"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Saturday, December 10, 2016

ஆயர் விருதுகள் 2015

வணக்கம். "விருது வாங்கிய சமூகம், இன்று விருது வழங்குகிறது" மதுரையில் 'ஆயர் விருதுகள் 2015' வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் தங்களை பதிவு செய்யுங்கள் - யாம்/YES






Tuesday, October 18, 2016

விழுப்புரம் மாவட்டம் மலையமேடு கிராமத்தில் யாதவ சமுதாய இளைஞர்களால கண்ணன் கோவில் யாதவ சொந்தங்களிடம் நன்கொடை வரவேற்க்கபடுகின்றது

ஆயர் குல சொந்தங்களுக்கு வணக்கம்,











விழுப்புரம் மாவட்டம் மலையமேடு கிராமத்தில் யாதவ சமுதாய இளைஞர்களால கண்ணன் கோவில் கட்டப்பட்டுள்ளது.
அந்த கோவில் மதில்சுவர் மற்றும் சில பணிகள் பண தட்டுப்பாட்டினால் தடைபட்டுள்ளது. யாதவ சொந்தங்களிடம் நன்கொடை வரவேற்க்கபடுகின்றது.




-------------------பகிரவும்--------------------
தொடர்புக்கு.
நாராயணன் யாதவ்
+91- 94442 85589

Tuesday, October 4, 2016

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோ.ம.க வேண்டுகோள்

காவிரி நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண, அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செப்டம்பர் 30 ஆம் தேதி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இன்று (3.10.2016) மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்னரே அமைக்க முடியும்; இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட முடியாது” என்றும் தெரிவித்து இருக்கின்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டிய தேவை எதுவும் இல்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு அமைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியதையே உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்து இருந்தது.
இத்தனை ஆண்டுகளாக இதுகுறித்து எதுவுமே தெரிவிக்காத மத்திய அரசு, இப்போது ஒரு புதிய காரணத்தைக் கண்டுபிடித்து இருக்கின்றது; சட்டவிரோதமாகச் செயல்படும் கர்நாடக மாநிலத்திற்கு மத்திய பா.ஜ.க. துணைபோய்க் கொண்டு இருக்கிறது என்பதற்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவே ஆதாரம்.
மத்திய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.
தமிழ்நாட்டுக்குச் சொட்டுத் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று கர்நாடகம் மார்தட்டுவதற்கும், காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் புதிய அணை கட்டியே தீருவோம் என்று கொக்கரிப்பதற்கும் மத்திய அரசின் ஆதரவு தான் காரணம் என்பது அம்பலமாகிவிட்டது
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள பச்சைத் துரோகத்தைத் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
தமிழக மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராகப் போராடியாக வேண்டும்.
தமிழக மக்களின் கொந்தளிப்பான மனநிலையைப் புரிந்துகொண்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை உடடினயாக அமைக்க வேண்டும் என்று கோகுல மக்கள் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.

Saturday, October 1, 2016

யாதவர் கல்லூரி நலன் கருதி ஒருநாள் (02.10.16) மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

யாதவர் கல்லூரி நலன் கருதி நாளை ஒருநாள் (02.10.16) நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் உணர்வுள்ள உறவுகள் அனைவரும் கலந்துக்கொன்று வரலாற்றில் தங்களை பதிவு செய்துகொள்ளவும் - நன்றி


Wednesday, September 28, 2016

ராமானுஜரின் திவ்யப் பிரபந்த ஈடுபாடு

ராமானுஜர் சமயக் கருத்துகளைக் கூற ஏற்ற மொழியாக இருந்த காரணத்தால், வடமொழியில் ஒன்பது நூல்களை இயற்றினார். ஆனால் தமிழ் நூல்கள் எதற்கும் விளக்கவுரை எழுதவில்லை. இதனால் இவருக்குத் தமிழ்ப் புலமை குறைவாக இருக்குமோ என்று கருதுபவரும் உண்டு.

இவர் இயற்றிய தனியன்கள்: (நூலை விட்டு தனியே இருப்பது தனியன்)




வாழி பரகாலன் வாழி கலிகன்றி

வாழி குறையலூர் வாழ்குவந்தன் வாழியரோ

மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள், மங்கையர் கோன்

தூயோன் சுடர் மான வேல்’

--- உடையவர் இயற்றிய பெரிய திருமொழித் தனியன்.

தம்மை ஒரு தலைவியாகக் கருதிப் பாடிய பெருமாள் திருமொழித் தனியன்:

‘இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே

தன்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்

சிலை சேர் நுதலியர்வேள் சேரலர் கோன் எங்கள்

குலசேகரன் என்றே கூறு’

‘சீரார் திரு வெழுகூற்றிருக்கை யென்னும் செந்தமிழால்

ஆராவமுதன் குடந்தைப் பிரான் தன் அடியிணைக் கீழ்

ஏரார் மறைப்பொருள் எல்லாம் எடுத்திவ்வுலகுய்யவே

சோராமற் சொன்ன அருள்மாரி பாதம் துணை நமக்கே’

என்கிறது திருவெழுகூற்றிருக்கை தனியன்.

திவ்யப் பிரபந்த ஈடுபாடு

திருப்பாவையில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டினால், ‘திருப்பாவை ஜீயர்’ என்ற பட்டம் பெற்றார். ராமானுஜர் உரை, நயங்களாகவும் ஆட்சிகளாகவும் ஈட்டு உரையில் பல குறிப்புகள் உள்ளன. ஒரு நாள் உலாவச் சென்றவர் பாதியிலேயே திரும்பிவிட்டார். திருமடத்திலிருந்த எம்பார் கதவைத் திறந்த படி, ‘ திருமாலிருஞ் சோலை மலைத் திருவாய்மொழி திருவுள்ளத்தில் ஓடுகிறது போலும்?” என்று வினவ, இவரும் ‘ஆம்; அப்படியே’ என்று கூறினார்.

தம் அரிய சீடர் கூரத்தாழ்வான் பரமபதித்தபோது, உடையவர் அவரது பிரிவைத் தாங்காமல், (பெரியாழ்வார் திருமொழிப்பாசுரத்தைப்பாடி) ‘ஒரு மகள் தன்னை உடையேன்’ என்றும், ‘உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல் வளர்ந்தேன்’ என்றும், ‘செங்கண்மால் தான் கொண்டு போனான்’ என்றும் அருளிச் செய்தார் என்று பிரசித்தமிறே’ என்பது மணவாள மாமுனிகளின் உரைக் குறிப்பு. மேலும் இவர் திவ்யப் பிரபந்தப் பாசுரத் தொடர்களுக்கு நுட்பமான உரைகளை உரைத்துள்ளார்.

‘வான் திகழும் சோலை’, என்று தொடங்கும் திருவாய்மொழித் தனியனில், ‘தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன், மொய்ம்யில் வளர்த்த இதத் தாய் இராமானுஜன்’ என்று கூறப்பட்டுள்ளது. திருவாய்மொழியை இவர் எவ்வாறு வளர்த்தார்? எனின், வியாக்கியானங்கள் தோன்ற நியமித்தார். ‘திருத்தலங்களில் இன்னின்ன சமயங்களில் இன்னின்ன பாசுரங்களை சேவிக்க வேண்டும்’ என்று கட்டளை வகுத்தார்.

ஸ்ரீ பாஷ்யம் வரைந்தபோது, ‘பாஷியக்காரர் இது கொண்டு சூத்திர வாக்கியங்கள் ஒருங்க விடுவர்’ என்னும் ஆசாரிய இருதய சூத்திரப்படி ஸ்ரீபாஷியத்தின் நிதியான பொருட்களை ஆழ்வாருடைய திருவாய்மொழியைக் கொண்டு நிர்ணயித்து ஒருங்கவிட்டார். இங்ஙனம் பலவகையிலும் தமிழ்மறையின் ஏற்றத்திற்கு எம்பெருமானார் பாடுபட்டதால்,

“மாறன் உரை செய் தமிழ்மறை வளர்த்தோன் வாழியே” என்று வாழித் திருநாமப்பாடலில் மணவாள மாமுனிகள் குறிப்பிட்டார். மேலும் அவர் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து அவர் மேல், ‘இராமாநுச நூற்றந்தாதி’ பாடிய திருவரங்கத்தமுதனார் தம் நூலில்,‘சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அறநெறியாவும் தெரிந்தவன்’ (44) என்றும், ‘உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந்தொறும் திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும் மாமலராள் புணர்ந்த பொன்மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும் குணம்திகழ் கொண்டல் குலக்கொழுந்து இராமானுஜன்’ (60) என்றும் போற்றிப் பாடியுள்ளார்.

திருவாய்மொழிக்கு ஒரு தனியன் பாடிய அனந்தாழ்வான் என்பவர், ‘ஏய்ந்த பெருங் கீர்த்தி இராமாநுச முனி தன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெருஞ்சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற’ என்று உடையவரின் திருவடிகளை வேண்டுகிறார்.

பெரிய திருமொழிக்கு ஒரு தனியன் பாடிய எம்பார் என்பவரும்,

‘எங்கள் கதியே இராமாநுச முனியே

சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்குபுகழ்

மங்கையர் குகான் ஈந்த மறையாயிர மனைத்தும்

தங்கு மனம் நீ யெனக்குத் தா’ என்று உடையவரை முன்னிலைப்படுத்தி விண்ணப்பிக்கிறார். அரையர் சேவை நடைபெற ஊக்கமளித்தார்.

இவ்வகையில் உடையவரின் பணிகள் அமையாமல் இருந்திருப்பின் நாதமுனிகளின் காலத்திற்கு முன் இருந்த நிலையிலேயே திவ்யப் பிரபந்தங்கள் அமைந்திருக்கும். அந்நிலை நேரா வண்ணம் இவர் பலவகையில் திவ்யப் பிரபந்தங்களுக்கு ஏற்றமளித்துப் பாதுகாத்தார்.

Thursday, May 19, 2016

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்கள்

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்கள்:
  1. முதுகுளத்தூர்- திரு.மலேசியா பாண்டியன்(காங்கிரஸ் )
  2. திருப்பத்தூர் - திரு.கே ஆர் பெரியகருப்பன்(திமுக)

திரு.மலேசியா பாண்டியன்

திரு.கே ஆர் பெரியகருப்பன்

Saturday, May 14, 2016

அதிமுகவை வீழ்த்துவதே எங்கள் லட்சியம்:தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை

மதுரையில் தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘யாதவ மக்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகளின் தலைவர் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன். இவருக்கு சட்டமன்ற தேர்தலில் சீட் வழங்காமல் அதிமுக புறக்கணித்துள்ளது. அவரை புறக்கணித்த அதிமுகவை ஒட்டுமொத்த யாதவ சமுதாய மக்களும் புறக்கணிப்போம். ஒவ்வொரு தொகுதியிலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யாதவ சமுதாய வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக வாக்களித்து பாடம் புகட்டுவார்கள். சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை வீழ்த்துவதே எங்கள் லட்சியம்,’’ என்றார்.



 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar