயரே! இதனை மதுரமோடு உண்ணுங்கள்!'' என்று கூறினார்.
அதைக் கேட்ட மதுரகவிராயர் திகைத்தார். பிள்ளையவர்கள், ""கவிராயரே! ஏன் விழிக்கிறீர்? இதனை உண்ணுங்கள். நான் வயலில் உதிர்ந்து கிடந்த நெல்லைப் பொறுக்கினேன். அதனை நீர் அற்பமாக நினைத்தீர். அது நெல்லன்று; பசிப் பிணி மருந்து. அது பசியை ஒழிக்குமா? இந்தப் பொற்காசுகள் பசியை ஒழிக்குமா?'' என்று வேடிக்கையாகக் கேட்டார்.
அதைக்கேட்ட மதுரகவிராயர், ""என்னைப் பசி மிகவும் எரித்தது. அதனால், நான் பசியைப் போக்கிக் கொள்ள உங்களைத் துரிதப்படுத்தினேன்!'' என்று பதில் கூறினார்.
அதைக்கேட்டு பிள்ளையவர்கள் சிரித்தார். கவிராயர் முன் இருந்த இலையை இழுத்துப் பக்கத்தில் வைத்துவிட்டு, அவர் அருகில் அமர்ந்தார். வேலையாள் அவர்கள் இருவருக்கும் இலையிட்டு உணவு பறிமாறினான். இருவரும் இனிது உண்டனர். பிள்ளையவர்கள் அதன் பிறகு அப்பொற்காசுகளை அக்கவிராயருக்கே பரிசாக அளித்துவிட்டார். மதுரகவிராயர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு தம் ஊர் திரும்பினார்

Monday, August 17, 2015

எழும்பூரில் வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் மாலை அணிவிப்பு

எழும்பூரில், சுதந்திர போராட்ட மாவீரர், வீரன் அழகு முத்து கோன் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் நிர்வாகிகள் என்.சுப்பிரமணியம் யாதவ், ஆர்.பி.தர்மலிங்கம் யாதவ், கே.ஜோதிலிங்கம் யாதவ், கே.எம்.ராஜன் யாதவ், எம்.வி.சேகர் யாதவ், பூவை சுந்தர், போரூர் முருகா தாமோதரன், கே.எத்திராஜ், கேப்டன் ராஜன், பி.வி.சேகர், எம்.ஆர்.கே.மெய்யப்பன், ஓ.எம்.பி.ராமதாஸ், என்.தேவதாஸ், ஏ.எஸ்.பழனியாதவ், பி.தங்கராஜ், எம்.வி.புண்ணிய சேகர், எம்.சங்கர், எஸ்.செல்வம், வி.ராஜீ, மயிலை கிருஷ்ணன், பி.ஆர்.முத்து, காளிதாஸ் யாதவ், வேல் தளபதி, பி.மகாலிங்கம், சி.எஸ்.தனசேகரன், எஸ்.பாலுச்சாமி உள்பட ஏராளமானோர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தென்சென்னை மாவட்டம் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தை உள்ளடக்கிய 37 யாதவர் நலச்சங்க நிர்வாகிகளும் திரளாக பங்கேற்றிருந்தனர்.

மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி முடிந்ததும் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

Monday, July 13, 2015

258–வது நினைவுநாள்: வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு ராமதாஸ்- காங்கிரஸ் மரியாதை

இந்திய சுதந்திர போராட்ட முதல் மாவீரன் அழகு முத்துக்கோன் 258–வது குரு பூஜை விழா இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கோகுல மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி. சேகர் தலைமையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காந்தி இர்வின் சாலையில் இருந்து கோகுல மக்கள் கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர். பின்னர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:–

சுதந்திர போராட்ட தியாகிகளை இந்த அரசு மரியாதை செலுத்த தவறி விட்டது. வீரன் அழகு முத்து கோன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் காட்டாங்குளத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தை சீரமைக்க வேண்டும். அவரது வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் படிக்கும் வகையில் பாட புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், காங்கிரஸ் செயலாளர் எச்.வசந்தகுமார், தமிழ்நாடு யாதவ மகாசபை பொதுச்செயலாளர் என். சுப்பிரமணியன், கொங்கு நாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ், வேளாளர் – பிள்ளைமார் செங்குந்த முதலியார் கூட்டமைப்பு தலைவர் நடிகர் கே.ராஜன்.

கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி தலைவர் எம். முனுசாமி, தேசிய நெச வாளர் கட்சி தலைவர் பகவான் பரமேஸ்வர முதலியார், இந்து மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன், தமிழ்நாடு யாதவ சங்க தலைவர் சரசு முத்து உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கோகுல மக்கள் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் எல்.வி.ஆதவன், தலைமை நிலைய செயலாளர் கஜேந்திரபாபு, ஏழுமலை, அரிகிருஷ்ணன், கோதண்டராமன், மணிமாறன், சைதை ஜெயகுமார், ராஜேந்திரன், மனோகரன், ஆலந்தூர் ராஜேந்திரன், மயிலை கிருஷ்ணன், அரிதாஸ், கொளத்தூர் குணசேகரன், அன்பழகன், காஞ்சீபுரம் நந்த கோபால், ஜெனனி வெங்கடேசன்.

பா.ம.க. நிர்வாகிகள் ஜெயராமன், செங்குட்டுவன், வண்ணை சத்யா, பாண்டியன், சீமான் இளங்கோவன், சேகர், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி எழும்பூர் பகுதியில் இன்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கோகுல மக்கள் கட்சி சார்பில் இந்திய சுதந்திர போராட்ட முதல் மாவீரன் அழகு முத்துக்கோன் 258–வது குரு பூஜை விழா

இந்திய சுதந்திர போராட்ட முதல் மாவீரன் அழகு முத்துக்கோன் 258–வது குரு பூஜை விழா இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கோகுல மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி. சேகர் தலைமையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காந்தி இர்வின் சாலையில் இருந்து கோகுல மக்கள் கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர். பின்னர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:–

சுதந்திர போராட்ட தியாகிகளை இந்த அரசு மரியாதை செலுத்த தவறி விட்டது. வீரன் அழகு முத்து கோன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் காட்டாங்குளத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தை சீரமைக்க வேண்டும். அவரது வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் படிக்கும் வகையில் பாட புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், காங்கிரஸ் செயலாளர் எச்.வசந்தகுமார், தமிழ்நாடு யாதவ மகாசபை பொதுச்செயலாளர் என். சுப்பிரமணியன், கொங்கு நாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ், வேளாளர் – பிள்ளைமார் செங்குந்த முதலியார் கூட்டமைப்பு தலைவர் நடிகர் கே.ராஜன்.

கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி தலைவர் எம். முனுசாமி, தேசிய நெச வாளர் கட்சி தலைவர் பகவான் பரமேஸ்வர முதலியார், இந்து மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன், தமிழ்நாடு யாதவ சங்க தலைவர் சரசு முத்து உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கோகுல மக்கள் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் எல்.வி.ஆதவன், தலைமை நிலைய செயலாளர் கஜேந்திரபாபு, ஏழுமலை, அரிகிருஷ்ணன், கோதண்டராமன், மணிமாறன், சைதை ஜெயகுமார், ராஜேந்திரன், மனோகரன், ஆலந்தூர் ராஜேந்திரன், மயிலை கிருஷ்ணன், அரிதாஸ், கொளத்தூர் குணசேகரன், அன்பழகன், காஞ்சீபுரம் நந்த கோபால், ஜெனனி வெங்கடேசன்.

பா.ம.க. நிர்வாகிகள் ஜெயராமன், செங்குட்டுவன், வண்ணை சத்யா, பாண்டியன், சீமான் இளங்கோவன், சேகர், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி எழும்பூர் பகுதியில் இன்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

















அழகுமுத்துக்கோன் 256-வது நினைவுதினம்: அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து நினைவஞ்சலி

அழகுமுத்துக்கோன் நினைவுதினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.அழகுமுத்துக்கோன் நினைவுதினம்

சுதந்திர போராட்டத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து நின்று வீரமரணம் அடைந்த வீரர் அழகுமுத்துக்கோனின் 256-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள அழகுமுத்துக்கோனின் உருவச்சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் தி.தேவநாதன் யாதவ், தமிழ்நாடு யாதவ சங்க நிறுவன தலைவர் செ.சரசுமுத்து யாதவ் உள்பட யாதவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.

அரசியல் கட்சிகள்

பா.ஜ.க. சார்பில் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தலைமையில் பா.ஜ.க.வினரும், பா.ம.க. சார்பில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், காங்கிரஸ் சார்பில் மாநில துணைத் தலைவர் எச்.வசந்தகுமார், பொருளாளர் நாசே ராமச்சந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அழகுமுத்துக்கோன் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவபடத்திற்கு மலர் தூவியும், மாலை அணிவித்தும் நினைவஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், “சுதந்திர போராட்ட வீரரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடவேண்டும். ஆனால் அரசு சார்பில் உரிய மரியாதை செலுத்தாதற்காக நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாறு அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெறவேண்டும். அழகுமுத்துக்கோனின் நினைவு மண்டபம் சீரமைக்கப்படவேண்டும்” என்றார்.

தள்ளு, முள்ளு

நடிகர் கே.ராஜன் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அழகுமுத்துக்கோனுக்கு மரியாதை செலுத்த வருபவர்களுக்கு இடையூறாக இருப்பதால் சிறிது நேரம் வாகன போக்குவரத்தை அனுமதிக்கக்கூடாது என்று கூறி யாதவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும், யாதவ அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Sunday, July 12, 2015

முதல் சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை:தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை


மாவீரன் அழகுமுத்துக்கோனின் நினைவு தினம் மற்றும் குருபூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவன தலைவர் டாக்டர். தி. தேவநாதன் யாதவ், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல் சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்து கோனின் 256ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் நினைவு நாள் நிகழ்ச்சிகள் மற்றும் குருபூஜை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூரில் உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோனின் திருவுருவ சிலைக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவன தலைவர் டாக்டர். தி. தேவநாதன் யாதவ், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து துணைத்தலைவர்கள் ர.குணசீலன், சாலமன் மோகன்தாஸ், தேர்தல் பிரிவு செயலாளர் நந்தகுமார், செய்தி தொடர்பாளர் பிரவீன் பிலிப், யாதவ மகாசபை தேசிய பொதுச்செயலாளர் பாசிங்கம், மாநில அமைப்பு செயலாளர் விஜயகுமார், திருவள்ளூர் மாவட்ட தலைவர் சீனிவாசன், அம்பத்தூர் பகுதி செயலாளர் தேவராஜ், இணையதள பொறுப்பாளர் விருகை கண்ணன், புதுச்சேரி மாநில தலைவர் செல்வராஜ், அண்ணாநகர் பகுதி பொறுப்பாளர் பாபு ராஜேந்திரன், திருவொற்றியூர் பகுதி பொறுப்பாளர் உடையார் பாலாஜி மற்றும் ஆயுதம் அமைப்பின் தலைவர் எம்.பி.நாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இதை தொடர்ந்து மதுரை யாதவா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அழகுமுத்துக்கோன் நினைவு நாள் மற்றும் குருபூஜையில் கலந்துகொள்ளும் டாக்டர். தி. தேவநாதன் யாதவ், பின்னர் கட்டாலன்குளம் அழகுமுத்துக்கோன் நினைவு இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதை தொடர்ந்து மாலை 6 மணியளவில் நெல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் டாக்டர். தி. தேவநாதன் யாதவ் உரையாற்றுகிறார். 
இதனிடையே வீரன் அழகுமுத்து கோனின் 256-வது நினைவு நாள் அனுசரிக்கப்படுவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 5 மணிமுதல் 24 மணிநேரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar