"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Sunday, July 28, 2013

யார் தமிழ் கடவுள்?

கண்ணன் ஏதோ வட நாட்டு கடவுள் போல ஒரு மாயையை ஒரு சிலர் உருவாக்கியுள்ளனர்!!!

பழந்தமிழர்கள் வணங்கியது இயற்கையை அவை தான் தெய்வங்களாகவளர்ச்சி பெற்றது பழந்தமிழர்கள் வணங்கிய இரு பெருந்தெய்வங்கள் 
மாயோன்,சேயோன் இவர்கள் தான் இன்றைய பெருமாளும் ,முருகனும் .

                 " மாயோன் மேய காடுறை உலகமும்"
                  " சேயோன் மேய மைவரை உலகமும்" 
என்று முதலில் முல்லை நில மாயோனை சொல்லிவிட்டுஅப்புறம் தான்குறிஞ்சி நில சேயோனை சொல்கிறார் தொல்காப்பியர்.இதுவரை துணியப்பட்டுதில் தொல்காப்பியம் தான் மிக மிக பழமையான நூல்! இதில் கவனிக்க பட வேண்டிய விஷயம்.

பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்களால் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் கி.மு 700 ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை கி.மு 500-க்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி கி.பி 3 ஆம் நூற்றாண்டு என்றனர். தொல்காப்பியம் பல ஆசிரியர்கள் கொண்டது என்போரின் கருத்தோ, கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்று கி.பி. 5-ஆம் நூற்றாண்டு வரை இந்நூல் எழுதப்பெற்றது என்பதாகும். எனினும், இது கிறிஸ்துவுக்கு முற்பட்டது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாகும்.

(இந்த காலக்கட்டதில் இந்தி மொழி இல்லை இந்தியா முழுவதும் தமிழும் சமஸ்கிரதமும் தான் இருந்தது.இன்று மொழி தான் மாறி உள்ளதே தவிர குலத்தொழில் மாறவில்லை. கடவுளும் மாறவில்லை)
  


இந்த தமிழ் இலக்கியத்தில் முல்லை நிலம் முதலில் வரும் பெரும்பாலான நுல்களில் குறிஞ்சி தான் முதலில் வரும் (இது ஒரு ஆராய்ச்சிக்கு உட்பட்டது) முல்லை நிலம் பற்றியம் அங்கு வாழ்ந்த மக்கள் பற்றியுமா நான் முந்தய பதிப்புகளில் குறிப்பிட்டுளேன். பெரும்பாளும் தமிழ் நூல்கள் மனிதனின் வளர்ச்சியை கொண்டுதான் தொகுக்கபட்டிருக்கும்.இதன் முலம் முல்லை நிலம் தான் மனிதனின் முதல் வளர்ச்சி என அறிய முடிகிறது.அங்கு தமிழ் மக்கள் வணங்கிய கடவுள் தான் திருமால் இந்த திருமால் தான் மொழிகளின் தோற்றத்தால் கிருஷ்ணன் ஆனார்.

 தமிழில் முதன் முதலில் தொகுக்கபட்ட நூல் முல்லை நிலம் பற்றியும் அங்கு வாழந்த ஆயர்கள்(இடையர்கள்,கோனார்,யாதவர்)பற்றியும் உள்ளது.
 ஆனால் கிருஷ்ணன் எப்படி வடநாட்டு கடவுள் என்று எப்படி கூறுகிறார்கள்
 

Saturday, July 27, 2013

முல்லைத் திணையும், மக்கள் வாழ்வும்!

முல்லைக்குரிய பெரும்பொழுதையும், சிறுபொழுதையும் வரையறுக்கும் தொல்காப்பியர், "காரும், மலையும் முல்லை" எனச் சுட்டுகிறார். 

"கார் காலமாவது, மழைபொழியும் காலம். அது ஆவணித் திங்களும், புரட்டாசித் திங்களும். மாலையாவது இராப்பொழுதின் முற்கூறு" என்பது இளம்பூரணம். 

முல்லைக்குரிய உரிப்பொருளான "இருத்தலை" பற்றி, நச்சினார்க்கினியர்,  

"இனித் தலைவி பிரிவுணத்திய வழிப்பிரியார் என்றிருத்தல், பிறிந்துழிக்குறித்த பருவம் அன்றென்று தானே கூறுதல். பருவம் வருந்துணையும் ஆற்றியிருந்தமை பின்னர்க் கூறுவன ஆகியவை இருத்தல்" என்று விளக்குவார்.
பொதுவாக, கருப்பொருள்களாகக் கருதப்படுபவை இவை என்று தொல்காப்பியர் விளக்குகிறாரேயன்றி ஐந்திணைகளுக்கும் உரியவை இவை என்று அவர் வகுக்கவில்லை. உரையாசிரியர்களே அங்ஙனம் வகுத்துள்ளனர். 

மேலும், தொல்காப்பியர்,

"ஆயர்வேட்டுவர் ஆடுஉத்திணைப்பெயர்
 ஆவயின் வரூஉம் கிழவரும்உளரே." 

என்று முல்லைத் திணைக்குரிய மக்களை மட்டும் விளக்குகிறார்.  

மனித வரலாற்றின் ஆரம்ப கட்டங்களில் மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்த மனிதர்கள், மக்கள் தொகைக் பெருக்கத்தின் காரணமாக அடுத்துள்ள கானகப் பகுதியான முல்லை நிலத்திற்குச் சென்றனர். மனிதன், இதற்குள் நாய், எருமை, பசு, ஆடு போன்ற விலங்குகளைப் பழக்கி, வளர்க்கக் கற்றுக்கொண்டான்.

மனித இனத்தின் நாகரிக வளர்ச்சியின் இரண்டாவது நிலையான "ஆயர் நிலை" இவ்வாறு எய்தப்பட்டது. முல்லை நிலத்தில் ஆடு, மாடுகள் விரைந்து பெருகும். அதனால் முதன் முதலாகத் தனிநபர் சொத்துரிமை இங்குதான் ஏற்பட்டது. இனக்குழுக்கள் தனித்தனிக் குடும்ப முறை ஆகியவை உருவாயின. சமுதாயத்தின் இரண்டாவது வளர்ச்சி நிலை இது.

காதல் மணம், மணச்சடங்குகள் இன்மை (புலிப்பல் தாலி, தாழையுடை தவிர) ஆகிய தன்மைகளைக் கொண்டதும், "களவு" என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பதுமான இயற்கை மணமுறை முல்லை நிலத்தில் சிறிது சிறிதாக மாறி, "கற்பு" மணம் ஏற்பட்டது.

தனிநபர் சொத்துரிமை, கற்புமணம் ஆகியவை தந்தை வழிச் சமுதாயம் உருவாக வழிவகுத்தது. காரணம், ஏராளமான ஆடு, மாடுகளைத் தன் சொத்தாக உடைய தலைவன் தன் செல்வம் காரணமாக அதிகாரமும், ஆதிக்கமும் பெற்றான். கூட்டுக்குடும்பமுறை உருவானது. பெரிய குடும்பத்தின் தலைவன் நாளடைவில் "சிற்றரசன்" ஆனான். தமிழகத்தில் இவ்வாறு அரசன் உருவானான் என்பதைக் காட்டும் சொல், "கோன்" (கோன் - இடையன், அரசன்; இடைச்சி - ஆய்ச்சி, அரசி). ஆடு, மாடு மேய்க்க உதவும் "கோலே" பின்னாளில் அரசனின் "செங்கோல்" ஆயிற்று.

ஆயின் முல்லை நிலத்தில் குறுநில அரசுகளே உருவாயின என்றும், மருத நிலத்தில் தான் பேரரசு உருவாகியதென்றும் கருதலாம்.

ஆநிரையைச் செல்வமெனப் போற்றும் முல்லை நிலச் சிற்றரசுகளிடையே ஏற்பட்ட சிறுசிறு போர்களே (ஆநிரை கவர்தல்) தொடக்ககாலப் போர்களாக இருந்தன. எனவே, பண்டைத் தமிழகத்தின் முதற்போர் முறையாக, ஆநிரை கவர்தல் அமைந்தது. கிராமிய வாழ்வை - கற்பனையான பொற்கால வாழ்வைச் சித்திரிக்கும் பாடல்களே "முல்லைப் பாடல்கள்" என்பர் மேலை நாட்டு மொழி இயல் வல்லுநர்கள். தமிழகத்தில் உள்ள முல்லைத் திணைப் பாடல்களைப் போன்றே கிரேக்கம், 
லத்தீன், எபிரேயம், வடமொழி மற்றும் இந்திய மொழிகளிலும் முல்லைப் பாடல்கள் உள்ளன.

இந்திய நாகரிகத்தின் இரண்டாம் நிலையாக முல்லை நில வாழ்க்கை அமைந்துள்ளது. தமிழகத்தில் சிற்றரசர்களும், வேளிர்களும் உருவானது முல்லை நிலத்தில்தான். 
லத்தீன், தமிழ் ஆகிய செவ்வியல் மொழிகளில் இருப்பது போல் வடநாட்டில் ஏனோ, எந்த மொழியிலும் முல்லைப் பாடல்கள் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கடைச்சங்க இலக்கியங்களாக எட்டுத்தொகையும், பத்துப்பாட்டுமே கருதப்படும். 

  • எட்டுத்தொகை நூல்களில் அக இலக்கியங்களான நற்றிணையில் 30பாடல்கள்
  • குறுந்தொகையில் 45
  • ஐங்குறுநூற்றில் 100
  • கலித்தொகையில் 40
  • அகநானூற்றில் 40 பாடல்கள் 
முல்லைப் பாடல்களாகும்.

பத்துப்பாட்டில் நெடுநல்வாடை, முல்லைப்பாட்டு ஆகிய இரண்டு பாடல்களும் முல்லைத் திணைப் பாடல்கள். முல்லை நிலப் பாடல்கள் மொத்தம் 
234. மிகக்குறுகிய 3 அடிச் சிற்றெல்லையில் ஐங்குறுநூற்றுப் பாடலையும், மிக அதிகமாக 188 அடிகளைக் கொண்ட நெடுநல்வாடைப் பாடலையும் காண்கிறோம்.

எட்டுத்தொகை நூல்களில் ஐங்குறுநூறு(
100), முல்லைப் பாடல்கள் பாடிய பேயனாரை அடுத்து இடைக்காடரும், மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனாரும் மிக அதிகமாக முல்லைப் பாடல்கள் பாடியுள்ளார்கள்.

முல்லைப் பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை 
73. பாடிய புலவர்கள் பெயர்கள் தெரியாத பாடல்கள் எண்ணிக்கை 6.

உலகச் செம்மொழிகளான கிரேக்கம், 
லத்தீன், எபிரேயம் ஆகிய மொழிகளிலுள்ள முல்லைப் பாடல்களின் எண்ணிக்கையைவிட, தமிழ் மொழியில் உள்ள முல்லைப் பாடல்களின் எண்ணிக்கை அதிகம்.

முல்லைப் பாடல்கள் வழி நாம் அறியும் சில சங்கச் செய்திகளாவன:-

  • விரிச்சி கேட்டு நிற்கும்பொழுது நற்சொல் கேட்பின், நன்மை நடக்கும் என்றும்
  • நல்லது அல்லாத சொல் கேட்பின், நன்மை நடவாது என்றும் நம்பினர் அக்கால மக்கள். 
இன்றும் கிராம மக்களிடையே இந்தப் பழக்கம் தொடர்கிறது.
  • யானைகளோடு பேசப் பாகர்கள் வடமொழியைப் பயன்படுத்தினர்
  • போர்க்களங்களில் மங்கையர் பணி புரிந்தனர்
  • ஏழடுக்கு மாளிகைகளில் மக்கள் வசித்தனர்
  • நாழிகைக் கணக்கர், "நாழிகை வட்டில்" கொண்டு காலத்தைக் கணித்தனர்
  • அரசுச் செய்திகளைப் பிறர் அறியாதிருக்க ஊமையர்களை (மிலேச்சர்) அரசர்கள் தங்களுக்குக் காவலாக வைத்திருந்தனர்.
இதுபோன்ற சங்கச் செய்திகள் பலவற்றை முல்லைப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.

முதன் முதலில் ஆட்சி அதிகாரத்தை உலகுக்கு அறிமுக படுத்திய இனம் இன்று அரசியல் அதிகாரம் ஏங்கும் நிலை?

யார் இதற்கு பொறுப்பு?

முல்லை திணை

முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்பட்டது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது
  • முல்லைத்திணை 

    முல்லை என்பது காடும் காடு சார்ந்த நிலங்களும் ஆகும். இந்நிலத்து ஆயர்களது வாழ்வியல், ஆடவர் ஆனிரை (பசுக்கள்) மேய்த்தற்கு பகற்பொழுது எல்லாம் காட்டிடத்தே இருத்தல், மகளிர் பால், பயன்களை விற்று வருதல் போன்ற ஒழுக்கத்தோடு ஒட்டியதாகும். ஏறு தழுவி வெல்பவனுக்கே மகளைத் தரும் வழக்கமும், அவனையே விரும்பி ஏற்கும் கன்னியர் மனமும் இத்திணையின் சிறப்பான மரபுகள். இதனால் காத்திருத்தல் தன்மை இயல்பாக, 'இருத்தல், இருத்தல் நிமித்தம்' முல்லைத்திணைக்கு உரிமையாக்கி உள்ளனர். முல்லைத்திணைக்கு கார் காலம் பெரும்பொழுதாகவும் மாலை சிறுபொழுதாகவும் அமையும்.

    முல்லையின் கருப்பொருட்கள்:
    கடவுள்மாயோன் (திருமால்)
    மக்கள்குறும்பொறை நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், பொதுவர், பொதுவியர், கோவலர்
    புள்காட்டுக்கோழி
    விலங்குமான், முயல்
    ஊர்பாடி, சேரி, பள்ளி
    நீர்குறுஞ்சுனை நீர், கான்யாற்று நீர் (காட்டாறு)
    பூகுல்லை, முல்லை, பிடவம், தோன்றிப்பூ
    மரம்கொன்றை, காயா, குருந்தம்
    உணவுவரகு, சாமை, முதிரை
    பறைஏறுகோட்பறை
    யாழ்முல்லை யாழ்
    பண்முல்லைப்பண்
    தொழில்சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றின் களை கட்டல் மற்றும் அரிதல், கடா விடுதல், கொன்றை குழல் ஊதல், ஆவினம் மேய்த்தல், கொல்லேறு தழுவல், குரவை கூத்தாடல், கான்யற்று நீராடல்.
    முல்லைத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "வினைமுடிந்து மீளூம் தலைவன் தேர்ப்பாகற்கு சொல்லியது"

துவாரகை


பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஆண்ட துவாரைகயும் சுனாமி வந்து கபளீகரம் செய்து விட்டது  இதைத்
தெரிவிப்பவர்கள் இந்திய தேசிய கடலாராய்ச்சிக்கழகம்    இவர்கள் பல ஆராய்ச்சியில் ஈடுபட்டு   பின் ஆராய்ச்சியின் குழுவின் தலைவர்   எஸ் ஆர் ராவ் என்வர்  ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்  "The  lost city  of  dwaraka  " இதில் மஹாபாரதப்போரும்   துவாரகை இருந்ததையும்
உறுதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது
துவாரைகயின்  நிர்மாணம்  மிகப் பிரமிப்பைக் கொடுக்கிறது மிகவும் திட்டமிட்டுக் கட்டய நகரமாம் கோமதி நதி ஓடுகிறது  ..துவாரகைக்கு  த்வாரமதி,  த்வாரவதி என்றப் பெயர்களும்
இருந்தனவாம்  
துவாரகை கட்டியது எப்போது என்றால்  கம்சனை வதைத்ப்பிறகு கிருஷ்ணனும் பலராமனும்
ஸ்ரீ உக்ரசேனனை  அரசனாக்கினார்கள்  இதனால் கமசனின் மாமனார் ஜராசந்தன்  மிகுந்தக்
கோபம் கொண்டு பலமுறை மதுராவின் மேல் போர் தொடுத்தார் ,ஆரம்பத்தில் யாதவ சேனை 
தெம்பாக போரிட்டனர் ஆனல் பலமுறை அடுதடுத்து போர் வரும் போது    பலம் குன்றினர்   
இனி போர் செய்து  பலனில்லல என்று ஸ்ரீகிருஷ்ணர் மீதி இருக்கும்  யாதவர்களை அழைத்துக்
கொண்டு போனார் மேற்குக்கடறகரைப்  பக்கம்   12 யோஜனை நிலத்தைக் கடல் அரசனிடமிருந்துப் பெற்றார்     இதனால் கடல் 12 யோஜனைதூரம்  உள் வாங்கியது  இந்த
இடத்தில் தான் துவாரகா நிர்மாணம் ஆயிற்று   மஹாபாரத யுத்தம் பின்   36 ஆண்டுகள் கழித்து சுனாமி போல்  துவாரகையை கடல் மூடியது    இது நடக்க்ப்போவதை அறிந்த கிருஷ்ணர்     யாதவர்களை    ஒரு உயரமான மலைப்பகுதிக்கு அழைத்துச்சென்றார்  அதன் பெயர் பிரபாஸ் ,,இப்போது சோம்னாத்    ,,அங்கு யாதவர்கள் ஒற்றுமை இல்லாமல் தனக்குத்தானே  சண்டை இட்டு மாய்ந்துப் போனார்கள் கிருஷ்ணரும்  வேடன் எய்த அம்பினால்  அவதாரத்தை முடித்தார்
ஹைதரபாத்தின் பொருட்காட்சிசாலையில்   {பிர்லா மியூசியம்  }துவாரகாவின் மாடல் இருக்கிறது மத்தியபிரதேசத்திலும்  விதிஷா என்ற இடத்தில்  பெட்ஸா என்ற பகுதியில்  
மிகப் பழையக்கோயில் தென்பட்டுள்ளது   அதில் கிடைத்த விக்கிரகங்கள்   ஸ்ரீ கிருஷ்ணர்
பலராமர் ,,கண்ணனின் மகன் பிரத்யும்னன்  பேரன் அநிருத்தா   ,என்று கண்டுப்பிடித்துள்ளார்கள் 
கடல் கீழே முழுகிய துவாரகாவைக் காண   நீர்மூழ்கிக்கப்பல் மூலம்     ஏற்பாடு நட்க்கிறதாம்
அது நிறைவேறினால்   கடலுக்கடியில் இருக்கும்  பொருட்க்காட்சியை நாம் காணமுடியும்
கிருஷணர் ஆண்ட இடமாயிற்றே,,,

Makkal Tamil Desam Katchi

Makkal Tamil Desam Katchi (People's Tamil Land Party, in Tamilமக்கள் தமிழ் தேசம் கட்சி), generally just called Makkal Tamil Desam (MTD) is a political party in the Indian state of Tamil Nadu. MTD was founded on August 22, 2000. MTD has its base amongst the Yadava caste in the southern parts of the state. The Tamil Nadu Yadava Mahasabai supported the formation of the party. The party leader is S. Kannappan, a former All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) minister. Kannappan had been expelled from AIADMK before the foundation of MTD.
Ahead of the 2001 Tamil Nadu assembly elections MTD joined the National Democratic Alliance(NDA).
On May 6, 2002, the Puducherry unit of MTD broke away and joined Indian National Congress.
In the 2004 MTD took part in the People's Alliance, the third front in Tamil Nadu together with Janata Dal (United)Puthiya Tamizhagam and the Dalit Panthers of India. This front was basically formed by groups who were dissatisfied that Bharatiya Janata Party (BJP) had put NDA aside in Tamil Nadu and instead had launched a pure BJP-AIADMK front in the elections. MTD contested under the JD(U) symbol.

samajwadi party

amajwadi Party (SP; literally, Socialist Party; founded October 4, 1992) is a recognised state political party inIndia based in the Indian state of Uttar Pradesh (UP). It describes itself as a democratic socialist party and is mainly representing the interests of a caste grouping called Other Backward Classes (OBCs).
The Samajwadi Party was one of several parties that emerged when the Janata Dal (People's League), India's primary opposition party prior to the Bharatiya Janata Party (BJP), fragmented into several regional parties. The Samajwadi Party is led by Mulayam Singh Yadav, who was Chief Minister of Uttar Pradesh and defence ministerof India.
The Samajwadi Party is primarily based in Uttar Pradesh. Its support is largely based on OBCs (Other Backward Castes), particularly Mulayam Singh Yadav's own Yadav caste, and Muslims. It has contested Lok Sabha and State Assembly elections around the country, though its successes have been mainly in Uttar Pradesh. In the assembly election in Madhya Pradesh in 2003, the Samajwadi Party gained 7 seats, making it the third largest party in the state. When its candidate won the by-election of Lanji (Balaghat) in 2007, its total tally reached 8.

In the 15th Lok Sabha, it currently has 22 members, making it the third largest party in that house.
In 2005, former Karnataka Chief Minister Bangarappa resigned from the BJP to join the Samajwadi Party. He successfully held his Lok Sabha seat (representing Shimoga) on the Samajwadi ticket.
In the 2007 Uttar Pradesh legislative election, the SP won only 96 seats as compared to 146 in the previous election. As a result, Chief Minister Mulayam Singh Yadav had to resign, with his rival Mayawati, leader of the BSP (which won a majority of 207 seats), sworn in as the Chief Minister.

In the 2012 legislative assembly elections of Uttar Pradesh, SP registered a landslide victory with a clear majority in the House, thus enabling it to form the Government in the state. This was expected to be the fifth term of Mulayam Singh Yadav as Chief Minister of state, but he surprised everyone by selecting his son, Akhilesh Yadav, to be the new chief minister (the youngest ever). It became official on March 15. It was also the first time that SP was head of the UP government for a full term of 5 years

Kranti Rath Yatra & Cycle Rally[edit]

State President of the Samajwadi party Akhilesh Yadav conducted a 3-day cycle yatra (march) fromNoida to Agra to protest unauthorized land acquisition by the Mayawati government. His first day's journey was from Noida to Jewar and second day's was Tappal to Mathura. During his visit he assured farmers that no one can acquire their land without their consent and the first right on land is that of farmers.
Hundreds of cycles and a large number of youths traveled with him from Noida to Agra. His cycle and Kranti Rath Yatras set the momentum for the election.
Young members of parliament and state president of the Samajwadi Party Uttar Pradesh Akhilesh Yadav launched his Samajwadi Kranti Rath Yatra on September 12, 2011 from Lucknow, keeping in mind the upcoming election in 2012. He started the first phase from Lucknow toKanpur and second phase in Bundelkhand. Due to corruption in the state, SP gen next leader[when defined as?] yatra was a crowd-puller in the Bundelkhand region.
Assembly elections held in Uttar Pradesh in April 2012 saw the Samajwadi Party coming back to power with a landslide majority. The main issues during the election were corruption and development, neither of which favoured the ruling party, BSP.

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்  பிறப்பு 1 சூலை 1973  ஓர் இந்தியஅரசியல்வாதியும் உத்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர்  ஆவார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகனுமாவார்.இந்தியாவின் இளம் முதலமைச்சர் என்ற பெருமையை உடையவர்
2000ஆம் ஆண்டில் முதன்முறையாக கன்னவ்ஜ் மக்களவைத்தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்தின் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே தொகுதியில் மீண்டும் 2004ஆம் ஆண்டிலும் 2009ஆம்ஆண்டிலும் போட்டியிட்டு மூன்று முறை இத்தொகுதியிலிருந்து வெற்றி பெற்றுள்ளார்.
2012ஆம் ஆண்டில் நடந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் கட்சிப் பரப்புரைகளில் முன்னணியில் இருந்து தனது கட்சி ஆட்சியைப் பற்றிட துணை புரிந்துள்ளார்.
மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளநிலைப் பட்டத்தையும் சூழலியல் பொறியியலில் சிட்னி பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்
Click here Akhilesh yadav web site

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar