"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Tuesday, April 12, 2016

அருள்மிகு பொன்வண்டையனார் கோவிலும் யாதவ சமுதாய பூசாரிகளும்

குலதெய்வ வழிபாடு என்பது தமிழகத்தில் உள்ள அணைத்து சமுதாயத்தினரும் கொண்டாடி வரும் முக்கிய திருவிழாவாகும். இதில் நாடார் சமுதாய மக்களின் குலதெய்வ கோவில்கள் பெரும்பாலும் தமிழகத்தின் தென்மாவட்டங்களிலேதான் அமைந்துள்ளது. ஒவ்வொரு அய்யனாருக்கும் தல வரலாறு அல்லது கோவில் தோன்றிய வரலாறு உள்ளதை அறியலாம். ஆனால் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், நயினார் பத்தில் உள்ள அருள்மிகு பொன்வண்டு அய்யனா ரி ன் தலவரலாற்று புத்தகமோ கல்வெட்டு குறிப்போ இதுவரை கிடைக்கப் பெறவில்லை.)


பல நுற்றாண்டுகள் பழமைவாய்ந்த நமது கோவிலின் வரலாறு இது என்று கிடைக்கப் பெறவில்லை. எனினும் 300 or 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக அறியப்படும் நமது கோவில், நமது முன்னோர்களின் வாய்மொழியாக கிடைக்கப் பெற்ற தனகவலின் படி, பல நுற்றாண்டுகளுக்கு முன்னர் நாடார் சமுதாய மக்கள் நயினார்பத்தில் உடைமரத்தை வெட்டி, அதன் தூர்பகுதியை தோண்டும் பொழுது இரத்தம் வெளிப்பட்டது. இதனால் ஊ ரி ல் உள்ள தங்கள் உறவின ர் களிடம் கூறி அவர்களுடன் தோண்டி பா ர் த்தபோது அருள்மிகு பொன்வண்டு அய்யனார் சாமி துணைவியர் பூரண போர்கொடியுடன் இணைந்த சிலைகள் சுயம்புவாக கண்டெடுக்கப்பட்டது. பின்ன ர் , அந்த இடத்தில் சிறிய குடிசை கோவில் எழுப்பப்பட்டு பூசையும் நடைபெற்று வந்தது.


ஒரு நாள் பூசை வேளையில் கோவில் கதவு திறக்க முடியாமல் போகவே கேரளாவிலிருந்து ஆடுகளை மேய்த்துக் கொண்டு அவ்வழியே நடந்தது வந்த யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கதவைத் திறக்க முற்பட்டபோது கதவு திறந்து கொண்டது. ‘தனக்கு பூசை செய்ய யாதவரே ஏற்றவர்‘ என அசரீரியாக குரல் ஒலிக்கக் கேட்ட நம் முன்னோர்கள் யாதவரின் சொந்த ஊரான கேரளாவிற்குச் சென்று அவர்களை பூசை செய்ய வருமாறு அழைத்தனர். ஆனால், இதை அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால், அவர்களையும் அவர்கள் வீட்டையும் பாம்புகள் பின் தொடர்வது கண்டு அஞ்சி அதன் விபரம் அறிய முற்பட்டபோது, அருள்மிகு பொன்வண்டு அய்யனாரே பிரசன்னமாகி அந்த ‘யாதவ குடும்பத்தினர் வந்து பூசை செய்யும் வரை அவர்களை பாம்பாக பின் தொடர்வேன்‘ எனக்கூறினார். பின்னர், அவர்கள் குடும்பத்துடன் புறப்பட்டு ஆலயம் வந்து குடிசைகள் அமைத்து வழிவழியாக தினசரி இரண்டு கால பூசை செய்து வருகின்றனர். தற்போது பூசை செய்து வரும் கருப்பசாமி பூசாரி 4-வது தலைமுறை பூசாரி ஆவார்.


இவ்வளவு பழமை கொண்ட நமது கோவிலுக்கு தமிழகத்தின்தென் பகுதியிலிருந்துபல்வேறு ஊர்களுக்கு பிழைப்பை தேடியும், தொழில் அபிவிருத்திக்காகவும் சென்றவர்கள், அவரவர்களுக்கு முடிந்த நேரங்களில், குடும்பம் குடும்பமாக கால்நடையாகவும், வண்டி கட்டிக்கொண்டும் வந்து சென்றனர். மதுரை, விருதுநகர் பகுதிகளிலிருந்து வண்டி கட்டி வந்து செல்ல அப்போது வார காலம் ஆனது. (அப்படி வரும்போது சிலர், பூசாரி குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் கொண்டு வருவது வழாக்கம்.) தற்போது, புகைவண்டி, பஸ், கார் போக்குவரத்து என நாம் வந்து செல்கின்றோம்.

நாடார்குளத்தில், அருள்மிகு போன்வண்டு அய்யனார் சாமியை குலதெய்வமாக வணங்கி வரும் நமது தாயாதிகள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை, தேனி போன்ற மாவட்டகங்களில் பெருமளவிலும், கன்னியாகுமரி மாவட்ட்சத்தில் சில ஊர்களிலும், இராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் போன்ற மாவட்டகங்களில் குறிப்பிட்ட ஊர்களிலும், சென்னையில் மட்டும் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வரையிலும் வசித்து வருகின்றோம். இதுதவிர, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற வெளி மாநிலங்களிலும், வெளிநாட்டிலும் நுற்றுக்கணக்கான குடும்பங்கள் வசிக்கிறார்கள்.நமது முன்னோர்கள் குடும்பம், குடும்பமாக பல குடும்பம் சேர்ந்து கோவிலுக்கு வந்து அய்யனை தரிசித்துச் சென்ற காலகட்டத்தில் கோவில் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிழ்கண்ட பணிகளை நிறைவேற்றினார்கள்.
  • 1926-வது ஆண்டுக்கு முன் கருவறை கட்டிடமும், அதற்குப்பின் பிரகார கல்மண்டபமும், அதனையடுத்து சமையல் கூட்டத்துடன் இணைந்த உணவுக்கூடமும் (தங்கும் மண்டபமமும்) கட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவில் தெப்பக்குளம் அமைக்கப்பட்டது.
  • பின், 1930-வது வருடம், விருதுநகர் திரு.அ.ல வகையறாக்கள் சார்பாக கோவில் முன்பாக 30 அடி அகலத்தில் 2 பர்லாங் நிலத்திற்கு நடைபாதை கிரையம் செய்து பாதை அமைத்தார்கள்.
  • 1942-ல் பூசாரிகள் குடும்பத்திற்கு 4 வீடுகள் கட்டி கொடுத்தார்கள். பின், அவர்கள் சீவனாம்சம் செய்ய 12 ஏக்கர் பனை தோப்பு வாங்கி தந்தார்கள். இக்காலகட்டத்தில், கோவில் பம்ப்செட் அமைத்தார்கள்.
  • 1946-ல் கருப்பசாமி கோவில் கட்டி முடிக்கப்பட்டது. பல ஊர் தாயாதிப் பெருமக்களின் ஒத்துழைப்புடன் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை போன்ற ஊர் முக்கிய நிர்வாகிகள் முயற்சியால் 1956-ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
  • 1965-ல் குதிரை மண்டபம் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு, மதுரை திரு.A.S. பென்னுச்சாமி நாடார் பெயரில் வரைபடம் அனுமதி பெற்று (பிளான் அப்ருவ்டு) வேலை நிறைவடைந்தது.
  • மதுரை திரு.A. ராமசாமி நாடார் மேற்பார்வையில் 1968-ல் 2-வது கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடந்தது.பின், 1974-ல் கோவில் மடப்பள்ளி கட்டப்பட்டது. அதன்பின் மாடசாமி கோவிலும் கட்டப்பட்டது. இக்காலக்கட்டங்களில் 3-வது தலைமுறை பூசாரியாக திரு. இராமநாதன் கோனார் நீன்டகாலம் பூசை செய்து வந்தார்.

இப்படியாக நமது சந்ததிகளும் கோவிலும் வளர்ந்து வந்த காலத்தில் 1991-ல் சிவகாசியிலிருந்து, வருடா வருடம் திருவிழா கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் பல ஊர்களிலும் முகவரி சேகரிக்கப்பட்டது. 300 தலைக்கட்டு சேர்ந்த நிலையில் முதல் 2 வருடம் வைகாசி விசாகத்தன்று ஒரு நாள் விழா நடந்தது.
பின்னர், 1993 முதல் மூன்று நாள் விழாவாக வைகாசி மாதம் கொண்டாடப்பட்டு வருகின்றது. படிப்படியாக எல்லா ஊர்களிலும் அருள்மிகு பொன்வண்டு அய்யனார் சாமியை குலதெய்வமாக கும்பிடும் தாயாதிகள் ஒன்று சேர்க்கப்பட்டு தற்போது சுமார் 5000 குடும்பங்கள் இணைந்துள்ளன. 3000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திருவிழா தலைக்கட்டு வரி செலுத்தி திருவிழாவில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் 10,000 பேர் வரை கலந்து கொள்ளும் சிறப்புமிகு “பெரும் பூசை திருவிழா”வாக வருடா வருடம் வைகாசி முதல் வெள்ளி-சனி-ஞாயிறு ஆகிய கிழைமைகளில் நடைபெறுகின்றது.
கோவில் வளர்ச்சியை முன்னிட்டு, 2002-வது வருடம் “இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ போன்வண்டையனார் சுவாமி கும்பிடும் தாயாதிகள் சங்கம்” என்ற பெயரில் நமது நிர்வாகம், தமிழக அரசின் பதிவுத்துறையில் ‘55/2002’ எண்ணில் பதிவுச் சான்று பெறப்பட்டது.

பின், பெரும் பூசையன்று பெருமளவில் கூடுகின்ற கூட்டத்திற்கு வசதிகள் செய்து தர 3½ ஏக்கர் பம்ப்செட் நிலம் வாங்கப்பட்டு அதில் 5 ஆண்டு கால திட்டத்தில் 1200 சதுர அடிபரப்பில் “மகாமண்டபம்” (டைனிங் ஹால்) கட்டி முடிக்கப்பட்டது. அத்துடன் பெண்களுக்கு 20 கழிப்பறை, குழியல் தொட்டிகளும், ஆண்களுக்கு 20 கழிப்பறை, குழியல் தொட்டிளும் கட்டி முடிக்கப்பட்டது.

  • ஆண்டு தோறும் இரண்டு பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுகின்றது.
  • முறையாக ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்யப்பட்ட வரவு- செலவு தாக்கல் செய்யப்படுகின்றது.
  • மூன்று ஆண்களுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்வு நடைபெறுகின்றது. 2013 வைகாசிப் பெரும் பூசைக்கு முன்பாக 2000 சதுர அடியில் பெரிய சமையல் கூடமும், நிராவி சமையல் பாத்திரங்களும் அமைக்கப்பட்டது.

2014 பெரும் பூசைக்கு முன்பாக கட்டிட நன்கொடை வழங்கிய வழங்கிய தயாதிப் பெருமக்கள் 942 நபர்களின் பெயர்கள் பதித்த கல்வெட்டு திறப்புவிழா நடைபெற்றது. இதுவரை சுமார் 80 லட்சம் வரை இடம் வாங்கி, கட்டிடப் பணி முடிந்து, சுற்றுச் சுவர் எழுப்ப பயன் பட்டுள்ளது.

via http://ponvanduayyanarkovil.org/

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar