"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Friday, October 30, 2015

மதுரை சுப்புக் கோனார் மகன் கே.எஸ்.பரமன்.

1910இல் பிறந்த பரமன் தனது 20ஆம் வயதில் 1930இல் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார். மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளில் பிடிப்பு உள்ள இவர் கதர் இயக்கத்திலும் ஆர்வமுடையவராக இருந்தார். கை தக்கிளியில் நூல் நூற்றுக் கொண்டிருப்பார். தக்கிளியில் நூல் நூற்பது எப்படி என்பதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பார். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர். இவர் முதல் உலக யுத்தத்தின் போது ராணுவத்தில் சேர்ந்தார். முதல் உலகப் போரின் போது பிரிட்டன் இந்திய ராணுவத்தினரை ஐரோப்பாவுக்கு அனுப்பி வைத்தனர். இவர் அப்போது மெஸபடோமியாவுக்குச் சென்றிருந்தார். ராணுவப் பணியை விட்டுவிட்டு இந்திய தேசியப் பணிக்குத் திரும்பினார். 1940இல் காந்தியடிகள் அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகத்தில் இவர் பங்கேற்றார். அதில் கைது செய்யப்பட்டார். 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இவர் பாதுகாப்புக் கைதியாக வேலூர் சிறையில் 4 மாத காலம் அடைக்கப்பட்டார். இவருடைய மூத்த சகோதரர் அய்யாக்கண்ணு பிள்ளை மதுரையில் பிரபலமான மனிதர். பரமன் ஒரு சிறந்த தேசிய வாதி.

Thursday, October 29, 2015

பிணி தீர்க்கும் பெருமாள்:காட்டுப்பரூர்

பிணி தீர்க்கும் பெருமாள்- காட்டுப்பரூர் இந்தக் கோயிலில் பரம்பரை பரம்பரையாக யாதவர்களே பூஜை செய்து வருகிறார்கள்

அந்த முதியவருக்குக் கடுமையான வயிற்றுவலி. வேதனையால் துடித்தார். கொஞ்சம் கஞ்சி குடித்தாலும் வலி உயிர் போகும். சரி, கஞ்சி குடித்தால் வயிறு வலிக்கிறதே என்று குடிக்காமல் இருந்தாலும் பசியால் வயிறு வலிக்கத்தான் செய்யும். 

பார்க்காத வைத்தியரில்லை... குடிக்காத கஷாயமில்லை. சுத்துப்பட்டில் பல வைத்தியரைப் பார்த்தாயிற்று. இந்தப் பச்சிலை... அந்தப் பச்சிலை என்று நிறைய தின்றாயிற்று. ஆனால், குணமானபாடில்லை. ‘என்ன பாவம் செய்தேனோ இந்த சித்ரவதையை அனுபவிக்கிறேன்’ என்று தனக்குத்தானே புலம்பிக் கொள்வார், அந்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளி. 

‘கடவுளே... இனி நீ விட்ட வழி’ என்று தனது கிராமத்தின் மண் சாலையின் ஓரத்தில் இருந்த அரச மர நிழலில், அங்கிருந்த கல்லில் தலை சாய்த்துப் படுத்தார். வயிறு இழுத்துப் பிடித்தது போல வலித்தது. ‘கடவுளே... கடவுளே’ என முனகியபடி கிடந்தார். வேதனையால் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அப்போது அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த ஒரு பயணி இவரது வேதனையை பார்த்து மனம் வருந்தினார். எழுப்பி விவரம் கேட்டார். 


கதறியழுதபடி தனது வேதனையை சொன்னார் முதியவர். கண்மூடி யோசித்த அவர், ‘‘இது பிறவிப் பிணி. இதை அந்த கேசவனால்தான் தீர்க்க முடியும். காட்டுப்பரூர் செல். அங்கு ஒரு வாரகாலம் தங்கி, பெருமாளை வழிபடு. நிச்சயம் உன் பிணி தீரும்’’ என்றார். கடவுளே நேரில் வந்து சொன்னதாகக் கருதி, தனது கிராமத்திலிருந்து காட்டுப்பரூர் புறப்பட்டார், முதியவர். அங்கிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் தனது துணிமணிகளை வைத்து விட்டு, நாள்தோறும் திருக்கோயில் குளத்தில் நீராடி பெருமாளை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டார். ஏழு நாட்கள் கழிந்தன. வயிற்று வலி குறையவில்லை; அதிகரித்தது.

எட்டாவது நாள். பொழுது விடிந்தது. இன்று இதற்கு ஒரு முடிவு காணாது ஓயப்போவதில்லை என்ற தீர்மானத்தோடு எழுந்தார் முதியவர். வழக்கம் போல குளத்தில் நீராடினார். ராஜகோபுரம் எதிரே நின்றார். கண்மூடி ஆதிகேசவனை மனத்தில் கண்டார். அவனிடம் உரிமையோடு பேசத் தொடங்கினார். ‘‘ஐயனே... வயிற்று வலியோடு நான் படும்பாடு சொல்லிமாளாது. என் நோய் தீர்ப்பாய் என்ற நம்பிக்கையோடு உன் திருக்கோயிலை ஒரு வாரகாலமாய் வலம் வந்தேன். பலனில்லை. என் பக்தியில் நீ ஏதோ குறை காண்கிறாய். சரி, இதோ என் காணிக்கையை ஏற்றுக்கொள்’’ என்று மனம் குமைந்து சொன்னார். 


பிறகு தனது நாக்கை அறுத்து எடுத்து ஒரு வெற்றிலையின் மீது வைத்துவிட்டு, வாயில் ரத்தம் வழிய கோயிலை வலம் வரத் தொடங்கினார். கருணைக் கடலான கேசவன் கண் திறந்து பார்த்தான். தனது அருட் பார்வையால் முதியவரின் பிணியை அகற்றினான். கோயிலை வலம் வந்து முடித்த போது வெற்றிலையில் வைத்திருந்த நாக்கு காணாமல் போயிருந்தது. முதியவரின் வெட்டுப்பட்ட நாக்கும் முழுமையாக வளர்ந்திருந்தது. உயிரே போகும்படி வலித்த வயிற்று வலியும் முற்றிலுமாக நீங்கியிருந்தது. ‘‘கோவிந்தா... கோவிந்தா’’ என்று வாய்விட்டு கதறினார். ஆனந்தத்தில் வாய் குழறியது. 


இச்சம்பவத்தை வாய் பிளந்து, வியப்போடு பார்த்த ஊரும் அவரோடு சேர்ந்து கோவிந்தனின் புகழ் பாடியது.இந்த சம்பவம் நடந்து சுமார் 300 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், இதற்கு சாட்சியாக இந்த முதியவர் நன்றியோடு இந்தக் கோயிலுக்குச் செய்து தந்த காளிங்க நர்த்தன கோபாலன் உற்சவர் சிலை இன்றும் இருக்கிறது. வீர பெருமா நல்லூர் பெரியவர் செய்த சிலை இது என்று, இந்த சம்பவத்தோடு மேலும் பல தகவல்களை அந்தக் கோயிலில் சொல்லக் கேட்கலாம்.


இந்தக் கோயில் உருவான வரலாறு சுவையானது. 

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி காடாக இருந்தது. இங்கு ரெட்டியார் சமூகத்தினருக்குச் சொந்தமான நிலத்தில் கோனார்கள் வயல் வேலை செய்தபடி ஆவினங்களை பராமரித்துக் கொண்டும் வாழ்ந்து வந்தார்கள். ஒரு முறை விவசாயப் பணியாக வாய்க்கால் வெட்டியபோது, மண்வெட்டி பட்டு வெட்டிய இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அங்கிருந்தோர் எல்லாம் அஞ்சி நிற்க, வாய்க்கால் வெட்டியவர் மீது அருள் வந்து, இவ்விடத்தில் சென்ன கேசவப் பெருமாள் என்னும் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளி இருப்பதாகவும், அவருக்கு கோயில் கட்டி வழிபடுமாறும் 
கூறினார். அதன்படி அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்த போது வெட்டுப்பட்ட கல் ஒன்று கிடைத்தது. அதையே மூலவராகக் கொண்டு கோயில் கட்டப்பட்டது. மூலவர் முடியில் வெட்டுப்பட்ட காய வடுவை இன்றும் தரிசிக்கலாம்.


அதன் பிறகு கால ஓட்டத்தில் பல பெரியவர்கள், மகான்கள் இந்தக் கோயிலுக்கு வந்து பெருமாளை வணங்கி வழிபட்டுள்ளார்கள். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வேமண்ணா என்னும் யோகியும் கூட இந்தக் கோயிலுக்கு வந்து திருக்குளத்தில் நீராடி, குளத்தின் தென் திசையில் பெருமாளின் திருப்பாதம் அமைத்து, யந்திர ஸ்தாபனம் செய்து பூஜித்துள்ளார். தினசரி இந்த பாதத்திற்கு முதலில் பூஜை செய்து விட்டுத்தான் பெருமாளுக்கு இதர பூஜைகள் நடைபெறும். 

இக்கோயில் பற்றி பதிகம் பாடியுள்ள வேமண்ணா ‘ஆதித்த வாரம் பத்து பசுந்துளபம் நெய்யுண்டால் பறக்கும் பல நோய்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இன்றும் பலர் தங்களது நோய்கள் தீர இங்கு நெய் துளசி பெற்று பக்தியோடு உண்டு குணமடைகிறார்களாம். பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபடு
கிறார்கள். வாருங்கள், கோயிலை வலம் வருவோம்.


கோயிலுக்கு வடபுறம் திருக்குளம் உள்ளது. இந்த குளத்தில்தான் ஆண்டு தோறும் வைகாசிப் பெருவிழாவின் 10 நாள் தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெறும். குளத்திற்கு மேற்கு புறத்தில் இருந்த வசந்த மண்டபம் சிதைந்து கிடப்பதையும் காண முடிகிறது. நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் இந்தக் குளத்தில் நீராடி உப்பு, வெல்லம், மிளகு, காசு ஆகியவை செலுத்துகிறார்கள். உப்பு, வெல்லம் கரைவதைப் போல நோயும் கரையும் என்பது நம்பிக்கை. சொறி, சிரங்கு, மரு போன்ற சரும நோய் தீர வேண்டிக்கொண்டு மிளகு, காசு போடுகிறார்கள். 


இந்தத் திருக்குளத்தில் நீராடிய பிறகு யோகி வேமண்ணா பிரதிஷ்டை செய்த பெருமாள் பாதத்தை தரிசிக்கலாம். அடுத்து, பிரமாண்டமாய் நிற்கும் ராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் த்வஜ ஸ்தம்பம் நம்மை வரவேற்கிறது. அடுத்து கருடாழ்வார் தரிசனம். அவர் சுவாமியைப் பார்த்தபடி மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அதற்கடுத்து கருங்கற்களால் கட்டப்பட்ட 36 கால் சபா மண்டபம். மண்டபத்தின் கல் தூண்களில் தசாவதாரக் காட்சிகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் வலப்புறத்தில் அனுமன், கருடன், சக்கரம், அன்னம், குதிரை, ஆதிசேஷன், யானை, பல்லக்கு முதலிய வாகனங்களின் அணிவகுப்பைக் காணலாம்.


அடுத்து விநாயகரையும், ஜயன்-விஜயன் என்ற துவாரக பாலகர்களை வணங்கி உள்ளே சென்றால் மகா மண்டபம். மகா மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளின் அழகு வரிசை.  தேவி-தேவி சமேத ஆதிகேசவப் பெருமாள், ராதா-ருக்மணி சமேத வேணுகோபாலன், வயிற்று வலியில் இருந்து நிவாரணம் பெற்ற முதியவர் தமது கிராமத்தவரின் உதவியோடு செய்து தந்த காளிங்க நர்த்தன கோபாலன், சக்கரத்தாழ்வார், அனுமன், திருமங்கையாழ்வார் ஆகிய உற்சவ விக்ரகங்களை கண்டு வணங்கலாம். 


அடுத்து அர்த்த மண்டபம். அதைத் தாண்டி கர்ப்ப கிரகம். சுயம்புவாய் தோன்றிய ஆதிகேசவப் பெருமாளை நெய்தீப ஒளியில் காண, மெய் சிலிர்க்கிறது. கிழக்கு பார்த்த வண்ணம் இக்கோயிலில் அமைந்து, பிறவி நோய் தீர்க்கும் பெருமாள் உடல் பிணியும் நீக்கி அருள்வதை எண்ணி கரம் குவித்துப் பணிய, உடலும் உள்ளமும் பலமடைகின்றன.


இந்தக் கோயிலில் பரம்பரை பரம்பரையாக யாதவர்களே பூஜை செய்து வருகிறார்கள். நாராயணின் நாமத்தை கணீர் குரலில் பாடி, தீபம் காட்டி, தீர்த்தமும், துளசியும் தந்து சடாரியை தலையில் வைக்கும் போது மனம் குளிர்கிறது. ஒரு பேரமைதி நம்மைச் சூழ்ந்து கொள்கிறது.அடுத்து தெற்கு பக்க வாசல் வழியே வந்து, வேதவல்லி நாச்சியாரை தரிசிக்கலாம். தாயார் கிழக்கு நோக்கி, நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அன்னையின் அழகிய திருமுகம் காண உள்ளம் உருகும். திருமண வரம் வேண்டி அன்னையைத் தொழுதால், வேண்டியவரின் இல்லத்தில் கெட்டிமேளம் விரைவில் ஒலிக்கிறதாம். 


பிராகாரத்தில், மடப்பள்ளி இருக்கிறது. இடும்பன், அனுமன் கோயில்கள் தனித் தனியே உள்ளன. கோயிலின் நான்கு புறமும் வாசல் உண்டு. வடக்கு வாசல் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுகிறது. கோயிலுக்கு வெளியே அழகிய, சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தேர் நிற்கிறது. ஆண்டு தோறும் வைகாசி மாதம், வளர்பிறை சனிக்கிழமை கொடியேற்றி, ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். ஒன்பதாவது நாள் திருத்தேர் உற்சவம். 


அன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் எழுந்தருளி மெல்ல அசைந்தபடி வீதி வலம் வரும் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.
கோயிலுக்கு வெளியே வடக்கு புறத்தில் முடி காணிக்கை செய்ய தனி மண்டபம் உள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு வேண்டிக் கொண்டவர்கள் அங்கு போக முடியாவிட்டால் இங்கு வந்து நேர்த்திக் கடனை செலுத்தி வணங்குகிறார்கள். பெரும்பாலும் பெருமாள் கோயிலில் சனிக் கிழமைதான் விசேஷம். ஆனால், இத்திருக் கோயில் பெருமாள் ஞாயிற்றுக் கிழமையன்று சுயம்புவாகத் தோன்றியதால் இங்கு ஞாயிறு அன்றுதான் விசேஷம். அன்று காலை 7.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.


உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில், மங்கலம் பேட்டையிலிருந்து மேற்கே 4வது கிலோ மீட்டரில் உள்ள சிறிய கிராமமான காட்டுப்பரூரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. தீராத நோய்கள் தீர, பிணி தீர்க்கும் ஆதிகேசவப் பெருமாளையும், திருமண வரம் அருளும் வேதவல்லி நாச்சியாரையும் வணங்கி ஆரோக்கியமான, வளமான வாழ்வைப் பெறுவோம்.  

Wednesday, October 28, 2015

மறத்தமிழரின் மஞ்சுவிரட்டு

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஆதிமனிதன் குகைகளில் வாழ்ந்தான். வேட்டுவ வாழ்க்கையை மேற்கொண்டு நாடோடி போலத் திரிந்தான். பறவை போன்ற உயிரினங்களோடு போராடியும் வாழ்ந்தான். புன்செய் விவசாயத்தைச் செய்தும் கால்நடைகளை வளர்த்தும் புதிய வாழ்விற்குள் தலைப்பட்டான். நன்செய் வேளாண்மையை மேற்கொண்டு நாகரிகத்தைப் படைத்து நகர வாழ்வை உருவாக்கினான். இச்சூழ்நிலையில்தான் பொழுது போக்கிற்காகவும், உடல்வலிமையை உருவாக்கிக் கொள்வதற்காகவும் விளையாட்டுக்களை அமைத்துக் கொண்டான். தமிழன் படைத்த விளையாட்டுக்கள் ஒன்று மஞ்சுவிரட்டு என்னும் ஏறு தழுவுதலாகும்.

தொல்பழங்காலம்:-

கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்பே பழங்கால நாகரிகங்களை அமைத்துத் தந்தவர்களுள் எகிப்தியரும் மினோவான் மக்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுடைய நாகரிகத்தில் மனிதனுக்கும் காளைக்கும் நடக்கும் போர் காணப்படுகிறது. எகிப்தில் உள்ள பெணி-ஹட்சன் சித்திரங்களிலும், கிரீட் தீவிலுள்ள கினோஸஸ் என்னுமிடத்தில் உள்ள அரண்மனைச் சித்திரங்களிலும் இந்நாகரிகங்களில் இடம் பெற்றுள்ள காளைப்போர் சர்க்கஸ் வித்தைப் போல சித்தரிக்கப்படுகிறது.

அதாவது, காளையின் கொம்பை பிடித்துக் கொண்டு குட்டிக்கரணம் அடித்து காளையின் முதுகின் மேல் பாய்ந்து, பின்பு அருகிலிருக்கும் துணைவர்களின் கைகளுக்குத் தாவுவர், இவ்வகையான ஏறு தழுவல் வளர்ச்சி அடைந்த கலையாகவே காணப்படுகிறது.

சிந்து சமவெளி நாகரிகம்:-

காளை வழிபாடு சிந்து சமவெளி நாகரிகத்தில் சிறப்பிடம் பெற்றதை யாவரும் அறிவர். இதிலிருந்து காளைப்போர் சிந்து சமவெளி மக்களிடையே வழக்கிலிருக்கலாம், என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

வடநாட்டில் பலவிதமான ஏறுதழுவல்கள் நடைபெற்றன என்று சொல்லப்படுகிறது. இரண்டு காளைகளுக்கிடையேனும், காளைக்கும் மற்றொரு விலங்குக்கும் இடையிலேனும் போர் நிகழ்ந்துள்ளது.

சகாங்கீர் காலத்தில் காளைக்கும், புலிக்கும் இடையே போர் நிகழ்த்தி இரசித்திருக்கின்றனர் என்று வரலாற்று நூல்களிலிருந்து அறியலாம். தமிழரின் வாழ்வு முறைக்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம் ஏறுதழுவலைப்பற்றிக் கூறாதது ஆச்சரியமாக உள்ளது.

சங்க இலக்கியங்கள்:-

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் சங்ககாலத் தொகைப் பாடல்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் ஏறுதழுவல்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இக்காட்சி மலைபடுகடாமில் சிறிது விரிவாகவே இடம் பெற்றள்ளது. ஆநிரையை விட்டுப் பிரிந்து வந்த காளையும், மலையிலிருந்து வந்த ஏறும், புறங்கொடாத வலிமையொடு புண்பட முட்டுகின்றன. இதனைக் கண்டு கோவலரும் குறிஞ்சி நிலத்தவரும் ஆரவாரிக்கின்றனர் என்று மலைபடுகடாம் விவரிக்கின்றது.

கலித்தொகையில்:-

சங்க இலக்கியங்களில் முல்லைக்கலியில் மட்டும்தான் முதன் முதலில் ஏறுதழுவும் காட்சியைக் காணமுடிகிறது. முதல் ஏழு முல்லைக் கலிப் பாடல்களில் ஆறாம் பாடலைத் தவிர தழுவும் காட்சி ஓரங்க நாடகங்களாகக் காட்டப்பெற்றுள்ளது.

ஏறு தழுவலைப் பறையின் மூலமாக அறிவிக்கின்றனர். குறிப்பிட்ட நாளில் தொழுவத்தில் ஏறுதழுவல் நடைபெறுகிறது. எருமை, ஆடு, பசு ஆகிய மூன்றையும் மேய்க்கும் இடையர்கள் இதில் கலந்து கொள்ளச் செய்கின்றனர். தொழுவத்தின் பக்கத்தில் பரண்மேல் வரிசையாக ஆய மகளிர் நிறுத்தப்படுகின்றனர். இன்ன நிறக் காளையை அடக்குபவன் இன்னவளை மணக்கலாம் என்று அறிவிக்கப்படுகின்றது. காளையை அடக்கியவனுக்குப் பெற்றோர்கள் மகட்கொடை அளிக்கின்றனர். ஏறைத் தழுவி மணந்தவன் முலைவிலை கொடுப்பதிலிருந்து விலக்கப்படுகின்றான். ஏறுதழுவும் விழாவுக்குப் பின் மன்றத்தில் குரவைக்கூத்து ஆடப்படுகிறது. இதில் மன்னன் புகழும் மாயோனின் அருளும் போற்றப்படுகின்றன.

கலித்தொகையில் காளைக்கு உவமையாக...

"கூராஅக் களிற்றுணும் கண்ணஞ்சா ஏற்றை
விடாது நீ கொள்கு வையாயிற் படாஅகை
யீன்றன ஆய்மகள் தோள்"

என்ற வரிகள் காளையின் தோற்றத்தைக் குறிப்பதும், அதனை அடக்கும் கோவலரையும் குறிப்பதாக அமைகின்றன.

சிலப்பதிகாரத்தில் ஏறுதழுவுதல்:-

சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் ஏறுதழுவல் பற்றிய காட்சி அமைந்துள்ளது. இவ்வருணணை பெரும்பாலும் முல்லைக்கலியைப் பின்பற்றி அமைந்துள்ளது.

கண்ணகி ஆயர்பாடியில் தங்கியிருந்தபோது மாதரி சிறுமியர் எழுவரை வரவைத்து குரவைக் கூத்து ஆடும்படி பணிக்கின்றாள். அப்போது அவர்கள் ஏழு காளைகள் சிறுவயதிலிருந்து வளர்ப்பது போலவும் உரிய பருவம் வரும்போது அவ்வேற்றை அடக்கும் ஆடவரை மணப்பது போலவும் நடித்துக் குரவைக் கூத்தாடுகின்றனர். இச்செய்தி சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.

பொருளிலக்கண நூல்களில் ஏறுதழுவல்:-

இடைக்காலப் பொருள் இலக்கண நூல்கள் ஏறுதழுவல் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஐயனாரிதனார் எழுதிய வெண்பாமாலையில் ஒழிபியல் என்னும் பிரிவில் பதினெட்டு வென்றிகளைக் கூறுமிடத்து "ஏறுகோள்" வென்றியையும் ஒன்றாகக் கருதுகின்றனர். நம்பி அகப்பொருள் அகப்பெருந்திணைக்குரிய துறைகளைக் குறிப்பிடும் போது "விடைதாழல்" என்னும் தொடரை மட்டும் தருகின்றது. ஆனால் விளக்கம் தரவில்லை.

கிராமியக் கலைகளில்:-

சோழர், நாயக்கர் காலங்களில் மஞ்சுவிரட்டு கிராமத்தலைமையை உருவாக்கும் கிராமக் கலைகளுள் ஒன்றாக மாறியிருக்க வேண்டும். நிலவுடைமை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயத்தில் நிலக்கிழார்க்கும், ஊரகத் தலைவர்களுக்கும் உள்ள கொளரவத்தையும் சர்வாதிகாரத்தையும் அளிக்கும் ஒரு சமுதாய நிறுவனமாக அது வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால் ஆங்கிலேயர் வருகைக்குப் பின் அவர்களின் ஆட்சிக்காலத்தில் தடைவிதிக்கப்பட்டு சிறிது சிறிதாகத் தளர்ந்து வந்ததை அறியலாம்.

இன்றைய வழக்கில் மஞ்சுவிரட்டு:-

கால்நடை பொருளாதாரமும் இணைந்துவிட்ட கிராமியப் பொருளாதாரச் சமுதாயத்தில் "மஞ்சு விரட்டு" என்னும் சல்லிக்கட்டு ஒரு சமயச் சடங்காக மாறிவிட்டது. ஆண்டு தோறும் தைத்திருநாள் பொங்கலுக்குப் பின் கரிநாளன்று மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.

தைப்பொங்கலுக்கு மறுநாள் நடக்கும் மஞ்சு விரட்டு நேர்த்திக் கடனுக்காகக் கட்டப்படும் எருதுக்கட்டு ஓய்வுக்காலத்தில் அல்லது விழாக்காலத்தில் பெரிய அளவில் நடத்தப்படும் சல்லிக்கட்டு என்று மூன்று வகையாகப் பிரிக்கும் ஏறுதழுவலை இன்றும் அலங்காநல்லூர் மற்றும் பிற இடங்களிலும் காணலாம்.

இன்று சல்லிக்கட்டு நடத்தும் மரபு தமிழகக் கிராமங்களில் குறைந்து வருகின்றது. இந்த கிராம விளையாட்டை முறைப்படுத்திச் சிறந்த கலையாக மாற்ற வேண்டியது அவசியமாகும். அரசு வழியாகவும், கிராமிய விளையாட்டு மையங்களின் வழியாகவும் இவ்விளையாட்டை உயிர்ப்பிக்க முடியும் என கருதப்படுகிறது.

நன்றி:- வேர்களைத் தேடி

Monday, October 26, 2015

ஆற்றிலே வந்த அம்மன்

ஒருகாலத்தில் வற்றாத நதியாக ஓடிக்கொண்டிருந்த தேனாற்றில் கண்டெடுக்கப்பட்ட அம்மன்தான் தேனாற்று அம்மன்.

பிள்ளையார்பட்டியைத் தழுவி நிற்கும் சிராவயல் புதூர் கிராமம், மஞ்சு விரட்டுக்குப் புகழ்பெற்றது. இவ்வூரில்தான் இருக்கும் திருத்தலம் தேனாட்சியம்மன் கோயில். சிராவயல் புதூரைச் சேர்ந்த இடையர் குலத்து பெண் ஒருவர், தினமும் தலைச் சுமையாய் மோர்ப் பானையைத் தூக்கிச் சென்று அக்கம் பக்கத்து ஊர்களில் மோர் விற்றுவிட்டு வருவார். திரும்பி வருகிறபோது மோர்ப்பானை, உழக்கு, கரண்டி இவற்றை தேனாற்றில் கழுவி எடுத்துச் செல்வது அவரது வாடிக்கை.

ஒருநாள் அப்படி பானையைக் கழுவிக்கொண்டிருந்தபோது ஆற்றுக்குள் மார்பளவு தண்ணீரில் அம்மன் சிலை ஒன்று நிற்பதைக் கண்டார். பக்திப் பரவசத்தில் கைகூப்பி அம்மனை வனங்கியவர், ஊருக்குள் ஓடினார். ஊரார் வரும்வரை அப்படியே அம்மன் சிலை நின்றதாக நம்பப்படுகிறது. ஆற்றுக்குள் இருந்த அம்மன் சிலையைக் கரைக்குக் கொண்டு வந்தவர்கள் பின்னர் அம்மன் வழிகாட்டுதல்படியே ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பிரதிஷ்டை செய்தனர்.

சேவை செய்த இடையர் குலப்பெண்

தேனாற்றில் கண்டெடுத்த தெய்வம் என்பதால் அம் மனுக்கு ‘தேனாற்று நாச்சி’ என்று பெயர் சூட்டினார்கள். பிறகு அதுவே தேனாட்சியம்மனாக மருவியது. அந்தக் கோயிலைச் சுற்றி குட்டியாய் இரு கிராமம் உருவானது. அது அம்மன் பெயராலேயே தேனாட்சியம்மன் கோயில் என்றானது. அம்மனைக் கண்டெடுத்த இடையர் குலப்பெண், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அம்மனே கதி என்று கிடந்தார். உணவு, உறக்கம் மறந்து அம்மனே பித்தாகக் கிடந்து முக்தியடைந்தார். அதன் பிறகு, அம்மனுக்கு எதிரே இடையர் குலப் பெண்ணுக்கும் சிலை வைத்த மக்கள், அதை இடைச்சி அம்மனாக வழிபடத் தொடங்கினார்கள்.

சித்ரா பவுர்ணமி

ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியின்போது பூச்சொரிதல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட வைபவங்கள் அம்மனுக்கு அதிவிமர்சையாக நடைபெறுகின்றன. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை அம்மனுக்குப் பத்து நாள் செவ்வாய் திருவிழாவும் நடக்கிறது.

மதுரை 'கச்சைகட்டி கருப்பாடு இனம்', 'முட்டுக்கிடா' வளர்ப்பில் முதலிடம்

மதுரை மாவட்டம் கச்சை கட்டி கருப்பாடுகளை, 'முட்டுக்கிடா' வளர்ப்புக்கு கேட்கும் விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர்.

தமிழர்களின் வீரவிளையாட்டில் முதலிடம் பிடித்தது ஜல்லிக்கட்டு. அடுத்ததாக ரேக்ளா ரேஸ், முட்டுக்கிடா, சேவல் சண்டை போன்றவை பொழுது போக்காக இன்றளவும் பல இடங்களில் நடத்தப்படுகிறது. முட்டுக்கிடா வளர்ப்புக்கு செம்மறி ஆடுகள் தேர்வு செய்யப்படுகின்றன

கச்சைகட்டி கருப்பாடு:

முட்டுக்கிடா' வளர்ப்புக்கு ஏற்ற இனமாக, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கருப்பாடுகள் பாரம்பரியமாக வளர்க்கப்படுகிறது. கருப்பு நிறம், கம்பீர நடை, அகன்ற புஜங்கள், அடர்த்தியான ரோமங்கள், கால் முதல் தலை வரை நான்கு அடி உயரம், விரிந்த நெற்றிப்பட்டை, சுருள்வாள் போல் நீளமான வளைந்த கொம்புகள், கருமஞ்சள் நிற கண்கள், கூர்மையான முரட்டுப்பார்வை, தலையை கீழே சாய்த்து... வலது கால் நகங்களை தரையில் தேய்க்கும் தோரணை... இதுவே கச்சைகட்டி கருப்பாடுகளின் அடையாளங்கள்.

40 நாள் குட்டி ரூ.4000:

கச்சைகட்டி கருப்பாடு வளர்க்கும் முருகன் கோனார் கூறியதாவது: பாட்டனார் முருகக்கோனார், தாத்தா ஆயப்பிள்ளை, தந்தை முத்துப்பிள்ளை ஆகியோரை அடுத்து நான்காவது தலைமுறையாக, கருப்பாடுகளை வளர்க்கிறேன். இந்த இனம் கச்சைகட்டியை தவிர வேறு எங்கும் இல்லை. முட்டுக்கிடா வளர்ப்புக்கு இதை விட்டால் வேறு இல்லை. முட்டுக்கிடா வளர்ப்போர் முன்கூட்டியே குட்டிகள் கேட்டு அட்வான்ஸ் கொடுக்க குவிந்து விடுகின்றனர்.

நல்ல முறையில், ஊட்டச்த்து கொடுத்து வளர்த்தால், ஆறு மாதத்திற்கு ஒரு குட்டி ஈனும். நுாறு ஆடுகளுக்கு ஒரு கிடா என இனப்பெருக்கத்திற்கு விடுவோம். 40 நாள் குட்டி ரூ.4000. பட்டிக்கே வந்து வாங்கி செல்வர். கச்சைகட்டி கருப்பாடு கள் முட்டுக்கிடா போட்டியில் ஒன்றுடன் ஒன்று முட்டும்போது, இருதயம் படபடவென துடிக்கும் அளவுக்கு உடைகல் உடைபடும் சப்தம் கேட்கும். இதுபோன்ற பல அம்சங்கள் நிறைந்திருப்பதால் பல நுாற்றாண்டுகளை கடந்து கச்சைகட்டி கருப்பாடுகள் கம்பீரமாக வலம் வருகின்றன என்றார்.

தொடர்புக்கு 97506 62881.

Thursday, October 22, 2015

யாதவர் வாக்குகள் 50000 மேல் உள்ள தொகுதிகள்:

1.   செங்கம் (தனி) -திருவண்ணாமலை மாவட்டம்
2.   வந்தவாசி (தனி) - திருவண்ணாமலை  மாவட்டம்
3.   திட்டக்குடி(தனி)- கடலூர் மாவட்டம்

4.   திருவொற்றியூர்- சென்னை
5.   செஞ்சி- விழுப்புரம் மாவட்டம்
6.   புவனகிரி- கடலூர் மாவட்டம்
7.   விருத்தாசலம்- விழுப்புரம் மாவட்டம்
8.   மதுரை கிழக்கு- மதுரை  மாவட்டம்
9.   சங்கரன்கோவில்(தனி)- திருநெல்வேலி மாவட்டம்
10. கோவில்பட்டி- தூத்துக்குடி மாவட்டம்
11. திருநெல்வேலி- திருநெல்வேலி மாவட்டம்
12. பாளையங்கோட்டை- திருநெல்வேலி மாவட்டம்
13. பென்னாகரம்- தருமபுரி  மாவட்டம்
14. புதுகை- புதுகை மாவட்டம்
15. பெரம்பலூர்- பெரம்பலூர் மாவட்டம்
16. பேராவூரணி- தஞ்சை மாவட்டம்
17. திருமயம்- புதுகை மாவட்டம்
18. திருப்பத்தூர் - சிவகங்கை மாவட்டம்
19. மானாமதுரை(தனி)- சிவகங்கை மாவட்டம்
20. திருவாடனை- ராமநாதபுரம் மாவட்டம்
21. முதுகுளத்தூர்- ராமநாதபுரம் மாவட்டம்

Wednesday, October 21, 2015

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை:கோகுலத்தோர் மக்கள் முன்னேற்ற கழகம்



பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை ரூ.35-ஆக உயர்த்த வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

கோகுலத்தோர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பா.குமார் தலைமையில், கோட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்ட, பால் உற்பத்தியாளர்கள் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சுந்தரகிருஷ்ணனிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: யாதவ சமுதாய மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறைவாக இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ஒதுக்கீடாக 15 சதவீதம் உயர்த்தித் தரவேண்டும், கால்நடை வளர்த்து வரும் மக்களுக்கு நியாயவிலைக் கடையில் மாட்டுத் தீவனங்களை வழங்க வேண்டும்; கட்டாலங்குளத்தில் உள்ள அழகுமுத்துக்கோன் அரண்மனை மிகவும் பழுதடைந்துள்ளது. அதை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; யாதவ சமுதாய மக்கள் அனைவரும் கால்நடைகளை பராமரித்து, பால் உற்பத்தியை பெருக்கி வருவதால், பால் கொள்முதல் விலையை ரூ.35-ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதில், கோகுலத்தோர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் சதீஷ்குமார், தங்கமாரியப்பன், கருப்பசாமி, பொன்மாடசாமி, சின்னத்துரை, சின்னகருப்பசாமி, பாஸ்கரன், முத்துசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar