"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Monday, December 28, 2015

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

அழகுமுத்து கோன்
விடுதலை போராட்ட வீரர் அழகுமுத்து கோன் தபால் தலையை மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்ற விழாவில்
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டார் .

விழாவிற்கு தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு அழகு முத்துக்கோன் தபால் தலையை வெளியிட்டனர். அதனை தபால்துறை அதிகாரி சார்லஸ் பெற்றுக்கொண்டார்

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விழாவில்
பேசியதாவது :–

அழகு முத்துக்கோன் போன்ற விடுதலை வீரர்களின் பெருமைகளை நன்கு அறிந்துள்ளேன். இவரை போல நமது தேசத்துக்காக பாடுபட்ட விடுதலை வீரர்கள், புரட்சியாளர்கள் உள்ளிட்டோரின் பெருமைகளை ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பறைசாற்ற வேண்டும். இனிவரும் காலங்களில் விடுதலை வீரர்களின் பெயர்களை பட்டியலிட்டு அவர்களது சாதனைகளை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.

உலகத் தலைவர்களால் மதிக்கப்படும் பிரதமர்களில் நரேந்திர மோடிக்கு தனி இடம் உள்ளது. இன்னும் 5 வருடங்களில் இந்தியாவை வளர்ந்த நாடுகள் பட்டியலில் சேர்த்து விடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியாவில் புகழை உலகமெங்கும் கொண்டு சென்ற பெருமை பிரதமர் மோடியையே சாரும். அழகுமுத்துக்கோன் புகழ் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரப்பப்படும் என்று இங்கே நான், பாரதீய ஜனதா கட்சி சார்பில் உறுதி அளிக்கிறேன் என்று ரவிசங்கர் பிரசாத் பேசினார்.


விழாவில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:–

தற்போது விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் தபால் தலை வெளியிடுவது ஒரு சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் பெருமை அல்ல. ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்துக்கே பெருமையான விஷயம். அவர் நாட்டுக்காக வாழ்ந்ததை விட தர்மம் எப்போதும் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே வாழ்ந்து மறைந்துள்ளார். யாதவர் சமூகத்தினர் எப்போதும் நன்றிக்கு இலக்கணமாக இருக்கக்கூடியவர்கள்.

வருகிற தை திருநாளில் நிச்சயமாக ஜல்லிக்கட்டு நடக்கும். நடக்கும்... நடக்கும்... அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு சில சட்டச் சிக்கல்களும், பிரச்சனைகளும் இருக்கின்றன. அவை சரி செய்யப்பட்டு வருகிற பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடக்கும். அதற்கான முயற்சியில் தான் நாங்கள் இப்போது இறங்கி உள்ளோம் என்று பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.

விழாவில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்கள் முரளிதரராவ் பேசியதாவது:–


பிரதமர் மோடி தேச தியாகிகளை கவுரவப்படுத்தி வருகிறார். இந்த அரசுதான் தியாகிகளை கவுரப்படுத்தும் அரசாக இருக்கிறது. பசு மிகவும் புனிதமானது. பசுவையும் பாதுகாக்கும் அரசாக உள்ளது. ஜல்லிக்கட்டுக்குள்ள தடை நீங்க பிரார்த்திக்கிறேன் என்றார்.


இவ்விழாவில், பூபேந்தர் யாதவ் எம்.பி.,தமிழ்நாடு யாதவ மகா சபைத் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நாடார் மகாஜன சங்கத் தலைவர் கரிக்கோல்ராஜ், மெர்க்கன்டைல் வங்கி இயக்குநர் பெரீஸ்மகேந்திரவேல், தமிழ்நாடு யாதவ மகாசபை பொதுச்செயலாளர் தர்ம லிங்கம், மாநில பொருளாளர் எத்திராஜ்,மதுரை மக்களவை உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன், இந்திய மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் தி.தேவநாதன், யாதவ தன்னுரிமை பணியக நிர்வாகிகள் பா.சரவணன், பெரி.கபிலன், சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரா.சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர். அழகு முத்துக்கோன் வாரிசு அழகு முத்தம்மாள் நன்றி கூறினார்.
 உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Union Minister releases stamp to commemorate freedom fighter Veeran Alagumuthu Kone



அழகுமுத்து கோன்
The Union government wanted Tamil Nadu to grow and “whatever help is required will surely be given” to overcome the impact of the recent rains and floods, said Ravi Shankar Prasad, Union Minister for Communication and Information Technology, on Saturday.

Releasing a stamp to commemorate Veeran Alagumuthu Kone, one of the earliest freedom fighters, at a function organised by Yadava Empowerment Services here, the Union Minister said that the Modi government treated all States equally and wanted Tamil Nadu to grow.

In a meeting, which was high on political rhetoric, Mr. Prasad apologised to the family members of the freedom fighter for the delay in releasing a stamp. “History of Indian stamps shows that a lot of them are from one family,” he said even while claiming that the Modi government wanted to accord due recognition for all Indians.

It was a shame that a stamp on Alagumuthu Kone, who was killed by the British tied to the mouth of a cannon in 1759, should be released after 68 years of Independence, he said. To make the younger generation aware of the sacrifice made by many in the freedom movement, Mr. Prasad had asked his Ministry to compile a list of revolutionaries and freedom fighters as the Union government respected all those who had laid down their lives for the nation.

“Prime Minister Modi believed in cooperation of all and development of all,” Mr. Prasad said, adding that the Centre stood for respect, justice and growth of all communities.

Union Minister of State for State for Shipping and Road Transport Pon. Radhakrishnan gave an assurance that the Centre would take all steps to conduct jallikattu in Tamil Nadu this year. By releasing a stamp in memory of Alagumuthu Kone, the Modi government had honoured entire Tamil Nadu, he said.

BJP MP Bhupendra Yadav recalled how the Yadavs had a tradition for sacrificing their lives for the nation. P. Muralidhar Rao, BJP general secretary, said jallikattu was a symbol of Tamil culture and youth power and the Centre would take all steps to protect it.

State BJP president Tamizhisai Soundararajan saw a bright future for Tamil Nadu in several communities coming together. Those who offered felicitations included M. Gopalakrishnan, president, Tamil Nadu Yadava Mahasabha, and R. Srinivasan, State joint convenor, Swadeshi Jagran Manch.

Friday, December 25, 2015

Veeran Alagumuthu Kone Wikipedia

Veeran Alagumuthu Kone Wikipedia
Veeran Alagamuthu in Kattalankulam
Veeran Azhagu Muthu Kone , also known as Alagumuthu Konar, was a Tamil Konar warrior from India.He is regarded for having raised one of the first revolts against the British in India. He was based in Kattalankulam, a village in erstwhile Tirunelveli district of Tamil Nadu.


Government Memorial Activities


In the State Legislature on 29.04.1994 the government announced to celebrate annually by the Govt, in Tirunelveli the memory of Veeeran Alagumuthu Yadav. It was done for the year 1995. Then the government named a Transport Corporation with headquarters at Pudukottai and Government buses were operated with the name “Veeeran Alagumuthu Kone Transport Corporation” on 15.03.1996. On the same day (15.03.1996) a very big bronze statue of Veeran Alagumuthu was erected by the government near Madras Egmore Railway station. The statue was opened by Hon. Chief Minister Selvi J. Jayalalithaa under the presidentship of Thiru S. Kannappan (Yadav) Minster for PWD, Highways and Electricity. He was the force behind for getting the demands accepted by the government.

The function was attended by more than 7 lac Yadavas came on 4000 buses and lorries from throughout Tamilnadu. In that meeting Hon. Chief Minister Selvi J. Jayalalithaa announced that the fort built by Veeran Alagamuthu in Kattalankulam in Tuticorin district will be renovated and will be made a tourist spot. But after some days general election was announced and the AIADMK was voted out of power. DMK government came to power in 1996 June.

After coming to power the government decided in the cabinet meeting on 22.06.1998 bifurcate the Madurai district and name the new district as Veeran Alagumuthu District with Thene as its headquarters and it was implemented.

In Madurai Yadava College Veeran alagumuthu kone Statue opened by Shri Lalu Prasad Yadav Chief Minister of Bihar.

Later Some of Yadava Sangam and Yadav based political party to build  veeran alagumuthu kone statue in Thiruvannamalai ( Jananayaka Makkal tamil Desam Katchi under leadership of Thiru Ramachandra Maruthu Pandiyar)and Tirunelveli (Yadava mahasabai under leadership of Thiru T Devenathan yadav).



Every year July 11 Veeran alagumuthu kone Guru poojai function  conducted in Tamilnadu.

Veeran Alagumuthu Kone Wikipedia
Madurai Yadava College


Veeran Alagumuthu Kone Wikipedia
Thiruvannamalai

Veeran Alagumuthu Kone Wikipedia
Tirunelveli 







Thursday, December 24, 2015

Commemorative stamp on freedom fighter Azhagumuthu Kone to be released

The department of posts will release commemorative stamps on freedom fighter Azhagumuthu Kone While the stamp on Pant would be released on December 26, said a postal department press release.

Kone was one of the early freedom fighters to arouse public consciousness against foreign rule in Tiruneveli region of Tamil Nadu. He was a general with Ettayappa Naicker, a Polygar king of Ettayapuram.

The commemorative postage stamps, first day covers and information brochures can be purchased from the philatelic bureaux and counters across the country.

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோன் தபால் தலை: 26–ந்தேதி வெளியிட தபால் துறை திட்டம்

சுதந்திரத்திற்காக போராடிய மாவீரன் அழகுமுத்து கோன், ஜெகவீர ராமபாண்டி எட்டப்பன் என்ற எட்டயபுரம் அரசருக்கு நண்பர். கப்பம் கட்ட மறுத்து, முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தவர். 

மருதநாயகம் யூசுப்கான் சாகிப்பை எதிர்த்து, பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டு, வீரன் அழகுமுத்து கோன், படைத்தளபதிகளும், போர் வீரர்களும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டனர். இவர்களை கவுரவிக்கும் வகையில், அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் தலை, அஞ்சல் உறை வெளியிடப்படுகிறது. வரும் 26-ந்தேதி (சனிக்கிழமை) அழகுமுத்து கோன் நினைவு அஞ்சல் தலை, அஞ்சல் உறை, விவரக் குறிப்பேடும் அஞ்சலகங்களில் விற்பனைக்கு கிடைக்கும். 

மேற்கண்ட தகவலை அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tuesday, December 15, 2015

ஆனாய நாயனார் புராணம்-1




தொகை


"அலைமலிந்த புனன்மங்கை ஆனாயர்க் கடியேன்"


- திருத்தொண்டத்தொகை


வகை
தாயவன் யாவுக்குந் தாழ்சடை மேற்றனித் திங்கள்வைத்த
தூயவன் பாதந் தொடர்ந்துதொல் சீர்துளை யாற்பரவும்
வேயவன் மேன்மழ நாட்டு விரிபுனன் மங்கலக்கோன்
ஆயவ னானாய னென்னை யுவந்தாண் டருளினனே.




- திருத்தொண்டர் திருவந்தாதி


விரி
926.






மாடு விரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்,
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற,
ஈடு பெருக்கிய போர்களின் மேக மிளைத்தேற,
நீடு வளத்தது மேன்மழ நாடெனு நீர்நாடு.




1




புராணம் :- ஆனாயர் என்ற பெயராலறியப்படும் நாயனாரது சரித
வரலாறும் பண்புங் கூறும் பகுதி. நிறுத்த முறையானே இலை மலிந்த
சருக்கத்து ஏழாவது ஆனாய நாயனாரது புராணங்கூறத் தொடங்குகின்றார்.


தொகை :- அலைகள் பெருகிய புனல் சூழ்ந்த திருமங்கலம் என்ற
தலத்தில் அவதரித்த ஆனாயருக்கு அடியேனாவேன்.


மங்கை - திருமங்கலம். ஆனாயர் - ஆன் ஆயர் - ஆ மேய்க்கும்
ஆயர் குலத்தவர். ஆனாயர் (933) என்றது காண்க. நாயனாரது இயற்பெயர்
விளங்கவில்லை. ஊரும் ஊர்ச்சிறப்பும், பேரும், தொழிலும் திருத்தொண்டின்
குறிப்பும் முதனூல் பேசிற்று.


வகை :- யாவைக்கும் தாயானவரும், சடைமேற் பிறைவைத்த
தூயவரும்ஆகிய சிவபெருமானுடைய திருவடிகளை மனதில் விடாதுபற்றி,
அத்தொடர்ச்சியாலே அவருடைய பழமையாகிய சீர்களை வேய்ங்குழல்
நாதத்தினாற் பரவுகின்ற மேன்மழ நாட்டு நீர்வளம் மிக்க திருமங்கலத்தின்
ஆனாயர் என்னை மகிழ்ந்து ஆட்கொண்டருளியவர்.


மேன்மழ நாட்டு மங்கலக்கோன் ஆனாயன், தூயவன் பாதம்
தொடர்ந்து அவனது சீர் துளையாற் பரவுபவன்; அவன் என்னை ஆண்டவன்
எனமுடித்துக் கொள்க. தாயவன் யாவுக்கும் "தாயவன்காண் உலகுக்கு"
(கச்சித்திருத்தாண்டகம்). தொடர்தல் - விடாது பற்றுதல் குறித்தது.
துளைவேயாற் பரவுபவன் என மாற்றுக. துளைகளின் வழியே பண் எழுப்பிப்
பரவுதலால் துளையாற் பரவும் என்றார். மங்கலம் - நகரப்பெயர்.
விரிபுனன் மங்கலம் - "அலைமலிந்த புனன் மங்கை" என்பது முதனூல்;
(தொகை). என்னை உவந்து ஆண்டவன் - "அடியேன்" என்ற முதனூல்
முடிபின் தாற்பரிய முணர்த்திற்று. யான் அடியேன் எனப் பணிதலும்,
அவனும் என்னை ஆண்டனன். உவந்து - அடிமையை


ஏற்றுக்கொண்டு. விரிபுனல் இரண்டு ஆறுகள் கூடிச் சேர்தலால் இவ்வாறு
கூறினார். "இது அலைமலிந்த புனன்" என்ற முதனூற் பொருளை எடுத்து
ஆண்டு வற்புறுத்தியதாம்.

நாயனாரது, நாடு - மேன்மழ நாடு - (926); நகரம் - விரிபுனன்
மங்கலம் (932); பெயரும் குலமும் தொழிலும் - ஆனாயர். "ஆயர்
குலத்தவர்" (933); "ஆனிரை அளித்துள்ளார்" (935); திருத்தொண்டின்
திறமும் வரலாறும் - தொல் சீர் துளையாற் பரவும் வேயவன் என்றது
- "தம் பெருமானடி அன்புறு கானத்தின் மேவு துளைக்கருவிக் குழல்
வாசனை மேற்கொண்டார்" (937), (938), (939); "வாயினின் மெய்யின் வழுத்து
மனத்தின் வினைப்பாலின்..........பிரானடியல்லது பேணாதார்" (934);
"கொன்றையினை நேர்நோக்கி..........அன்பை உடையவர்பால் மடை திறந்தார்"
(946), (950), (952); தாயவன் - அருட்கருணை தானாய........தவவல்லியுடன்
(963); சடைமேற் றனித்திங்கள் வைத்த தூயவன் - மதி நாறும் சடைதாழ
(963); நாறுதல் - தோன்றுதல் - முளைத்தல். இவ்வாறு விரிவாய்
இப்பொருள்களை விரிநூல் விரித்தமை கண்டுகொள்க.

926. (இ-ள்.) மேன்மழ........நீர்நாடு - மேன்மழநாடு என்று
சொல்லப்படும் நீர்வளம் மிக்க நாடு; மாடு........வந்து ஏற - பக்கங்களில்
பரவுகின்ற வாசனையுடைய அழகிய சோலைகளில் வான்மதி வந்து ஏறவும்;
சூடு - சுரும்பு ஏற - சூடடிக்கும் நெல்லரிகள் பரப்பிய பண்ணையின்
வரம்புகளில் வண்டுகள் ஏறவும்; ஈடு.........இளைத்து ஏற - மேன் மேல்
அடுக்கியுயர்த்த வைக்கோற் போர்களில் மேகங்கள் இளைத்து ஏறவும்; நீடு
வளத்தது - நிலை பெறும் வளத்தையுடையது.

(வி-ரை.) விரைப்பொலிசோலை - விரை - மணம்; பொலிதல் -
அழகுடன் விளங்குதல். கண்ணுக்கினிய காட்சியழகு மட்டும்கொண்டு
மணமில்லாதசோலைகளைப் பெருஞ்சிரமப்பட்டு வைத்துக் களிக்கும்
இந்நாள்மாக்கள் இதனைச் சிந்திப்பார்களாக.


வான்மதி வந்து ஏற - மிக உயர்ந்து வளர்ந்த சோலையின் உயர்ச்சி
குறித்த உயர்வுநவிற்சியணி. மதி வானவீதியிற் செல்லுவதாயினும்,
இச்சோலையினது வானளாவிய உயர்ச்சியினாற் கீழிருந்து, புறத்துக்
காண்போர்க்கு, அது (மதி) இதனுள் வந்து நுழைந்து மேல் ஏறுவதாகப்
புலப்படும் என்பது. ஏறுதல் - மதி, முளைத்த இடத்தினின்றும் பொழுதேற
ஏற மேற்போதல். "வெண்மதியம், சோலைதொறு நுழைந்துபுறப் படும்பொழுது"
(திருஞான - புரா - 8) என்ற இடத்து இக்கருத்தை மேலும்நயம்பட விரித்தது
காண்க. சோலையின் மரங்களின் உயர்ச்சியை "மந்தியும் அறியா மரன்பயில்
அடுக்கத்து" என்று உயர்வு நவிற்சிபடக் கூறும் திருமுருகாற்றுப்படையும்,
"வான மதிதடவ லுற்ற விளமந்தி, கான முதுவேயின் கண்ணேறித் - தானங்,
கிருந்துயரக் கைநீட்டு மீங்கோயே நம்மேல், வருந்துயரந் தீர்ப்பான் மலை"
என்ற ஈங்கோய்மலை யெழுபதும் (68) பிறவும் காண்க.

சூடு பரப்பிய பண்ணை - சூடு - நெற்கதிர்களில், தலையடியில்
உதிராத மணிகளை உதிர்க்கும் பொருட்டுப் பரப்பிய நெல் அரிகள்.
இவற்றை மேதிகளால் மிதிப்பித்து (கடாவிடுதல் என்பர்) நெல்லுதிர்த்துச்
சேர்த்தல் மரபு. (அரிகளை முதலில் அடித்தபோது உதிர்ந்தநெல் தலையுதிரி
எனப்படும்.) 73ல் உரைத்தவை பார்க்க.

சூடு...........சுரும்பு ஏற - சூடு உதிர்க்கப் பரப்பிய வயல்களில்,
வரம்புகளில் வண்டுகள் ஏறுதலாவது சூடு அரிகள் பரப்பும்போது அங்குத்
தாமரை நீலம் முதலிய கொடிகளும் மலர்களும் உள்ளமையால் அவற்றின்
மொய்த்த வண்டுகள் தப்பி ஓடுதற்கு ஒதுங்கி அங்குநின்றும் வரம்புகளில்
ஏறுதல். "அரிதரு செந்நெற்சூட்டி னடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்......விரிமலர்க் கற்றை வேரி பொழிந்திழி

வெற்பு வைப்பார்" (73) என்றது காண்க.

ஈடு பெருக்கிய போர் - சூடு அடித்தபின் வைக்கோல்களைப் பெரும்
குவியல்களாக அடுக்கிக் குவித்த போர்கள். ஈடு - ஆதி நீண்டுவந்த
முதனிலைத் தொழிற்பெயர். ஈடு - இடுதலினாலே - ஒன்றன்மேல் ஒன்று
குவியலாக இடப்படுதலினாலே. போர் - வைக்கோற்போர். ஈடு -
ஒன்றுக்கொன்று சமமாகச்செய்த என்றும், பெருமைமிகச் செய்த என்றும் உரை
கூறுவாரும், போர் - நெற்போர் என்பாரும் உண்டு. இவை
பொருந்தாமையறிக.

போர்களின் மேகம் இளைத்து ஏற என்றது தாழவரும் மேகங்கள்
தங்கக்கூடிய வளவிலே மிக உயர்ந்தனவாக வைக்கோற் போர்கள்
இடப்பட்டன என்க. இன்றைக்கும் மலைபோல நிமிர்ந்து காணக்கூடியபடி
மிகஉயரமாகிய வைக்கோற் போர்கள் இந்நாட்டின் புறங்களிலும்
(இத்திருமங்கல) நகரிலும் காணலாம். இளைத்து ஏறுதல் - மெல்லத் தவழ்தல்.
இலக்கணை. "சோலைகள் மேலோடும், வெங்கதிர் தங்க விளங்கிய மேன்மழ
நன்னாடு" (932) என்றதும் அங்கு உரைப்பவையும் இங்கு வைத்துச் சிந்திக்க.

மேன்மழநாடு - இது நாட்டின் பெயர். மழநாடு - மழவர் என்ற
மரபினர் வாழ்வதும், அம்மரபினரால் அரசு செய்யப் பெற்றதும் ஆகிய நாடு.
இதுமேன் மழநாடு, கீழ் மழநாடு முதலிய பல பிரிவுகளையுடைய
தென்றறியப்படும். திருப்பாசசிலாச் சிராமத்தைத் தலை நகராகக் கொண்டு
கொல்லி மழவன் அரசு புரிந்த நாடும் மழநாட்டின் ஒரு பிரிவு. அது கீழ்
மழநாடு என்பது போலும். கொல்லி மழவனும் அவனது மரபினரும் வழி
வழியாகச் சிவனடிச் சார்புடைய சைவமரபு அரசர்கள் என்பது, "மறிவளருங்
கையார் பாதம் பற்றியே வருங்குலத்துப் பான்மையினா னாதலினால்"
(திருஞான - புரா - 312) என்றமையாலும், பிறவாற்றாலும் அறியப்படும்.
மழநாடு சோழ நாட்டின் ஒரு பகுதி. மழவ அரசர்களும் சோழ மன்னர்களின்
கீழ் வாழ்ந்த சிற்றரசர்களில் ஒருவராகும் என்ப. கொங்கு மழநாடு என்ற ஒரு
பகுதியும் உண்டு. பிற வரலாறுகள் சரித ஆயாய்ச்சிக் குறிப்பிற் கண்டு
கொள்க.

நீர் நாடு - நீர் வளம் பொருந்திய நாடு என்க. "அலைமலிந்த புனல்"
என்பது முதனூல். அதனை வழி நூலுள் (திருவந்தாதி) "விரிபுனல்" என்றார்.
அதனையே ஆசிரியர் "நீர்" என்றனர்.

நீடு வளத்தது - நீடு முக்காலத்துக்கும் பொதுவாகிய வினைத்தொகை.
இவ்வாக்கின் பயனாக இந்நாளிலும் இந்நாடு நீடும் வளமுடையதாய்
விளங்குதல் கண்கூடு.

சராசரமெல்லாம் சந்த இசைமயமாக்கிய ஆனாய நாயனாரது
சரிதமாதலின் சந்தப்பா யாப்பினால் ஆசிரியர் தொடக்கம் செய்கின்ற நயம்
காண்க. 1 ................

சு‌ப்பையா சுவா‌மிக‌ள்

திருநெ‌ல்வே‌லி அரு‌கி‌ல் உ‌ள்ள கடையனோடை எ‌ன்னு‌ம் ‌கிராம‌த்‌தி‌ல்‌வி‌ல்‌லிமு‌த்து‌க் கோனா‌ர்-நாராயணவடிவு த‌ம்ப‌தியரு‌க்கு 23.11.1908 ஆ‌ம் ஆ‌ண்டு‌பிற‌ந்தவ‌ர் மகா‌ன் சு‌ப்பையா சுவா‌மிக‌ள். ஒரே ஆ‌ண் வா‌ரிசான இவ‌ர், படி‌‌ப்‌பி‌ல்அ‌திக ஆர்வம் கொ‌ண்டவராகவும், அதே நேரத்தில் ஆன்மீக நாட்டமுடையவராகவும் இரு‌ந்தா‌ர். அ‌ப்போ‌து இரு‌ந்தே ந‌ண்ப‌ர்களுட‌ன் சே‌ர்‌ந்து பல கோ‌யி‌ல்க‌ள், சமா‌திகளை சு‌ற்‌றி வருவா‌ர்.
ஐ‌ந்தா‌ம் வகு‌ப்பு வரை கடையனோடை‌யி‌ல் படி‌த்த இவ‌ர், இ‌ப்படி கோ‌யி‌ல், சமாத‌ி எ‌ன்று ‌சு‌ற்‌றி ‌தி‌ரி‌ந்ததா‌ல் அவரது பெ‌ற்றோ‌ர், மூ‌த்த மக‌‌ள் இரு‌க்கு‌ம் குலசேகரப‌ட்டின‌த்‌தி‌ற்கு அனு‌ப்‌பி வை‌த்தன‌ர். அ‌ங்கு‌ள்ள பெ‌‌ரிய ப‌ள்‌ளி‌யி‌ல் சே‌ர்‌ந்தா‌ர். 
ஆனா‌ல் ‌அ‌ங்கு சு‌ப்பையா சுவா‌‌‌மி‌க்கு ந‌ண்ப‌ர்க‌ள் யாரு‌ம் ‌கிடை‌க்க‌வி‌ல்லை. வார ‌விடுமுறை நா‌ட்க‌ளி‌ல் அரு‌கி‌ல் உ‌ள்ள ‌திரு‌ச்செ‌ந்தூ‌ர் செ‌ன்று அ‌ங்கு‌ள்ள வ‌ள்‌ளி‌க்குகை, மூவ‌ர் சமா‌தி போ‌ன்ற இ‌ட‌ங்க‌ளி‌ல் த‌னிமை‌யி‌ல் அம‌‌ர்‌ந்து கொ‌ள்வா‌ர். அ‌ப்போது அ‌ங்கு வரு‌‌ம் சாது‌க்க‌ளுட‌ன் ‌சி‌த்த வை‌த்‌திய‌ம், யோக‌ம் போ‌ன்றவ‌ற்றை க‌ற்று‌‌க் கொ‌ண்டா‌ர். ‌பி‌ன்ன‌ர் மூ‌லிகை மரு‌ந்துக‌ள் தயா‌ரி‌த்து பலரு‌க்கு ‌சி‌கி‌ச்சை செ‌ய்தா‌ர். 7ஆ‌ம் வகு‌ப்பு வரை குலசேகர‌ப‌ட்டின‌த்த‌ி‌ல் படி‌த்த அவ‌ர், ம‌ீ‌ண்டு‌ம்கடையனோடை‌க்கு பெ‌ற்றோ‌ர்க‌ள் அழை‌த்து செ‌ன்றன‌ர். ‌பி‌ன்ன‌ர் ஆ‌ழ்வா‌ர்‌திருநக‌ரிலு‌ள்ள இ‌ந்து நடு‌நிலை‌ப்ப‌ள்‌ளி‌யி‌‌ல் 8ஆ‌ம் வகு‌ப்பும், ‌ திருவைகு‌ண்ட‌ம் காரனேஷ‌ன் உய‌ர் ‌நிலை‌ப்ப‌ள்‌ளி‌யி‌ல் 10ஆ‌ம் வகு‌ப்பு‌ம், பாளைய‌ங்கோ‌ட்டை தூய யோவா‌ன் க‌ல்லூ‌ரி‌யி‌ல் இ‌ண்ட‌ர்‌மீடிய‌ட் படி‌த்தா‌ர். இதையடு‌த்து மதுரை‌க்கு செ‌ன்று ‌பி.ஏ(hons) படி‌த்து முடி‌த்தா‌ர்.


க‌ல்லூ‌ரி பேரா‌சி‌ரிய‌ராக இரு‌ந்த க‌‌ல்யாண‌ம் ராமசா‌மி எ‌ன்பவருட‌ன் த‌ங்‌கி ‌சி‌த்துக‌ளிலு‌ம், மரு‌த்துவ‌த்‌திலு‌ம், ஆரா‌ய்‌ச்‌சி‌யிலு‌ம் ப‌யி‌ற்‌சி பெ‌ற்றா‌ர். மேலு‌ம் மூ‌லிகை, வை‌த்‌திய‌ம், உடற‌்கூறு, ‌சி‌த்து‌க‌ள், உற‌ங்காமை, உ‌ண்ணாமை போ‌ன்ற ப‌யி‌ற்‌சி பெ‌ற்றா‌ர். ஆனா‌ல் அத‌ி‌ல் நா‌ட்ட‌‌மி‌ல்லை.


த‌ன் ‌நில‌ங்களை ‌வி‌ற்று ஏழை அ‌ன்னதான‌ம் வழ‌ங்‌கினா‌‌ர். ‌பி‌ன்ன‌ர் கணப‌திமூலம‌ந்‌திர‌ம், ஸ்ரீராம ஜெய‌ம் போ‌ன்ற ம‌ந்‌திர‌ங்களை பலரு‌க்கு உபதே‌சி‌த்தா‌ர்.


மீ‌ண்டு‌ம் கு‌ற்றால‌ம், வ‌ள்‌ளி‌க் குகை, ‌திரு‌ச்செ‌ந்தூ‌ர் செ‌ன்றா‌ர். அதுவு‌ம் ச‌ரி‌ப்பட‌வி‌ல்லை. ‌‌பி‌ன்ன‌ர் ‌திரு‌‌ப்ப‌தி செ‌ன்றா‌ர். ‌பிறகு ‌விரு‌த்தாசல‌ம் செ‌ன்றா‌ர். அ‌ங்‌கிரு‌ந்து வடலூரை அடை‌ந்தா‌ர். அ‌ங்கு ‌சில மாத‌ங்க‌ள் த‌ங்‌கினா‌ர். ‌பி‌ன்ன‌ர் அ‌ங்‌கிரு‌ந்து ‌திரு‌க்கழு‌க்கு‌ன்ற‌ம் வ‌ந்தடை‌ந்தா‌ர். சு‌ப்பையா சுவா‌மிக‌ள் கடை‌சியாக‌ப்பே‌சியது திருக்கழு‌க் கு‌ன்ற மலை‌யிலம‌ர்‌ந்த ஓரா‌ண்டு வரைதா‌ன் (1951)
1951ஆ‌ம் ஆ‌ண்டு அ‌‌‌ங்கு வ‌ந்த சு‌ப்பையா சுவா‌மிக‌ள், அ‌ங்கு‌ள்ள மலை‌யி‌ன் ‌மீது அம‌ர்‌ந்து யோக ப‌யி‌ற்‌சி செ‌‌ய்வா‌ர். அ‌ப்போது அவரு‌க்கு பா‌ல், பழ‌ம் கொடு‌த்து உபச‌ரி‌த்தன‌ர். இர‌வி‌ல் ‌விஷ ஜ‌ந்து‌க்க‌ள், பு‌லி, ச‌ிறு‌த்தை எ‌ல்லா‌ம் நடமாடு‌ம் இ‌ட‌த்‌தி‌ல் எ‌ப்படி இரு‌க்‌கிற‌ீ‌ர்க‌ள் எ‌ன்று கே‌ட்டு‌ள்ளன‌ர். சுவா‌மி பு‌ன்முறுவலுட‌ன் இ‌ர‌ண்டொரு வா‌ர்‌த்ததை கூ‌றி அவ‌ர்களை அனு‌ப்‌பி வை‌த்தா‌ர். ‌பி‌ன்ன‌ர் மரண‌த்த‌ி‌ற்கு மூல‌ங்களை ந‌சி‌க்கு‌ம் உபாய‌த்துட‌ன் தவ‌ம் மே‌ற்கொ‌ண்டதா‌ல் பேசுவதை‌ந‌ிறு‌த்த‌ி‌‌க் கொ‌ண்டா‌ர். தன‌க்கு மு‌ன்பாக ‌திருவரு‌ட்பா எ‌ன்ற நூலை ம‌ட்டு‌ம் எ‌ப்போது‌ம் வை‌த்‌திரு‌ப்பா‌ர். ‌பி‌ன்ன‌ர் அ‌ங்கு‌ள்ள ம‌க்கள‌ா‌ல் கடையனோடை சுவா‌மி எ‌ன்று‌ம், ‌பி.ஏ. சுவா‌மி எ‌ன்று‌ம், ‌திரு‌க்கழு‌க்கு‌ன்ற‌ம் சுவா‌‌மி எ‌ன்று‌‌ம் அழை‌க்க‌‌ப்ப‌ட்டா‌ர்




சு‌ப்பையா சுவா‌மிக‌ள் கடையனோடை‌யி‌ல் அவதார‌ம் செ‌ய்தது முத‌ல் ‌திரு‌க்கழு‌க்கு‌ன்ற‌த்த‌ி‌ல் மு‌க்‌தியடை‌ந்தது வரை அவரு‌க்கு இ‌வ்வுலக உய‌ி‌ர்க‌ள்,சடமா‌யிரு‌ந்த கோ‌யி‌ல்க‌ள், சமா‌திக‌ள் முத‌லியவ‌ற்றுட‌ன் ‌நிறைய‌த் தொட‌ர்புக‌ள் உ‌ண்டு. எ‌வ்வுயிரு‌க்கு‌ம் ‌தீ‌ங்கு ‌நினை‌க்காதவனே வை‌ஷ்ணவ‌ன் எ‌ன்ப‌ர். அ‌வ்வ‌ழி வ‌ந்தவ‌ர் எ‌வ்வு‌யிரு‌க்கு‌ம் எவராலு‌ம் ‌தீ‌ங்கு வர‌க்கூடாது என எ‌ண்ணுபவ‌ன் ச‌ன்மா‌ர்‌க்‌கி என வை‌ஷ்ணவ‌த்‌‌தி‌ல் இரு‌ந்து ச‌ம்மா‌ர்‌க்க‌ம் வரை அவ‌ர் வ‌ந்த பாதையை பா‌ர்க‌்கு‌ம் போது அவ‌ரி‌ன் உ‌யி‌ர் எ‌த்தகைய உறவை ஒ‌வ்வொ‌ன்‌றிலு‌ம் ‌நிலை நா‌ட்டி‌யிரு‌க்‌கிறது எ‌ன‌ப் பா‌ர்‌‌த்தா‌ல் தெ‌ளிவு ஏ‌ற்படு‌ம்.




1961 ம் ஆண்டு அவர் தன்னுடன் தொடர்புடைய அன்பர்களிடம் தனது உடலில்
நாடி அடங்கும் நேரத்தை குறிப்பிட்டு இருந்தார்.அப்போது அவர் திருகழ்குகுன்ர மலை குகையில் இருந்தார். நாடி அடங்கியவுடன் அவரது உடல் கீழே கொண்டுவரப்பட்டது. அவர் விருப்பப்படி சமாதி கட்டப்பட்டு அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. மேலெ திறக்கும் வகையில் பலகைக் கல் வைத்து மூடப்பட்டது. 40 நாட்களுக்கு பூஜை செய்யப் பட்டது. பின்னர் அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் முன்னிலையில் சமாதியின் மூடி திறக்கப் பட்டது.
அவரது உடல் கெடாமல் அமர்ந்த நிலையில் அப்படியே இருக்கக் கண்டனர் மக்கள் அனைவருக்கும் ஆச்சரியம். THE BODY IS INTACT என்று அரசுக்கு அறிக்கை அனுப்பப் பட்டது.


சமாதியின் மேல் மூடி மூடப்பட்டது. மீண்டும் பத்து மாதங்களுக்கு பூசை செய்யப்பட்டது.அதன் பிறகு மீண்டும் சமாதியின் மூடி திறக்கப் பட்டது. உடல் கெடவில்லை. பின்னர் சமாதியின்மீது கட்டிடம் கட்டப் பட்டுள்ளது.
சமாதியில் தினசரி அன்னதானம் நடக்கிறது.தியான மண்டபம் கட்டப் பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டு மலர் வெளியிடப்பட்டுள்ளது.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar