"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Showing posts with label யாதவர். Show all posts
Showing posts with label யாதவர். Show all posts

Thursday, October 29, 2015

பிணி தீர்க்கும் பெருமாள்:காட்டுப்பரூர்

பிணி தீர்க்கும் பெருமாள்- காட்டுப்பரூர் இந்தக் கோயிலில் பரம்பரை பரம்பரையாக யாதவர்களே பூஜை செய்து வருகிறார்கள்

அந்த முதியவருக்குக் கடுமையான வயிற்றுவலி. வேதனையால் துடித்தார். கொஞ்சம் கஞ்சி குடித்தாலும் வலி உயிர் போகும். சரி, கஞ்சி குடித்தால் வயிறு வலிக்கிறதே என்று குடிக்காமல் இருந்தாலும் பசியால் வயிறு வலிக்கத்தான் செய்யும். 

பார்க்காத வைத்தியரில்லை... குடிக்காத கஷாயமில்லை. சுத்துப்பட்டில் பல வைத்தியரைப் பார்த்தாயிற்று. இந்தப் பச்சிலை... அந்தப் பச்சிலை என்று நிறைய தின்றாயிற்று. ஆனால், குணமானபாடில்லை. ‘என்ன பாவம் செய்தேனோ இந்த சித்ரவதையை அனுபவிக்கிறேன்’ என்று தனக்குத்தானே புலம்பிக் கொள்வார், அந்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளி. 

‘கடவுளே... இனி நீ விட்ட வழி’ என்று தனது கிராமத்தின் மண் சாலையின் ஓரத்தில் இருந்த அரச மர நிழலில், அங்கிருந்த கல்லில் தலை சாய்த்துப் படுத்தார். வயிறு இழுத்துப் பிடித்தது போல வலித்தது. ‘கடவுளே... கடவுளே’ என முனகியபடி கிடந்தார். வேதனையால் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அப்போது அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த ஒரு பயணி இவரது வேதனையை பார்த்து மனம் வருந்தினார். எழுப்பி விவரம் கேட்டார். 


கதறியழுதபடி தனது வேதனையை சொன்னார் முதியவர். கண்மூடி யோசித்த அவர், ‘‘இது பிறவிப் பிணி. இதை அந்த கேசவனால்தான் தீர்க்க முடியும். காட்டுப்பரூர் செல். அங்கு ஒரு வாரகாலம் தங்கி, பெருமாளை வழிபடு. நிச்சயம் உன் பிணி தீரும்’’ என்றார். கடவுளே நேரில் வந்து சொன்னதாகக் கருதி, தனது கிராமத்திலிருந்து காட்டுப்பரூர் புறப்பட்டார், முதியவர். அங்கிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் தனது துணிமணிகளை வைத்து விட்டு, நாள்தோறும் திருக்கோயில் குளத்தில் நீராடி பெருமாளை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டார். ஏழு நாட்கள் கழிந்தன. வயிற்று வலி குறையவில்லை; அதிகரித்தது.

எட்டாவது நாள். பொழுது விடிந்தது. இன்று இதற்கு ஒரு முடிவு காணாது ஓயப்போவதில்லை என்ற தீர்மானத்தோடு எழுந்தார் முதியவர். வழக்கம் போல குளத்தில் நீராடினார். ராஜகோபுரம் எதிரே நின்றார். கண்மூடி ஆதிகேசவனை மனத்தில் கண்டார். அவனிடம் உரிமையோடு பேசத் தொடங்கினார். ‘‘ஐயனே... வயிற்று வலியோடு நான் படும்பாடு சொல்லிமாளாது. என் நோய் தீர்ப்பாய் என்ற நம்பிக்கையோடு உன் திருக்கோயிலை ஒரு வாரகாலமாய் வலம் வந்தேன். பலனில்லை. என் பக்தியில் நீ ஏதோ குறை காண்கிறாய். சரி, இதோ என் காணிக்கையை ஏற்றுக்கொள்’’ என்று மனம் குமைந்து சொன்னார். 


பிறகு தனது நாக்கை அறுத்து எடுத்து ஒரு வெற்றிலையின் மீது வைத்துவிட்டு, வாயில் ரத்தம் வழிய கோயிலை வலம் வரத் தொடங்கினார். கருணைக் கடலான கேசவன் கண் திறந்து பார்த்தான். தனது அருட் பார்வையால் முதியவரின் பிணியை அகற்றினான். கோயிலை வலம் வந்து முடித்த போது வெற்றிலையில் வைத்திருந்த நாக்கு காணாமல் போயிருந்தது. முதியவரின் வெட்டுப்பட்ட நாக்கும் முழுமையாக வளர்ந்திருந்தது. உயிரே போகும்படி வலித்த வயிற்று வலியும் முற்றிலுமாக நீங்கியிருந்தது. ‘‘கோவிந்தா... கோவிந்தா’’ என்று வாய்விட்டு கதறினார். ஆனந்தத்தில் வாய் குழறியது. 


இச்சம்பவத்தை வாய் பிளந்து, வியப்போடு பார்த்த ஊரும் அவரோடு சேர்ந்து கோவிந்தனின் புகழ் பாடியது.இந்த சம்பவம் நடந்து சுமார் 300 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், இதற்கு சாட்சியாக இந்த முதியவர் நன்றியோடு இந்தக் கோயிலுக்குச் செய்து தந்த காளிங்க நர்த்தன கோபாலன் உற்சவர் சிலை இன்றும் இருக்கிறது. வீர பெருமா நல்லூர் பெரியவர் செய்த சிலை இது என்று, இந்த சம்பவத்தோடு மேலும் பல தகவல்களை அந்தக் கோயிலில் சொல்லக் கேட்கலாம்.


இந்தக் கோயில் உருவான வரலாறு சுவையானது. 

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி காடாக இருந்தது. இங்கு ரெட்டியார் சமூகத்தினருக்குச் சொந்தமான நிலத்தில் கோனார்கள் வயல் வேலை செய்தபடி ஆவினங்களை பராமரித்துக் கொண்டும் வாழ்ந்து வந்தார்கள். ஒரு முறை விவசாயப் பணியாக வாய்க்கால் வெட்டியபோது, மண்வெட்டி பட்டு வெட்டிய இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அங்கிருந்தோர் எல்லாம் அஞ்சி நிற்க, வாய்க்கால் வெட்டியவர் மீது அருள் வந்து, இவ்விடத்தில் சென்ன கேசவப் பெருமாள் என்னும் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளி இருப்பதாகவும், அவருக்கு கோயில் கட்டி வழிபடுமாறும் 
கூறினார். அதன்படி அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்த போது வெட்டுப்பட்ட கல் ஒன்று கிடைத்தது. அதையே மூலவராகக் கொண்டு கோயில் கட்டப்பட்டது. மூலவர் முடியில் வெட்டுப்பட்ட காய வடுவை இன்றும் தரிசிக்கலாம்.


அதன் பிறகு கால ஓட்டத்தில் பல பெரியவர்கள், மகான்கள் இந்தக் கோயிலுக்கு வந்து பெருமாளை வணங்கி வழிபட்டுள்ளார்கள். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வேமண்ணா என்னும் யோகியும் கூட இந்தக் கோயிலுக்கு வந்து திருக்குளத்தில் நீராடி, குளத்தின் தென் திசையில் பெருமாளின் திருப்பாதம் அமைத்து, யந்திர ஸ்தாபனம் செய்து பூஜித்துள்ளார். தினசரி இந்த பாதத்திற்கு முதலில் பூஜை செய்து விட்டுத்தான் பெருமாளுக்கு இதர பூஜைகள் நடைபெறும். 

இக்கோயில் பற்றி பதிகம் பாடியுள்ள வேமண்ணா ‘ஆதித்த வாரம் பத்து பசுந்துளபம் நெய்யுண்டால் பறக்கும் பல நோய்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இன்றும் பலர் தங்களது நோய்கள் தீர இங்கு நெய் துளசி பெற்று பக்தியோடு உண்டு குணமடைகிறார்களாம். பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபடு
கிறார்கள். வாருங்கள், கோயிலை வலம் வருவோம்.


கோயிலுக்கு வடபுறம் திருக்குளம் உள்ளது. இந்த குளத்தில்தான் ஆண்டு தோறும் வைகாசிப் பெருவிழாவின் 10 நாள் தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெறும். குளத்திற்கு மேற்கு புறத்தில் இருந்த வசந்த மண்டபம் சிதைந்து கிடப்பதையும் காண முடிகிறது. நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் இந்தக் குளத்தில் நீராடி உப்பு, வெல்லம், மிளகு, காசு ஆகியவை செலுத்துகிறார்கள். உப்பு, வெல்லம் கரைவதைப் போல நோயும் கரையும் என்பது நம்பிக்கை. சொறி, சிரங்கு, மரு போன்ற சரும நோய் தீர வேண்டிக்கொண்டு மிளகு, காசு போடுகிறார்கள். 


இந்தத் திருக்குளத்தில் நீராடிய பிறகு யோகி வேமண்ணா பிரதிஷ்டை செய்த பெருமாள் பாதத்தை தரிசிக்கலாம். அடுத்து, பிரமாண்டமாய் நிற்கும் ராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் த்வஜ ஸ்தம்பம் நம்மை வரவேற்கிறது. அடுத்து கருடாழ்வார் தரிசனம். அவர் சுவாமியைப் பார்த்தபடி மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அதற்கடுத்து கருங்கற்களால் கட்டப்பட்ட 36 கால் சபா மண்டபம். மண்டபத்தின் கல் தூண்களில் தசாவதாரக் காட்சிகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் வலப்புறத்தில் அனுமன், கருடன், சக்கரம், அன்னம், குதிரை, ஆதிசேஷன், யானை, பல்லக்கு முதலிய வாகனங்களின் அணிவகுப்பைக் காணலாம்.


அடுத்து விநாயகரையும், ஜயன்-விஜயன் என்ற துவாரக பாலகர்களை வணங்கி உள்ளே சென்றால் மகா மண்டபம். மகா மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளின் அழகு வரிசை.  தேவி-தேவி சமேத ஆதிகேசவப் பெருமாள், ராதா-ருக்மணி சமேத வேணுகோபாலன், வயிற்று வலியில் இருந்து நிவாரணம் பெற்ற முதியவர் தமது கிராமத்தவரின் உதவியோடு செய்து தந்த காளிங்க நர்த்தன கோபாலன், சக்கரத்தாழ்வார், அனுமன், திருமங்கையாழ்வார் ஆகிய உற்சவ விக்ரகங்களை கண்டு வணங்கலாம். 


அடுத்து அர்த்த மண்டபம். அதைத் தாண்டி கர்ப்ப கிரகம். சுயம்புவாய் தோன்றிய ஆதிகேசவப் பெருமாளை நெய்தீப ஒளியில் காண, மெய் சிலிர்க்கிறது. கிழக்கு பார்த்த வண்ணம் இக்கோயிலில் அமைந்து, பிறவி நோய் தீர்க்கும் பெருமாள் உடல் பிணியும் நீக்கி அருள்வதை எண்ணி கரம் குவித்துப் பணிய, உடலும் உள்ளமும் பலமடைகின்றன.


இந்தக் கோயிலில் பரம்பரை பரம்பரையாக யாதவர்களே பூஜை செய்து வருகிறார்கள். நாராயணின் நாமத்தை கணீர் குரலில் பாடி, தீபம் காட்டி, தீர்த்தமும், துளசியும் தந்து சடாரியை தலையில் வைக்கும் போது மனம் குளிர்கிறது. ஒரு பேரமைதி நம்மைச் சூழ்ந்து கொள்கிறது.அடுத்து தெற்கு பக்க வாசல் வழியே வந்து, வேதவல்லி நாச்சியாரை தரிசிக்கலாம். தாயார் கிழக்கு நோக்கி, நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அன்னையின் அழகிய திருமுகம் காண உள்ளம் உருகும். திருமண வரம் வேண்டி அன்னையைத் தொழுதால், வேண்டியவரின் இல்லத்தில் கெட்டிமேளம் விரைவில் ஒலிக்கிறதாம். 


பிராகாரத்தில், மடப்பள்ளி இருக்கிறது. இடும்பன், அனுமன் கோயில்கள் தனித் தனியே உள்ளன. கோயிலின் நான்கு புறமும் வாசல் உண்டு. வடக்கு வாசல் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுகிறது. கோயிலுக்கு வெளியே அழகிய, சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தேர் நிற்கிறது. ஆண்டு தோறும் வைகாசி மாதம், வளர்பிறை சனிக்கிழமை கொடியேற்றி, ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். ஒன்பதாவது நாள் திருத்தேர் உற்சவம். 


அன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் எழுந்தருளி மெல்ல அசைந்தபடி வீதி வலம் வரும் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.
கோயிலுக்கு வெளியே வடக்கு புறத்தில் முடி காணிக்கை செய்ய தனி மண்டபம் உள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு வேண்டிக் கொண்டவர்கள் அங்கு போக முடியாவிட்டால் இங்கு வந்து நேர்த்திக் கடனை செலுத்தி வணங்குகிறார்கள். பெரும்பாலும் பெருமாள் கோயிலில் சனிக் கிழமைதான் விசேஷம். ஆனால், இத்திருக் கோயில் பெருமாள் ஞாயிற்றுக் கிழமையன்று சுயம்புவாகத் தோன்றியதால் இங்கு ஞாயிறு அன்றுதான் விசேஷம். அன்று காலை 7.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.


உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில், மங்கலம் பேட்டையிலிருந்து மேற்கே 4வது கிலோ மீட்டரில் உள்ள சிறிய கிராமமான காட்டுப்பரூரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. தீராத நோய்கள் தீர, பிணி தீர்க்கும் ஆதிகேசவப் பெருமாளையும், திருமண வரம் அருளும் வேதவல்லி நாச்சியாரையும் வணங்கி ஆரோக்கியமான, வளமான வாழ்வைப் பெறுவோம்.  

Tuesday, January 7, 2014

தமிழக அரசுக்கு யாதவ மகாசபை கோரிக்கை

தமிழக அரசுக்கு யாதவ மகாசபை கோரிக்கை 

யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை
அதில் கூறியுள்ளவை

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு வண்க்கம்,


            யாதவ மகாசபை சார்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மாவட்டம், நகரம்,ஓன்றியம், கிளை என பட்டி, தொட்டியெல்லாம் யாதவர்களை  யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி பல்வேறு மாநாடு, பேரணி, கூட்டங்கள் நடத்தி கொண்டிருக்கிறோம் குறிப்பாக 2007 ஆம் ஆண்டு சென்னை மன்ரோ சிலை அருகிலிருந்து பேரணியும், 25.04.2010 நெல்லையில் மாநில மாநாடும், 21.08.2010 சென்னையில் பேரணியும், 30.01.2011 சென்னை ராயபேட்டையில் மாநில மாநாடும், 25.04.2012  சென்னையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தியுள்ளோம்.

மெலும் யாதவ சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டுயலில் சேர்க்க கோரி லட்சக்கணக்கனா யாதவர்களின் கையெழுத்தை பெறும் இயக்கமும் நடத்தப்பட்டது. எங்களது கோரிக்கையை நாங்கள் பலமுறை வலியுறுத்தியும் கடந்த ஆட்சியாளர்கள் செவி சாய்க்கவில்லை என்பது வரலாற்று உண்மை.

தங்களது ஆட்சிக்காலத்தில் தான் யாதவ குல முதலி சுத்ந்திரப் போர் வீரன்
அழகுமுத்துக் கோனுக்கு சென்னையில் சிலை வைத்ததும், போக்குவரத்து கழகத்துக்கு பேர் வைத்து பெருமை சேர்த்ததை நாங்கள் அறிவோம்

சமுக நீதி காத்த வீராங்கை என்ற பட்டத்திற்கு ஏற்றபடி யாதவைகளின் வாழ்வாதரத்தை உயர்த்தும் வகையில் யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க ஆவண செய்ய வேண்டுகிறோம் அல்லது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள் ஒதுக்கீட்டாக ஏழு சதவீதம் யாதவர்களுக்கு ஒதுக்குமாறு யாதவர்கள் இந்த ஒற்றை கோரிக்கையை முன்வைக்கிறோம்



Saturday, January 4, 2014

குதம்பை சித்தர்

குதம்பை என்பது பெண்களின் காதிலே அணியும் தொங்கட்டான் நகை . இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைக்கிறார் . இதனால் இவரை குதம்பைச் சித்தர் என்றே அனைவரும் அழைத்தார்கள். இவர் 32 பாடல்களைப் பாடியுள்ளார் .

யாதவ குலத்தில் கோபாலர் தம்பதிகளுக்கு ஆடிமாத விசாக நட்சத்திரத்தன்ற்ய் மிக அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது . அது ஆண் குழந்தையாக இருந்தாலும் அதன் அழகு பெண் குழந்தையைப் போலிருக்கவே அக்குழந்தையின் காதில் அசைந்தாடும் குதம்பை என்னும் நகையை அணிவித்தாள் குழந்தையின் தாய் . குதம்பையின் தினசரி நிகழ்ச்சி காலையும், மாலையும் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்குவது தான் .

குதம்பைச் சித்தருக்கு பதினாறு வயதாகும் போது அவருக்கு ஞான உபதேசம் செய்வதற்காக மாதவர் ஒருவர் வந்தார் . வந்தவரை வணங்கி நின்றார் குதம்பை. மாதவர் குதம்பைக்கு அருளுபதேசம்  செய்தார் .
மாதவ குருவே உபதேசம் செய்த உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் !
என்றார் குதம்பை மாதவரோ குதம்பையை மெல்ல தடவிக்கொடுத்துகுதம்பை நீ போன பிறவியில் உய்வடையும் பொடுட்டு கடுந்தவம் செய்தாய் . ஆனால் தவம் முழுமை அடையும் முன்பே உன் காலம் முடிந்து நீ இறந்து போனாய் . அந்தத் தவத்தின் பயனால் தான் நீ என்னிடம் உபதேசம் பெற்றாய். நான் உபதேசித்ததை அனுபவத்தில் கொண்டு வெற்றி பெறுவாய்என்றார் .

ஒரு நாள் இரவு குதம்பைச் சித்தர் யாருக்கும் தெரியாமல் எழுந்து ஒரு காட்டிற்குள் புகுந்தார் . அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார் . தம் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார் . அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன .
குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தி பெற்றதாக சித்தர் நூல்கள் கூறுகின்றன .

ஸ்ரீகுதம்பைச் சித்தரின் பூசை முறைகள் :-

தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின்மேல் குதம்பைச் சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கினை ஏற்றி வைக்க வேண்டும் . முதலில் இந்த சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி பின்வரும் 16 போற்றிகளை கூறி பூக்கள் கொண்டு அர்ச்சிக்க வேண்டும் .

பதினாறு போற்றிகள் :
1. சிவனை பூசிப்பவரே போற்றி ! 2. ஹடயோகப் பிரியரே போற்றி ! 3. சூலாயுதம் உடையவரே போற்றி ! 4. மோட்ச ஞானம் அளிப்பவரே போற்றி ! 5. ஞானவரம் கொடுப்பவரே போற்றி ! 6. ஜோதி சொரூபரே போற்றி ! 7. சிவ ஒளியாய் திகழ்பவரே போற்றி ! 8. விபூதி அலங்காரப்பிரியரே போற்றி ! 9. நாட்டியப்பிரியரே போற்றி ! 10. இதய சுத்தம் உள்ளவரே போற்றி ! 11. வாக் பந்தனம் செய்பவரே போற்றி ! 12. அபயம் அளிக்கும் தேவரே போற்றி ! 13. இந்திரன் முதலான தேவர்களை பூசிப்பவரே போற்றி ! 14. ஊனமுற்றவரைக் காப்பாற்றுபவரே போற்றி ! 15. ஓம் என்ற பீஜாட்சரமாய் வாழ்பவரே போற்றி ! 16. எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் குதம்பை சித்த சுவாமியே போற்றி ! போற்றி!
இவ்வாறு 16 போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பின்பு மூலமந்திரமானஓம் குதம்பைச் சித்தரே போற்றி ! என்று 108 முறை ஜெபிக்க வேண்டும் . நிவேதனமாக பால் , பழம், தண்ணீர் வைக்க வேண்டும் . பின் உங்கள் பிரார்த்தனனயை மனமுருக கூறி வேண்டவும் . நிறைவாக தீபாராதனை செய்யவும் .

தியானச் செய்யுள் :

சூலம் ஏந்திய சுந்தர மூர்த்தியே அத்திமரம் அமர்ந்து ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே கும்பிட்ட எமக்கு நம்பிக்கையுடன் நல்லாசி தருவாய் குதம்பை சித்த பெருமானே !

குதம்பை சித்தர் பூஜா பலன்கள் :

இவர் நவக்கிரகங்களில் கேதுபகவானை பிரதிபலிப்பவர் .
இவரை வழிபட்டால் .. 1. சித்த பிரமை கோளாறு, மனோவியாதி, பைத்தியம் பிடித்தது போல் உள்ள நிலை மாறும் . 2. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அபிவிருத்தி ஏற்படும் . 3. சரியாகப் படித்தாலும் பரீட்சை எழுதும் நேரத்தில் மறந்துபோடும் நிலை மாறும் . 4. மூளையில் இரத்தம் உறைதல், மனப்பிராந்தி, வீண் பிரமை, தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், இவையெல்லாம் அகன்று தெளிவு ஏற்படும் . 5. கேது பகவானால் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய தோசங்கள் விலகும் . 6. போதை பொருட்களுக்கு அடிமைஆகுதல், புகைபிடித்தல், குடிப்பழக்கம் அகலும் . 7. ஆன்மீகப் பாதையில் உள்ள முன்னேற்றத் தடை அகலும் .

இவருக்கு பல வர்ண வஸ்திரம் அணிவிக்கலாம் .
இவரை பூஜிக்க உகந்த நாள் வெள்ளிக்கிழமை .

Wednesday, November 20, 2013

பால்காரரின் மகனாக பிறந்து பீகாரின் முதல்வராக உயர்ந்த லாலு பிரசாத் யாதவ்


லாலு பிரசாத் யாதவ் குந்தன் ராய் என்ற பால்காரரின் மகனாக பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வரியா கிராமத்தில் பிறந்தார்.




அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதரர்கள். வீடு வீடாகச் சென்று பால் ஊற்றிய தனது தாய் மரிசியா தேவியுடன் சிறுவன் லாலுவும் செல்வார்.

பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் லூலுவின் அண்ணன் பியூனாக இருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி தான் லூலு பி.என். கல்லூரியில் படித்து அண்ணன் வேலை பார்த்த கல்லூரியிலேயே கிளார்க்காக சேர்ந்தார்.


அவர் 1990ம் ஆண்டில் முதல்வராகும் வரையில் இங்கு தான் தங்கி இருந்தார்.

ஜனதா கட்சியின் சார்பில் லாலு கடந்த 1977ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.


கல்லூரியில் படிக்கையில் லாலு 10ஏ பேருந்தில் தான் சென்றுள்ளார். 1977ம் ஆண்டு எம்.பி. ஆன போது அவர் டெல்லிக்கு சோன்பத்ரா எக்ஸ்பிரஸில் சென்றுள்ளார்.


1980ம் ஆண்டு அவர் லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்றை வாங்கினார்.

லாலு 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது லாலு லோக் சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

1990ம் ஆண்டு ஜனதா கட்சி பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போதைய துணை பிரதமர் தேவி லால், லாலு பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்பினார்.



ஆனால் பிரதமர் வி.பி. சிங்கோ ராம் சுந்தர் தாஸை முதல்வராக்க விரும்பினார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் லாலு வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.

லாலு மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். ஆனால் 1997ம் ஆண்டு மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார்.

இதனால் தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கிவிட்டு சிறையில் இருந்து கொண்டே தனது மனைவி மூலம் ஆட்சி செய்தார்.

2004ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சர் ஆனார். அவரது நிர்வாகத் திறமைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.

லாலு 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை ஜனதா கட்சியின் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.


லாலு பிரசாத் யாதவ் குந்தன் ராய் என்ற பால்காரரின் மகனாக பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வரியா கிராமத்தில் பிறந்தார்.
அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதரர்கள். வீடு வீடாகச் சென்று பால் ஊற்றிய தனது தாய் மரிசியா தேவியுடன் சிறுவன் லாலுவும் செல்வார்.
பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் லூலுவின் அண்ணன் பியூனாக இருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி தான் லூலு பி.என். கல்லூரியில் படித்து அண்ணன் வேலை பார்த்த கல்லூரியிலேயே கிளார்க்காக சேர்ந்தார்.
அவர் 1990ம் ஆண்டில் முதல்வராகும் வரையில் இங்கு தான் தங்கி இருந்தார்.
ஜனதா கட்சியின் சார்பில் லாலு கடந்த 1977ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
கல்லூரியில் படிக்கையில் லாலு 10ஏ பேருந்தில் தான் சென்றுள்ளார். 1977ம் ஆண்டு எம்.பி. ஆன போது அவர் டெல்லிக்கு சோன்பத்ரா எக்ஸ்பிரஸில் சென்றுள்ளார்.
1980ம் ஆண்டு அவர் லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்றை வாங்கினார்.
லாலு 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது லாலு லோக் சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1990ம் ஆண்டு ஜனதா கட்சி பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போதைய துணை பிரதமர் தேவி லால், லாலு பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் பிரதமர் வி.பி. சிங்கோ ராம் சுந்தர் தாஸை முதல்வராக்க விரும்பினார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் லாலு வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.
லாலு மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். ஆனால் 1997ம் ஆண்டு மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார்.
இதனால் தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கிவிட்டு சிறையில் இருந்து கொண்டே தனது மனைவி மூலம் ஆட்சி செய்தார்.
2004ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சர் ஆனார். அவரது நிர்வாகத் திறமைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.
லாலு 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை ஜனதா கட்சியின் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.
- See more at: http://vannimedia.com/site/news_detail/24807#sthash.pFOBWkKQ.dpuf
லாலு பிரசாத் யாதவ் குந்தன் ராய் என்ற பால்காரரின் மகனாக பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வரியா கிராமத்தில் பிறந்தார்.
அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதரர்கள். வீடு வீடாகச் சென்று பால் ஊற்றிய தனது தாய் மரிசியா தேவியுடன் சிறுவன் லாலுவும் செல்வார்.
பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் லூலுவின் அண்ணன் பியூனாக இருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி தான் லூலு பி.என். கல்லூரியில் படித்து அண்ணன் வேலை பார்த்த கல்லூரியிலேயே கிளார்க்காக சேர்ந்தார்.
அவர் 1990ம் ஆண்டில் முதல்வராகும் வரையில் இங்கு தான் தங்கி இருந்தார்.
ஜனதா கட்சியின் சார்பில் லாலு கடந்த 1977ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
கல்லூரியில் படிக்கையில் லாலு 10ஏ பேருந்தில் தான் சென்றுள்ளார். 1977ம் ஆண்டு எம்.பி. ஆன போது அவர் டெல்லிக்கு சோன்பத்ரா எக்ஸ்பிரஸில் சென்றுள்ளார்.
1980ம் ஆண்டு அவர் லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்றை வாங்கினார்.
லாலு 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது லாலு லோக் சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1990ம் ஆண்டு ஜனதா கட்சி பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போதைய துணை பிரதமர் தேவி லால், லாலு பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் பிரதமர் வி.பி. சிங்கோ ராம் சுந்தர் தாஸை முதல்வராக்க விரும்பினார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் லாலு வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.
லாலு மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். ஆனால் 1997ம் ஆண்டு மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார்.
இதனால் தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கிவிட்டு சிறையில் இருந்து கொண்டே தனது மனைவி மூலம் ஆட்சி செய்தார்.
2004ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சர் ஆனார். அவரது நிர்வாகத் திறமைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.
லாலு 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை ஜனதா கட்சியின் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.
- See more at: http://vannimedia.com/site/news_detail/24807#sthash.pFOBWkKQ.dpuf
லாலு பிரசாத் யாதவ் குந்தன் ராய் என்ற பால்காரரின் மகனாக பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வரியா கிராமத்தில் பிறந்தார்.
அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதரர்கள். வீடு வீடாகச் சென்று பால் ஊற்றிய தனது தாய் மரிசியா தேவியுடன் சிறுவன் லாலுவும் செல்வார்.
பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் லூலுவின் அண்ணன் பியூனாக இருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி தான் லூலு பி.என். கல்லூரியில் படித்து அண்ணன் வேலை பார்த்த கல்லூரியிலேயே கிளார்க்காக சேர்ந்தார்.
அவர் 1990ம் ஆண்டில் முதல்வராகும் வரையில் இங்கு தான் தங்கி இருந்தார்.
ஜனதா கட்சியின் சார்பில் லாலு கடந்த 1977ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
கல்லூரியில் படிக்கையில் லாலு 10ஏ பேருந்தில் தான் சென்றுள்ளார். 1977ம் ஆண்டு எம்.பி. ஆன போது அவர் டெல்லிக்கு சோன்பத்ரா எக்ஸ்பிரஸில் சென்றுள்ளார்.
1980ம் ஆண்டு அவர் லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்றை வாங்கினார்.
லாலு 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது லாலு லோக் சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1990ம் ஆண்டு ஜனதா கட்சி பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போதைய துணை பிரதமர் தேவி லால், லாலு பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் பிரதமர் வி.பி. சிங்கோ ராம் சுந்தர் தாஸை முதல்வராக்க விரும்பினார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் லாலு வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.
லாலு மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். ஆனால் 1997ம் ஆண்டு மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார்.
இதனால் தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கிவிட்டு சிறையில் இருந்து கொண்டே தனது மனைவி மூலம் ஆட்சி செய்தார்.
2004ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சர் ஆனார். அவரது நிர்வாகத் திறமைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.
லாலு 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை ஜனதா கட்சியின் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.
- See more at: http://vannimedia.com/site/news_detail/24807#sthash.pFOBWkKQ.dpuf
லாலு பிரசாத் யாதவ் குந்தன் ராய் என்ற பால்காரரின் மகனாக பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வரியா கிராமத்தில் பிறந்தார்.
அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதரர்கள். வீடு வீடாகச் சென்று பால் ஊற்றிய தனது தாய் மரிசியா தேவியுடன் சிறுவன் லாலுவும் செல்வார்.
பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் லூலுவின் அண்ணன் பியூனாக இருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி தான் லூலு பி.என். கல்லூரியில் படித்து அண்ணன் வேலை பார்த்த கல்லூரியிலேயே கிளார்க்காக சேர்ந்தார்.
அவர் 1990ம் ஆண்டில் முதல்வராகும் வரையில் இங்கு தான் தங்கி இருந்தார்.
ஜனதா கட்சியின் சார்பில் லாலு கடந்த 1977ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
கல்லூரியில் படிக்கையில் லாலு 10ஏ பேருந்தில் தான் சென்றுள்ளார். 1977ம் ஆண்டு எம்.பி. ஆன போது அவர் டெல்லிக்கு சோன்பத்ரா எக்ஸ்பிரஸில் சென்றுள்ளார்.
1980ம் ஆண்டு அவர் லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்றை வாங்கினார்.
லாலு 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது லாலு லோக் சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1990ம் ஆண்டு ஜனதா கட்சி பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போதைய துணை பிரதமர் தேவி லால், லாலு பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் பிரதமர் வி.பி. சிங்கோ ராம் சுந்தர் தாஸை முதல்வராக்க விரும்பினார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் லாலு வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.
லாலு மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். ஆனால் 1997ம் ஆண்டு மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார்.
இதனால் தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கிவிட்டு சிறையில் இருந்து கொண்டே தனது மனைவி மூலம் ஆட்சி செய்தார்.
2004ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சர் ஆனார். அவரது நிர்வாகத் திறமைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.
லாலு 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை ஜனதா கட்சியின் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.
- See more at: http://vannimedia.com/site/news_detail/24807#sthash.pFOBWkKQ.dpuf
லாலு பிரசாத் யாதவ் குந்தன் ராய் என்ற பால்காரரின் மகனாக பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வரியா கிராமத்தில் பிறந்தார்.
அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதரர்கள். வீடு வீடாகச் சென்று பால் ஊற்றிய தனது தாய் மரிசியா தேவியுடன் சிறுவன் லாலுவும் செல்வார்.
பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் லூலுவின் அண்ணன் பியூனாக இருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி தான் லூலு பி.என். கல்லூரியில் படித்து அண்ணன் வேலை பார்த்த கல்லூரியிலேயே கிளார்க்காக சேர்ந்தார்.
அவர் 1990ம் ஆண்டில் முதல்வராகும் வரையில் இங்கு தான் தங்கி இருந்தார்.
ஜனதா கட்சியின் சார்பில் லாலு கடந்த 1977ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
கல்லூரியில் படிக்கையில் லாலு 10ஏ பேருந்தில் தான் சென்றுள்ளார். 1977ம் ஆண்டு எம்.பி. ஆன போது அவர் டெல்லிக்கு சோன்பத்ரா எக்ஸ்பிரஸில் சென்றுள்ளார்.
1980ம் ஆண்டு அவர் லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்றை வாங்கினார்.
லாலு 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது லாலு லோக் சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1990ம் ஆண்டு ஜனதா கட்சி பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போதைய துணை பிரதமர் தேவி லால், லாலு பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் பிரதமர் வி.பி. சிங்கோ ராம் சுந்தர் தாஸை முதல்வராக்க விரும்பினார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் லாலு வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.
லாலு மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். ஆனால் 1997ம் ஆண்டு மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார்.
இதனால் தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கிவிட்டு சிறையில் இருந்து கொண்டே தனது மனைவி மூலம் ஆட்சி செய்தார்.
2004ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சர் ஆனார். அவரது நிர்வாகத் திறமைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.
லாலு 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை ஜனதா கட்சியின் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.
- See more at: http://vannimedia.com/site/news_detail/24807#sthash.pFOBWkKQ.dpuf

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar